என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CAA"

    • பார்வையில் நாட்டில் இருக்கக் கூடாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான்.
    • NRC,CAA ஆகியவற்றை மக்கள் எதிர்பால் தொடர முடியாததால் அவற்றை SIR வடிவத்தில் பின்வாசல் வழியாகக் கொண்டுவரும் முயற்சி இது.

    தேர்தல் ஆணையம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR)  மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் வாக்காளர்கள் அரசாங்கத்தை தேர்தெடுக்கும் நிலை மாறி அரசாங்கம் வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் முறையே SIR என்று பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமான பராகலா பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். இவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் ஆவார்.

    மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "SIR-ன் முக்கிய நோக்கம், தங்கள் பார்வையில் நாட்டில் இருக்கக் கூடாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான்.

    அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் என்ற நிலையை மாற்றி, வாக்காளர்களை அரசாங்கமே தேர்ந்தெடுக்கும் செயல். 

    தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC), குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA) ஆகியவற்றை மக்கள் எதிர்பால் தொடர முடியாததால் அவற்றை SIR வடிவத்தில் பின்வாசல் வழியாகக் கொண்டுவரும் முயற்சி இது.

    வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படும்போது, அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகிவிடுகிறார்கள். இதுவே SIR-ன் அடிப்படை இலக்கு.  ஒடுக்கப்பட்ட, கல்வியறிவற்ற, சிறுபான்மையின மக்கள் பெயர்களை நீக்குவதே SIR-ன் இலக்கு.

    இதற்கு அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் ஓர் உதாரணம். ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளவர்களின் பெயர்கள் மட்டுமே SIR மூலம் தக்கவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் அங்கே சில இடங்களில் வெற்றிபெற்றதே ஆச்சரியம்" என்று தெரிவித்தார். 

    • பல தசாப்தங்களாக, கிழக்கு பெங்காலில் (தற்போது வங்கதேசம்) இருந்து வந்த தலித் அகதிகளை பற்றி யாரும் நினைக்கவில்லை.
    • முதல்முறையாக பிரதமர் மோடி அவர்களின் அவலை நிலையை கருத்தில் கொண்டார்.

    மத்திய கல்வித்துறை இணையமைச்சரான சுகந்தா மஜும்தார், இந்தியாவில் இந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் வரைக்கும், மதச்சார்பின்மை மற்றும் கம்யூனிசம் நிலைத்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுகந்தார் மஜும்தார் கூறுகையில் "பல தசாப்தங்களாக, கிழக்கு பெங்காலில் (தற்போது வங்கதேசம்) இருந்து வந்த தலித் அகதிகளை பற்றி யாரும் நினைக்கவில்லை. முதல்முறையாக பிரதமர் மோடி அவர்களின் அவலை நிலையை கருத்தில் கொண்டார்.

    இந்தியாவில் இந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் வரைக்கும், மதச்சார்பின்மை மற்றும் கம்யூனிசம் நிலைத்திருக்கும். மாறாக அவைகள் நிலைத்திருக்க முடியாது. ஏனென்றால், இந்துக்கள் மட்டுமே உள்ளடக்கிய தன்மையை நம்புகிறார்கள்.

    வங்கதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக தலித்கள் தொடர்ந்து கொடுமைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த அகதிகள் 1947-ல் இருந்து இந்தியாவுக்கு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். பல ஆண்டுகளாக, அவர்களுக்காக யாரும் பேசவில்லை. முதல் முறையாக, நரேந்திர மோடி அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, CAA நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தார்.

    வெளிநாட்டினர் சட்டத்தில் கொண்டு வந்ததுள்ள மாற்றத்தையும், உள்துறை அமைச்சகத்தின் அறிப்பாணையை மேற்கோள் காட்டி, உலகின் எந்த பகுதியிலும், இந்துவாக இருந்து கொடுமைக்கு ஆளானால், அல்லது அவர்களுடைய மதம் சார்ந்த சடங்குகளை செய்வதற்கு தடை ஏற்பட்டால், அந்த நபர் இந்தியாவில் அடைக்கலம் கேட்க முடியும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    சிஏஏ சட்டத்தின்படி இந்தியாவின் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    CAA சட்டத்தின்படி வங்கசேதம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து மதக் கொடுமையால் இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்கள் இந்தயி குடியுரிமை பெற முடியும்.

    • வழக்கில் அனைத்து தரப்பும் 3 வாரத்தில் வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    • மத்திய அரசு, மனுதாரர்கள் வாதங்களை சுருக்கமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கு டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 232 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சட்டம் சமத்துவ உரிமையை மீறுவதாகவும், மதத்தின் அடிப்படையில் சட்ட விரோதமாக புலம் பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமையை வழங்க முயற்சிப்பதாகவும் கூறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க., தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டோர் ரீட் மனுக்களை தாக்கல் செய்தன.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் அனைத்து தரப்பும் 3 வாரத்தில் வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு, மனுதாரர்கள் வாதங்களை சுருக்கமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கு டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    வாதங்களை தொகுத்து தாக்கல் செய்ய வக்கீல்கள் பல்லவி பிரதாப், கனு அகர்வால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    • இந்த விவகாரத்தில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மக்களை தவறாக வழிநடத்துகிறார்.
    • இந்த சட்டத்தை அமல்படுத்துவது எங்களது கட்சியின் உறுதிப்பாடு.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் நேற்று மேற்கு வங்காளம் சென்றிருந்தனர். மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் சென்றிருந்தனர். பா.ஜனதா அமைப்புகள், சமூக வலைத்தளம் மற்றும் ஐ.டி. பிரிவு உறுப்பினர்களும் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது அமித் ஷா "குடியுரிமை திருத்த சட்டம் நாம் நாட்டினுடைய சட்டம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த விவகாரத்தில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மக்களை தவறாக வழிநடத்துகிறார். இந்த சட்டத்தை அமல்படுத்துவது எங்களது கட்சியின் உறுதிப்பாடு என்பதை தெளிவாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

    அடுத்தாண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் மேற்கு வங்காளத்தில் உள்ள 42 இடங்களில் பா.ஜனதா 35 இடங்களை பிடிக்கும். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க நாம் பணியாற்ற வேண்டும். பா.ஜனதா என்பது ஊடுருவலை தடுப்பது, பசு கடத்தல் மற்றும் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சிஏஏ (குடியுரிமை திருச்ச சட்டம்) மூலம் குடியுரிமை வழங்குவதைக் குறிக்கும்.

    • கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து பொறியியல் பட்டம் பெற்றவர் பவ்யா
    • 2018ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பவ்யா நரசிம்ம மூர்த்தி

    அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதிகள் மார்ச் முதல் வாரம், இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

    இத்தேர்தலை சந்திக்க பிராந்திய கட்சிகளும், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகியவை மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன.


    கட்சியினர் ஆற்றும் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தங்கள் கட்சியின் சார்பில் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்களை (communications coordinator) காங்கிரஸ் நியமித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக, பவ்யா நரசிம்ம மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

    யார் இந்த பவ்யா நரசிம்ம மூர்த்தி?

    பவ்யா நரசிம்ம மூர்த்தி கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் பிறந்து வளர்ந்தவர்.


    எம் எஸ் ராமையா கல்லூரியில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

    அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிய வாய்ப்பிருந்தும், அரசியலில் ஈடுபட விரும்பி இந்தியாவிற்கு வந்தார்.

    காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 2018ல் அக்கட்சியில் இணைந்தார். கர்நாடகாவில் மூத்த தலைவர் வீரப்ப மொய்லியுடன் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியின் மாநில மற்றும் மத்திய தேர்தல் அறிக்கையை தயாரித்தார்.


    பெண்கள் நல்வாழ்விற்காக இயங்கும் காங்கிரஸ் கட்சியின் "பிரியதர்ஷினி" அமைப்பில் தலைவராக சிறப்பாக பணிபுரிந்தார்.

    காந்திஜியின் சித்தாந்தங்களில் மிகுந்த ஈடுபாடு உடையவரான பவ்யா, பா.ஜ.க. கொண்டு வந்த சிஏஏ-விற்கு (CAA) எதிராக கர்நாடகாவில் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.

    இள வயதில் அரசியலில் நுழைந்தது குறித்து, "அரசியலில் நுழைய விரும்புபவர்கள் தயக்கமின்றி கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். அதை தூய்மைப்படுத்த இள வயதினருக்கு வாய்ப்பு அதிகமுள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். ஆனால், இது நுழைய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மட்டுமே பொருந்தும்" என்கிறார் பவ்யா நரசிம்ம மூர்த்தி.

    • 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே சிஏஏ-வைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.
    • தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,

    ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர்.

    இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான சிஏபி சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே பாராளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான்.

    அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம். 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே சிஏஏ-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.

    தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

    மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.

    சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.

    சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.

    ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக.

    கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.

    சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்ஐஏ, யுஏபிஏ சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நாங்கள் ரத்து செய்துள்ளோம்
    • எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரலாம்.

    புதுடெல்லி:

    உலகளாவிய வணிக உச்சி மாநாடு டெல்லியில் நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் வாயிலாக குடியுரிமை வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்படும். இது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது.

    அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நாங்கள் ரத்து செய்துள்ளோம், எனவே நாட்டு மக்கள் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 370 இடங்களில் வெற்றியை தருவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து எந்த சஸ்பென்சும் இல்லை. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் கூட தாங்கள் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன. எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரலாம்.


    இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான தேர்தலாக இருக்காது. மாறாக வளர்ச்சியை கொடுக்கும் எங்களுக்கும், வெற்று கோஷங்களை கொடுப்பவர்களுக்கும் இடையே நடக்கும் தேர்தலாக இருக்கும்.

    1947-ம் ஆண்டு நாட்டை பிரித்ததற்கு காங்கிரஸ் கட்சி காரணமாக இருந்தது. இதனால் நேரு, காந்தி ஆகியோரின் வாரிசுகளுக்கு ஒற்றுமை யாத்திரை நடத்த உரிமை இல்லை.

    2014-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை இழந்த போது நாடு மோசமான நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் பொருளாதாரம் சீரழிந்து காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஊழல் நிறைந்திருந்தது. வெளி நாட்டு முதலீடுகள் வரவில்லை.


    அந்த நேரத்தில் நாங்கள் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருந்தால் அது உலகுக்கு தவறான செய்தியை கொடுத்திருக்கும். ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு எங்களது அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்து வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்துள்ளது. எங்குமே ஊழல் இல்லை. எனவே வெள்ளை அறிக்கை வெளியிட இதுவே சரியான தருணம். எனவே வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உள்ளோம்.

    அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டப்பட வேண்டும் என்று 500 முதல் 550 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அரசியல், சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படவில்லை. அதை இப்போது நிறை வேற்றியுள்ளோம்.

    ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சியினர் ஏன் கொண்டாடவில்லை?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
    • பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பு குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பு குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    இதனால் குடியுரிமை திருத்த சட்ட விதிகள் அடுத்த மாதம் அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, "குடியுரிமை திருத்த சட்ட விதிகள் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வரும் முன்பு வெளியிடப்படும். ஆனால் தேதியை என்னால் சொல்ல முடியாது" என்றார்.

    விதிகள் வெளியிட்டவுடன் மேற்கண்ட மதத்தினருக்கு மத்திய அரசு இந்திய குடியுரிமையை வழங்க தொடங்கிவிடும். இதற்காக பதிவு செய்ய ஒரு இணைய தளத்தை மத்திய அரசு உருவாக்கி தயார் நிலையில் இருக்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வருவதை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இதனால் அதை அமல்படுத்த உறுதியாக இருக்கிறது.

    • சிஏஏ சட்டத்தை நிறைவேற்றுவோம் என 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
    • 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

    2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம்
    • மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

    "குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று உறுதியாக கூறுகிறோம்" என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.

    • குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றியது
    • இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது

    குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    அதில், "குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றியது. இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது.

    அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.

    திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

    இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.

    அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×