என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Muthuramalinga Devar"
+2
- 1985-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகில் சிலை அமைக்கப்பட்டது.
- கருப்பசாமிபாண்டியன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலை, மண்டபத்தை திறந்து வைத்தார்.
தென்திருப்பேரை:
ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகில் கடந்த 1985-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு கெட்டியம்மாள்புரம் ராமையா தேவரால் சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலையை பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 38ஆண்டு கால பழமையான சிமென்ட் சிலையை அகற்றி, அதற்கு பதிலாக புதியதாக முழுஉருவ வெண்கல சிலையையும், மணிமண்டபத்தையும், அதே இடத்தில் புதுப்பித்து அமைத்திட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
முதன்முதலில் சிலை அமைத்து கொடுத்த ராமையா தேவரின் மகன்களும், தொழிலதிபர்களுமான ஏ.ஆர்.காசிப்பாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் வெண்கல சிலை அமைப்பதற்கும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் முத்துராமலிங்கத்தேவருக்கு கற்களால் மணிமண்டபம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினரின் தொடர் முயற்சிகளால் முத்துராமலிங்கத்தேவருக்கு கற்களால் மணிமண்டபமும், புதிய வெண்கல சிலையும் அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை திறப்பு விழா நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நடைபெற்றது.
விழாவிற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் ஏ.ஆர்.காசிப்பாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் வெள்ளூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.முத்தையா, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன், வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், பார்வர்டு பிளாக் மூத்த உறுப்பினர்கள் ஆறுமுகம் என்ற மருதுபாண்டியன், கால்வாய் முத்துபாண்டியன், மாவட்ட தலைவர் சிவராமன்கார்த்திக், மாநில மாணவரணி செயலாளர் கொம்பையாபாண்டியன், தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் துரைசரவணன், ஒன்றிய செயலாளர் சகாயம், நகர செயலாளர் விஜயன், நேதாஜி இளைஞர் படை தலைவர் ராமசாமி மற்றும் துரையப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பாற்கடல் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ்தேவர் ஆகியோர் முன்னிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வெண்கல சிலை, மண்டபத்தை திறந்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர்களும் மாநில அமைப்பு செயலாளர் களுமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கடம்பூர்ராஜூ எம்.எல்.ஏ., இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர்கள் என்.சின்னத்துரை, சுதா பரமசிவம், முருகையாபாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர்முத்தையா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், பார்வர்டு பிளாக் நிர்வாகிகள், தொண்டர்கள், அகில இந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைத்து சமுதாய பிரமுகர்கள், வணிகர் சங்கத்தினர், தொழில்அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் ஸ்ரீவைகுண்டம் நகர அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன் நன்றி கூறினார்.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
- மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கே.என்.இசக்கிராஜாத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60- வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கே.என்.இசக்கிராஜாத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தரும் முக்குலத்து சொந்தங்கள், அரசியல்வாதிகள் மலர் வளையம் கொண்டுவர வேண்டாம். மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
ராமேசுவரத்தில் உள்ள பாம்பன் பாலத்திற்கு சேதுபதி பாலம் என பெயர் சூட்ட வேண்டும். அறநிலைய துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் சீர் மரபினராகிய தேவரினத்தை சேர்ந்தவர்களை உறுப்பி னர்களாக அறிவிக்க வேண்டும். நேதாஜி படம், பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் படத்தையும் இந்திய அளவில் உள்ள அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும்.
கள்ளர், மறவர், அகமுடையார் மூவரையும் தேவர் என ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிக்கு மொத்தம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்