search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ttv dhinakran"

    • இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்.
    • தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்து பா.ஜ.க.வினரிடம் தான் கேட்க வேண்டும். அ.ம.மு.க. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அ.ம.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற வதந்திகளுக்கெல்லாம் நான் பதில் கூறமுடியாது. இந்தத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக சில கட்சிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். உறுதியான பின்பு சொல்வது தான் நாகரிகம், அதன் பின் சொல்கிறேன்.

    கூட்டணியிலோ அல்லது தனித்தோ போட்டியிடுவோம். உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்கும். ஓ.பி.எஸ்.சுடன் தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் தாண்டி அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பயணிக்கிறோம். அது வருங்காலத்தில் எந்த அளவு பலன் தரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    அ.தி.மு.க. இந்த தேர்தலில் பெரிதாக சாதித்து விட முடியாது என்பது தான் என்னுடைய கருத்து. கவர்னரின் செயல்பாடு என்பது அந்த பதவியின் மாண்புக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த பதவிக்கு நல்லது, அவர் அதனை பின்பற்றுவார் என்று நம்புகிறோம்.


    அ.தி.மு.க. ஒன்றிணையும் என்று சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பது என்பது வாய்ப்பில்லை. அ.ம.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், எனக்கும் விருப்பம் இல்லை. அ.தி.மு.க. இணைப்பு குறித்து அவர் எதன் அடிப்படையில் சொல்கிறார் என தெரியவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. எங்கள் நிர்வாகிகளும், எனது நண்பர்களும், தொண்டர்களும் நான் போட்டியிட வேண்டும் சொல்கிறார்கள். அதனை நான் பரிசீலிப்பேன் என்று சொல்லி இருக்கிறேன்.

    கூட்டணி என்பது உறுதியான பிறகு தான் நாங்கள் சொல்ல முடியும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்

    தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு உள்ளது. அதனை அறுவடை செய்யும் பணியை நாங்கள் மேற்கொள்வோம்.


    ராமர் கோவில் என்பது அத்வானி காலத்தில் இருந்து யாத்திரை நடத்தி அரசியல் நோக்கமாக இருந்தாலும் ஆன்மிக விஷயம். இந்தியாவில் உள்ள அனைவரும் மதங்களை தாண்டி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் விருப்பமாக இருந்தனர், கட்டப்பட்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தான் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ராமர் கோவில் விவகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது தேர்தலுக்குப் பின்பு தான் தெரியவரும்.

    எந்த கட்சியும் தாங்கள் வளர வேண்டும் என்பதற்காகத்தான் தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சிகளின் பலம் தெரிந்து விடும். பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை.
    • தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    சென்னை :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பதற்கு முதலமைச்சர் அவர்களின் தொகுதியான கொளத்தூரில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம் .

    சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சூழந்திருக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு, மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு, மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

    • மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்.
    • மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும்.

    சென்னை:

    நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோதரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் 'சுய சார்பு இந்தியா' கொள்கையை பின்பற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம். இந்திய கலைஞர்கள் உற்பத்தி செய்த பரிசு பொருட்களை வாங்கி பிறருக்கு கொடுத்து, நம் நாட்டு நெசவாளர்கள் தயாரித்த உடைகளை உடுத்தி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர் விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.

    தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

    தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்; மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எம்.ஜி.ஆர். , அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம்போல் மற்ற மதத்தவரோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    தீபாவளி பண்டிகை நாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும், அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும். அதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூக நீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    பா.ம.க. தலைவர் டாகடர் அன்புமணி ராமதாஸ்:-

    நாட்டிலும், வீட்டிலும் இருளை நீக்கி, ஒளியை நிறைக்கும் தீபஒளித் திருநாள் இனிவரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    நாட்டு மக்களை பெருந்துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசூரன் எனும் அரக்கனை திருமால் அழித்த இந்த தினமே தீபாவளிப் பண்டிகையாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை என்பதை உணர்த்தி, தீமைகள் எனும் இருளை விலக்கி, நன்மை எனும் வெளிச்சத்தை பரப்பும் இத்திருநாளில் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:-

    நம்நாடு இன்றைக்கு உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையாக வல்லரசு நாடாக வளர்ந்து வருகிறது. விஞ்ஞானம், மருத்துவம், வேளாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம் என்று அனைத்து துறைகளிலும் நம்நாடு அபரிமிதமான வளர்ச்சி அடைந்து உள்ளது. நாட்டினை சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம் என்று சபதம் ஏற்போம். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    தீபாவளி திருநாளில் அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்வார்கள். தீபஒளி ஏற்றி இஷ்ட தெய்வங்களை வணங்கி அனைவரும் புத்தாடைகள் அணிந்து புதுப்பொலிவுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்.

    தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்:-

    தீபாவளி நன்நாளில் பரஸ்பர நல்லுறவுடன் ஏழை, எளியோர்க்கு உதவிகள் செய்து, நண்பர்கள் உறவினர்கள் இடையே இனிப்புகள், பரிசுகள் வழங்கி நம் இதய அன்பைப் பகிர்ந்து கொள்வோம். இந்த இன்பத் திருநாளில் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் நல்லுறவுடன் ஒருமைப்பாட்டைக் காத்து வாழவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்:-

    அனைவரின் வாழ்க்கையிலும் இருளும், துன்பமும் நீங்கி மத்தாப்பு போல வெளிச்சமும், மகிழ்ச்சியும் கிடைத்திட தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    சாதி, மத, இன, மொழி, பேதங்கள் கடந்து, இந்திய மக்கள் மனதில் சமத்துவம் என்னும் புனித எண்ணம் தழைத்தோங்கட்டும். எளியவர்க்கான தேவையும், உழைப்புக்கேற்ற ஊதியமும், உரிமையும் கிடைக்கப்பெற்று, எல்லாரும் எல்லாமும் பெறும் நிலைக்கு உயர உறுதியுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். உலகெங்கும் வாழும் இந்திய மக்களுக்கு இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள் பிற்படுத்தப்பட்டவர்களை சூழ்ந்திருக்கும் கொடிய துன்பங்கள், வறுமைகள் என்கிற நரகாசுரனை வீழ்த்தி அனைவரது வாழ்விலும் தீபாவளி திருநாளில் தீபமாக ஒளி ஏற்றுவோம்.

    சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் விதமாகவும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வாங்கி, அரசு அறிவுறுத்தல் படி விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம். தீபாவளி திருநாள் காணும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் நாசே ராமச்சந்திரன்:-

    உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் கரைந்து இன்பங்கள் மலர்ந்து ஒளிமயமான எதிர்காலம் அமைந்து உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க.... அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன்:-

    தீப ஒளியினை போல் தமிழக மக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள் வாழ்க்கை பிரகாசமாக மேம்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜயகுமார் என்ற விஜய் வசந்த், திரிணாமுல் காங்கிரஸ் தமிழக பொருளாளர் மு.மாரியப்பன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபு பக்கர், தமிழக சமாஜ்வாதி கட்சி தலைவர் லோகநாதன் யாதவ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் டாக்டர் மணி அரசன், தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து, ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    தூத்துக்குடி கலவரத்தில் போலீசார் சூப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #MaduraiHC #TTVDhinakaran #thoothukudifiring
    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.

    போலீசார் திட்டமிட்டு இந்த சதி செயலை அரங்கேற்றியுள்ளனர். எனவே துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இந்த சம்பவத்துக்கு காரணமான அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைக்க உத்தரவிட வேண்டும்.

    ஏனென்றால் துப்பாக்கிச் சூட்டின் உண்மை நிலை அந்த துப்பாக்கிகளின் மூலம் தான் தெரியவரும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீது விசாரணை மேற்கொண்ட அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்குகள் சென்னை, மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர். #MaduraiHC #TTVDhinakaran #thoothukudifiring
    ×