என் மலர்
நீங்கள் தேடியது "dmk mla"
- புதுவையை சேர்ந்த 884 பேர் வெளிமாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் வெளிமாநிலத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 128 பேர் புதுவையிலும் பயன்பெற்றுள்ளனர்.
- தமிழகத்தில் இந்த திட்டத்தில் 63 லட்சம் பெண்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் சுகாதாரதுறை சார்பில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுதேடி வந்து பரிசோதனை செய்யும் சந்திராயன் ஆரோக்கிய திட்டத்தை கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
விழாவில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, பேசும்போது, வீடு தேடி மருத்துவம் என்று திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புதுவையில் வீடு தேடி மருத்துவம் திட்டம் முறையாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
புதுவையில் பலருக்கு பல விதமான நோய்கள் உள்ளன. ஆனால் அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதுவை சுகாதாரதுறையில் போதிய வசதி இல்லை என குற்றம் சாட்டினார்.
மேலும், ஆயுஷ்மான் திட்டத்தால் புதுவைக்கு எந்த ஒரு பலனும் இல்லை. மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட புதுவை மக்கள் மதிக்கப்படுவ தில்லை என்று கூறிய கென்னடி எம்.எல்.ஏ. புதுவை சுகாதாரதுறையின் செயல்பாடுகளை விமர்சித்து குற்றம் சுமத்தி பட்டியலிட்டார்.
இதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை பேசினார். அவர் பேசும்போது, புதுவையில்ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 597 பேர் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.41 கோடியே 27 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் உப்பளம் தொகுதியை சேர்ந்த மக்கள் தான் அதிகம் பயன்பெற்றனர். புதுவையை சேர்ந்த 884 பேர் வெளிமாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் வெளிமாநிலத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 128 பேர் புதுவையிலும் பயன்பெற்றுள்ளனர்.
தென்னிந்தியாவின் மருத்துவ தலைநகரமாக புதுவை மாறி வருகிறது என்றார்.
மேலும், புதுவையில் குடும்ப தலைவிகளுக்கான திட்டம் 17 ஆயிரம் பேருடன் தொடங்கப்பட்டது. அதன் பிறகு தகுதியான 71 ஆயிரம் குடும்ப தலைவிகளை தேர்வு செய்து வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தில் 63 லட்சம் பெண்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, தமிழகத்தில் திட்டம் அறிவிக்கப்பட்டு 2 ½ வருடம் கழித்து வருகிற 15-ந் தேதிதான் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால், புதுவையில் சொன்னவுடன் கொடுத்து விட்டோம். தமிழகத்தில் அறிவித்த 2 ½ ஆண்டு காலத்திற்கும் சேர்த்து பணம் வழங்க வேண்டும் என்றார்.
சமையல் கியாஸ் விலையை பிரதமர் மோடி ரூ.200 குறைத்தார். புதுவை அரசு ரூ.300 குறைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ரூ.100 குறைப்போம் என கூறியும் இதுவரை சிலிண்டர் விலையை குறைக்கவில்லை. நாம் விலையை குறைப்போம் என சொல்லாமல், விலையை குறைத்துள்ளோம்.
முதல்-அமைச்சர் மக்கள் நலன்சார்ந்த எந்த திட்டம் கொண்டு வந்தாலும் நான் அனுமதி தருவேன் என்றும் கவர்னர் தமிழிசை கூறினார்.
- கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனின் சகோதரர் மனைவி கீதா கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
- கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரிடமும், அவரது சகோதரர் முருகேசன் குடும்பத்தாரிடமும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
கம்பம்:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்திலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகம் அளித்து வருகிறார். தொண்டர்களின் திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதுடன் தனது போடி தொகுதிக்குட்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.
இந்நிலையில் கம்பத்தில் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் இல்லத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது உறவினர் இறந்ததற்கு துக்கம் விசாரித்தார். கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனின் சகோதரர் மனைவி கீதா கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
இதனைதொடர்ந்து கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரிடமும், அவரது சகோதரர் முருகேசன் குடும்பத்தாரிடமும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
இது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புதுவை சுகாதாரத்துறை யில் 70 சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், 105 டாக்டர்கள், 42 மருந்தாளுனர்கள், 300 துணை மருத்துவ ஊழியர் உள்ளிட்ட 5௦௦-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
- கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிக மோசமான நிலையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
புதுவை சுகாதாரத்துறை யில் 70 சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், 105 டாக்டர்கள், 42 மருந்தாளுனர்கள், 300 துணை மருத்துவ ஊழியர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற நேரிடுகிறது.
மேலும், நடப்பாண்டி ற்கான மருந்து கொள்முத லுக்கான பணிகளை மத்திய கொள்முதல் கமிட்டி 7 மாதங்கள் ஆகியும் இதுவரை இறுதி செய்யாததால், பல்வேறு நிறுவனங்கள் மருந்துகள் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல அத்தியாவசிய மருந்து, மாத்திரைகள் வெளி மருந்தகங்களில் வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிக மோசமான நிலையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு அவசர சிகிச்சை பிரிவு சரிவர செயல்படவில்லை, அறுவை சிகிச்சை செய்யக்கூடிய டாக்டர்களுக்கு 3 மாதம் சம்பளம் தராததால், அவர்கள் பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது எந்த மருத்துவமனையிலும் நடைபெறாதது.
எனவே இனியும் பொதுமக்களின் உயிர் சம்பத்தப்பட்ட விஷயத்தில் விளையாடாமல். சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து குறைபாடு களையும் சரிசெய்து மக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை முதல்-அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்
இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.
- ‘ஜெயிலர்’ படத்தில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
- புதிதாக போடப்படும் குருவிநத்தம்-அழகியநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு காட்சிக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
புதுச்சேரி:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
'ஜெயிலர்' படத்தின் முதல் கட்ட காட்சிகள் முடிவடைந்த நிலையில் 2-ம் கட்ட படப்பிடிப்பு கடலூர்-புதுவை எல்லையான அழகியநத்தம் (கடலூர் மாவட்டம்) தென்பெண்ணையாற்று பாலம் அருகே நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் புதுவையில் இருந்து கார் மூலம், கடலூர் சென்றபோது புதுவை எல்லை பகுதியான குருவிநத்தத்தில் அவருக்கு ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்பளித்தனர். மேலும் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் கூச்சலிட்டனர்.
ரசிகர்களின் வரவேற்பை அடுத்து காரின் கண்ணாடியை திறந்து பார்த்து ரசிகர்களுக்கு ரஜினி கையசைத்தது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் ரஜினியை புதுவை மாநிலம் பாகூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
'ஜெயிலர்' படத்தில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டது. புதிதாக போடப்படும் குருவிநத்தம்-அழகியநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த காட்சிக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக படப்பிடிப்பு குழுவினர் தொகுதி எம்.எல்.ஏ.வான செந்தில்குமாரிடம் கூறியுள்ளனர். அவர் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் ஒப்பந்ததாரிடம் பேசி அனுமதி பெற்று தந்துள்ளார்.

ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சி.
இதனையடுத்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ.வை ரஜினி பார்க்க விரும்பினார். படப்பிடிப்பு தளத்தில் கேரவேனில் இருந்த ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்.
அப்போது சிறுவயதில் இருந்து கமல் ரசிகரான தான் 'அண்ணாமலை' படம் பார்த்த பிறகு ரஜினிக்கும் ரசிகராகி விட்டேன் என செந்தில்குமார் எம்.எல்.ஏ. கூறினார். இதற்கு ரஜினி தனது பாணியில் சிரித்து கொண்டே நன்றி... நன்றி என கூறியுள்ளார்.
ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. சந்தித்தது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு டாக்டர்கள் குறைவாக இருப்பதால் நோயாளிகள் சிகிச்சை பெற மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். இன்று மருத்துவமனை பணியில் ஒரு டாக்டர் மட்டும் இருந்துள்ளார். இதனால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து தினமும் இது போல் டாக்டர்கள் குறைவாக உள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் பென்னாகரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இன்ப சேகரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அவர் இன்று காலை மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது பணியில் டாக்டர் ஒருவர் மட்டுமே இருந்ததால் நோயாளிகளுடன் மருத்துவமனையின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆப்பூர் வரலட்சுமி மதுசூதனன் பேசும்போது கூறியதாவது:-
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. குட்கா ஊழல், மின்வாரிய ஊழல், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறைகளில் மெகா ஊழல்கள் நடைபெறுகிறது.
இதை எதிர்க்கட்சியான தி.மு.க. சுட்டிக் காட்டினாலும், ஆளும் தரப்பினர் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து கிடக்கிறது. திட்டப்பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் பணம் இல்லை என்கிறார்கள்.
ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சருக்கு தைரியம் இல்லை. ஏனென்றால் அவர் மீதே லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் உள்ளது. என்னை மாட்டி விட்டால் உன்னை மாட்டி விடுவேன் என்று அமைச்சர்கள் மிரட்டுவதால் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தலைவர் மு.க.ஸ்டாலின் இவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தொழில் அதிபர் ஆப்பூர் மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் செங்கை தாமஸ், ஒன்றிய செயலாளர் எம்.கே. தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் 55 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், கடலூர் மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கும் நாகை மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 1-ந்தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் டெல்லியில் நடந்தது.
தமிழகத்தை பொறுத்தவரை 3 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் தீவிரமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் இன்று (3-ந்தேதி ) திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ். பழநிமாணிக்கம், முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன், நாகை மாவட்ட செயலாளர் கவுதமன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி ஆடலரசன், திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் அன்பழகன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், திருவிடைமருதூர் கோவி.செழியன் மற்றும் தஞ்சை நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் எரிவாயு, எண்ணை திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், திருவாரூக்கு சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறார்.
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் அனைவரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
அதன்படி திருவாரூருக்கு வரும் வழியில் கவர்னருக்கு பிற்பகலில் விளமல் கிராமம் பகுதியில் கருப்பு கொடி காட்டப்பட உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கவர்னர் வருகையையொட்டி திருவாரூர் செல்லும் வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Hydrocarbon #DMK
சென்னை:
சட்டசபையில் இன்று அனகா புத்தூர், பொழிச்சலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படுமா? என்று பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி (தி.மு.க.) துணைகேள்வி எழுப்பினார்.
அனகாபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் 400 சதுரடியில் 6 படுக்கை வசதியுடன் உள்ளது. இங்கு 60 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். இதே போல பொழிச்சலூர் 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர்.
இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இட வசதியின்றி சிறிய கட்டிடத்தில் செயல்படுகிறது. எனவே மக்கள் தொகை அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்தப்படுமா? என கேட்டார்.
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், “இ.கருணாநிதி எம்.எல்.ஏ. குறிப்பிடும் ஆரம்ப சுகாதார நிலையங்களை இரண்டு முறை பார்வையிட்டேன். உறுப்பினர் சொல்வது உண்மைதான்.
சென்னை ஒட்டியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா உடல் வைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் மற்றும் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட செஞ்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மஸ்தான் மற்றும் திமு.க. நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், இளைஞரணி அமைப்பாளர் அண்ணாதுரை மற்றும் விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் அம்பேத் வளவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது. #tamilnews