என் மலர்
நீங்கள் தேடியது "RB Udhayakumar"
- தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க.வின் உண்மை முகம், கோர முகம், பழிவாங்கும் முகம் என்பதெல்லாம் மக்கள் மத்தியில் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
- தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற ஒத்த கருத்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று சேர்ந்து களம் காணவேண்டும்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி 11 மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து சரித்திர சாதனை படைத்தார். அதில் பல மருத்துவமனைகளில் கட்டுமான முறைகேடு நடைபெற்றதாக தி.மு.க. வைத்த குற்றச்சாட்டில், துளிகூட முகாந்திரம் இல்லை என நீதியரசர்கள் கூறியதில் தி.மு.க. தற்போது பின்வாங்கியுள்ளது.
ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில், 11 மருத்துவக் கல்லூரியில் கொண்டு வந்து அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்து அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பை நனவாக்கி, சமூக நீதியை எடப்பாடி பழனிசாமி காத்தார்.
மக்களுக்காக உழைத்து வரும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி விடலாம் என்று தி.மு.க. நினைத்தால் அதில் தோல்விதான் கிடைக்கும் என்பது தான் தற்போது வந்த மகத்தான தீர்ப்பு மூலம் நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க.வின் உண்மை முகம், கோர முகம், பழிவாங்கும் முகம் என்பதெல்லாம் மக்கள் மத்தியில் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இன்றைக்கு, தி.மு.க.வின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட, தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற ஒத்த கருத்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று சேர்ந்து களம் காணவேண்டும்.
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக்கு மகுடம் சூட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்றார்.
- நடுக்கத்தில் தான் அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.
- இன்றைக்கு தி.மு.க. சுவாசம் இல்லாத கட்சியாக உள்ளது.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், அ.தி.மு.க நிர்வாகிகள் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், தங்கள் பெயரிலும் விருப்ப மனுவை அளிக்க வைகை எக்ஸ்பிரசில் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 54 ஆண்டுகளில் தேர்தல் களத்தில் முதன்மை இயக்கமாக, தேர்தலில் முதல் துவக்கமாக எம்.ஜி.ஆர். காலம் தொட்டு, அம்மா காலம் வரை அ.தி.மு.க. இருந்து வந்தது. இன்றைக்கு இந்த இருபெரும் தலைவர்களின் மறுவடிவமாக உள்ள எடப்பாடி பழனிசாமி காலத்தில் தற்போது தேர்தல் பணியில் துள்ளி குதித்து வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தை முதலில் தொடங்கி 175 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். 12,000 கிலோமீட்டர் பச்சை பேருந்து மூலம் பச்சை தமிழராய் ஒரு கோடி மக்களை சந்தித்தார். இந்த சரித்திர சாதனையை யாரும் முறியடிக்க முடியாது.
அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வழங்கும் முதல் நாளில் 1,237 மனுக்கள் பெறப்பட்டு அதில் 234 தொகுதிகளில் தனி தொகுதியை தவிர 349 தொண்டர்கள் தங்கள் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை அளித்தனர்.
தற்பொழுது அம்மா பேரவையின் சார்பில் மதுரை மாவட்டத்தில் தனி தொகுதி தவிர உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட 9 தொகுதிகளில் மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நிற்க வேண்டும் என்று விருப்ப மனு அளிக்க உள்ளோம். மதுரையில் எந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நின்றாலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்.
தற்போது நடைபெற்று வரும் தி.மு.க.வின் சர்வாதிகார, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வெற்றி மகுடம் சூட்ட தயாராகிவிட்டனர்.
குமரி முதல் இமயம் வரை வெற்றி வரலாறு படைக்கும் வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ளது. குறிப்பாக இந்த கூட்டணி குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயக ஆட்சியை மலரச் செய்யும். அதனால் தான் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை கண்டு ஸ்டாலினும், உதயநிதியும் இன்றைக்கு நடுங்கி போய் உள்ளார்கள்.
நடுக்கத்தில் தான் அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் இன்றைக்கு தி.மு.க. சுவாசம் இல்லாத கட்சியாக உள்ளது. செயற்கையாக சுவாசத்தை கொடுக்க விளம்பரங்களை செய்து வருகிறார்கள்.
தி.மு.க.வின் தோல்வியை பற்றி உளவுத்துறை மூலம் அறிந்த ஸ்டாலின் தற்போது மகளிர் உரிமைத் தொகை கூடுதலாக வழங்கப்படும் என்று கூறுகிறார். இந்த ஆட்சி முடிய 3 மாதம் உள்ளது. இப்போது அறிவித்து என்ன பயன்? இதை எல்லாம் மக்கள் நம்பப் போவதில்லை தி.மு.க. வுக்கு மக்கள் ரெட்கார்டு போட்டு விடுவார்கள்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள், ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இணைவதை உறுதி செய்யும் வகையில் தான் பொதுக்குழு தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிச்சயமாக அது நிறைவேறும், தை பிறந்தால் வழி பிறக்கும்.
யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது. தி.மு.க. வை எதிர்த்து அரசியல் செய்பவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து மக்கள் அவர்களை வரவேற்க தயாராக உள்ளார்கள்.
அ.தி.மு.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். 54 வருடங்களாக எங்களுக்கு எதிரி தி.மு.க. தான். சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்றுதான் பார்ப்பார்கள். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.
- அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் எதிர்காலம் அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட வலிமையான இயக்கத்தை என்ஜின் இல்லாத கார் என்றும் அதை பா.ஜ.க. என்ற லாரி கட்டி இழுக்க முயன்று வருகிறது என்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி உறுதியான கூட்டணி. இந்த கூட்டணியால் தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கலங்கி போய் ஒரு நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி உள்ளார்.
இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு தடையாக இருப்பது அ.தி.மு.க. தான்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை கண்டு நடுங்கிப் போயிருக்கும் உதயநிதி ஸ்டாலின் வரம்பு மீறி 54 ஆண்டு பொது வாழ்வில் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வந்த அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வாரிசு அரசியலில் டெல்லியில் முடிவுரை எழுதப்பட்டு தற்போது பீகாரிலும் வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுதி மக்கள் தந்த தீர்ப்பை கண்டு தான் ஸ்டாலினும், உதயநிதியும் அரண்டு போய் உள்ளார்கள்.
அந்த காரில் சென்றார், இந்த காரில் சென்றார் என காரின் மீது கவனம் செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும். வகுப்பு அறையில் மாணவிகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். சக மாணவர்களால் மாணவன் அடித்து கொலை.
இப்படி எங்கே செல்கிறது இளைய சமுதாயம்? அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், இளைஞரணி என்ற பெயரில் அ.தி.மு.க.வை பற்றியும் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் வசை பாடி தான் கலங்கி நிற்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.
இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி என்ற சாமானியர் முடிவுரை எழுதும் வகையில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். அ.தி.மு.க.வை வெற்றிப்பாதை அழைத்துச் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் எத்தனை கோடி விமர்சனங்கள் வைத்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்கொள்வார்கள். தமிழக மக்கள் உங்கள் விமர்சனத்தை புறம் தள்ளுவார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமர்வார். தி.மு.க.விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல் அநாகரீகம் இன்றி எத்தனை விமர்சனம் செய்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள், எள் முனையளவும் பின் வாங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
- குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையாகும் நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது.
- தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் உள்ளிட்டவை மாறி விடிவு காலம் பிறக்க 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
* போதை கலாச்சாரத்தால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதை தடுக்க முதல்வர் முன்வரவில்லை.
* குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையாகும் நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்ற செய்தி வேதனைக்கு ஆளாக்குகிறது.
* பள்ளியின் அருகிலேயே போதைப்பொருள் விற்பனை அதிகரித்த நிலையில் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது.
* போதை கலாச்சாரம் தலைவிரித்தாடும் நிலையில் சாதிய எண்ணங்களால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர்.
* தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் உள்ளிட்டவை மாறி விடிவு காலம் பிறக்க 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
- டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?
மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதற்கு உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் மேலும் கூறியதாவது:-
ஜெயலலிதா 10 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டிடிவி தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.
நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?
டிடிவி தினகரனுடன் இருந்த தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திமுக சென்றபோது ஏன் கவலைப்படவில்லை?
பொதுவெளியில் டிடிவி தினகரன் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா?
இவ்வாறு அவர் கூறினார்.
- 2022 ஆம் ஆண்டில் சென்னை பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய காடுகள் ராம்சார் அங்கீகாரம் பெற்றன.
- பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தலைநகரில் உள்ள ஒரே ஒரு ஈரப்பகுதியாகும்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை பள்ளிக்கரணையில் தனியார் நிறுவனம் எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அங்கு ரூ.2000 கோடி அளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி குறித்து மிகப்பெரிய சர்ச்சை எழுந்து வருகிறது.
சுற்றுச்சூழல் முக்கியதுவம் வாய்ந்த சதுப்பு நிலத்தில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல், வனத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எப்படி அனுமதி வழங்கி உள்ளது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எடப்பாடியார் கடுமையாக கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி பெற்ற பின்னர் ரூ.100 கோடியளவில் முறைகேடு, லஞ்சம் கரைபுரண்டு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் ஈரப்பகுதிகளை காக்கும் வண்ணம் 1922 ஆண்டு ஈரானில் ராம்சார் என்ற சர்வதேச உடன்படிக்கை ஏற்பட்டது. இதில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டனர்.
2022 ஆம் ஆண்டில் சென்னை பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய காடுகள் ராம்சார் அங்கீகாரம் பெற்றன. தற்பொழுது 1,247 ஹேக்டேர் பரப்பளவில் பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலையில் ஈர பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் 4-வது பிரிவுபடி ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலங்களில் எந்த கட்டுமான பணியும் மேற்கொள்ளக்கூடாது அனுமதி வழங்க முடியாது.
இந்த சூழ்நிலையில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப்பகுதிகளில் 1,250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.2000 கோடி ஆகும்.
குடியிருப்பு கட்டுமான திட்டங்களுக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி அளவில் லஞ்சம் கைமாறியதாக சொல்லப்படுகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தலைநகரில் உள்ள ஒரே ஒரு ஈரப்பகுதியாகும். வடகிழக்கு பருவமழையில் நீரை உள்வாங்கி நிலத்தின் நீர் தன்மையை உயர்த்தும்.
தற்போது பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய முதல்வர் ஸ்டாலின் என்ன கூற போகிறார். அதிகார துஷ்பிரயோகம் மூலம் பலன் அடையப்போவது யார்? ஆகவே இன்றைக்கு முறைகேடு செய்து, ஊழல் செய்த இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டனர். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி வரும். அப்போது இது போன்று சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.
- அ.தி.மு.க.வை அழிக்கும் வியூகத்தோடு பசும்பொன்னில் தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.
- பசும்பொன்னில் நடந்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதியவர் செங்கோட்டையன்.
பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்ற செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:-
* அ.தி.மு.க.வை அழிக்கும் வியூகத்தோடு பசும்பொன்னில் தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.
* பசும்பொன்னில் நடந்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதியவர் செங்கோட்டையன். அதனால்தான் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார்.
* அ.தி.மு.க. தொண்டர்களால் செங்கோட்டையன் பூஜ்ஜியம் ஆக்கப்படுவார்.
* முதலமைச்சர் ஸ்டாலினை வீட்டுக்கே சென்று சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தார். தி.மு.க.வின் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
* தி.மு.க.வின் அஜண்டாவை செயல்படுத்த அவர்களின் B டீமாக செயல்படுபவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் நம்பமாட்டார்கள் என்றார்.
- தஞ்சாவூர் நெல் கொள்முதல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
- நெல்மணிகளை ரோட்டிலே போட்டு வைத்து, விவசாயிகளின் வயிற்றிலே அடித்துள்ளது இந்த அரசு.
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிறுவர்கள் காற்றில் பலூனை பறக்க விடுவார்கள். பட்டங்களை பறக்க விடுவார்கள். ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் சிறு குழந்தை போல கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட அவல நிலையைதான் ஒவ்வொரு பிரிவினரும் வேதனையோடு வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவேன் என்று கூறிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் அதுகுறித்து வாய் திறக்க மறுத்தார்.
எதிர்க்கட்சி தலைவராக ஓடோடி சென்று ஆறுதல் கூறிய அவர், இப்போது வாய் திறக்க மறுப்பதன் விபரம் என்ன என்று தெரியவில்லை.
தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்த அரசு ஊழியர்கள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவது உறுதி என்று கூறி வருகிறார்கள்.
புதிய டி.ஜி.பி. நியமனத்தில் தாமதம் ஏன்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்கள்.
ஒன்றரை மாதம் கழித்து அமைச்சர் ரகுபதி, டி.ஜி.பி. நியமனத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டதாக தெரிவித்து உள்ளார்கள்.
மதுரையில் ராஜினாமா செய்த மதுரை மேயருக்கு பதிலாக புதிய மேயரையும் தேர்வு செய்ய முடியவில்லை. டி.ஜி.பி.யையும் நியமனம் செய்ய தமிழக அரசால் முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையும் தர முடியவில்லை.
ஆகவே இயலாத அரசு இருக்க வேண்டுமா? என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது.
தஞ்சாவூர் நெல் கொள்முதல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். எத்தனை லட்சம் டன் நெல் வீணானது என்று நமக்கே தெரியவில்லை.
வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று முன்கூட்டிய கணித்த பிறகும், இன்றைக்கு நெல்மணிகளை ரோட்டிலே போட்டு வைத்து, விவசாயிகளின் வயிற்றிலே அடித்துள்ளது இந்த அரசு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், காவல்துறையினர் என்று எல்லோருமே இந்த அரசு மீது அதிர்ச்சியில் இருக்கின்ற காரணத்தினாலே மக்கள் இந்த அரசை வீட்டிற்கு அனுப்புவதற்கு 2026-ல் முகூர்த்தம் குறித்துள்ளார்கள்.
விவசாயிகளின் கண்ணீரை துடைப்பதற்காக இந்த பருவமழை காலத்தில் முதலிலே களத்திற்கு சென்ற ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர் தான் நல்ல தலைவர்.
- கூட்டணி விவகாரத்தில் தி.மு.க. தலைமை மிக சரியாக பயணிக்கிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ராட்சத பலம் வாய்ந்த தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. சேர வேண்டும்.
* அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணி சேர வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.
* தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர் தான் நல்ல தலைவர்.
* தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் நினைத்தாலும் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது.
* சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கி சரியான முடிவை எடுக்காததால் தோல்வி அடைந்தார்.
* பவன் கல்யாண் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்ததால் துணை முதல்வராக உள்ளார்.
* சரியான முடிவை எடுக்காததால் வைகோவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
* கூட்டணி விவகாரத்தில் தி.மு.க. தலைமை மிக சரியாக பயணிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உங்களை நம்பிய தொண்டர்களை நட்டாற்றில் விட்டுச் சென்றீர்கள்.
- முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ் செல்வன் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு கண்டனம் தெரிவித்து சில கேள்விகளை எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
சுயநலத்தில் உண்மை முகம் வெட்டு வெளிச்சமாகியுள்ளது. எப்போது ஒருவர் திமுகவையும், ஸ்டாலினையும் பாராட்டி புகழ்ந்து பேசுகிறாரோ, அப்போதே அவர் அதிமுக பற்றி பேச தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மையாக பார்க்கப்படுகிறது இதுதான் தொண்டர்கள் மக்களின் தீர்ப்பாகும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் யார் தமிழகத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்று தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, மக்களின் நம்பிக்கை இழந்து, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தனிநபர் கருத்தை யாரும் பொருப்படுத்த அவசியம் இல்லை.
தமிழகத்தில் தன்னுடைய ஆளுமை தோல்வினாலும், தன்னுடைய தொடர் இயலாமையினாலும், தான் வகுக்கும் திட்டம் தோல்வியாலும், மக்களால் புறக்கணிக்கப்பட்டு அது பொறாமையாக மாறி இன்றைக்கு இன்றைக்கு ஒரு தனிநபர் அரசியல் காழ்புணர்ச்சியால், பொறாமையால், இயலாமையால் பேசி வருவதை யாரும் பொருப்படுத்தவில்லை.
இன்றைக்கு அதிமுக தொண்டர்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களின் வழியில், திமுக உண்மை முகத்தை, குடும்ப வாரிசை, மன்னராட்சியை அழிந்து மீண்டும் ஜனநாயகத்தை மலர செய்யும் வகையில், மக்களாட்சி மலர வேண்டும் என்ற லட்சியத்தின் காரணமாக இன்றைக்கு எடப்பாடியார் இயக்கத்தை மீட்டு, தொண்டர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ளார்.
இன்றைக்கு அந்த லட்சியத்தை விலக்கி, பொதுநலன், மக்கள் நலம், தொண்டர் நலன் மறந்து, சுயநலத்தின் மொத்த உருவமாக தஞ்சையில் கருத்து கந்தசாமியாக (தினகரன்) கருத்து சொல்லி உள்ளார். தமிழகத்தில் யார் முதலமைச்சராக வரவேண்டும், வரக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். மக்கள் தீர்ப்பே, மகேஷ் தீர்ப்பு என்பதுதான் ஜனநாயகம்.
மக்களால், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்ட தனிநபர் விருப்பம் மக்களிடம் பிரதிபலிக்காது இதுதான் கடந்த கால வரலாறு. இன்றைக்கு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழை நிலைநிறுத்த எடப்பாடியார் மக்கள் பணியாற்று வருகிறார் .
குறிப்பாக கடந்த நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்து குடிமராமத்து திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, 11 மருத்துவக் கல்லூரிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் தொடர்ந்து தொலைநோக்கு திட்டங்களை செய்தார்.
ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் மறந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கண்ணை மூடிக்கொண்டு கருத்து கந்தசாமி பேசிவரும் அவருக்கு சில வரலாறை நான் கூற கடமைப்பட்டுள்ளேன்.
இன்றைக்கு வரலாற்று சாதனை மூலம் மக்களிடத்தில் மனதில் எடப்பாடியார் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடி, மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆட்சியை நிச்சயம் மலர செய்வார். அதற்கு உங்களுக்கு எந்த சந்தேகம் வேண்டாம், உங்களுக்கு கவலை வேண்டாம்.
இன்றைக்கு அதிமுகவின் உண்மை விசுவாசிகள், விசுவாசத் தொண்டர்கள், மக்கள், வாக்காளர்கள் என அனைவரும் உங்கள் உண்மை முகத்தை புரிந்து கொண்டார்கள், எங்களின் எதிர்கால அரசியல் பாதையை நீங்கள் தீர்மானிக்க தேவையில்லை.
இன்றைக்கு உங்களை புரிந்து கொண்டவர்கள் விலகிச் சென்றார்கள், புரிந்து கொண்டவர்கள் தற்போது விலகி சென்று கொண்டிருக்கிறார்கள், புரியாதவர்கள் புரிந்து இனிமேல் காலம் தாழ்த்தாமல் அவரை விட்டு விலகிச் செல்ல வேண்டும், பொதுநல மறந்து, சுயநலத்தோடு செல்பவர்கள் அரசியல் பாதையை வகுக்க முடியாது.
அவரை நம்பிவர்களெல்லாம் திமுகவிற்கு வழி அனுப்பி வைத்தார் , முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ் செல்வன் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. மேலும் அவர் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட மகேந்திரன், உமாதேவன் உள்ளிட்ட பல பேர் இன்றைக்கு எடப்பாடியாரின் தலைமையை ஏற்றுள்ளனர்.
தஞ்சையில் கருத்து கந்தசாமியாக, கண்ணை மூடிக்கொண்டு பேசிய நபருக்கு சில கேள்விகளை வைக்கின்றேன். உங்களை நம்பிய தொண்டர்களை நட்டாற்றில் விட்டுச் சென்றீர்கள்.
உங்கள் நம்பி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டார்கள் அவர்களை அரசியல் அனாதையாகி விட்டார்கள் அவர்கள் எதிர்காலம் என்ன பதில் சொல்லுங்கள்?
அதேபோல உங்களது தளபதியாக இருந்தவர்கள் இன்றைக்கு ஸ்டாலினுக்கு தளபதியாக மாறிவிட்டார்கள் அதற்கு பதிலை சொல்லுங்கள்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர, அவசரமாக கருத்துக்களை தெரிவித்தார்.
- இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கு அடையாளமாக தற்போது கள நிலவரம் உள்ளது.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பின் உண்மை நிலையை மக்களிடத்தில் விளக்க வேண்டிய தார்மீக பொறுப்பில் இருந்து அரசு விலகிச் செல்கிறது என்கின்ற சந்தேகம், கவலையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் வகையில் அரசின் கருத்துக்கள், அதிகாரிகளின் கருத்துக்கள் அமைந்துள்ளதை நாம் கவனமாக பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.
கரூர் துயர சம்பவத்திற்கு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.
அதன்பிறகு மின்வாரிய உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், கூடுதல் டிஜிபி ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து அரசு நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்கள்.
இதற்கெல்லாம் மேலாக வருவாய் துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர், டி.ஜி.பி. அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு இது தொடர்பாக கருத்துக்கள் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் தொனியில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதோடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர, அவசரமாக கருத்துக்களை தெரிவித்தார்.
இதனை பார்க்கும் போது விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையிலே, அவர்கள் கருத்துக்கள் அடிப்படையில் வழி நடத்துகிறார்களோ என்ற நிலை தான் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக அமைந்து வருகிறது.
பொதுவாக விசாரணை ஆணையம் அமைந்த பிறகு அது தொடர்பான வாதங்கள், வீடியோக்கள் அரசு அதிகாரிகள் வெளியிடுவது ஆணையத்தின் விசாரணையை கேள்விக்குறியாக்கும் வகையில், அமையும். விசாரணை நடக்கும் போது அது தொடர்பான அறிக்கை தொடர்ந்து வெளியாகி வருவது விசாரணை நடுநிலையோடு, நம்பகத் தன்மையோடு நடைபெறுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
திறமைமிக்க சேவையால் மக்களின் நம்பிக்கைத் தன்மையை பெற்றுள்ள அரசு உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை, திமுக அரசு தவறாக வழி நடத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கு அடையாளமாக தற்போது கள நிலவரம் உள்ளது. ஆகவே அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 34 வது திண்ணைப் பிரசாரத்தில் மக்களிடத்தில் எடுத்து கூற வேண்டும். மீண்டும் 2026-ல் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரின் ஆட்சி எடப்பாடியாரின் தலைமையில் மலரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க.விற்கும், த.வெ.க.விற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார்.
- விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார்.
த.வெ.க. தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரசாரம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
* ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மக்களை சந்திக்கலாம். மக்களிடத்திலே அவர்கள் ஆதரவை கேட்கலாம்.
* தி.மு.க.விற்கும், த.வெ.க.விற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார்.
* விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார். அது அவருடைய நம்பிக்கை.
* விஜய் பரீட்சை எழுதட்டும், அவர் என்ன மதிப்பெண் எடுக்கிறார் என்று பார்த்துவிட்டு பிறகு அதைப்பற்றி விவாதிக்கலாம்.
* விஜய் இப்போதுதான் படித்துக்கொண்டு இருக்கிறார். பரீட்சை எழுதி மதிப்பெண் பெறட்டும்.
* ஆசிரியர்கள் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்வார்கள். ஆனால் மாணவர் பாஸ் ஆவாரா? இல்லையா? என்பது மதிப்பெண் வந்தால்தான் நமக்கு தெரியும்.
* மாணவராக இருந்து விஜய் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தேசிய கட்சி, மாநிலக்கட்சி என அவரவர்களுக்கு உரிய பதில்களை சொல்கிறார்கள்.
* அ.தி.மு.க. தான் தி.மு.க.வை வீழ்த்துகிற சக்தியும், ஆற்றலும், வலிமையும், அனுபவமும், கிளைக்கழகமும், தொண்டர்களும், மக்கள் செல்வாக்கும் கொண்ட கட்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தி.மு.க.வை வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.






