என் மலர்
நீங்கள் தேடியது "Election"
- விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.
- 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.
சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக- தவெக இடையே தான் போட்டி.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.
விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.
மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது. இருப்பினும், மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.
பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடக்க கட்டத்தில் உள்ளது. இறுதி முடிவு எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள எதிர் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது
- தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தேர்தல் சீர்திருத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதில் புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் டுண்டு லிசு அதில் கையெழுத்திடவில்லை. பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள சடேமா கட்சிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த விவகாரம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசனின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மீண்டும் வெற்றி பெற்று சாமியா சுலுஹு ஹாசன் மீண்டும் அதிபராக தேர்வானார்.
அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாக முக்கிய எதிர்க்கட்சியான சடேமா குற்றம் சாட்டியது. இதையடுத்து அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையால் தான்சானியா நாட்டில் இணையத்தை முடக்கிய ஆளும் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
- மிகக் குறைந்த பெரும்பான்மையுடனே இந்தியாவின் பிரதமராகியுள்ளார் மோடி.
- மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு மோசடி செய்தது
காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர சட்ட மாநாடு டெல்லியில் இன்று நடை பெற்றது.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி இதில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தேர்தல் ஆணையத்தை மீண்டும் கடுமையாக சாடினார். இது தொடர்பாக ராகுல்காந்தி பேசியதாவது:-
தேர்தல் முறையை பற்றி நான் சமீப காலமாகப் பேசி வருகிறேன். 2014 முதலே ஏதோ தவறு இருப்பதாக எனக்கு சந்தேகம் இருந்து வந்தது.
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதில் எனக்கு சந்தேகம் இருந்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பின்னர் மராட்டியத்தில் ஏதோ நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். 4 மாதங்களுக்குப் பிறகு நடை பெற்ற சட்டசபை தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை, அழிக்கப்பட்டோம். அங்கு 3 வலிமையான கட்சிகள் திடீரென்று காணாமல் போய் விட்டன.
மராட்டிய தேர்தல் தோல்விக்கு பிறகு தேர்தல் முறைகேடு குறித்து உன்னிப்பாக கவனிக்க தொடங்கி னோம்.
பாராளுமன்ற தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் இடையே ஒரு கோடி புதிய வாக்காளர்கள் தோன்றினார்கள். அந்த வாக்குகளில் பெரும் பகுதி பா.ஜ.க.வுக்கு சென்றது.
தற்போது எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்கிறேன், எங்களிடம் ஆதாரம் உள்ளது. தேர்தல் ஆணையம் செயல்படவில்லை என்பதை நிரூபிக்க எங்களிடம் ஆதாரம் உள்ளது. அது சமரசம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் 6 மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம். சில நாட்களில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மோசடி செய்து வெற்றி பெற்ற தற்கான ஆதாரத்தை வெளியிடுவோம். 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் பேர் போலியானவர்கள்.
உண்மை என்னவென்றால், இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது. நாட்டில் தேர்தல் ஆணையம் என்ற நிறுவனம் இல்லை. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார் மோடி. 15 இடங்கள் மோசடி செய்யப்படாமல் இருந்திருந்தால், அவர் இந்தியாவின் பிரதமராக இருந்திருக்க மாட்டார்.
15 தொகுதி மோசடியால் பிரதமராகி விட்டார். 15 முதல் 100 தொகுதிகள் வரை முறைகேடு நடந்ததாக கருதுகிறேன்.
நான் ஒரு ராஜாவாக இருக்க விரும்பவில்லை. நான் ஒரு ராஜா என்ற கருத்துக்கு எதிரானவன் இந்த ராகுல்காந்தி.
மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான் போராடிக் கொண்டிருந்தபோது அருண் ஜெட்லியிடம் இருந்து எனக்கு மிரட்டல் வந்தது. போராடினால் என்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. யாருடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை என பதிலளித்தேன்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
இந்த மாநாட்டில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்த் சிங் சுக்லா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
- தேர்தலை ஒட்டி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
- அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்காக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
தேர்தலை ஒட்டி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன் என்றும் வாக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில்,பீகார் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
- தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்தது.
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க முடக்கியது.
அரக்கோணம்:
அரக்கோணத்தில் நடந்த திருமண விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவந்தோம்.
ஏராளமான கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளை ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வந்தோம். தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்தது.
தி.மு.க ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருவார்கள். அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறார்கள். ஏற்கனவே அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க செயல்பட்டு வருகிறது.
ஏழை எளிய விவசாயிகளுக்காக குடிமராமத்து பணி திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க முடக்கியது.
தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியின் போது தடுப்பணைகள் ஏராளமாக கட்டப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது.
தி.மு.க.வின் குடும்ப அரசியலாக குடும்ப ஆட்சியாக ஸ்டாலின் அமைத்திருக்கிறார். எதில் எடுத்தாலும் கரெக்ஷன் கரப்ஷன்என தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க தான்.
2010-ம் ஆண்டு தி.மு.க கூட்டணியில் இருந்த பொழுது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவது அ.தி.மு.க.
41 சதவீதம் ஏழை மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகள், மற்றும் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அதிக அளவு தொடங்கப்பட்டது.
அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்ற 2026 தேர்தலில் உங்களுடைய தேர்தலாக நினைத்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிங்கப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று பாதுகாப்புடன் நடந்தது.
- காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவுசெய்தனர்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. இதில் 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி சிங்கப்பூரில் நேற்று 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. 30 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவுசெய்தனர்.
இந்தத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் போட்டி நிலவியது. ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87ல் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆகிறார்.
பிரீத்தம் சிங் தலைமையிலான எதிர்க்கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டு 10-ல் வெற்றி பெற்றது.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- வருகிற அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
- புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது.
டோடோமா:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் முடிய உள்ளதால் வருகிற அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி தேர்தல் சீர்திருத்தத்துக்கு அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதில் புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் டுண்டு லிசு அதில் கையெழுத்திடவில்லை. பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள சடேமா கட்சிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் 2030-ம் ஆண்டு வரை நடைபெறும் எந்தவொரு இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைய இயக்குனர் ராமதானி கைலிமா அறிவித்துள்ளார்.
- டெல்லி மேல்சபையின் மொத்த எண்ணிக்கை 245. அதில் 9 இடங்கள் காலியாக இருக்கின்றன.
- கூட்டணிகள் பலத்துடன் அந்த எண்ணிக்கையை பா.ஜ.க. கைவசம் வைத்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க, கூட்டணி அமைத்ததன் மூலம் பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜ.கவின் பலம் அதிகரித்துள்ளது.
டெல்லி மேல்சபையின் மொத்த எண்ணிக்கை 245. அதில் 9 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் தற்போதைய எண்ணிக்கை 236-ஆக உள்ளது. இதில் பெரும்பான்மை பெற 119 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. கூட்டணிகள் பலத்துடன் அந்த எண்ணிக்கையை பா.ஜ.க. கைவசம் வைத்துள்ளது. தற்போது பா.ஜ.க. அணியில் அ.தி.மு.க. இணைந்துள்ளதால் அந்த கட்சியில் மேல்சபையில் உறுப்பினர்களாக இருக்கும் தம்பித்துரை, சந்திரசேகரன், சி.வி.சண்முகம், தர்மர் ஆகிய 4 எம்.பி.க்கள் ஆதரவு பா.ஜ.கவுக்கு கிடைத்து உள்ளது. இதன் மூலம் பா.ஜ.கவின் பலம் 123 ஆக உயர்ந்து உள்ளது. பா.ம.க.வை சேர்ந்த அன்பு மாரியின் பதவிக்காலம் வருகிற ஜூலையில் முடிகிறது. மீண்டும் அவர் மேல்சபை எம்.பி.யாக வந்தால் பா.ஜ.க. பலம் 124 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஆந்திரா, ஜம்மு-காஷ்மீரில் காலியாக இருக்கும் இடங்களுக்கான தேர்தல் முடியும் போது பா.ஜ.க. கூட்டணியின் பலம் 141 ஆக உயரலாம் என்று பா.ஜ.க. கணக்கு போட்டு உள்ளது. இதன் மூலம் மேல் சபையிலும் மசோதாக்களை நிறைவேற்ற போதுமான எண்ணிக்கையை பெற முடியும்.
- விலைவாசி உயர்வு, வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும்.
- இந்த தேர்தல் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவின் கவர்னர் சாம் மாஸ்டினை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் சென்று சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்தப் பொதுத்தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022 தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தேர்வாகினர். இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
- பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் கனடாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் புதிய அதிபராக பதவி ஏற்ற பிறகு கனடாவுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டது. மேலும் கனடாவுக்கு அதிக வரி விதிக்கப்போவதாகவும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா சேர்க்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.
அதிபர் டிரம்பின் இந்த நியாயமற்ற வரிகளை எதிர்கொள்ள கனடாவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்த இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். நேற்று அவர் ஒட்டாவில் உள்ள ரிடோ ஹாலில் ஆளுநர் ஜெனரல் மேரி சைமனை சந்தித்தார். பாராளுமன்றத்தை கலைக்க அவர் பரிந்துரை செய்தார்.
கனடா பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி வரை இருக்கிறது. ஆனால் மார்க் கார்னிக்கு கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி வருவதால் அவர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.
இது குறித்து கவர்னர் ஜெனரலை சந்தித்த பிறகு பிரதமர் மார்க் கார்னி பேசும் போது, "கனடாவில் ஏப்ரல் மாதம் 28ம் தேதி தேர்தல் நடத்த கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்து உள்ளார். அமெரிக்கா நம்மை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறது.
டிரம்ப் நம்மை பிரிக்க நினைக்கிறார். அதை நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நாம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் கனடா உள்ளது. இது போன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழி நடத்த வேண்டும் என்பதில் கனடா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
- சட்டசபைத் தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.
- மது, போதை பொருட்கள், பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தமுறை மிக அதிகமான அளவில் கணக்கில் வராத பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 10.11.2022 வரை குஜராத்தில் மட்டும் 71 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது ஒட்டுமொத்த காலத்தில் ரூ. 27.21 கோடி அளவில் அங்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் 50 கோடியே 28 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த தேர்தலின் போது இந்த மாநிலத்தில் ரூ. 9.03 கோடி கைப்பற்றப்பட்டது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள தொகை இதைவிட ஐந்து மடங்கு அதிகம்.மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுக்க சி விஜில் என்ற செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றும், அதன் மூலம் பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு பாட்டுப்போட்டி நடந்தது.
- வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பாடல்களை பாடினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தேர்தல் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு பாட்டுப்போட்டி நடந்தது.
இதில் மாணவிகள் பங்கேற்று தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு, வாக்களிக்க பணம் பெறக்கூடாது, வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பாடல்களை பாடினர். சிறப்பாக பாடல் வரிகள் அமைத்து, பாடிய மாணவிகளின் பெயர்கள் இளையான்குடி வட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளையும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோரையும் முதல்வர் அப்பாஸ் மந்திரி பாராட்டினார்.






