என் மலர்
நீங்கள் தேடியது "Sanjay Rawat"
- பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
- உத்தவ் தாக்கரே காலில் விழாததால்தான் பாஜக சிவசேனாவைப் பிளவுபடுத்தியது
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தோல்வியடைந்தது என சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் ஏன் நடந்தது? அதற்கு அமித் ஷா மட்டுமே பொறுப்பு. உள்துறை அமைச்சராக அவர் தோல்வியடைந்தவர். பிரதமர் மோடி அவரை ராஜினாமா செய்து பதவி விலகச் சொல்ல வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் ஒரு தோல்வி. பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதைக் கோரினார்" என்று சஞ்சய் ராவத் கூறினார்.
மேலும், உத்தவ் தாக்கரே காலில் விழாததால்தான் பாஜக சிவசேனாவைப் பிளவுபடுத்தியது என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.
ஜூன் 2022 இல், ஏக்நாத் ஷிண்டே உத்தவ் பிரிவுடன் முறித்துக் கொண்டு பாஜகவில் இணைந்து மஹாயுதி கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்தார்.
மத்தியிலும், மூன்றரை ஆண்டுகாலம் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த பாஜக, பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. தங்கள் தோல்வியை மறைக்க எதற்கும் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் மீது பழி சுமத்துவதாக சஞ்சய் ராவத் விமர்சித்தார்.
இந்த மாதம் 7 ஆம் தேதி, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.
- நாட்டின் வரலாற்றில் அமித் ஷா ஒரு தோல்வியுற்ற உள்துறை அமைச்சர்.
- ஒருநாள் கூட அந்தப் பதவியை வகிக்க அவருக்கு உரிமை இல்லை.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் இரண்டு வெளிநாட்டினரும் அடங்குவர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து மகாராஷ்டிராவின் சிவசேனா (UBT) எம்பி சஞ்சய் ராவத் காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் அமித் ஷா ஒரு தோல்வியடைந்த உள்துறை அமைச்சர், அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினார்.
அவர் கூறியதாவது, பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நாடு முழுவதிலுமிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். அவர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பேர் அடங்குவர்.
பயங்கரவாதிகள் சுடுவதற்கு முன்பு தங்கள் மதத்தைக் கேட்டதாகப் பாதிக்கப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். பயங்கரவாதிகள் மக்களைக் கொல்வதற்கு முன்பு மதத்தைக் கேட்டால் அதற்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம்.
வெறுப்பு அரசியல் ஒருநாள் பெரிய பூமரங் போன்று வெடிக்கும். வேறு யாரும் அதற்குப் பொறுப்பல்ல. மேலும் இது மேற்கு வங்காளத்திலிருந்து ஜம்மு-காஷ்மீருக்குப் பரவிவரும் வெறுப்பின் விளைவு. ஆளும் கூட்டணியினர் அரசை அமைப்பதிலும், கவிழ்ப்பதிலும் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பதிலுமே 24 மணி நேரமும் மும்முரமாக ஆலோசித்து வருகின்றனர்.
அதன்பின்பு மக்களை எவ்வாறு பாதுகாப்பார்கள்? நாட்டின் வரலாற்றில் அமித் ஷா ஒரு தோல்வியுற்ற உள்துறை அமைச்சர். முழு நாடும் அவரது ராஜிநாமாவை எதிர்பார்க்கிறது. ஒருநாள் கூட அந்தப் பதவியை வகிக்க அவருக்கு உரிமை இல்லை.
பஹல்காமில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். ஆனால் அங்கு ஒரு பாதுகாப்புக் காவலர் கூட இல்லை.
இருப்பினும், அமித் ஷா ஸ்ரீநகரில் தரையிறங்கியபோது, அவரது பாதுகாப்புக்காக 75 வாகனங்கள் கொண்ட ஒரு கான்வாய் இருந்தது. 500க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் இருந்தனர். அவருடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவும் இருந்தது. ஒருவருக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஒரு பாதுகாப்புக் காவலர் கூட இல்லை. இதெல்லாம் ஏன் நடந்தது? ஏனென்றால், இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள இரண்டு லட்சம் பணியிடங்களை மோடி அரசு நிரப்பவில்லை. பாதுகாப்புத் துறையின் பட்ஜெட்டை அவர்கள் குறைத்துள்ளனர்.
காஷ்மீரின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, மோடி அரசு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்கி, ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது. எனவே, நேற்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு முழுப் பொறுப்பாகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. மோடி-அமித் ஷா நாடாளுமன்றத்தில் நம் அனைவரிடமும் (பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக) பொய் சொல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- 18 நாட்கள் என்ஐஏ காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
- ராணாவை நாடு கடத்துவது 16 வருடப் போராட்டம். அது காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கியது.
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் உசேன் ராணா இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, ராணாவை மோடி அரசு தூக்கிலிடும் என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
முன்னதாக ராணா வியாழக்கிழமை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அவரை கைது செய்தது. மேலும் 18 நாட்கள் என்ஐஏ காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜக இதை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார். அவர் கூறியத்தவது, "ராணாவை உடனடியாக தூக்கிலிட வேண்டும், ஆனால் அவர் பீகார் தேர்தலின் போது தூக்கிலிடப்படுவார். ராணாவை நாடு கடத்துவது 16 வருடப் போராட்டம். அது காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கியது. எனவே ராணாவை மீண்டும் கொண்டு வந்ததற்கான பெருமையை யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று கூறினார்.
பீகாரில் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணி, காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. பாஜக-ஜேடியு கூட்டணி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவியைக் கோரும் வகையில், பாஜக தனது வாக்கு எண்ணிக்கையை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சஞ்சய் ராவத்தின் கருத்துக்கள் வந்துள்ளன.
- ஜனநாயகமும், சுதந்திரமும் தற்போது இல்லை.
- காழ்ப்புணர்ச்சி அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.
மும்பை :
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத். இவர் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சுமார் 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 9-ந் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவர் மகாராஷ்டிரா அரசியல் சூழல் மாசடைந்து உள்ளதாக சாம்னா பத்திரிகையில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
வெறுப்பை உணர முடிகிறது. தற்போது அரசியல்வாதிகள் தங்கள் எதிரிகள் உயிரோடு இருக்க கூடாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். ஒருவரை ஒருவர் அழிக்க விரும்புவதால் மகாராஷ்டிரா அரசியல் சூழல் மாசடைந்து உள்ளது.
காழ்ப்புணர்ச்சி அரசியல் முடிவுக்கு வர வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியதற்கு, அவர் உண்மையை தான் கூறி உள்ளார் என்றேன். உடனே ஊடகங்கள் நான் அடங்கிவிட்டதாக கூற தொடங்கிவிட்டார்கள். ஜனநாயகமும், சுதந்திரமும் தற்போது இல்லை. அவை பெயரளவில் மட்டுமே உள்ளன. அரசியல் விஷமாகிவிட்டது. இதுபோல ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட இல்லை.
தற்போது டெல்லி ஆட்சியாளர்கள் அவர்கள் விரும்புவதை கேட்க விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பப்படி செயல்படாதவர்கள் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். சீனா, பாகிஸ்தான் டெல்லி ஆட்சியாளர்களின் எதிரிகள் அல்ல. ஆனால் நேருக்கு நேராக உண்மையை பேசுபவர்கள் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இதுபோன்ற தலைவர்கள் நாட்டின் மாண்பை குறைக்கின்றனர்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- சந்திரசேகர் பவன்குலே நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
- அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.
மும்பை :
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது மந்திரியாக இருந்த போது நாக்பூரில் குடிசைப்பகுதி மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த பிரச்சினையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா தான் என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், " முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா கட்சி தான். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் பவன்குலே, பிரவீன் தட்கே, நாகோ கானர் நாக்பூர் நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஆதரவாளர்களான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேயை அம்பலப்படுத்த விரும்பியது தெளிவாக தெரிகிறது.
நான் பா.ஜனதா மாநில தலைவராக இருக்கும் போது தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக பார்க்க விரும்புகிறேன் என சந்திரசேகர் பவன்குலே கூறிய மறுநாளே நாக்பூர் நில மோசடி அம்பலமாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நிலமோசடியை திசைத்திருப்ப திஷா சலியன் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விரைவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யிடம் புகார் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமர் கோவில் பிரச்சினை முடிந்துவிட்டது.
- ‘லவ் ஜிகாத்' என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது.
மும்பை :
உத்தவ் பால்சாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அந்த கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-
ராமர் கோவில் பிரச்சினை முடிந்துவிட்டது. அதை சொல்லி இனிமேல் ஓட்டு வாங்க முடியாது. எனவே 'லவ் ஜிகாத்' என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது. தேர்தலில் வெற்றி பெறவும், இந்துக்கள் இடையே பயத்தை ஏற்படுத்தவும் 'லவ் ஜிகாத்' ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா?. நடிகை துனிஷா சர்மா, ஷரத்தா கபூரின் மரணம் லவ் ஜிகாத் என கூறமுடியாது.
எந்த மதம், சமூகத்தை சேர்ந்த பெண்களும் வன்முறைக்கு ஆளாக கூடாது. 2023-ல் நாடு அச்சம் இல்லாததாக மாறும் என நம்புகிறோம். அதிகாரத்தின் அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது.
ராகுல் காந்தியின் யாத்திரை வெற்றி பெறும் எனவும், அதன் இலக்கை அடையும் என நம்புகிறோம். 2022-ம் ஆண்டு ராகுல் காந்தியின் தலைமைக்கு புதிய ஒளியையும், அவதாரத்தையும் கொடுத்தது. 2023-லும் அது தொடர்ந்தால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் அரசியல் மாற்றத்தை காண முடியும். பிரதமர் மோடி குறுகிய மனப்பான்மையை விட வேண்டும் என்கிறார். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் குறுகிய மனப்பான்மையுடன், எதிர்க்கட்சிகளின் உரிமைகளையும் அங்கீகரிக்க விரும்பவில்லை.
இந்து, முஸ்லிம் இடையே பிளவை தூண்டுவது மற்றொரு பிரிவினைக்கு வழிவகுக்கும். மோடியும், அமித்ஷாவும் வெறுப்பு மற்றும் பிரிவினையை விதைக்க கூடாது. இந்துக்களை விழிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் கொள்கை. அதற்காக சமூகத்தில் வெறுப்பையும், பிரிவினையையும் உருவாக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவசேனா கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை.
- சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வெளியேறினர்.
மும்பை :
சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இரண்டு அணியினரும் உரிமை கோரி வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஷிண்டே அணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர். இது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.
இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவசேனா கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை. சிவசேனா சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பிரிந்துவிட்டனர். இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமில்லை.
இந்த பிளவு கானல் நீராக தான் உள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வெளியேறினர். ஆனால் கட்சி அப்படியே தான் இருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகும் வரை தேர்தல் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அவசரம் காட்ட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.
- 2024 பொதுத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல்காந்தி கடும் சவாலாக இருப்பார்.
- இந்த யாத்திரையில் நான் அரசியல் பார்க்கவில்லை.
ஸ்ரீநகர் :
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி பல மாநிலங்களை கடந்த ராகுல்காந்தியின் பாதயாத்திரை தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது. ஜம்முவின் சந்த்வால் பகுதியில் இன்று பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பங்கேற்றார்.
ராகுல்காந்தியுடன் இணைந்து சஞ்சய் ராவத் நடைபயணம் மேற்கொண்டார். ராகுல்காந்தியுடன் 13 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்ட சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சித்தாந்த ரீதியாகவும், அரசியல் வேறுபாடுகள் இருந்தபோது ராகுல்காந்தி தனது ஆளுமை குணங்களை தற்போது வெளிக்காட்டியுள்ளார். 2024 பொதுத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல்காந்தி கடும் சவாலாக இருப்பார். ராகுல்காந்தி அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார்.
இந்திய பிரதமராகும் தகுதி ராகுல்காந்திக்கு உள்ளது. 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைவராலும் நடைபயணம் மேற்கொள்ள முடியாது. இந்த நடைபயணத்திற்கு திடமான மன உறுதியும், நாட்டின் மீதான அன்பும் தேவை. நாட்டின் மீதான அக்கறையை ராகுல்காந்தி வெளிப்படுத்தியுள்ளார். இந்த யாத்திரையில் நான் அரசியல் பார்க்கவில்லை. பிரதமராக தனக்கு விருப்பமில்லை என்று ராகுல்காந்தி ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால், ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் விருப்பப்பட்டால் அவருக்கு வேறு வழியில்லை' என்றார்.
- சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது.
- சஞ்சய் ராவத் அனுதாபத்தை பெற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்.
மும்பை :
மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அவர் ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக விமர்சித்தார். இதனால் ஏக்நாத் ஷிண்டேயை அவதூறாக பேசியதாக தானேயில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. தன்னை கொலை செய்ய சதி செய்வதாக சஞ்சய் ராவத் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக சஞ்சய் ராவத், மும்பை போலீஸ் கமிஷனருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் எனது பாதுகாப்பு திரும்பபெறப்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் குண்டர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஏற்கனவே உங்களிடம் தெரிவித்து இருந்தேன். இந்தநிலையில் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. என்னை கொலை செய்ய தானே ரவுடி ராஜா தாக்குரை ஏவி உள்ளதாக எனக்கு இன்று தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலை நான் உறுதி செய்து உள்ளேன். என் மீது தாக்குதல் நடத்த ரவுடி ராஜா தாக்குர் தயராகி வருகிறார். பொறுப்பு உள்ள குடிமகனாக இந்த தகவலை நான் உங்களுக்கு கூறுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை ஷிண்டே தரப்பு மறுத்து உள்ளது. இது தொடர்பாக அவரது ஆதரவு எம்.எல்.ஏ. சஞ்சய் ஷிர்சாட் கூறுகையில், "சஞ்சய் ராவத் அனுதாபத்தை பெற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். அவர் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் சஞ்சய் ராவத் இதேபோல பல குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். அதில் எந்த ஆதாரமும் இருக்காது. அவர் கூறுவது போல ஸ்ரீகாந்த் ஷிண்டே ஒருபோதும் செய்ய மாட்டார் என்பது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்படும்" என்றார்.
சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு குறித்து உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே கூறுகையில், "இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக இந்த துரோக எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் அடங்குவதில்லை. மாகிமில் ஒரு எம்.எல்.ஏ. வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.
- கஸ்பா பேத் புத்திசாலி வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு அடி கொடுத்து உள்ளனர்.
- மாநில அரசியல் எதிர்காலத்துக்கான குறியீடு தான் இந்த வெற்றி.
மும்பை :
மராட்டியத்தில் நடந்த இடைத்தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி கஸ்பா பேத் தொகுதியில் வெற்றி பெற்று பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்தது. சிஞ்வாட்தொகுதியில் பா.ஜனதா வெற்றியை தக்க வைத்தது. இந்தநிலையில் புனே சென்ற சிவசேனா உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய் ராவத் கஸ்பா பேத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தன்கேகரை சந்தித்தார்.
சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஸ்பா பேத் புத்திசாலி வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு அடி கொடுத்து உள்ளனர். அவர்கள் இங்கு வாக்காளர்களை வாங்க முயற்சி செய்தனர். ஆனால் தோல்வி அடைந்துவிட்டனர். கஸ்பா டிரைலர் தான். இன்னும் ஒட்டுமொத்த மராட்டியமும் பாக்கி உள்ளது. மாநில அரசியல் எதிர்காலத்துக்கான குறியீடு தான் இந்த வெற்றி. மகாவிகாஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும், சட்டசபை தேர்தலில் 200-க்கும் அதிகமாக தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
நான் சட்டசபை உறுப்பினர்களை மதிக்கிறேன். சட்டசபையில் ஒரு குழுவை தான் திருடர்கள் என நான் கூறினேன். இது எல்லோருக்கும் தெரியும். எல்லா சட்டசபை உறுப்பினர்களையும் திருடன் என அழைப்பவன் நான் அல்ல. நான் நாடாளுமன்ற உறுப்பினர். எனக்கு அரசியல் அமைப்பு, சட்டம் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புல்வாமாவில் பயங்கரவாதிகளால் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
- பஞ்சாப்பில் காலிஸ்தான் சார்ப்பு அமைப்புகள் மீண்டும் தலைதூக்குவது கவலை அளிக்கிறது.
மும்பை :
காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் சமீபத்தில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். இதுகுறித்து உத்தவ் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் சஞ்சய் ராவத் எம்.பி. எழுதிய கட்டுரை வெளியானது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, தற்போதும் இருக்கிறது. இருப்பினும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து வெறும் காகிதமாக மட்டுமே உள்ளது. அதுமட்டும் இன்றி இந்த நடவடிக்கை பா.ஜனதா கட்சி தனது அரசியல் லாபத்துக்காக மட்டுமே மேற்கொண்டது. காஷ்மீர் பண்டிட்டுகளுக்கான உரிமை இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் படும் துயரங்களுக்கு பா.ஜனதா தலைவர்களிடம் பதில் இல்லை.
சமீபத்தில் கூட புல்வாமாவில் பயங்கரவாதிகளால் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஆனால் டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான மணீஷ் சிசோடியாவை ஊழல் வழக்கில் கைது செய்ததன் மூலமாக பண்டிட்டுகளின் பிரச்சினையில் இருந்து அரசு மக்களை திசை திருப்பியது.
ராகுல் காந்தியின் தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொள்வதற்காக நான் சமீபத்தில் வடக்கு யூனியன் பிரதேசத்திற்கு சென்று இருந்தேன். அப்போது காஷ்மீர் பண்டிட் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களை இந்த அரசு வலுக்கட்டாயமாக மீண்டும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மறு குடியமர்வு செய்கிறது. இருப்பினும் தங்களின் பாதுகாப்புக்கு அரசு எந்த உத்தரவாதமும் வழங்க தயாராக இல்லை என்று என்னிடம் கூறினார்.
சமீபத்தில் லவ் -ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி மும்பையில் "இந்து ஆக்ரோஷ் மோர்சா" போராட்டத்தை வலதுசாரி அமைப்புகள் நடத்தின. அவர்கள் காஷ்மீர் பண்டித் கொல்லப்பட்டதற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டும்.
பஞ்சாப்பில் காலிஸ்தான் சார்ப்பு அமைப்புகள் மீண்டும் தலைதூக்குவது கவலை அளிக்கிறது. இது உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை, இதை அங்குள்ள மாநில அரசின் பொறுப்பில் விட்டுவிட முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரதமரின் இந்த கல்வி சான்றிதழை புதிய பாராளுமன்ற நுழைவு வாயிலில் காட்சிப்படுத்த வேண்டும்.
- பிரதமர் மோடி தானாக முன் வந்து பட்டப்படிப்பு குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மும்பை :
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் கேட்டு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில்வே பிளாட்பாரத்தில் டீ விற்ற பிரதமர் மோடி, அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டமேற்படிப்பு படித்தது வரலாற்று சிறப்புமிக்க மற்றும் புரட்சிகரமானது. பிரதமரின் இந்த கல்வி சான்றிதழை அவர் கட்டிய புதிய பாராளுமன்ற பிரதான நுழைவு வாயிலில் காட்சிப்படுத்த வேண்டும். அவரது கல்வி தகுதியை பாராளுமன்றமும், நாடும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் இருக்கும் மர்மம் என்ன?. இதை ஏன் மறைக்க வேண்டும்?.
பிரதமர் மோடி தானாக முன் வந்து பட்டப்படிப்பு குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.