search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாப்பிள்ளையூரணி பகுதியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் - சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

    மாப்பிள்ளையூரணி பகுதியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் - சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு

    • மாதாநகர் ரேஷன்கடை உள்ளிட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வருகிற மக்களை முழுமையாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட மாப்பிள்ளை யூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டி. சவேரியார்புரம் பள்ளி, பெரிய செல்வன் நகரில் உள்ள ஊராட்சி சேவை மையம் மகளிர் சுய உதவிக்குழு அங்காடி, மாதாநகர் ரேஷன்கடை ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பொது மக்களின் பதிவு செய்யும் முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.அப்போது சம்பந்தப்பட்ட அலுவல ர்களிடம் வருகிற மக்களை முழுமையாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின் போது மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செய லாளர் சரவணக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட மகளிர் தொ ண்டரணி அமை ப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணி முத்து, தர்ம லிங்கம், ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, உமாமகேஸ்வரி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், தி.மு.க. இளைஞர் அணி ராஜேந்திரன், கிளைச் செய லாளர்கள் பொன்னுச்சாமி, சந்திரசேகர், மற்றும் கவுதம், ராயப்பன், கப்பிக்குளம் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×