என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jyotiraditya Scindia"
- நிமோனியாவால் அவதிப்பட்ட மாதவி ராஜே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
- இன்று காலை 9.28 மணிக்கு மாதவி ராஜே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுடெல்லி:
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா.
நிமோனியாவால் அவதிப்பட்டு வந்த மாதவி ராஜே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்த மாதவி ராஜே இன்று காலை 9.28 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் குவாலியரில் நடைபெற உள்ளன.
மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாதவி ராஜே சிந்தியா பல்வேறு தொண்டு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மந்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசம் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
- வாக்குச்சாவடிக்கு சென்ற அவரிடம் நிருபர் கேள்வி கேட்ட நிலையில் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.
பாராளுமன்ற மக்களவை தேர்தலில் நேற்று 93 இடங்களுக்கு 3-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடுமையான வெப்ப அலை வீசிய போதிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.
நேற்று மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிடுகிறார். இவர் வாக்குப்பதிவின்போது வாக்குச்சவாடிக்கு வந்தார். அப்போது பத்திரிகையாளர் அவரிடம், வெப்ப அலை குறித்து கேள்வி கேட்டார். அதற்கு ஜோதிராதித்ய சிந்தியா "உங்கள் பாக்கெட்டில் வெங்காயத்தை வைத்துக் கொண்டால் போதும்... வெயில் குறித்து கவலைப்படத் தேவையில்லை" எனக் குறிப்பிட்டார்.
பொதுவாக வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி தருவதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அறிவியல் பூர்வமாக உடலில் வெங்காயம் படும்படி வைத்திருந்தால் உடல்நிலையை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என நிரூபிக்கப்படவில்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெப்ப அலையின்போது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் சோர்வை கட்டுப்படுத்த தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் பழ வகையில் சிறந்தது என கூறுகின்றனர்.
சிவப்பு கலரில் உள்ள வெங்காயத்தில் க்வெர்செடின் (quercetin) என அழைக்கப்படும் வேதிப்பொருள் உள்ளது. அது ஹிஸ்டமைன் எதிர்ப்பு (anti-histamine) விளைவை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
- பனிபொழிவால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது
- இரவு உணவு கூட கிடைக்காமல் பயணிகள் தவித்துள்ளனர்
கடந்த நவம்பர் 2023 முதல், வட இந்தியாவில் பனிப்பொழிவு மிக கடுமையாக உள்ளது.
குறிப்பாக, தலைநகர் புது டெல்லியில், பனிப்பொழிவின் கடுமை அதிகரித்துள்ளதால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 6E 2195 எனும் விமானம், பனிப்பொழிவின் காரணமாக டெல்லிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க, விமான நிலைய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கோவாவில் இருந்து புறப்படும் போதே இவ்விமானம் அதிக தாமதத்திற்கு உள்ளானதால், பயணிகள் மிகுந்த கோபத்தில் இருந்தனர்.
மும்பையில் தரையிறக்கப்பட்டதும் அவர்களுக்கு முறையான இரவு உணவு கூட கிடைக்காமல் திண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/01/16/2002249-india-jascindia2.webp)
நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்ததால், சில பயணிகள், விமான நிலைய ஓடுபாதையிலேயே அமர்ந்து உணவு உண்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் அனைவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து, அத்துறையின் சார்பில் மும்பை விமான நிலையத்திற்கும், இண்டிகோ விமான அலுவலகத்திற்கும் விளக்கம் தர கோரி, "ஷோ காஸ் நோட்டீஸ்" (showcause notice) அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
இண்டிகோ மற்றும் மும்பை சர்வதேச விமான நிலையங்கள் சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது. பயணிகள் இறங்கியவுடன் நிலையத்திற்கு விரைந்து செல்லும் வகையில் விமானத்தை நிறுத்த இடத்தை ஒதுக்காமல், தொலைவில் புதிய இடத்தை நிலையம் வழங்கியது பெரும் தவறு. இதனால் பல பயணிகள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
பயணிகளுக்கு இதனால் உணவு விடுதி மற்றும் ஒப்பனை அறைக்கான வசதி உடனடியாக கிடைக்கவில்லை.
இந்த தவறுகளுக்கு அந்த நோட்டீசில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
- கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
- உ.பி.யில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 19 ஆக உயரும்.
மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரியாக ஜோதி ராதித்யா சிந்தியா கூறியதாவது:-
உத்தர பிரதேச மாநிலத்தில் முன்னதாக 6 விமான நிலையங்கள் இருந்தது. தற்போது 9 விமான நிலையங்கள் உள்ளன. நாளை 10-வது விமான நிலையம் தொடங்கப்பட இருக்கிறது.
அடுத்த ஆண்டு மேலும் 9 விமான நிலையங்கள் அமைக்கப்படும். அதன்மூலம் 19 விமான நிலையங்களாக உயரும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அஜாம்கார், அலிகார், மொராதாபாத், ஷ்ரவஸ்தி, சத்ரகூட் ஆகிய இடங்களில் தலா என்று என ஐந்து விமான நிலையங்கள் திறக்கப்படும்.
கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 2030-க்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கை 200-ஐத் தொடும்.
இவ்வாறு ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையல், நாளை சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட இருக்கிறது. பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்த வைக்க இருக்கிறார். இந்த விமான நிலையத்திற்கு வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தி தாம் எனப் பெயரிடப்பட இருக்கிறது.
- கோவிட் பெருந்தொற்று விமான போக்குவரத்து துறையை மிகவும் பாதித்தது
- தொடர்ந்து 3 நாட்கள் விமான போக்குவரத்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக நலிவடைந்த பல தொழில்களில் சுற்றுலா துறையும், அதை சார்ந்திருந்த விமான போக்குவரத்தும் ஒன்று. பல உலக நாடுகளில் 2020 காலகட்டத்தில் சரிவடைந்த விமான போக்குவரத்து நிறுவனங்களின் வர்த்தகம் தற்போது வரை முழுமையாக சீரடையவில்லை.
ஆனால், இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தும், விமான நிறுவனங்களின் வருமானமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து புதிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 4,63,417 பேர் இதுவரை நவம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்தை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்.
"நேர்மறை கொள்கைகள், வளர்ச்சியை நோக்கிய இலக்குகள் மற்றும் பயணிகளுக்கு இந்திய விமான சேவையில் உள்ள நம்பிக்கை காரணமாக, ஒவ்வொரு விமான பயணமும் ஒரு புதிய உச்சத்தை தொடுகிறது" என சிவில் விமான போக்குவரத்து துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.
Post-Covid, India's domestic aviation's turnaround story has not just been overwhelming but inspiring as well. Positive attitude, progressive policies, and deep trust among passengers are taking it to new heights with every flight, every day. pic.twitter.com/WVFGE8pg59
— MoCA_GoI (@MoCA_GoI) November 24, 2023
இது குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2023/11/25/1987050-india-civilaviation2.webp)
விமான பயண போக்குவரத்து வியாழக்கிழமை (நவம்பர் 23) கணக்கின்படி 5998 என உள்ளது.
நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து உள்ளூர் விமான போக்குவரத்து, எண்ணிக்கையின்படி புதிய உச்சங்களை தொட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
தீபாவளி பண்டிகை மற்றும் இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை ஆண்கள் கிரிக்கெட் போட்டி ஆகியவை காரணமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததும் இந்த புதிய சாதனைக்கு ஒரு காரணம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் டாடா குழுமமும் இண்டிகோ குழுமமும் 90 சதவீத சந்தையை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- அங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
போபால்:
மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா, முதல் மந்திரி பதவிக்கான போட்டியில் நான் இல்லை என தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு சிந்தியா அளித்துள்ள பேட்டியில், காங்கிரசிடம் அதிகாரத்திற்காக போட்டியிடுபவர்கள் உள்ளனர், அவர்களுக்கு குழுக்கள் உள்ளன, அவர்கள் முதலமைச்சராக திட்டம் தீட்டுகிறார்கள். தேர்தலுக்கு முன் காங்கிரசிடம் முதல் மந்திரி என்று கூறிக்கொள்ளும் 8 தலைவர்கள் உள்ளனர்.
பா.ஜ.க. என்பது தொண்டர்களின் கட்சி. நாம் அனைவரும் காரியகர்த்தாக்கள், அப்படியே இருப்போம். மத்தியப் பிரதேசத்தில் ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் பிரதமர் தலைமையில் தேர்தலில் போராடுகிறது. நான் இந்தப் போட்டியில் (முதல் மந்திரி பதவிக்கு) இல்லை. நான் ஒரு சேவகன். நான் பந்தயத்தில் இல்லை என தெரிவித்தார்.
- குவாலியரில் வளர்ச்சி பணிகள் நடைபெற்ற இடங்களை காட்டிய டிரோன் வானத்தில் பறந்தது.
- வீடியோவை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ஆவார். இவர் குவாலியரில் நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகளை காண்பிக்கும் வகையில் தேசியக் கொடியுடன் டிரோனை இயக்கி உள்ளார்.
குவாலியரில் வளர்ச்சி பணிகள் நடைபெற்ற இடங்களை காட்டிய டிரோன் வானத்தில் பறந்தது. இதுதொடர்பான வீடியோவை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் இதுதொடர்பான அவரது பதிவில், ஆளில்லா விமானம் மூலம் குவாலியரில் நடைபெற்றுள்ள 9 வளர்ச்சி பணிகளை காட்சிப்படுத்தியது மறக்க முடியாத தருணம்.
இந்த திட்டங்கள் குவாலியர் மக்களுக்கு இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் சின்னமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் மவுனம் காப்பதாக கூறி கேள்வி எழுப்பினார்.
- காங்கிரஸ் ஆட்சியின் போது வடகிழக்கு மாநிலத்தில் நடந்த மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை சிந்தியா நினைவூட்டினார்.
புதுடெல்லி:
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால் பிரதமர் மோடி இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது கடந்த மூன்று தினங்களாக விவாதம் நடத்தப்பட்ட நிலையில், இன்று பிரதமர் மோடி பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது.
இதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் மக்களவைக்கு வந்தார். ஆனால் அவையில் வழக்கம்போல் அமைதியற்ற சூழல் நிலவியது. கடும் அமளிக்கு மத்தியில் விவாதம் தொடர்ந்தது.
பிரதமர் மோடி மக்களவைக்குள் நுழைந்ததை அடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, மணிப்பூரில் நடந்த வன்முறையை நாட்டில் உள்நாட்டுப் போர் என்று கூறி, இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பதாக கூறி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் ஆட்சியின் போது மணிப்பூர் மாநிலத்தில் நடந்த மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை நினைவூட்டினார்.
மேலும் அவர் பேசும்போது, 'பாராளுமன்றத்திற்கு வெளியே மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் உணர்வுபூர்வமான கருத்தை தெரிவித்தார். ஆனால், பிரதமர் பாராளுமன்றத்தல்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் (எதிர்க்கட்சி) வலியுறுத்தினார்கள். எந்த தேதியிலும் நேரத்திலும் விவாதத்திற்கு நாங்கள் தயார் என்று உள்துறை மந்திரி மீண்டும் மீண்டும் கூறினார். ஆனால், 17 நாட்களாக அவையை செயல்பட விடவில்லை' என்றார்.
வெறுப்பு சந்தையில் அன்பின் கடையை திறப்பதாக காங்கிரஸ்காரர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கடை ஊழல், பொய், சமாதானம், ஆணவத்துக்கான கடை. அவர்கள் கடையின் பெயரை மட்டுமே மாற்றுகிறார்கள், ஆனால் தயாரிப்பு அப்படியே உள்ளது என்றும் சிந்தியா குற்றம்சாட்டினார்.
- இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு வரை 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு போக்குவரத்தும் 65 சதவீதம் உயர்ந்துள்ளது.
புதுடெல்லி :
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் விமான போக்குவரத்து துறை செயல்பாடுகள் தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் முற்போக்கான கொள்கைகளால் உலகின் மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக நாம் மாறியுள்ளோம்.
இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு வரை 74 விமான நிலையங்கள் (ஹெலிபோர்ட்டுகள் மற்றும் நீர்வழி நிலையங்கள் உள்பட) மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. அதாவது 148 ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 2013-14-ம் ஆண்டில் இந்தியா 6 கோடி உள்நாட்டு பயணிகளை கொண்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 14.5 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 135 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதைப்போலவே சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையும் 50 சதவீதம் (4.7 கோடியில் இருந்து 7 கோடியாக) அதிகரித்து இருக்கிறது.
மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு போக்குவரத்தும் 65 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் விமானங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, கடந்த 2014-ல் 400 ஆக இருந்த விமானங்கள் தற்போது 75 சதவீதம் அதிகரித்து 700 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் 470 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
இது வெறும் தொடக்கம்தான். அடுத்த 5 ஆண்டுகளில் 1,200 முதல் 1,400 புதிய விமானங்கள் வரை வாங்குவதற்கு இந்திய விமான நிறுவனங்கள் ஆர்டர்களை வழங்கும்.
இதைப்போல அடுத்த 5 ஆண்டுகளில் ஹெலிபோர்ட்டுகள் மற்றும் நீர்வழி நிலையங்கள் உள்பட நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கையும் 200 ஆக உயரும்.
அடுத்த சில ஆண்டுகளில் விமான நிலையத்துறை ரூ.1 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை பெறும்.
இதைப்போல 2030-ம் ஆண்டுக்குள் நாம் ஆண்டுதோறும் 45 கோடி உள்நாட்டு பயணிகளை பார்க்கலாம். விமான நிலையங்களின் திறன் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.
- சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா.
- என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
புதுடெல்லி :
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசில், சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர், ஜோதிர் ஆதித்யா சிந்தியா (வயது 52).
இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "கொரோனா மாதிரி பரிசோதனையில் எனக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. என்னோடு கடந்த சில நாட்களில் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள்" என கூறி உள்ளார்.
- மாண்டியில் பசுமை விமான நிலையத்துக்கு இட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- சிம்லா விமான நிலையத்தில் ஓடுதள சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன.
புதுடெல்லி :
டெல்லி-தர்மசாலா-டெல்லி மார்க்கத்தில் இண்டிகோ விமான சேவையை டெல்லியில் நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
சிவில் விமான போக்குவரத்து துறையில் கடந்த 65 ஆண்டுகளில் நடத்த முடியாத சாதனையை 9 ஆண்டுகளில் சாதித்துள்ளோம். 148 விமான நிலையங்கள், நீர் ஏரோடிராம்கள், ஹெலிபோர்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 என்ற அளவுக்கு உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
பெரிய அளவிலான மாநகர விமான நிலையங்களுக்கும், கடைக்கோடியில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கும் சம முக்கியத்துவம் தரப்படும்.
தர்மசாலா விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். இதற்கு 2 கட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும். முதல் கட்டமாக தற்போதைய ஓடுதளம் 1900 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்படும். இரண்டாவது கட்டமாக ஓடுதளம் 3110 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்படும். இதனால் போயிங் 737, ஏர்பஸ் ஏ 320 ரக விமானங்கள் தரையிறங்க முடியும்.
சிம்லா விமான நிலையத்தில் ஓடுதள சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன. மாண்டியில் பசுமை விமான நிலையத்துக்கு இட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து துறை முழுமையான ஜனநாயகமயமாக்கலைக் கண்டுள்ளது,
மேலும் விமானம் பறப்பதை மட்டுமே பார்க்கக்கூடியவர்களும் இன்று விமானங்களில் பறக்கிறார்கள்.
இமாசலபிரதேசத்தில் 2013-14-ம் ஆண்டில் வாரத்துக்கு 40 விமான சேவை இருந்தது. இப்போது 9 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 110 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
தர்மசாலாவில், வாரத்துக்கு 28 விமான சேவை என்பது தற்போது 50 என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடியின் ஆட்சியில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது.
- 100 ஆண்டில் நாம் பார்க்காத மாற்றங்களை கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சென்னை:
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், புதிய இந்தியா-பல வாய்ப்புகள் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
உலக அளவில் மற்ற நாடுகளுக்கு சேவை செய்வதில் இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது. 100 ஆண்டுகளில், நாம் பார்க்காத மாற்றங்களை, கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இன்று உலகளாவிய பிரச்சினைகளுக்கு இந்தியாவை நாடி வரும் சூழல் உண்டாகியுள்ளது. உக்ரைன், ரஷியா போர் பிரச்சினைக்கு, இந்தியாவால்தான் தீர்வு கொண்டுவர முடியும் என்ற சூழல் உலகளவில் உருவாகியுள்ளது.
விமான போக்குவரத்து துறையைப் பொறுத்தவரை உலகில் இரண்டாவது உள்நாட்டு பயண போக்குவரத்து கொண்ட நாடாக இந்தியா உள்ளது. சர்வதேச அளவில் பயணிகள் போக்குவரத்தில் 7-வது இடத்தில் உள்ளது. சுதந்திரம் அடைந்த 67 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடியின் கடந்த எட்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் புதிதாக 73 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 147 விமான நிலையங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த மாதம் பிரதமர் மோடி 148-வது விமான நிலையத்தை திறந்துவைக்க உள்ளார்.
அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200-க்கும் மேல் கொண்டு செல்ல திட்டம் உள்ளது. 2013-ல் 400 விமானங்கள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 700 ஆக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1500 ஆக அதிகரிக்கும். பிரதமர் மோடியின் ஆட்சியில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது.
உலக அளவில் 5 சதவீதம் பெண் விமானிகள் உள்ள நிலையில் இந்தியாவில் 15 சதவீத பெண் விமானிகள் உள்ளனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்கள் பங்களிப்பு முக்கியமானது. இளைஞர்கள், பெண்கள் இணைந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)