என் மலர்
நீங்கள் தேடியது "பரகலா பிரபாகர்"
- பார்வையில் நாட்டில் இருக்கக் கூடாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான்.
- NRC,CAA ஆகியவற்றை மக்கள் எதிர்பால் தொடர முடியாததால் அவற்றை SIR வடிவத்தில் பின்வாசல் வழியாகக் கொண்டுவரும் முயற்சி இது.
தேர்தல் ஆணையம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வாக்காளர்கள் அரசாங்கத்தை தேர்தெடுக்கும் நிலை மாறி அரசாங்கம் வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் முறையே SIR என்று பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமான பராகலா பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். இவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் ஆவார்.
மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "SIR-ன் முக்கிய நோக்கம், தங்கள் பார்வையில் நாட்டில் இருக்கக் கூடாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான்.
அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் என்ற நிலையை மாற்றி, வாக்காளர்களை அரசாங்கமே தேர்ந்தெடுக்கும் செயல்.
தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC), குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA) ஆகியவற்றை மக்கள் எதிர்பால் தொடர முடியாததால் அவற்றை SIR வடிவத்தில் பின்வாசல் வழியாகக் கொண்டுவரும் முயற்சி இது.
வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படும்போது, அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகிவிடுகிறார்கள். இதுவே SIR-ன் அடிப்படை இலக்கு. ஒடுக்கப்பட்ட, கல்வியறிவற்ற, சிறுபான்மையின மக்கள் பெயர்களை நீக்குவதே SIR-ன் இலக்கு.
இதற்கு அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் ஓர் உதாரணம். ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளவர்களின் பெயர்கள் மட்டுமே SIR மூலம் தக்கவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் அங்கே சில இடங்களில் வெற்றிபெற்றதே ஆச்சரியம்" என்று தெரிவித்தார்.
- தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும்.
- அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் கூட்டணிகள் இடையிலோ இருக்காது.
இந்தியாவில் விரைவில் பாரளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், பிரசாரம் என தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பா.ஜ.க. அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் சட்டம் பற்றிய தகவல்கள் வெளியாக துவங்கின.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை எவ்வளவு, யார்யார் நன்கொடை வழங்கினர் என்ற தகவல்கள் தினந்தோறும் செய்திகளாகி வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக அரசியல் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தனது கருத்துக்களை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம் காரணமாக பா.ஜ.க. மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்கள் இடையே தான் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. மற்றும் இதர அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் கூட்டணிகள் இடையிலோ இருக்காது."
"தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தற்போது இருப்பதை விட அதிகளவில் பூதாகாரமாக உருவெடுக்கும். இந்த விவகாரம் பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை கடந்து பொது மக்களிடம் அதிவேகமாக சென்றடைய துவங்கிவிட்டது. அனைவருக்கும் இந்த தேர்தல் பத்திரங்கள் விவகாரம் இந்தியா மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய ஊழல் என்று புரிய துவங்கிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக இந்த அரசு மிகப்பெரிய தண்டனையை பெறும் என்று நான் நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.






