என் மலர்
நீங்கள் தேடியது "Magalir Urimai Thogai"
- பணத்தை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து ஈசுவரன் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
- கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே நெடுங்குளத்தை சேர்ந்தவர் ஈசுவரன் (வயது 32). இவருடைய மனைவி ராமு (28). இவரது வங்கிக்கணக்கில் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம். கோடை கால சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
இந்த பணத்தை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து ஈசுவரன் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ராமு கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு ராமு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
இதனால் மனவேதனை அடைந்த ஈசுவரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- தமிழகம் முழுவதும் தமிழக அரசின் இந்த திடீர் பரிசுத்தொகை பேசு பொருளாக மாறி உள்ளது.
- மனைவி ஒப்புதலுடன் மணி ஆர்டர் மூலம் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்து உள்ளார்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் பெண்களுக்கு தேர்தல் காலத்தில் வரும் 3 மாத உரிமைத் தொகை மற்றும் கோடைகால ஊக்கத் தொகை ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை சேர்த்து ரூ.5 ஆயிரத்தை மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
தமிழகம் முழுவதும் தமிழக அரசின் இந்த திடீர் பரிசுத்தொகை பேசு பொருளாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் இதுபற்றி ஒவ்வொரு விதமாக பேசுகின்றன. இதையே சமூகநல ஆர்வலர் ஒருவர் வேறு விதமாக அணுகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையை சேர்ந்த சங்கரபாண்டி என்ற அந்த சமூக ஆர்வலர் தனது மனைவி பெயருக்கு அரசு அனுப்பி இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தையும் மனைவி ஒப்புதலுடன் மணி ஆர்டர் மூலம் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்து உள்ளார்.
இதுபற்றி குறிப்பிட்டு உள்ள அவர் 'கடன் சுமையுடன் இருக்கும் தமிழக அரசுக்கு என் பங்களிப்பாக இருக்கட்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். தன் பணத்தை திருப்பி அனுப்பியதை சமூக வலைத்தளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார். இது பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது.
- தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தரவு தொடர்பு துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன; 5 தோல்வியடைந்தன.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது.
- இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்றைக்கு தமிழக மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த அரசாக தி.மு.க. அரசு உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருகிறார்கள்.
மக்கள் வரிப்பணத்தில் பாரபட்சத்துடன் திட்டங்களை ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் ஆனால் தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடிய கட்சிக்காரர்களுக்கு மட்டும் வரிப்பணத்தை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் திட்டங்களில் பாரபட்சம் இல்லாமல் வரிப்பணத்தை செலவு செய்வதுதான் அரசின் ஜனநாயக இலக்கணம்.
மக்கள் வரிப்பணத்தை கட்சிக்காரர்களுக்கும், தங்களுக்கு வாக்களிப்பவர்களுக்கும் மட்டும்தான் தேடி பார்த்து விதிகளை திருத்தி உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை தி.மு.க. அரசு கொடுப்பதாக மக்களிடம் புகார் எழுந்துள்ளது.
இந்த திட்டத்தில் பாரபட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எண்ணத்துடன் மக்களைப் பற்றி சிந்திக்காமல் தேர்தலுக்காக திட்டங்களை விரிவுபடுத்தி ஸ்டாலின் அறிவிக்கிறார்.
இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது. ஆனால் அவர்களை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. கடைக்கோடியில் திட்டங்களை சேர்க்க ஆர்வம் காட்டாமல், தி.மு.க.வின் மண்டல மாநாடு, மகளிர் மாநாடு, இளைஞர் மாநாடு என மாநாட்டு பந்தலுக்கு அக்கறை காட்டுகிறார்.
இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள். அதே போல் அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டி ஸ்டாலின் அழகு பார்க்கிறார். இன்றைக்கு கருணாநிதிக்கு விளம்பரம் தேடும் அரசாக உள்ளது. இப்படியே சென்றால் தமிழகம் கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தம் என்ற நிலையை உருவாக்குவார்கள் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக ரூ.30 ஆயிரத்து 838 கோடியே 45 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது.
- ‘உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மொத்தம் 28 லட்சம் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர்.
சென்னை:
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தபின், இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தினார். இந்த திட்டத்திற்காக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 1.63 கோடி பெண்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
அதில் தகுதியின் அடிப்படையில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்று தமிழக அரசு பெயர் சூட்டியது. பின்னர் இந்த திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது, அதன்படி சிலர் இந்த திட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்டனர்.
தமிழக அரசின் கணக்கீட்டின்படி, சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது, ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில், இந்த திட்டத்திற்காக ரூ.7 ஆயிரத்து 926 கோடியே 35 லட்சமும், 2024-25-ம் நிதியாண்டில் ரூ.13 ஆயிரத்து 790 கோடியே 61 லட்சமும் செலவிடப்பட்டது. இந்த நிதியாண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை ரூ.9 ஆயிரத்து 121 கோடியே 49 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக ரூ.30 ஆயிரத்து 838 கோடியே 45 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார். அதன்படி மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்து இருந்தனர்.
இந்த உரிமைத்தொகை பெற ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் என ஏற்கனவே வகுக்கப்பட்ட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன.
இந்த திட்டத்தில் முன்பு நான்கு சக்கர வாகனம், அதாவது கார் இருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது அதில் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி கார் இருப்பவர் அதனை டாக்சி பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால் அவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற்று கொள்ளலாம்.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மொத்தம் 28 லட்சம் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் தற்போது 17 லட்சம் பெண்கள் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அவர்களுக்கு நேரு விளையாட்டரங்களில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். அதன் மூலம் தமிழகத்தில் கலைஞர் உரிமைத்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.34 கோடி ஆகிறது.
புதிதாக தற்போது இந்த திட்டத்தில் இணைந்த பெண்களுக்கு வழக்கம் போல 15-ந்தேதி அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 சேர்ந்துவிடும். தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் வகையில் மீண்டும் அவர்கள் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதற்கான அறிவிப்பும் இன்று வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
- கடந்த 4½ ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது.
- மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்ல வீட்டை வழங்கியவர் முதலமைச்சர்.
திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 294 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.
தொடர்ந்து பல கூட்டங்களில் பேசி வருவதால் தொண்டை கட்டி உள்ளது. மூன்று நாட்களுக்கு பேசக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தாலும் உங்களிடம் பேச வந்துள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினோம்.
இந்தியாவிலேயே நீர் நிலைகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டம் பாலபுரம் ஊராட்சி மத்திய அரசின் விருது வாங்கி உள்ளது. அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே திருவள்ளூர் மாவட்டத்தில் 65 ஆயிரம் பேருக்கு முதல்வர் வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது.
தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் கலைஞர் ஆட்சியில்தான் ரேசன்கடை திறக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுதேடி ரேசன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.
குடிசை வீடுகளை கான் கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். கலைஞர் கனவு இல்லம் வாயிலாக ஏராளமானோர் வீடு பெற்று உள்ளனர். மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்ல வீட்டை வழங்கியவர் முதலமைச்சர்.
மாணவி தான்யாவின் இல்லத்திற்கு சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தவர் முதலமைச்சர். தான்யாக்கள், பிரேமாக்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வர கூடிய ஆட்சி தான் முதல்வர் ஆட்சி.
கும்மிடிப்பூண்டி, திரு வள்ளூர் தொகுதிகளில் அமைக்கப்படும் மினி ஸ்டேடியங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும். தமிழ கத்தில் ஏராளமான திட்டங் கள் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடியல் பயணம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மகளிர் சுய உதவி குழுக் களை சேர்ந்த பெண்களுக்கு ஐ.டி.கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவி குழு பெண்கள் தயாரிக்கும் பொருட்களில் 25 கிலோ வரை அரசு பஸ்களில் 100 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி எடுத்து செல்லலாம். இதனால் அவர்களின் லாபம் அதிகரிக்கும்.
டிசம்பர் 15-ந்தேதி முதல் விடுபட்ட அனைத்து மகளி ருக்கும் மாதம் 1000 மகளிர் உரிமைத்தொகை வந்து சேரும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பின ருக்குமான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆர்.கே.நகர் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற உள்ளது.
- இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. அமைச்சர்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்கி பதவியும் இழந்துள்ளனர். அந்த வகையில் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசி பொன்முடி அமைச்சர் பதவி, கட்சி பதவிகளை இழந்துள்ளார்.
இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்.கே.நகர் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதி மக்களை அழைப்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர்.
அப்போது, அவர்களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதது குறித்து ஒரு பெண் கேள்வி எழுப்ப, அப்பெண்ணுக்கு ஆதரவாக மேலும் சில பெண்களும் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ. எபினேசர் விளக்கம் அளித்தார்.
இருப்பினும், அப்பகுதி மக்களுக்கும், எபினேசர் எம்.எல்.ஏ.வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ. எபினேசர், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மெண்டல்கள் போல் பேசுவதாக கூறினார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது:-
ஆர்.கே.நகர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கேள்வி எழுப்பிய மக்களை அடிக்க முற்படுகிறார்..
ஏழை வயிற்றில் அடித்தவர்கள் யாரும் நல்ல வாழ்வு கண்டதில்லை!
நன்றிகெட்ட இந்த எம்.எல்.ஏ எபினேசரும் இதனை உணரும் காலம் தூரத்தில் இல்லை! என்று பதிவிட்டுள்ளார்.
- முகாம்களுக்கு காலையில் இருந்தே பொது மக்கள் ஏராளமான பேர் வந்து மனு கொடுத்தனர்.
- மனுக்களை வாங்கும் அதிகாரிகள் 45 நாட்களில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களுடைய இல்லங்களுக்கே சென்று வழங்கும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குறிப்பிட்ட சில வார்டுகளில் சுழற்சி முறையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று தண்டையார்பேட்டை சி.எச்.எஸ்.எஸ். படேல்நகர் பள்ளி ஸ்ரீமகாவீர் ஜெயின் பவன் திருவல்லிக்கேணி உள்பட வார்டு 25, வார்டு 76, 109, 114, 143, 168 ஆகிய 7 இடங்களில் முகாம் நடந்தது.
இந்த முகாம்களுக்கு காலையில் இருந்தே பொது மக்கள் ஏராளமான பேர் வந்து மனு கொடுத்தனர்.
அதிலும் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு ஏராளமான பெண்கள் மனு கொடுத்த னர். நீண்ட வரிசையில் பெண்கள் வெயிலில் காத்துக் கிடந்து விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இது தவிர ரேஷன் அட்டை, ஆதார் அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்க, பெயர் சேர்க்க- நீக்க, முகவரி மாற்ற விண்ணப்பித்தனர். முக்கியமாக ஆன்லைன் பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் குறித்தும் விண்ணப்பம் கொடுத்தனர்.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10,949 மனுக்கள் முகாம்களில் பெறப்பட்டு உள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 7,518 பெண்கள் மனு கொடுத்து உள்ளனர்.
அதில் 25-வது வார்டில் 856 பேர்களும், வார்டு 38-ல் 1432 பேர், வார்டு 76-ல் 822 பேர், வார்டு 109-ல் 1435 பேர், வார்டு 114-ல் 905 பேர், வார்டு 143-ல் 1230 பேர், வார்டு 168-ல் 838 பேர் என மொத்தம் 7518 பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னையில் இன்று வார்டு 1, 20, 79, 94, 167, 179 ஆகிய இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் வாங்கப்பட்டது. காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது.
எண்ணூர் விநாயகர் கோவில் அருகில், மணலி மண்டப அலுவலகம், அம் பத்தூர் விஜயலட்சுமிபுரம், வில்லிவாக்கம் சிட்கோ நகர், நங்கநல்லூர் ஸ்கேட்டிங் மையம், திருவான்மியூர் குப்பம் கடற்கரை சாலை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
மனுக்களை வாங்கும் அதிகாரிகள் 45 நாட்களில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொறுமையுடன் பொது மக்களுக்கு பதில் அளித்தனர்.
- மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 5000 முகாம் நடத்தி தீர்வுகள் கண்டோம்.
- தற்போது 46 சேவைக்கு தீர்வு காணும் 10,000 முகாம்களை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தொடங்கி வைத்துள்ளேன்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரத்தில் ஐயா எல்.இளையபெருமாள் திருவுருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* வரலாற்று சிறப்புமிக்க நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
* காமராஜர் பிறந்தநாளில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
* ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்தவர் இளைய பெருமாள். அவரின் அரங்கத்தை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன்.
* 2021-ல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் முன்னெடுப்பு மூலம் மக்களிடம் பெற்ற மனுவுக்கு 100 நாளில் தீர்வு என உறுதி தந்தேன்.
* சொன்னதை போல் தீர்வு தந்ததால் மேலும் பலர் மனு அளிக்க தொடங்கியதால் முதல்வரின் முகவரி என தனிதுறை உருவாக்கப்பட்டது.
* மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 5000 முகாம் நடத்தி தீர்வுகள் கண்டோம்.
* தற்போது 46 சேவைக்கு தீர்வு காணும் 10,000 முகாம்களை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தொடங்கி வைத்துள்ளேன்.
* மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அரசின் சேவையை வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் இலக்கு.
* தகுதி இருந்தும் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் உங்கள் பகுதியில் நடக்கும் முகாமில் விண்ணப்பங்கள் கொடுங்கள். நிச்சயமாக மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.
- ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இப்பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவர் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரேசன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பெண்கள் ஒரு கோடியே 14 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றனர். இன்னும் சிலர் தகுதி இருந்தும், இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்து காத்துக் கிடக்கின்றனர்.
இதை தொடர்ந்து இத்திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ, அவ்வளவு பேருக்கும் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை தரப்படும் என சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்து இருந்தார். இதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை பெற நாளை முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக வினியோகிக்கப்பட உள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு நடைபெறும் இப்பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவர் என தகவல் வெளியாகி உள்ளது.
- மாதாநகர் ரேஷன்கடை உள்ளிட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வருகிற மக்களை முழுமையாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி:
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட மாப்பிள்ளை யூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டி. சவேரியார்புரம் பள்ளி, பெரிய செல்வன் நகரில் உள்ள ஊராட்சி சேவை மையம் மகளிர் சுய உதவிக்குழு அங்காடி, மாதாநகர் ரேஷன்கடை ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பொது மக்களின் பதிவு செய்யும் முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.அப்போது சம்பந்தப்பட்ட அலுவல ர்களிடம் வருகிற மக்களை முழுமையாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆய்வின் போது மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செய லாளர் சரவணக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட மகளிர் தொ ண்டரணி அமை ப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணி முத்து, தர்ம லிங்கம், ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, உமாமகேஸ்வரி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், தி.மு.க. இளைஞர் அணி ராஜேந்திரன், கிளைச் செய லாளர்கள் பொன்னுச்சாமி, சந்திரசேகர், மற்றும் கவுதம், ராயப்பன், கப்பிக்குளம் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சம்பந்தமாக 987 ரேஷன் கடைகளில் இரண்டு கட்டமாக விண்ணப்பங்ககள் பெறப்பட்டது.
- ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டை வாசல் தெருவில் விண்ணப்பத்தாரர்கள் வீடுகளுக்கு கலெக்டர் செந்தில் ராஜ் நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி:
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அணைக்கட்டு மற்றும் நீரேற்றும் நிலையம் மற்றும் ஏரல் அருகே உள்ள குரங்கணியில் உள்ள நீரேற்றும் நிலையம் மற்றும் வாழவல்லான் தாமிரபரணி ஆற்றில் உள்ள தடுப்பணை ஆகியவற்றை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சம்பந்தமாக 987 ரேஷன் கடைகளில் இரண்டு கட்டமாக விண்ணப்பங்ககள் பெறப்பட்டது. தற்போது மாவட்டம் முழுவதும் விண்ணப்பங்கள் பரீசீ லிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இப்பணிகளை பார்வையிட்டோம்.
சென்ற ஆண்டு பருவமழை தவறிய காரணத்தால் அணைகளில் நீர்வரத்து குறைவாக உள்ளது. இருப்பினும் குடிநீர் கிடைப்பதற்கு அணைகளில் நீர்வரத்து குறைவாக உள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 350 கன அடி தண்ணிர் திறக்கப்பட்டுள்ளது.
மருதூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் மூலம் பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறது.
மேலும் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள உறை கிணறுகளில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து வருகிறோம். ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளுக்கு உறைகிணறுகிளில் இருந்து தண்ணீர் வழங்கும் பணிகளை ஆய்வு செய்தோம். ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, குரங்கணி உள்ளிட்ட 5 இடங்களில் உறைகிணறு மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியானவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டை வாசல் தெருவில் விண்ணப்பத்தாரர்கள் வீடுகளுக்கு கலெக்டர் செந்தில் ராஜ் நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.






