என் மலர்
நீங்கள் தேடியது "manipur"
- கண்ணீர் புகை குண்டுகள், பிரம்புகள், உடல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள் பாதுகாப்புப் படையினர் தயாராக உள்ளனர்.
- மசோதாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாஜக தலைவர் வீடு எரிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் நிலங்களை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தில் திருத்தங்கள் செய்யும் மசோதா கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமானது. சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை இந்த மசோதா பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடர்பட்டுள்ளன.
இந்நிலையில் வக்பு மசோதாவை எதிர்த்து மணிப்பூரில் போரட்டங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூரின் லிலாங், இம்பால் கிழக்கில் வக்பு சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் லிலாங் பகுதியில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து அங்கு கண்ணீர் புகை குண்டுகள், பிரம்புகள், உடல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள் பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
குராய் குமிடோக் பஜாரில் இன்று திட்டமிடப்பட்ட "மனித சங்கிலிப் போராட்டம்" த்துக்கு முன்னதாக இம்பால் கிழக்கு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மசோதாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாஜக சிறுபான்மைத் தலைவர் அஸ்கர் அலியின் லிலாங் பகுதியில் உள்ள வீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திங்களன்று லிலாங் பகுதியில் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..
மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதையும், பொதுமக்கள் துப்பாக்கிகள், வாள்கள், குச்சிகள், கற்கள் அல்லது பிற ஆயுதங்களை எடுத்துச் செல்வதையும் தடைசெய்தது.
- பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநிலத் தலைவராக அஸ்கர் அலி உள்ளார்.
- பேரணியில் ஐயாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த நிறைவேறியது. ஜனாதிபதியின் உடனடி ஒப்புதலுடன் சட்டமாகவும் மாறியது. இந்நிலையில் வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூர் பாஜக சிறும்பான்மை தலைவரின் வீட்டில் தீவைத்து எரிக்கப்பட்டது.
மணிப்பூரில், பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநிலத் தலைவர் அஸ்கர் அலி நேற்று முன் தினம் வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில் நேற்று கும்பல் ஒன்று பவம் தௌபல் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு தீவைத்துள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் அவரது வீட்டிற்கு வெளியே திரண்ட கும்பல் வீட்டை சேதப்படுத்தி தீ வைத்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அலி இணைய ஊடகங்களில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர் தனது முந்தைய கூற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.
முன்னதாக, இம்பால் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் வக்பு மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. பேரணியில் ஐயாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.இத்தகடுத்து முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- ஓய்வுபெற்ற சிறப்பு இயக்குநர் ஏ.கே. மிஸ்ரா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
- மக்களவையில் மணிப்பூர் குறித்த விவாதத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 மே மாதம் குக்கி மற்றும் மெய்தேய் பழங்குடியினரிடையே நிகழ்ந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதில் சுமார் 260 பேர் வரை கொல்லப்பட்டனர். பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்டது, வன்புணர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட மனித குலத்திற்கே வெட்கக்கேடான கொடுமைகள் நடைபெற்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு ஓட வேண்டியிருந்தது. காவல்நிலையத்தில் உள்ள ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கலவரம் ஓய்ந்தபின்னும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர்.
கடந்த வருட இறுதியில் மக்கள் போராட்டத்தால் மீண்டும் கலவரமான சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மாநில ஆளும் பாஜக அரசு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல்வர் பைரன் சிங் ராஜிநாமாவால் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மணிப்பூரில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதாக மத்திய அரசு கூறி வருகின்றது. இந்நிலையில் குக்கி, மெய்தேய் குழு பிரதிநிதிகளை வைத்து கூட்டம் ஒன்றை மத்திய அரசு இன்று நடத்தியுள்ளது.
ஆல் மணிப்பூர் யுனைடெட் கிளப்ஸ் ஆர்கனைசேஷன் (AMUCo) மற்றும் ஃபெடரேஷன் ஆஃப் சிவில் சொசைட்டி ஆர்கனைசேஷன் (FOCS) ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆறு பேர் கொண்ட மெய்தேய் குழுவும், ஒன்பது பேர் கொண்ட குக்கி சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் கூட்டத்தில் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் உளவுத்துறைப் பணியகத்தின் ஓய்வுபெற்ற சிறப்பு இயக்குநர் ஏ.கே. மிஸ்ரா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
முன்னதாக மக்களவையில் மணிப்பூர் குறித்த விவாதத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குக்கி சமூகங்களின் பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சகம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் கூறியிருந்தார். மேலும் விரைவில் இரு குழுக்களையும் சேர்ந்து கூட்டுக் கூட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மணிப்பூர் தீர்மானம் நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார்
- இத்தீர்மானம் தாக்கலாகி 40 நிமிடங்களுக்குள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து நள்ளிரவு 2.30 மணிக்கு மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
இத்தீர்மானம் தாக்கலாகி 40 நிமிடங்களுக்குள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மணிப்பூர் விவகாரம் விரிவாக விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த தீர்மானம் நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- இரு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது.
- வன்முறையில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மணிப்பூரில் சரியான நேரத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இயல்பு நிலைக்கு மணிப்பூர் திரும்பி வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக கூறியதாவது:-
மணிப்பூரில் தற்போதைய நிலை அமைதியாக உள்ளது. இயல்பு நிலை திரும்பி வருகிறது. உள்துறை அமைச்சகம் இரண்டு சமூகத்தினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரண்டு சமூகத்தினரும் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். படிப்படியாக நிலைமை நேர்மறையான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது கவலைப்படுவதற்கான எந்த காரணமும் இல்லை.
இரண்டு சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது வெற்றி பெற்றிருக்காது. மணிப்பூரில் சரியான நேரம் வந்தபோது, நாங்கள் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினோம்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து குகி-மெய்தி சமூகத்தினரிடையே ஏற்பட்டது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாமில் வசித்து வருகின்றனர்.
மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை எதிர்த்து குகி சமூகத்தினர் பழங்குடியினர் ஒற்றுமை பேரணியை நடத்தினர். இந்த பேரணியின்போது மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது.
- மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன.
- சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டது.
மியான்மரில் இன்று நண்பகலில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகியுள்ளன.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மண்டலே நகரில் உள்ள ஒரு மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் உள்ளே சிக்கியுள்ளதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் கடுமையாக உணரப்பட்டது. தாய்லாந்தில் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் இந்த நிலநடுக்கம் இந்தியாவின் மேற்கு வங்க வங்க தலைநகர் கொல்கத்தா, மணிப்பூர் தலைநகர் இம்பால் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. வங்கதேசத்தின் டாக்கா மற்றும் சட்டோகிராமிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

- 11 நாட்களுக்கு முன்னதாக முகேஷ் என்ற வாலிபர் காணாமல் போனார்.
- போலீசார் தீவிரமாக தேடிவரும் நிலையில், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
மணிப்பூரில் குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. மாநில அரசு வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாக பாஜக முதல்வர் செயல்படுவதாக மற்றொரு சமூகத்தினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக முதல்வர் பைரன் சிங் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஆகவே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து இடங்களிலும் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 11 நாட்களுக்கு முன்னதாக 20 வயது இளைஞர் லுவாங்தெம் முகேஷ் திடீரென காணாமல் போனார். இவர் கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். போலீசார் அவரை தொடர்ந்து தேடிவருகிறது.
இந்த நிலையில் தேடுதல் முயற்சியை விரைவுப்படுத்த வேண்டும் என சபம் நிஷிகாந்த் என்ற எம்.எல்.ஏ., மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. சபம் நிஷிகாந்த் கூறுகையில் "நான் ஆளுநரை சந்தித்து முகேஷ் விசயமாக ஆலோசனை நடத்தினேன். ஆளுனர் இந்த விசயம் தொடர்பாக அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். தற்போதைய அப்டேட் உடன் உள்ளார்" எனத் தெரிவித்துள்ளார். கெய்சம்தோங் என்ற தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் சபம நிஷிகாந்த் என்பவர் குறிப்பிடத்தக்கது.
முகேஷ் கடைசியாக பிஷ்னுபூர் மாவட்த்தில் உள்ள சினிகோன் பகுதியில் தென்பட்டுள்ளார். கடைசியாக அவர் செல்போன் குகி பிரிவனர் அதிக வசிக்கும் நோனி மாவட்டம் ஜோயுஜாங்டெக் பகுதியில் லொகேசன் காட்டியுள்ளது. ஆனாலர் சரியான இடத்தை போலீசாரால் இன்னும் கண்டறிய முடியவில்லை.
"எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை இழக்கும் வேதனையைத் தாங்கக்கூடாது. என் மகனின் உயிருக்காக நான் கெஞ்சுகிறேன்" என முகேஷின் தாயார் மகனை கண்டுபிடித்து தரக்கோரி வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.
- ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது.
- கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர்.
மணிப்பூரில் சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹமர் பழங்குடியினத் தலைவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட்டார்.
இதனால் ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது. எனவே சூரசந்த்பூரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக இரு சமூக தலைவர்களும் கடந்த திங்கள்கிழமை அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டினர். ஆனால் நேற்று இரவே மீண்டும் இரு சமூகத்தினரிடையேயும் மோதல் வெடித்தது.
அப்பகுதியில் ஜோமி பழங்குடியினர் தங்கள் சமூகத்தின் கொடியை ஏற்ற ஹமர் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தபோது இருதரப்புக்கும் வன்முறையில் இறங்கியது. கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதில் லால்ரோபுயி பாகுமாட்டே என்ற 53 வயது நபர் உயிரிழந்தார்.
மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கலவரத்தை அடக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர். சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குக்கி மற்றும் மெய்தேய் பழங்குடியினரையே கடந்த வருடம் முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து பார்வையிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் இன்று மணிப்பூர் வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 250 க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.
- மணிப்பூரில் அமித் ஷா பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நான்கு நாட்கள் பயணமாக நேற்று மணிப்பூர் சென்ற அமித் ஷா, மாநில முதல்வர் பைரென் சிங் மற்றும் மாநில மந்திரிகள், பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
மாநில உள்துறை மந்திரி நித்யானந்த் ராய், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பாலா, உளவுத்துறை தலைவர் தபன் டேக்கா மற்றும் சில உயர் அதிகாரிகளை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையின் போது மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் சென்றதும், அமித் ஷா மாநிலத்தின் மூத்த அதிகாரிகள், மந்திரிகளை சந்தித்தார். ஜூன் 1 ஆம் தேதி வரை மணிப்பூரில் இருக்கும் அமித் ஷா பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.
மணிப்பூர் கலவரத்தில் காவல் அதிகாரி உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வீடு தாக்கப்பட்டது மற்றும் காவல் துறை ஆயுத கிடங்கில் இருந்து பயங்கரவாதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களை திருடி சென்றது என மாநிலம் முழுக்க கலவர சூழல் நிலவுகிறது.
- ஊர்வலத்தை பங்குதந்தை அலாய்சியஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.
- சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்பட திரளானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி:
மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டி ஆறுமுகநேரியில் கிறிஸ்தவர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர். ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தின் சார்பில் நடந்த இந்த ஊர்வலத்தை பங்குதந்தை அலாய்சியஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஊர் தலைவர் செல்வன் முன்னிலை வகித்தார். சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்பட திரளானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கத்தோலிக்க கோவில் தெரு மேட்டுவிளை, மேல தெரு உள்பட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் மடத்துவிளை பங்குமக்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
- இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர் கட்சி தலைவர்கள் மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். வெறுப்படைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதே போல நடிகைகள் ஊர்மிளா மடோன்கர், ரிச்சா சதா, ரேணுகா சஹானே, நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் உள்ளிட்ட பலரும் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதே போல 'மணிப்பூர் வன்முறை', 'போதும் போதும்' போன்ற ஹேஷ்டேக்குகள் பெருமளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
- இணையதள முடக்கம் காரணமாக மக்களில் பெரும் பகுதியினர் வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
- குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. அதன்பின்னர் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வன்முறை தாக்குதல்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. இணையதள சேவை முடக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் மணிப்பூரில் பரவிய வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
இதற்கிடையே, மணிப்பூரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வீடியோவின் தாக்கம் மணிப்பூரின் சுராசந்த்பூரில் இன்று தீவிரமாக வெடித்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். வீதி வீதியாக மக்கள் அணிவகுத்துச் சென்று இந்த சம்பவத்தை கண்டித்து முழக்கமிட்டனர்.