search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sandeshkhali issue"

    • மேற்கு வங்காளத்தின் அரம்பாக் பகுதியில் பா.ஜ.க. சார்பில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • அப்போது சந்தேஷ்காலி பெண்களின் மரியாதை, கண்ணியத்திற்காக பா.ஜ.க. தலைவர்கள் போராடினர் என்றார்.

    கொல்கத்தா:

    பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காள மாநிலத்தின் அரம்பாக் பகுதியில் பாஜக சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    சந்தேஷ்காலியில் உள்ள சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் என்ன செய்தது என்பதை நாடு பார்க்கிறது. இதனால் நாடு முழுவதும் கொதிப்படைந்துள்ளது.

    சந்தேஷ்காலியில் நடந்த சம்பவத்தால் சமூக சீர்திருத்தவாதியான ராஜாராம் மோகன் ராயின் ஆன்மா வேதனை அடைந்திருக்க வேண்டும்.

    ஒரு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எல்லா வரம்புகளையும் கடந்தார். மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் இங்குள்ள பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்திற்காக போராடினர். போலீசார் நேற்று அவரை கைதுசெய்ய வேண்டியிருந்தது என தெரிவித்தார்.

    • 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதி மறுப்பு.
    • போலீசார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தியதால் கைது.

    மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டம் சந்தேஷ்காளியில் பழங்குடியின பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டதாகவும், மத்திய மற்றும் மாநில நலத்திட்டங்கள் மூலம் பெறும் பணத்தை முறைகேடாக பறித்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் ஷேக் ஷாஜகான் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இவர் தலைமறைவாக உள்ளார். அவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்யக்கோரி வன்முறை சம்பவங்கள் நடந்தன. பெண்கள் ஆயுதங்களுடன் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியதால் விவகாரம் தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

    சந்தேஷ்காளி சென்று பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார் முடிவு செய்தார். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதையும் மீறி பா.ஜதனா தலைவர் சுகந்தா மஜும்தார் அங்கு செல்ல முயன்றார். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். பிறகு ஜாமின் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியபின் அவரை விடுவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து அவர் கவர்னரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சந்தேஷ்காளில் நடந்த முழு சம்பவம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் அளித்தேன். அதை கேட்டு கவர்னர் அதிர்ச்சி அடைந்தார். ஜனநாயகத்தில் இதுபோன்ற சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. பா.ஜனதாவிற்கு எதிராக மட்டும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஏனென்றால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. 50 பேருடன் அப்பகுதியில் சுற்றி வருகிறார். இது பா.ஜனதா தலைவருக்கும், தொண்டர்களுக்கும் மட்டும் பொருந்தும் வகையிலான 144 தடை உத்தரவின் ஒரு பகுதி.

    ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது சகோதரர்கள் ஜமின்தார் போன்று நடந்து, மக்களை துன்புறுத்துகிறார்கள். மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், இந்த விவகாரம் வெளியில் தெரியாத வண்ணம் குரலை ஒடுக்குகிறது. தற்போது பெண்கள் அவர்களுடைய குரலை எழுப்பியுள்ளனர். அனைத்து விவகாரத்திலும் ஆளுநர் கவனம் செலுத்துகிறார். உள்துறை அமைச்சகத்திற்கு இது தொடர்பாக ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்" என்றார்.

    • திரிணாமுல் காங்கிரஸ் உள்ளூர் தலைவர் கூட்டாளிகளுடன் பெண்களை துன்புறுத்தி நிலத்தை மிரட்டி அபகரித்ததாக குற்றச்சாட்டு.
    • பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு.

    மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டம் சந்தேஷ்காளியில் பழங்குடியின பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டதாகவும், மத்திய மற்றும் மாநில நலத்திட்டங்கள் மூலம் பெறும் பணத்தை முறைகேடாக பறித்ததாகவும் புகார்கள் எழுந்தன.

    ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் ஷாஜகான் ஷேக் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இவர் தலைமறைவாக உள்ளார். அவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்யக்கோரி வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    மேற்கு வங்காள மாநிலத்தின் எதிர்க்கட்சியான பா.ஜனதா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

    சந்தேஷ்காளி சம்பவம் தற்போது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் 6-ந்தேதி பிரதமர் மோடி மேற்கு வங்காளம் செல்கிறார். அப்போது மக்களவை தேர்தல் தொடர்பாக பா.ஜனதா பெண்கள் அணிகளை சந்தித்து உரையாற்றுகிறார். அப்போது சந்தேஷ்காளி சென்று பாதிக்கப்பட்டதாக பெண்களை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேசிய பட்டியலினத்தோர் ஆணைய பிரநிதிகள் குழு அண்மையில் சந்தேஷ்காளி சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது தங்களுக்கு ஏற்பட்ட துயரத்தை பெண்கள் எடுத்துரைத்தனர். ஷாஜகான் ஷேக்கை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, டெல்லி திரும்பிய பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அறிக்கை அளித்துள்ளனர். அதில் மேற்கு வங்காள அரசை கலைக்க உத்தர விட வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

    பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் எனவும், அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    ×