என் மலர்
நீங்கள் தேடியது "Rebel group"
- பெனின் ஆட்சியை பிடித்ததாக ராணுவ கிளர்ச்சி குழுவால் அறிவித்தது.
- நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அதிபர் பத்ரிக் தாலோன் அறிவிப்பு
பெனின் நாட்டில் அரசு ஊடகத்தை கைப்பற்றி, அதிபர் பத்ரிக் தாலோனை பதவியில் இருந்து நீக்கி ஆட்சியை பிடித்ததாக அறிவித்த ராணுவ கிளர்ச்சி குழுவால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவப் படைகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
தொலைக்காட்ச்சி வழியே மக்களிடம் பேசிய பெனின் அதிபர் பத்ரிக் தாலோன், "நமது இராணுவமும் அதன் தலைவர்களும் தேசத்திற்கு விசுவாசமாக இருந்து வரும் கடமை உணர்வை நான் பாராட்ட விரும்புகிறேன். நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் வரை நான்தான் தலைவர் என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக ஆவேசமடைந்த அதிருப்தி கோஷ்டி தலைவர்கள் புகார் அளிக்க டெல்லி சென்றுள்ளனர். #Thirunavukkarasar #Congress
சென்னை:
மாநில தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசை மாற்ற வேண்டும் என்று எதிர்கோஷ்டிகள் வரிந்து கட்டி வருகிறார்கள்.
இது தொடர்பாக பல முறை டெல்லிக்கு நேரில் சென்றும் புகார் அளித்தனர். இன்று நடைபெறும் நிகழ்வுகள் குறித்து மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத்தும் அறிக்கை அனுப்பினார். ஆனால் இதுவரை கட்சி மேலிடம் மவுனமாகவே இருந்து வருகிறது.
விரைவில் திருநாவுக்கரசர் மாற்றப்படுவார் என்று மட்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சக்தி திட்ட தொடக்க விழா காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர்.
மேலிட நிகழ்ச்சி என்பதால் அனைத்து தலைவர்களும் பங்கேற்று இருந்தனர். ஆனால் எல்லோரையும் பேச அனுமதித்தால் புகைச்சல் தெரிந்து விடும் என்பதற்காக அனைவரையும் பேச வைக்கும் நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டது.
மேலிட நிர்வாகிகளும் திருநாவுக்கரசரும் மட்டுமே பேசினார்கள். திருநாவுக்கரசர் பேசும்போது, “தொண்டர்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். பாராளுமன்ற தேர்தல் வரை நான்தான் தலைவர் என்று நெத்தியடியாக கூறினார்.
இது மேடையில் அமர்ந்திருந்த அதிருப்தி கோஷ்டிகளை ஆவேசம் அடைய வைத்தது. இதுபற்றி மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் நேரடியாகவே புகார் தெரிவித்தனர்.
அவர் மேடையில் பேசும்போது, இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்களை மேற்கோள்காட்டி பேச தவறவில்லை.

இன்று அவர்கள் ராகுல் காந்தியை சந்தித்து திருநாவுக்கரசரை மாற்ற வலியுறுத்த உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திருநாவுக்கரசர் தரப்பு இதைபற்றி கண்டு கொள்ளவில்லை.
நாளை திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாட்டில் கொடி குன்னல் சுரேஷ் எம்.பி., திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். #Thirunavukkarasar #Congress
மாநில தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசை மாற்ற வேண்டும் என்று எதிர்கோஷ்டிகள் வரிந்து கட்டி வருகிறார்கள்.
இது தொடர்பாக பல முறை டெல்லிக்கு நேரில் சென்றும் புகார் அளித்தனர். இன்று நடைபெறும் நிகழ்வுகள் குறித்து மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத்தும் அறிக்கை அனுப்பினார். ஆனால் இதுவரை கட்சி மேலிடம் மவுனமாகவே இருந்து வருகிறது.
விரைவில் திருநாவுக்கரசர் மாற்றப்படுவார் என்று மட்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சக்தி திட்ட தொடக்க விழா காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர்.
மேலிட நிகழ்ச்சி என்பதால் அனைத்து தலைவர்களும் பங்கேற்று இருந்தனர். ஆனால் எல்லோரையும் பேச அனுமதித்தால் புகைச்சல் தெரிந்து விடும் என்பதற்காக அனைவரையும் பேச வைக்கும் நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டது.
மேலிட நிர்வாகிகளும் திருநாவுக்கரசரும் மட்டுமே பேசினார்கள். திருநாவுக்கரசர் பேசும்போது, “தொண்டர்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். பாராளுமன்ற தேர்தல் வரை நான்தான் தலைவர் என்று நெத்தியடியாக கூறினார்.
இது மேடையில் அமர்ந்திருந்த அதிருப்தி கோஷ்டிகளை ஆவேசம் அடைய வைத்தது. இதுபற்றி மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் நேரடியாகவே புகார் தெரிவித்தனர்.
அவர் மேடையில் பேசும்போது, இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்களை மேற்கோள்காட்டி பேச தவறவில்லை.
ஆவேசமடைந்த அதிருப்தி கோஷ்டி தலைவர்கள் இன்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றனர். இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, பீட்டர் அல்போன்ஸ், நடிகை குஷ்பு, காங்கிரஸ் பொறுப்பாளர் நாசே ராமச்சந்திரன் உள்பட பலர் டெல்லி சென்று உள்ளனர்.

இன்று அவர்கள் ராகுல் காந்தியை சந்தித்து திருநாவுக்கரசரை மாற்ற வலியுறுத்த உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திருநாவுக்கரசர் தரப்பு இதைபற்றி கண்டு கொள்ளவில்லை.
நாளை திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாட்டில் கொடி குன்னல் சுரேஷ் எம்.பி., திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். #Thirunavukkarasar #Congress






