என் மலர்

    நீங்கள் தேடியது "election"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்போது இந்த இயக்கத்த்தில் 2 கோடி உறுப்பினர்களை எட்டி உள்ளோம்.
    • தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுத்தர தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் காந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், ராம்குமார், சேகர், ரெத்தினசாமி, இளமதி சுப்பிரமணியன், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மருத்துவக்கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர் வக்கீல் சரவணன் அனைவரை யும் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகரங்களில் அ.தி.மு.க. மகளிரணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யும் பணியை வருகிற 17-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதிக்குள் முடித்து படிவஙக்ளை ஒப்படைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசி நமக்கு உள்ளதால் தான் தற்போது இந்த இயக்கத்த்தில் 2 கோடி உறுப்பினர்களை எட்டி உள்ளோம்.

    நாடாளுமன்ற தேர்த லோடு, சட்ட மன்ற தேர்தலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறுவை பயிர்கள் கருகி வருகின்றன. சம்பா சாகுபடி செய்ய முடியுமா? என விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுத்தர தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேர்தல் எப்போது வந்தாலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தான் அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், முன்னாள் கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் துரை.செந்தில், மதியழகன், கோவி.இளங்கோ, கோவி.தனபால், முருகானந்தம், இளங்கோவன், பாரதிமோகன், அசோக்குமார், சாமிவேல், கலியமூர்த்தி, இளம்பெண்கள், இளைஞர் பாசறை செயலாளர் துரை.சண்முகபிரபு மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 51-வது வட்ட செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழக முதல்-அமைச்சர் கர்நாடக அரசுக்கு காவிரி விவாகரத்தில் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தண்ணீரை பெற்று தர தமிழக அரசை வலியுறுத்தியும் அ.ம.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.

    துணை பொது செயலாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான எம். ரங்கசாமி முன்னிலை வகித்தார். முன்னதாக மன்னை நகர செயலாளர் ஆனந்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி. வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற போது சென்னையில் இருந்து விமானம் மூலம் கர்நாடக சென்று அங்கு அனைத்து அமைச்சர்களுடன் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சனையான காவிரி நீர் பிரச்சினை குறித்து கர்நாடகா முதல்வரிடம் பேச விரும்பவில்லை.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக அரசுக்கு காவிரி விவாகரத்தில் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டா லும் அ.ம.மு.க 40 தொகு திகளிலும் போட்டியிடும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் பிரிவு துணை செயலாளர் மலர்வேந்தன், அம்மா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சத்தியமூர்த்தி, விவசாய பிரிவு செயலாளர் சங்கர், வர்த்தக பிரிவு செயலாளர் அம்பிகா சங்கர், வக்கீல் பிரிவு இணை செயலாளர் ரவிச்சந்திரன், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் செங்கொடி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், அம்மா தொழிற்சங்க பேரவை மின்வாரிய பிரிவு தலைவர் ராவணன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் சரவணன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், மன்னார்குடி நகர, ஒன்றிய நிர்வாகிகள், நீடாமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து தி.மு.க. வெவ்வேறான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது என முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
    • சட்டமன்றத்தில் நிறைவேற்ற தாமதம் ஆகும்.

    விருதுநகர்

    விருதுநகர் பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டிய ராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஏற்கனவே கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பேசப்பட்டது. அப்போது கருணாநிதி அதனை ஆதரித்தார். நாங்கள் (அ.தி.மு.க.) ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ஆளுங்கட்சி யாக இருந்து ஆதரித்தோம்.

    தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயல்படும்போதும் நாங்கள் அதனை ஆதரிக்கிறோம். ஆனால் தி.மு. க.வை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப் பாட்டையும் கையாளுகிறது.

    இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் உடனடியாக வரப்போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனை கொண்டு வருவதற்கு மத்திய அரசு 8 பேர் கொண்ட பிரநிதித்துவ குழுவை நியமித்துள்ளது. அந்த குழு தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை அளித்து, அது நாடாளு மன்றத்திற்கு கொண்டு வர குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகும்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சரியான பாதையாகும். இதில் தி.மு.க. நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி பேசி வருகிறது. தொழிலாளர் நலச்சட்டம் இயற்றி பாராளுமன்றம், அதன் பிறகு சட்டமன்றத்தில் நிறைவேற்ற தாமதம் ஆகும். அதேபோல் தான் இந்த ஒரே நாடு, ஒரே தேர்தலும் உடனடியாக கொண்டு வரப்படாது. அதற்கும் கால அவகாசம் தேவைப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 3077 ஆக உயர்வு
    • கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ தொகுதியில் அதிகபட்சமாக 435 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளது

    கோவை,

    பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பற்றிய முன்னோட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி பட்டியல் திருத்தம் பற்றிய ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பொள்ளாச்சி சப்கலெக்டர் பிரியங்கா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக்அலி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஜெயபால் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது கலெக்டர் கிராந்திகுமார் நிகழ்ச்சியில் பேசும்போது, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.

    இதன்படி 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசிக்கும் 10 வாக்கு சாவடிகள் பிரிக்கப்பட்டு உள்ளது. 300 பேருக்கும் கீழ் வசிக்கும் பகுதிகளில் 2 வாக்குச்சாவடிகள் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் 19 வாக்குச்சாவடிகளில் வீதிகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. 65 வாக்குச்சாவடிகள் இட மாற்றம் செய்யப்படுகிறது. 29 சாவடிகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன. தொடர்ந்து 8 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன.

    இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை தற்போது 3077 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கவுண் டம்பாளையம் எம்.எல்.ஏ தொகுதியில் அதிகபட்சமாக 435 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளது.

    இதேபோல மேட்டுப்பாளையத்தில் 321, சூலூரில் 329, கோவை வடக்கில் 298, தொண்டாமுத்தூரில் 310, கோவை தெற்கில் 251, சிங்காநல்லூரில் 323, கிணத்துக்கடவில் 305 பொள்ளாச்சியில் 269, வால்பாறையில் 236 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்று தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ‘பூங்கொடி’ புதிய திரைப்படத்தின் பூமி பூஜை-நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • அவர் இந்த படத்தை தயாரித்து வெளியிடுவது ஆச்சரியம் அளிக்கிறது என்றார்.

    மதுரை

    மதுரையில் காளவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி அரங்கத்தில் பிரஷ்யா புரடெக்சன் சிவாஜி வழங்கும் மனித வாழ்வியலை புரட்டிப் போட வருகிறாள் "பூங் கொடி" திரைப்படத்தின் பூஜை மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு தயாரிப்பாளர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது.

    திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் விளாங்குடி வீரமுத்து, திரைப்பட இயக்குனர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் மற்றும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் திருமாறன்ஜி, பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், தொழிலதிபர் குருசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பா–ளர்களாக கலந்து கொண்டு பட பூஜையினை குத்து–விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    விழாவில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி வாழ்த்தி பேசுகையில், சமீப காலங்களாக நல்ல படங்களுக்கு வேலை இல்லை. எல்லா இடங்களிலும் வளர்ந்து வரும் சாதியம், சினிமாவிலும் வந்துவிட்டது. எல்லா இயக்குனர்களும் சாதியம் இல்லாத நல்ல சமூகப் படங்களை கொடுக்க வேண்டும்.

    அந்த வகையில் பூங் கொடி திரைப்படம் குழந் தையை பற்றி திரைப்படமா–கும். சமுதாயத்திற்கு நல்ல கருத்தினை வழங்க வேண் டும் என கூறினார். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் பேசுகையில், பல பேர் பார்த்து வியக்கின்ற தம்பி சிவாஜி ஆங்கிலமும் தெரியாமல், இந்தியும் தெரியாமல் டெல்லியில் அனைவரையும் தெரிந்த நபர். சிவாஜி ஆளுமைமிக்கவர். அவர் இந்த படத்தை தயாரித்து வெளியிடுவது ஆச்சரியம் அளிக்கிறது என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தச்சநல்லூர் பகுதி சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை சந்திப்பில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் வசந்தம் ஜெயக்குமார், ஹெலன் டேவிட்சன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட நெல்லை மாநகர தி.மு.க.வின் தச்சநல்லூர் பகுதி சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் சந்திப்பில் நடைபெற்றது. இதற்கு தச்சநல்லூர் பகுதி செயலாளரும், முன்னாள் மண்டல சேர்மனுமான தச்சை சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் மாலைராஜா முன்னிலை வகித்தனர்.

    நெல்லை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வசந்தம் ஜெயக்குமார், பாளை தொகுதி பார்வையாளர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியல் நெல்லை மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர துணைச்செயலாளர் அப்துல் கையூம், இளைஞரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் அலீப் மீரான், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அனிதா, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சவுந்தரம், இளைஞா் அணி மணிகண்டன் மற்றும் தச்சநல்லூர் பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
    • கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    காரியாபட்டி

    விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மல்லாங்கிணறில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    விருதுநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி பாக முக வர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாத புரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனை வரும் கலந்து கொள்ள வேண்டும்.

    வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டும். முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை அனைத்து தி.மு.க. சார்பு அணிகளும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் வனராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய செய லாளர்கள் காரியாபட்டி செல்லம், கண்ணன், நரிக்குடி போஸ் தேவர், கண்ணன், திருச்சுழி சந்தன பாண்டியன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சி லர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, சந்திரன், முன்னாள் நகர செயலாளர் தங்கபாண்டி யன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நீதிபதி வெங்கிடலட்சுமி சான்றிதழ் வழங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரிகள் வழக்கறிஞர்கள்சந்திவுரபாண்டி, குரு தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவராக முத்துமணி, துணைத்தலைவர்களாக கார்த்திக்கேயன், தங்கபாண்டி, செயலாளராக பாலகிருஷ்ணன், துணைச்செயலாளர்களாக சிவராமன், காசிநாதன், பொருளாளராக அழகர்சாமி, நூலகராக துரைமுருகன், செயற்குழு உறுப்பினர்களாக ராமர், கார்த்திக்குமார், நேதாஜி, வீரமாரி பாண்டியன், நாச்சியார், கோபி, கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நீதிபதி வெங்கிடலட்சுமி சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் நெடுஞ்செழியன், அரசு வழக்கறிஞர்கள் மோகன்குமார், பார்த்தசாரதி, மகேஷ், மூத்த வழக்கறிஞர்கள் செல்வகுமார், அழகேசன், முத்துராமலிங்கம், வெள்ளைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மண்ணச்சநல்லூர் அரசு பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது
    • பொது தேர்தல் போல வாக்குபதிவு, விரல் மையுடன் நடைபெற்றது

    மண்ணச்சநல்லூர்,

    மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒரு தலைமையாசிரியர் 34 ஆசிரியர்களும் 383 மாணவர்கள், 385 மாணவிகள் என மொத்தம் 768 மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் அவ்வப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சமூக நலன் சார்ந்த பல்வேறு விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் அலுவலர் மற்றும் அதிகாரியாக ஆசிரியர்களே செயல்பட்டனர். இதில் 4 மாணவர்கள் 13 மாணவிகள் வேட்பாளர்களாக களத்தில் நிறுத்தப் பட்டனர். பின்னர் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.வேட்பாளராக களம் கண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு வகுப்புகளில் உள்ள மாணவ, மாணவிகளை சந்தித்து தான் வெற்றி பெற்றால் பள்ளிக்கு ஆற்ற உள்ள பணிகள் குறித்து விளக்கிக் கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதே போல் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்ட ஆசிரியர்கள் அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் பூத் சிலிப் போன்று ஒரு சீட்டு கொடுத்து அதில் அவர்களின் பெயர் மற்றும் வகுப்பு ஆகியவற்றையும் குறித்து கொடுத்தனர்.இது மட்டுமின்றி பள்ளியில் இரண்டு வகுப்பறையில் மாதிரி வாக்குச்சாவடியும் அமைக்கப் பட்டது. மேலும் வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய வாக்குச் சீட்டும் தயார் செய்து வைக்கப் பட்டது.வாக்குச்சீட்டில் வாக்கை பதிவு செய்த பின்னர் அந்த மாணவ, மாணவிகள் வாக்குச்சீட்டை இரண்டு வாக்குப்பெட்டிகளில் போட்டு செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப் பட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்தல் நடை பெற்றது. வாக்களிக்க அனுமதிக்கப் பட்டதோடு அவர்களின் விரலில் மையும் வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக மாணவ, மாணவிகள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து முடித்த பின்னர் மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிஷப் பர்னபாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் இருப்பதாக உதவி கலெக்டர் கார்த்திகேயினி உத்தரவிட்டார்.
    • ஜனவரி மாதம் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

    நெல்லை:

    தென்னிந்திய திருச்சபை என்று அழைக்கப்படும் நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல திருச்சபையில் பிஷப் பர்னபாஸ் மற்றும் லே செயலாளர் ஜெயசிங் ஆகியோர் தலைமையில் இரு தரப்பினராக பிரிவு ஏற்பட்டு நடந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் பிஷப் பர்னபாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் இருப்பதாக உதவி கலெக்டர் கார்த்திகேயினி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று திருமண்டல அலுவலகம் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று பிஷப் பர்னபாஸ் தலைமையில் அங்கே ஜெபம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    சுமார் 1 மாதமாக அடைக்கப்பட்டிருந்த டயோசீசன் அலுவலகம் திறக்கப்பட்டது. ஏன் எதற்காக பிரச்சினை எழுந்தது என்பது தெரிய வில்லை. இனியும் அனைவரும் சகோதரத்து வத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். யாரையும் இந்த விஷயத்தில் குறை சொல்ல விரும்பவில்லை.

    திருச்சபை அன்பை வெளிப்படுத்துவது. எல்லோரும் இணைந்து செயல்படுவோம்.வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை எங்களுக்கு தேர்தல் நடத்தப்படும். அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதத்துடன் எங்களுடைய குழுவின் பதவி காலம் முடிவடைகிறது. வருகிற ஜனவரி மாதம் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது திருமண்டல உப தலைவர் சுவாமிதாஸ், குருத்துவ செயலாளர் பாஸ்கர் கனக ராஜ், உயர்கல்வி மேலாளர் சுதர்சன், ஆரம்பக் கல்வி மேலாளர் அருள்ராஜ் பிச்ச முத்து, சொத்து கமிட்டி சத்தியநேசன், கல்லூரி தாளாளர்கள் கே.பி.கே. செல்வராஜ், ஜெகன், ஜெய்கர், கதீட்ரல் பள்ளி தாளாளர் சாலமோன் டேவிட், அசோக், மாரா சிங், வக்கீல்கள் ஜெனி, பாஸ்கர், ஜெயக்குமார் மற்றும் டியூக் துரைராஜ் உடன் இருந்தனர்.

    முன்னதாக டயோசீசன் அலுவலகத்துக்கு வந்த பிஷப் பர்னபாசுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print