search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parakala Prabhakar"

    • மணிப்பூர், லடாக் பிரச்னை போல நாடெங்கும் நடக்கும்.
    • பரகால பிரபாகர் பேசிய இந்த வீடியோவை காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிரந்துள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் லடாக்- மணிப்பூர் போன்ற சூழ்நிலைகள் உருவாகும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகாலா பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும்.

    மணிப்பூர், லடாக் பிரச்னை போல நாடெங்கும் நடக்கும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான்.

    இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்பது போன்ற வெறுப்பு பேச்சுக்களை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையிலான இன மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்" என்றார்.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் தெரிவித்துள்ள எச்சரிக்கை கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பரகால பிரபாகர் பேசிய இந்த வீடியோவை காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    • தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும்.
    • அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் கூட்டணிகள் இடையிலோ இருக்காது.

    இந்தியாவில் விரைவில் பாரளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், பிரசாரம் என தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பா.ஜ.க. அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் சட்டம் பற்றிய தகவல்கள் வெளியாக துவங்கின.

    தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை எவ்வளவு, யார்யார் நன்கொடை வழங்கினர் என்ற தகவல்கள் தினந்தோறும் செய்திகளாகி வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக அரசியல் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தனது கருத்துக்களை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், "தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம் காரணமாக பா.ஜ.க. மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்கள் இடையே தான் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. மற்றும் இதர அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் கூட்டணிகள் இடையிலோ இருக்காது."

    "தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தற்போது இருப்பதை விட அதிகளவில் பூதாகாரமாக உருவெடுக்கும். இந்த விவகாரம் பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை கடந்து பொது மக்களிடம் அதிவேகமாக சென்றடைய துவங்கிவிட்டது. அனைவருக்கும் இந்த தேர்தல் பத்திரங்கள் விவகாரம் இந்தியா மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய ஊழல் என்று புரிய துவங்கிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக இந்த அரசு மிகப்பெரிய தண்டனையை பெறும் என்று நான் நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.

    ஆந்திர மாநில அரசின் தகவல் தொடர்பு ஆலோசகர் பதவியில் இருந்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கணவர் பரகல பிரபாகர் இன்று ராஜினாமா செய்தார். #APgovermentadviser #resigns
    ஐதராபாத்:

    ஆந்திர மாநில அரசின் தகவல் தொடர்பு ஆலோசகராக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் கடந்த 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்ட இவரது பதவி மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

    இதையடுத்து, பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஆந்திர மாநில அரசு ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். இதையடுத்து சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதால் சமீபத்தில் பாஜகவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் கட்சி முறித்துக்கொண்டது.

    இதைத்தொடர்ந்து, அம்மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, பாஜகவை முழு மூச்சாக எதிர்த்து வந்தார். இந்நிலையில், ஆந்திர அரசின் தகவல் தொடர்பு அதிகாரியாக இருந்த பரகல பிரபாகரன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ சிறப்பு அந்தஸ்து கோரி வரும் மாநில அரசின் போராட்டத்துக்கு தாம் தடையாக இருக்க விரும்பவில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் எழுப்பும் கேள்விகள் வேதனை அளிக்கின்றன. உங்களின் விருப்பத்துக்கு மாறாக நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    4 ஆண்டுகள் பதவி வகித்த பரகல பிரபாகரின் பதவிக்காலம் ஜூலை 4-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தற்போது அவர் ராஜினாமா செய்திருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. #APgovermentadviser #resignsa
    ×