என் மலர்
நீங்கள் தேடியது "airspace"
- லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், லூடன், சிட்டி மற்றும் சவுத்எண்ட் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை பாதித்தது.
- முழுமையான இயல்புநிலை திரும்பும் வரை சிறிது தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதன்கிழமை மாலை பிரிட்டன் தலைநகர் லண்டன் வான்வெளி முழுமையாக மூடப்பட்டது.
இந்தப் பிரச்சினையால் இங்கிலாந்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன.
தொழில்நுட்பக் கோளாறு தீர்க்கப்பட்டு லண்டன் பகுதியில் இயல்புநிலை செயல்பாடுகளை மீட்டெடுத்ததாக NATS பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினையால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக NATS தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு NATS மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இந்த சம்பவம் முக்கியமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், லூடன், சிட்டி மற்றும் சவுத்எண்ட் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை பாதித்தது.
தற்போதைய பிரச்சினை விரைவாக தீர்க்கப்பட்டாலும், முழுமையான இயல்புநிலை திரும்பும் வரை சிறிது தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இரு நாடுகள் இடையே மோதல் வெடித்தது.
- இந்த மோதல் இருதரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவை எட்டியது.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7-ம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்த மோதல் இருதரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவை எட்டியது.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய வான்பரப்பை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை தடை விதித்தது. இந்த தடை ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய வான்பரப்பிற்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைய அடுத்த மாதம் 24-ம் தேதி வரை தடை விதித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
- கத்தார் வான்வெளியைப் பயன்படுத்தும் பிற விமானங்களையும் பாதிக்கும்.
- அமெரிக்காவை பழிவாங்க ஈரான் இங்கு தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வருவதால், கத்தார் தனது சர்வதேச வான்வெளியை மூடியுள்ளது.
கத்தார் வெளியுறவு அமைச்சகம் இன்று (திங்கள்கிழமை) மாலை அதன் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில், தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது.
இது ஹமாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் அனைத்து விமானங்களையும், கத்தார் வான்வெளியைப் பயன்படுத்தும் பிற விமானங்களையும் பாதிக்கும்.
இதற்கிடையில் தற்போது கத்தாருக்குச் செல்லும் விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அமெரிக்காவின் முக்கிய விமான படைத்தளமான அல் உதெய்த் கத்தாரில் உள்ளது. மேலும் கத்தாரில் முக்கிய விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸுவும் இங்கு செயல்படுகிறது.
எனவே தங்கள் அணுசக்தி தளங்களை தாக்கிய அமெரிக்காவை பழிவாங்க ஈரான் இங்கு தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் கத்தார் தனது வான்வெளியை மூடியதாக தெரிகிறது.
- தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள் பாதிக்கும்.
- டர்புலன்ஸ் காரணமாக இண்டிகோ விமானம் அவசரநிலை கருதி பாகிஸ்தான் வான்பரப்புக்குள் நுழைய அனுமதி கேட்டது.
ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக இரு நாடுகளும் தத்தமது வான் பரப்பில் எதிரி நாட்டு விமானங்கள் பறக்க தடை விதித்தன.
இந்நிலையில் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை மத்திய அரசு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.
இதற்காக, மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒரு சிறப்பு அறிவிப்பை (NOTAM) வெளியிட்டது.
சமீபத்திய உத்தரவுகளின்படி, பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்கள், பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான, குத்தகைக்கு விடப்பட்ட அல்லது இயக்கப்படும் விமானங்கள் ஜூன் 23 வரை இந்திய வான்வெளியில் நுழைய அனுமதிக்கப்படாது என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவின் மூலம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள் இப்போது இந்தியாவைச் சுற்றி பறக்க வேண்டியிருக்கும்.
இது பயண நேரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விமான நிறுவனங்களின் இயக்கச் செலவுகளையும் அதிகரிக்கிறது. இதற்கிடையே இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த ஜூன் 24 ஆம் தேதி வரை தடை விதிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
முன்னதாக நேற்று டர்புலன்ஸ் காரணமாக இண்டிகோ விமானம் அவசரநிலை கருதி பாகிஸ்தான் வான் பரப்புக்குள் நுழைய அனுமதி கேட்டது.ஆனால் பாகிஸ்தான் அதற்கு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.
- நைஜரில் மொஹம்மத் பஸோம் அதிபராக பதவி வகித்து வந்தார்
- நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என்கிறது சியானி அரசாங்கம்
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர்.
அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக மொஹம்மத் பஸோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.
பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம் காட்டி, ஜூலை 26 அன்று ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பஸோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
நாட்டின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில் எனும் ஒரு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி என்பவர் புதிய அதிபராக பதவியேற்றார்.
ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, மீண்டும் பஸோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என சியானிக்கு நேற்று இரவு வரை கெடு விதித்திருந்தது. இதற்காக தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பிரயோகிப்போம் எனவும் எச்சரித்திருந்தது.
ஆனால், இந்த அச்சுறுத்தலை பொருட்படுத்தாத சியானி அரசாங்கம், நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என கூறியது.
இந்நிலையில் இந்த புதிய அரசாங்கம், அண்டை நாடுகளிடமிருந்து தாக்குதல் வரும் ஆபத்து உள்ளதாக கூறி, நைஜர் மீதான வான்வழி போக்குவரத்தை தேதி குறிப்பிடாமல் தடை செய்துள்ளது. இதனை மீறும் விதமாக போக்குவரத்து மேற்கொள்ளும் விமானங்களுக்கு உடனடியாக பதிலடி தரப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
தற்போது அந்நாட்டின் வான்பரப்பில் எந்த விமான போக்குவரத்தும் நடைபெறவில்லை. அந்நாட்டை நோக்கி சென்ற விமானங்கள் இந்த தடையுத்தரவை அடுத்து வேறு வான்வழி பாதையில் மாற்றப்பட்டன.
அண்டை நாடுகளான மாலி மற்றும் பர்கினா ஃபாஸோ புதிய நைஜர் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. தேவைப்பட்டால், ரஷியாவிடம் ராணுவ உதவியை நைஜர் கோரலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதிக்குள் கடந்த மாதம் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல விமான நிலையங்களை பாகிஸ்தான் அரசு அவசரமாக மூடியது.
இதேபோல் சில நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களும், உள்நாட்டு விமான நிலையங்களும் மூடப்பட்டன. பிப்ரவரி மாதம் 27-ம் தேதியில் இருந்து சில நகரங்களின் வான் எல்லை வழியாக வெளிநாட்டு விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர், சில முக்கிய விமான நிலையங்கள் வழியாக மிக குறைவான விமானச் சேவைகள் இயக்கப்பட்டன.

இதைதொடர்ந்து, தங்கள் நாட்டின் வான் எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அரசு இன்று திரும்பப் பெற்றது. எனினும், நடுவழியில் இறங்கும் விமானங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
பாதுகாப்பு கருதி பாங்காக், கோலாலம்பூர், புதுடெல்லி ஆகிய பகுதிகளில் இருந்துவரும் விமானங்கள் தற்போதைக்கு இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. #Pakistanopens #Pakistanairspace






