என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk mla"

    • 18 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற தேர்தலையும் புறக்கணிப்போம் என தெரிவித்திருந்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை, மயிலாடும்பாறை ஒன்றியத்துக்குட்பட்ட வருசநாடு-வாலிப்பாறை இடையே சாலை அமைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

    குறிப்பிட்ட அளவு சாலை அமைக்க வனத்துறையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் நேரடியாக இடத்தை பார்வையிட்டு சாலை அமைக்கும் பணிக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என வனத்துறையினருக்கு அறிவுறுத்தியும், சுமூகத்தீர்வு ஏற்படவில்லை. குறிப்பிட்ட இடத்துக்கு பதிலாக பொதுமக்கள் 2 மடங்கு இடத்தை தருவதாக தெரிவித்தனர். வன விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வேலி அமைத்து தரப்படும் என்றும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் எனவும் வனத்துறையினரிடம் உறுதிமொழி அளித்தும், சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதனால் 18 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல கட்ட போராட்டங்கள், வீடுகளில் கருப்பு கொடி, கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு போன்ற பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    மேலும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற தேர்தலையும் புறக்கணிப்போம் என தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று வருசநாடு, தும்மக்குண்டு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் வருகை தந்தார். அப்போது மயிலாடும்பாறையில் கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். சாலை அமைக்கும் பணியை ஏன் தாமதம் செய்கிறீர்கள் என கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மகாராஜன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். இன்னும் 15 நாட்களில் ஒரு கமிட்டி அமைத்து கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் சாலை அமைக்கும் பணிக்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் 15 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் ஆடு, மாடுகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மகாராஜன் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இச்சம்பவத்தால் மயிலாடும்பாறை கிராமத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி.
    • மாரடைப்பு காரணமாக பொன்னுசாமி உயிரிழந்தார்.

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.

    மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி. முன்னதாக 2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி தோல்வியை தழுவினார்.

    பொன்னுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று - பழங்குடியின மக்களின் நலனுக்காக உழைத்த திரு. கு.பொன்னுசாமி MLA அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை உணர்வோடு மக்களுக்குத் தொண்டாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் வாழ்வார்!" என்று தெரிவித்துள்ளார்.

    அதே சமயம் பொன்னுசாமியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் அல்லது மூத்த அமைச்சர்கள் கூட நேரில் அஞ்சலி செலுத்த செலுத்தாதது விமர்சனத்திற்கு உள்ளானது

    பொன்னுசாமி பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு திமுகவின் முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்று இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், பொன்னுசாமி உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

    • பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
    • நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றிய அவரது மறைவு அத்தொகுதி மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

    கழகத்தின் மீது தீவிரப்பற்றும், முத்தமிழறிஞர் கலைஞர் மீதும்-என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்த அவர், நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர்.

    அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்குத் துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி.

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.

    மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி. முன்னதாக 2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி தோல்வியை தழுவினார்.

    பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • ஆர்.கே.நகர் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தி.மு.க. அமைச்சர்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்கி பதவியும் இழந்துள்ளனர். அந்த வகையில் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசி பொன்முடி அமைச்சர் பதவி, கட்சி பதவிகளை இழந்துள்ளார்.

    இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆர்.கே.நகர் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதி மக்களை அழைப்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

    அப்போது, அவர்களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதது குறித்து ஒரு பெண் கேள்வி எழுப்ப, அப்பெண்ணுக்கு ஆதரவாக மேலும் சில பெண்களும் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ. எபினேசர் விளக்கம் அளித்தார்.

    இருப்பினும், அப்பகுதி மக்களுக்கும், எபினேசர் எம்.எல்.ஏ.வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ. எபினேசர், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மெண்டல்கள் போல் பேசுவதாக கூறினார்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது:-

    ஆர்.கே.நகர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கேள்வி எழுப்பிய மக்களை அடிக்க முற்படுகிறார்..

    ஏழை வயிற்றில் அடித்தவர்கள் யாரும் நல்ல வாழ்வு கண்டதில்லை!

    நன்றிகெட்ட இந்த எம்.எல்.ஏ எபினேசரும் இதனை உணரும் காலம் தூரத்தில் இல்லை! என்று பதிவிட்டுள்ளார். 




    • உதயசூரியன் அவர்களின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது, சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்? என இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், கேள்வி கேட்ட இளைஞர்களுக்கு திமுக எம்எல்ஏ உதயசூரியன் மிரட்டல் விடுத்ததாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவர்களிடம், "சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?" என அப்பகுதி இளைஞர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

    வாக்களித்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லி பழக்கமில்லாத திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகள் அந்த இளைஞர்களை அடக்க முற்படுகின்றனர்.

    திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயசூரியன் அவர்களோ ஒருபடி மேலே சென்று அந்த இளைஞர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுகிறார்.

    உதயசூரியன் அவர்களின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம்.

    திமுகவின் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடுவார்கள் என மனக்கோட்டை கட்டி வந்த திமுக தலைவர்களை, போகும் இடங்களிலெல்லாம் மக்கள் தங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள்.

    ஆட்சி அமைந்ததும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத திமுக கட்சிக்கு, ஆள்சேர்க்கை ஒரு கேடா? என மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

    அதை எதிர்பாராத திமுக தலைவர்கள் என்ன செய்வதென தெரியாமல் தங்கள் நிதானத்தை இழக்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?

    கடந்த நான்கு வருடங்களாக கால் வைக்கும் இடங்களிலெல்லாம், கையில் கிடைக்கும் துறைகளிலெல்லாம் ஊழல் செய்துவிட்டு, தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல் மக்களை சென்று நலம் விசாரித்தால் இதுதான் நடக்கும். கோடிக்கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை சுகாதாரத்துறை யில் 70 சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், 105 டாக்டர்கள், 42 மருந்தாளுனர்கள், 300 துணை மருத்துவ ஊழியர் உள்ளிட்ட 5௦௦-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிக மோசமான நிலையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை சுகாதாரத்துறை யில் 70 சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், 105 டாக்டர்கள், 42 மருந்தாளுனர்கள், 300 துணை மருத்துவ ஊழியர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற நேரிடுகிறது.

    மேலும், நடப்பாண்டி ற்கான மருந்து கொள்முத லுக்கான பணிகளை மத்திய கொள்முதல் கமிட்டி 7 மாதங்கள் ஆகியும் இதுவரை இறுதி செய்யாததால், பல்வேறு நிறுவனங்கள் மருந்துகள் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல அத்தியாவசிய மருந்து, மாத்திரைகள் வெளி மருந்தகங்களில் வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிக மோசமான நிலையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு அவசர சிகிச்சை பிரிவு சரிவர செயல்படவில்லை, அறுவை சிகிச்சை செய்யக்கூடிய டாக்டர்களுக்கு 3 மாதம் சம்பளம் தராததால், அவர்கள் பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது எந்த மருத்துவமனையிலும் நடைபெறாதது.

    எனவே இனியும் பொதுமக்களின் உயிர் சம்பத்தப்பட்ட விஷயத்தில் விளையாடாமல். சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து குறைபாடு களையும் சரிசெய்து மக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை முதல்-அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனின் சகோதரர் மனைவி கீதா கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
    • கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரிடமும், அவரது சகோதரர் முருகேசன் குடும்பத்தாரிடமும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    கம்பம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்திலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகம் அளித்து வருகிறார். தொண்டர்களின் திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதுடன் தனது போடி தொகுதிக்குட்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.

    இந்நிலையில் கம்பத்தில் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் இல்லத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது உறவினர் இறந்ததற்கு துக்கம் விசாரித்தார். கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனின் சகோதரர் மனைவி கீதா கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

    இதனைதொடர்ந்து கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரிடமும், அவரது சகோதரர் முருகேசன் குடும்பத்தாரிடமும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

    இது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதுவையை சேர்ந்த 884 பேர் வெளிமாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் வெளிமாநிலத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 128 பேர் புதுவையிலும் பயன்பெற்றுள்ளனர்.
    • தமிழகத்தில் இந்த திட்டத்தில் 63 லட்சம் பெண்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சுகாதாரதுறை சார்பில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுதேடி வந்து பரிசோதனை செய்யும் சந்திராயன் ஆரோக்கிய திட்டத்தை கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

    விழாவில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, பேசும்போது, வீடு தேடி மருத்துவம் என்று திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புதுவையில் வீடு தேடி மருத்துவம் திட்டம் முறையாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    புதுவையில் பலருக்கு பல விதமான நோய்கள் உள்ளன. ஆனால் அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதுவை சுகாதாரதுறையில் போதிய வசதி இல்லை என குற்றம் சாட்டினார்.

    மேலும், ஆயுஷ்மான் திட்டத்தால் புதுவைக்கு எந்த ஒரு பலனும் இல்லை. மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட புதுவை மக்கள் மதிக்கப்படுவ தில்லை என்று கூறிய கென்னடி எம்.எல்.ஏ. புதுவை சுகாதாரதுறையின் செயல்பாடுகளை விமர்சித்து குற்றம் சுமத்தி பட்டியலிட்டார்.

    இதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை பேசினார். அவர் பேசும்போது, புதுவையில்ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 597 பேர் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.41 கோடியே 27 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதில் உப்பளம் தொகுதியை சேர்ந்த மக்கள் தான் அதிகம் பயன்பெற்றனர். புதுவையை சேர்ந்த 884 பேர் வெளிமாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் வெளிமாநிலத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 128 பேர் புதுவையிலும் பயன்பெற்றுள்ளனர்.

    தென்னிந்தியாவின் மருத்துவ தலைநகரமாக புதுவை மாறி வருகிறது என்றார்.

    மேலும், புதுவையில் குடும்ப தலைவிகளுக்கான திட்டம் 17 ஆயிரம் பேருடன் தொடங்கப்பட்டது. அதன் பிறகு தகுதியான 71 ஆயிரம் குடும்ப தலைவிகளை தேர்வு செய்து வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தில் 63 லட்சம் பெண்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.

    தொடர்ந்து, தமிழகத்தில் திட்டம் அறிவிக்கப்பட்டு 2 ½ வருடம் கழித்து வருகிற 15-ந் தேதிதான் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால், புதுவையில் சொன்னவுடன் கொடுத்து விட்டோம். தமிழகத்தில் அறிவித்த 2 ½ ஆண்டு காலத்திற்கும் சேர்த்து பணம் வழங்க வேண்டும் என்றார்.

    சமையல் கியாஸ் விலையை பிரதமர் மோடி ரூ.200 குறைத்தார். புதுவை அரசு ரூ.300 குறைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ரூ.100 குறைப்போம் என கூறியும் இதுவரை சிலிண்டர் விலையை குறைக்கவில்லை. நாம் விலையை குறைப்போம் என சொல்லாமல், விலையை குறைத்துள்ளோம்.

    முதல்-அமைச்சர் மக்கள் நலன்சார்ந்த எந்த திட்டம் கொண்டு வந்தாலும் நான் அனுமதி தருவேன் என்றும் கவர்னர் தமிழிசை கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது.
    • அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

    இதற்கிடையே, எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    என மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டாகிறது. அவர் திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

    அங்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.

    மருமகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் அதை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

    • திமுக எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
    • வழக்குப்பதிவு செய்து 6 நாட்களாகி உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர்.

    இந்நிலையில் இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்து 6 நாட்களாகி உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இருவரும் வழக்கறிஞர்கள் மூலம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோர முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திமுக எம்.எல்.ஏ. மருமகள் மெர்லினாவின் தாய், தந்தையிடம் காவல் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
    • பெங்களூரு சென்றுள்ள தனிப்படை போலீசார் அவர்களது உறவினர் வீடுகளிலும் இரண்டு பேர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து திமுக எம்.எல்.ஏ. மருமகள் மெர்லினாவின் தாய், தந்தையிடம் காவல் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. மெர்லினா எங்கே இருக்கிறார் என்பது குறித்தும், சிறுமியை தாக்கிய சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினாவின் செல்போன் சிக்னல் மூலம் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    பெங்களூரு சென்றுள்ள தனிப்படை போலீசார் அவர்களது உறவினர் வீடுகளிலும் இரண்டு பேர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் அளித்த மனுவில், சரணடையும் நாளிலேயே ஜாமின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் சரணடையும் நாளிலேயே ஜாமின் வழங்குவது குறித்து சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்விற்கு உத்தரவிட்டனர்.

    மேலும் அனைத்து தரப்பிற்கும் போதிய வாய்ப்பளித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    ×