என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகந்தா மஜும்தார்"

    • மேற்கு வங்கத்தில் SIR பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டம்.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி SIR-ஐ கடுமையாக விமர்சித்து வருகிறது.

    மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் இடையில் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

    மத்திய அமைச்சரும், மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவருமான சுகந்தா மஜும்தார் "மேற்கு வங்கத்தில் SIR பணியின்போது மத்திய படைகள் குவிக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், துப்பாக்கிச்சூடு கூட நடத்தப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு மம்தா கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். ஸ்ரீராம்பூர் மக்களவை தொகுதி திரிணாமுல் கட்சி எம்.பி. கல்யாண் சிங், "மந்திரியான சுகந்தா மஜும்தாரிடம், CISF தோட்டாக்கள் அவர்களை தாக்கும் எனச் சொல்லுங்கள். உங்களுக்கு தையரிம் இருந்தால் ஸ்ரீராம்பூருக்கு வாரங்கள். வந்த பின்னர் எப்படி வீடு திரும்புவீரக்ள் பார்ப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் சுகந்தா மஜும்தார் சவாலை ஏற்று, பாஜக தொண்டர்களுடன் மோட்டார் சைக்கிளில் பேரணி சென்றார். பின்னர் தொண்டர்களிடம் பேசும்போது "பாஜக வன்முறை அரசியலை நம்புவதில்லை. ஆனால், கல்யாண் பானர்ஜி அரசியல் விளையாட்டு விளையாட விரும்பினா், நான் நம்முடைய தொண்டர்களை அதே விளையாட்டை விளையாட கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

    • பல தசாப்தங்களாக, கிழக்கு பெங்காலில் (தற்போது வங்கதேசம்) இருந்து வந்த தலித் அகதிகளை பற்றி யாரும் நினைக்கவில்லை.
    • முதல்முறையாக பிரதமர் மோடி அவர்களின் அவலை நிலையை கருத்தில் கொண்டார்.

    மத்திய கல்வித்துறை இணையமைச்சரான சுகந்தா மஜும்தார், இந்தியாவில் இந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் வரைக்கும், மதச்சார்பின்மை மற்றும் கம்யூனிசம் நிலைத்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுகந்தார் மஜும்தார் கூறுகையில் "பல தசாப்தங்களாக, கிழக்கு பெங்காலில் (தற்போது வங்கதேசம்) இருந்து வந்த தலித் அகதிகளை பற்றி யாரும் நினைக்கவில்லை. முதல்முறையாக பிரதமர் மோடி அவர்களின் அவலை நிலையை கருத்தில் கொண்டார்.

    இந்தியாவில் இந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் வரைக்கும், மதச்சார்பின்மை மற்றும் கம்யூனிசம் நிலைத்திருக்கும். மாறாக அவைகள் நிலைத்திருக்க முடியாது. ஏனென்றால், இந்துக்கள் மட்டுமே உள்ளடக்கிய தன்மையை நம்புகிறார்கள்.

    வங்கதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக தலித்கள் தொடர்ந்து கொடுமைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த அகதிகள் 1947-ல் இருந்து இந்தியாவுக்கு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். பல ஆண்டுகளாக, அவர்களுக்காக யாரும் பேசவில்லை. முதல் முறையாக, நரேந்திர மோடி அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, CAA நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தார்.

    வெளிநாட்டினர் சட்டத்தில் கொண்டு வந்ததுள்ள மாற்றத்தையும், உள்துறை அமைச்சகத்தின் அறிப்பாணையை மேற்கோள் காட்டி, உலகின் எந்த பகுதியிலும், இந்துவாக இருந்து கொடுமைக்கு ஆளானால், அல்லது அவர்களுடைய மதம் சார்ந்த சடங்குகளை செய்வதற்கு தடை ஏற்பட்டால், அந்த நபர் இந்தியாவில் அடைக்கலம் கேட்க முடியும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    சிஏஏ சட்டத்தின்படி இந்தியாவின் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    CAA சட்டத்தின்படி வங்கசேதம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து மதக் கொடுமையால் இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்கள் இந்தயி குடியுரிமை பெற முடியும்.

    • மாநில சட்டம் ஒழுங்கு, சோனாகாச்சி போல இருக்கிறது என கூறியுள்ளார்.
    • சுகந்தா மஜும்தார் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சுகந்தா மஜும்தார், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    அதாவது, மாநில சட்டம் ஒழுங்கு, சோனாகாச்சி போல இருப்பதாக கூறியுள்ளார். சோனாகாச்சி பகுதி, பாலியல் தொழிலுக்கு புகழ்பெற்ற இடமாகும். எனவே அவரது இந்தக் கருத்து மாநில அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து, சோனாகாச்சியை சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் அங்குள்ள போலீசில் சுகந்தா மஜும்தாருக்கு எதிராக புகார் செய்துள்ளார். அதாவது, பாலியல் தொழிலாளர்களை இழிவுபடுத்தி இருப்பதாக அந்தப் புகாரில் அவர் கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக சுகந்தா மஜும்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக, மஜும்தாரின் கருத்துக்கு மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அவர் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர்.

    • அவர்கள் (பாகிஸ்தான்) என்ன விசாரணை செய்வார்கள்?
    • பாகிஸ்தான் பிரதமர் பயத்தில் இதைச் சொல்கிறார். இந்தப் பயம் நல்லது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.

    குறிப்பாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியா எங்கள் மீது பழி போடுகிறது. நாங்கள் நடுநிலையான விசாரணையில் பங்கேற்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார்.

    இதற்கு மத்திய அமைச்சரும், மேற்க வங்க மாநில பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் கூறியதாவது:-

    அவர்கள் (பாகிஸ்தான்) என்ன விசாரணை செய்வார்கள்? ஒரு திருடன் தனது சொந்த திருட்டை எப்போதாவது விசாரிக்க முடியுமா?. பாகிஸ்தான் பிரதமர் பயத்தில் இதைச் சொல்கிறார். இந்தப் பயம் நல்லது. அவருக்கு இந்தப் பயம் இருக்க வேண்டும். பாகிஸ்தான் தயாராக இல்லாதபோது, அவர்களைத் தாக்குவோம், அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம்.

    இவ்வாறு சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.

    • காவி கொடிகளை ஏந்தியதற்காக வாகனங்கள் மீது கற்கள் மழை பொழிந்தன.
    • பொதுமக்கள் எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

    வட இந்தியாவில் நேற்று ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியிருந்தது.

    கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் செவன் பாயிண்ட் பகுதியில் ராம நவமி ஊர்வலம் தாக்கப்பட்டதாக பாஜக எம்பி சுகந்தா மஜும்தார் நேற்று கூறியிருந்தார்.

    அவரது எக்ஸ் பதிவில், "காவி கொடிகளை ஏந்தியதற்காக வாகனங்கள் மீது கற்கள் மழை பொழிந்தன. கண்ணாடித் திரைகள் உடைந்தன. குழப்பம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இது தற்செயலானதல்ல - இது குறிவைக்கப்பட்ட வன்முறை. முதுகெலும்பு இல்லாத காவல்துறை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.

    மம்தா பானர்ஜியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே படை அவரது திருப்திப்படுத்தும் அரசியலால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அப்பாவி இந்துக்களைப் பாதுகாக்க ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை" என்று கொந்தளித்திருந்தார். இதுதொடராக வீடியோ ஒன்றரையும் அவர் பகிர்ந்தார்.

    ஆனால் அந்த பகுதியில் ஊர்வலம் எதுவும் நடைபெறவில்லை எனவும் அங்கு எந்த ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கொல்கத்தா போலீஸ் தெளிவுபடுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக கொல்கத்தா காவல்துறை அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், "பார்க் சர்க்கஸில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, எந்தவொரு ஊர்வலத்திற்கும் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. அந்தப் பகுதியில் அத்தகைய ஊர்வலம் எதுவும் நடக்கவில்லை.

    ஒரு வாகனம் சேதமடைந்ததாக தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக தலையிட்டு ஒழுங்கை மீட்டெடுத்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளது.

    • 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதி மறுப்பு.
    • போலீசார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தியதால் கைது.

    மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டம் சந்தேஷ்காளியில் பழங்குடியின பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டதாகவும், மத்திய மற்றும் மாநில நலத்திட்டங்கள் மூலம் பெறும் பணத்தை முறைகேடாக பறித்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் ஷேக் ஷாஜகான் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இவர் தலைமறைவாக உள்ளார். அவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்யக்கோரி வன்முறை சம்பவங்கள் நடந்தன. பெண்கள் ஆயுதங்களுடன் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியதால் விவகாரம் தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

    சந்தேஷ்காளி சென்று பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார் முடிவு செய்தார். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதையும் மீறி பா.ஜதனா தலைவர் சுகந்தா மஜும்தார் அங்கு செல்ல முயன்றார். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். பிறகு ஜாமின் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியபின் அவரை விடுவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து அவர் கவர்னரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சந்தேஷ்காளில் நடந்த முழு சம்பவம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் அளித்தேன். அதை கேட்டு கவர்னர் அதிர்ச்சி அடைந்தார். ஜனநாயகத்தில் இதுபோன்ற சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. பா.ஜனதாவிற்கு எதிராக மட்டும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஏனென்றால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. 50 பேருடன் அப்பகுதியில் சுற்றி வருகிறார். இது பா.ஜனதா தலைவருக்கும், தொண்டர்களுக்கும் மட்டும் பொருந்தும் வகையிலான 144 தடை உத்தரவின் ஒரு பகுதி.

    ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது சகோதரர்கள் ஜமின்தார் போன்று நடந்து, மக்களை துன்புறுத்துகிறார்கள். மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், இந்த விவகாரம் வெளியில் தெரியாத வண்ணம் குரலை ஒடுக்குகிறது. தற்போது பெண்கள் அவர்களுடைய குரலை எழுப்பியுள்ளனர். அனைத்து விவகாரத்திலும் ஆளுநர் கவனம் செலுத்துகிறார். உள்துறை அமைச்சகத்திற்கு இது தொடர்பாக ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்" என்றார்.

    • மேற்கு வங்க மக்களிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.
    • மேற்கு வங்க மக்கள் மம்தா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

    பெண் டாக்டர் கொலை தொடர்பாக நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5-வது மற்றும் கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார்.

    ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குதல் உள்ளிட்ட மூன்று நிபந்தனைகள் ஏற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குவது தொடர்பான மம்தா பானர்ஜியின் முடிவு தொடர்பாக மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா முஜும்தார் கூறியதாவது:-

    ஜூனியர் டாக்டர்களின் சில நிபந்தனைகளை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்கமாட்டேன் எனத் தெரிவித்தார். மேற்கு வங்க மக்கள் நிபந்தனைகள் வைத்த நிலையில், அவர்களிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    இது திட்டமிட்ட தோல்வி என்பது பாஜக-வுக்கு தெரியும். இதற்கு யாராவது ஒருவர் பொறுப்பு என்றால், அது போலீஸ் கமிஷனரோ, மற்ற ஒருவரோ அல்ல. முக்கியமான குற்றவாளி மம்தா பானர்ஜி. மேற்கு வங்க மக்கள் மம்தா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இதனால்தான் பாஜக, மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

    மக்கள் விரும்பினால் ராஜினாமா செய்வதாக அவரே தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மக்களின் வலியுறத்தலை நிறைவேற்றும் வகையில் பாஜக தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.

    • அஷ்டலட்சுமி மஹோத்சவ நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடக்கிறது.
    • நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    புதுடெல்லி:

    பேஷன் ஷோவில் அழகிகள் ஒய்யாரமாக நடந்து வருவதைதான் நாம் பார்த்திருப்போம். ஆனால் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரிகள் 2 பேர் அலங்கார ஆடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினர்.

    டெல்லியில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலந்து, மிசோரம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள். அஷ்ட லட்சுமியின் 8 வடிவங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

    அந்த மாநிலத்தினர் இந்தியாவின் கலாச்சார சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள். அவர்களின் காலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பொருட்டு டெல்லியில் அஷ்டலட்சுமி மஹோத்சவ நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடக்கிறது. நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஜவுளி தொழில், கைவினை பொருட்கள், தனித்துவமான, புவியியல் குறியீடு தயாரிப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

    இதில் முக்கிய நிகழ்வாக பேஷன் ஷோ நடந்தது. அழகிகள் பாரமபரிய ஆடை அணிந்து ஒய்யரமாக நடந்து வந்து அசத்திக் கொண்டிருந்தனர்.

    அப்போது யாரும் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரிகள் ஜோதிராதித்ய சிந்தியா, சுகந்தா மஜும்தார் ஆகிய 2 பேரும் மேடையில் தோன்றி வட கிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினர்.

    இது அங்கிருந்த பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. அழகிகளுக்கு இணையாக மத்திய மந்திரிகள் நடந்து வந்ததை அங்கிருந்த பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

    இதுகுறித்து மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தனது எக்ஸ் தளத்தில், இந்த நிகழ்வு கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றலின் கொண்டாட்டம்.

    வடகிழக்கு இந்தியாவின் துடிப்பான பாணிகளை வெளிப்படுத்தும் பேஷன் ஷோவில் ஒரு அற்புதமான நேரம் இருந்தது. ஒவ்வொரு மாநிலமும் திறமையான கலைஞர்கள் மற்றும் மாடல்களால் அழகாக பிரதிநிதித்துவபடுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பேஷன் ஷோவில் தான் ஒய்யாரமாக நடந்து வந்த படங்களையும் பதிவிட்டுள்ளார். 

    ×