என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்மீகம்"
- நான் பார்த்த லட்சக்கணக்கான ஜாதகங்களில் உங்களது மகன் ஜாதகம் மிக மிக வித்தியாசமானது.
- ஜோதிடர் சொன்னதை முழுமையாக நம்ப முடியவில்லை.
சிவாஜிராவின் தந்தை ரனோஜிராவ் ஆச்சரியத்தின் உச்சத்தில் இருந்தார். தனது மகன் பற்றி ஜோதிடர் சொன்ன தகவல்களை அவரால் நம்ப முடியவில்லை. சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தனது மகன் எப்படி அதிசயம் நிகழ்த்தும் மனிதனாக மாறுவான் என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டார்.
அவரது முகத்தில் தோன்றிய சந்தேகத்தை ஜோதிடர் அந்த வினாடியே புரிந்துக் கொண்டார். அவர் சிரித்துக் கொண்டே, "நான் சொல்வது உங்களுக்கு இப்போது நம்பிக்கை தராது. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மகன் ஜாதகம் மிக மிக அபூர்வமான ஜாதகம் ஆகும். அதுவும் இன்னும் சில ஆண்டுகளில் அவரது புகழ் பல கோடி மக்களால் பேசப்படும் அளவுக்கு மாறும் பாருங்கள்" என்றார்.
ஜோதிடர் சொன்னதை கேட்டதும் ரனோஜிராவுக்கு சிரிப்பாக வந்தது. மெல்ல சிரித்துக் கொண்டே, "அவன் கைவசம் இருந்த வேலையை விட்டுவிட்டு தெருவில் நிற்கிறான். அடுத்த வேளை உணவுக்கு கூட வழி இல்லை. அது தெரியுமா உங்களுக்கு?" என்றார்.
இதை கேட்டதும் ஜோதிடர், "நீங்கள் நான் சொல்வதை நம்புகிறீர்களோ இல்லையோ ஆனால் எதிர்காலத்தில் இந்த ஜாதகக்காரர் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் மாபெரும் மனிதராக இருப்பார். அவரது ஜாதகத்தில் சூரியனும், வியாழனும் அமைந்து இருக்கும் அமைப்பு மிக மிக தனித்துவம் ஆனது. ரொம்ப அபூர்வமானது. ரொம்ப நாட்களுக்கு பிறகுதான் அபூர்வமான மனிதர்களுக்கு இத்தகைய கட்ட அமைப்பு கிடைக்கும். உங்கள் மகன் ஜாதகத்தில் அது இருக்கிறது" என்றார்.
ஆனால் அதையும் ரனோஜிராவால் நம்ப முடியவில்லை. அவரது முகத்தை வைத்து அவர் திருப்தி அடையவில்லை என்பதை புரிந்துக் கொண்ட ஜோதிடர் தொடர்ந்து சில நிமிடம் கண்களை மூடி தியானத்தில் மூழ்கினார். பிறகு அவர் ரனோஜிராவை பார்த்து தீர்க்கமான குரலில் பேசத் தொடங்கினார்.
"உங்கள் மகன் ஜாதகம் மிகவும் தனித்துவம் ஆனது. எனது அனுபவத்தில் இத்தகைய உயர்ந்த சிறப்பான ஜாதகத்தை நான் பார்த்ததே இல்லை. இந்த ஜாதகக்காரர் நாடு முழுவதும் புகழ் பெற்றவராக மாறுவார். நிச்சயமாக எனது கணிப்பு தப்பாது" என்றார்.
இதை கேட்டதும் ரனோஜிராவ் சிரித்தார். "அவனுக்கு இருந்த வேலையும் போய் விட்டதே" என்றார். உடனே ஜோதிடர், "இந்த ஜாதக அமைப்பைக் கொண்டவர் யாருக்கும் கீழ் வேலை பார்க்க மாட்டார். மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் தலைவனாக இருப்பார். இதுதான் நடக்கும்" என்றார்.
ஆனால் ஜோதிடர் சொன்னதை ரனோஜிராவால் நம்ப முடியவில்லை. ஜோதிடர் ஏதோ சொல்கிறார் என்ற நினைப்புடன் புறப்பட்டு விடலாமா? என்ற மனநிலைக்கு அவர் வந்து இருந்தார். அவரது முகமாற்றத்தை பார்த்த ஜோதிடர் விடவில்லை. தொடர்ந்து பேசினார்.
"நான் பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருகிறேன். லட்சக்கணக்கானவர்களின் ஜாதகத்தை கணித்து அலசி ஆராய்ந்து பார்த்து பலன்கள் சொல்லி இருக்கிறேன். எனது ஜாதக பலன்கள் தப்பியதே இல்லை. அப்படியே நடந்து வருகின்றன. அதனால்தான் என்னைத் தேடி பலரும் வருகிறார்கள்.
இதுவரை நான் பார்த்த லட்சக்கணக்கான ஜாதகங்களில் உங்களது மகன் ஜாதகம் மிக மிக வித்தியாசமானது. இப்படிப்பட்ட ஒரு ஜாதக அமைப்பை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு சிறப்பான அமைப்புடன் இந்த ஜாதகம் அமைந்துள்ளது" என்றார்.
இதை கேட்டதும் ரனோஜிராவுக்கு கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது. ஜோதிடர் அடுத்து என்ன சொல்வார் என்று ஆவலோடு பார்த்தார். ஜோதிடர் தொடர்ந்து பேசினார்.
"உங்கள் மகன் ஜாதகம் பிரமிப்பு தருகிறது. உங்கள் மகன் ஜாதகத்தை பார்த்த உடனேயே நான் மிரண்டு போனேன். என்னால் சில விஷயங்களை கணிக்க முடியவில்லை. இப்போதும் கூட என் மனதில் அந்த குழப்பம் இருக்கிறது.
உங்கள் மகன் ஜாதகத்தை பொறுத்தவரை 2 விஷயங்கள்தான் நிச்சயமாக நடக்கும். ஒன்று உங்கள் மகன் இந்த நாட்டில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த மனிதராக மாறுவார். பணம், புகழ் எல்லாம் அவரிடம் கொட்டி கிடக்கும். அவரது வாழ்நாள் முழுக்க வெற்றிகளை பெற்றுக் கொண்டே இருப்பார். அவரது வெற்றிகளை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என்றார்.
இப்படி சொல்லி விட்டு ஜோதிடர் ஒரு நிமிடம் இடைவெளிவிட்டு அமைதியாக இருந்தார். பிறகு ''இந்த ஜாதகக்காரர் மிகப்பெரிய சக்தியாக மாறாவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியுமா?'' என்றார். அவரது இந்த கேள்வி ரனோஜிராவ் மனதுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடர் தொடர்ந்து பேசினார்.
"உங்களது மகன் அதாவது இந்த ஜாதகக்காரர் உலகம் புகழும் வகையில் செல்வமும், செல்வாக்கும் பெற வேண்டும் என்பது விதிக்கப்பட்ட விதியாகும். ஒருவேளை அதில் மாற்றம் ஏற்படுமானால் இந்த ஜாதகக்காரர் தனக்கு சொந்தமான எல்லா சொத்துக்களையும் உதறித் தள்ளி விட்டு சன்னியாசியாக போய் விடுவார். அதற்காக காட்டுக்குள் போய்விடுவார் என்று அர்த்தமல்ல. சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்று அவரது குணமும் மாறும். இவர்கள் எல்லோரையும் சேர்த்து எடுத்தது போல ஒரு மிக பெரிய மகான் ஆக மாறுவார். அதில் மாற்றமே இல்லை. இந்த இரண்டில் ஒன்றுதான் நடக்கும்" என்றார்.
ஜோதிடரின் குரல் கடைசியில் முடிக்கும்போது கம்பீரமாக கணீர் என்று இருந்தது. ரனோஜிராவ் அதைக் கேட்டு ஆடிப் போய் விட்டார். தனது மகன் ஒன்று கோடீஸ்வரன் ஆவான் அல்லது சாமியாராக போய் விடுவான் என்று ஜோதிடர் சொன்னதை கேட்டதும் அவருக்குள் பிரளயமே வெடித்தது போல இருந்தது. அவரால் ஜோதிடர் சொன்னதை முழுமையாக நம்ப முடியவில்லை.
அவரது உணர்ச்சிகளை கண்டு ஜோதிடர் புரிந்து கொண்டார். அவர் கூறுகையில், "உங்களுக்கு இப்போது என் மீது நிச்சயமாக நம்பிக்கை வராது. நான் சொல்வது நடக்குமா? என்ற சந்தேகம் உங்களுக்கு ஆழமாக இருக்கிறது. ஏனெனில் உங்களது வாழ்க்கை சூழ்நிலை அப்படி இருக்கிறது. ஆனால் இந்த ஜாதக அமைப்புப்படி நான் என்ன கணித்து சொல்லி இருக்கிேறனோ அதுதான் நிச்சயமாக நடக்கும். வெகு விரைவில் அதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்றார்.
அவரது குரலில் இருந்த உறுதியைப் பார்த்து ரனோஜிராவ் ஆச்சரியப்பட்டார். மற்றொரு பக்கம் அவருக்கு அதிர்ச்சியாக கூட இருந்தது. சிவாஜிராவ் மது அருந்தி விட்டு புகை பிடித்துக் கொண்டு ஜாலியாக இருக்கும் காட்சிகள்தான் அவரது மனத்திரையில் ஓடின. இப்படிப்பட்ட மகன் எப்படி உலகமே புகழும் கோடீஸ்வரனாக மாறுவான் என்று அவர் மனதில் ஒரு ஓரத்தில் கேள்வி எழுந்தது.
ஜோதிடரை அவர் நம்ப முடியாமல்தான் பார்த்தார். ஜோதிடரை நம்பாமல் தட்டு தடுமாறி எழுந்தார். ஜோதிடருக்கு கொடுக்க வேண்டிய 2 ரூபாய் தட்சணையை தட்டில் வைத்து விட்டு எழுந்தார். அவரை வணங்கி விடைப்பெற்றார்.
அவர் விடைபெறும்போது ஜோதிடரை சந்தேக கண்ணுடன்தான் பார்த்தார். அதை ஜோதிடரும் புரிந்துக் கொண்டார். அவர் சிரித்துக் கொண்டே உங்கள் மகன் உலகம் புகழும் பணக்காரனாக, ஒரு மகான் ஆக மாறுவார் பாருங்கள் என்று சிரித்துக் கொண்டே மீண்டும் சொன்னார். ஆனால் ரனோஜிராவ் அதை நம்ப முடியாமல் ஜோதிடர் வீட்டில் இருந்து வேக வேகமாக வெளியே வந்தார்.
வெளியில் தெருவில் இருந்து நடக்க தொடங்கியதும் தனது போலீஸ்கார நண்பரிடம் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார். அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கோபத்தில் வெளியில் வந்து கொட்டின.
"நான் என் மகனின் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்துக் கொண்டு இருக்கிறேன். கண்டக்டர் வேலை மீண்டும் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதுதான் என் கேள்வி. ஆனால் அதற்கு அவர் விடையே சொல்லவில்லை.
கண்ணை மூடி தியானம் செய்து விட்டு ஏதேதோ உளறுகிறார். என் மகன் கோடீஸ்வரன் ஆகிவிடுவான், உலகமே அவனை புகழும் என்று எல்லாம் சொல்கிறார். நம்பும்படியாகவா இருக்கிறது? அவர் எதற்காக இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஜாதகத்தை நன்றாக பார்த்தாரா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
என் மகன் அடுத்த வேளை உணவுக்கே பிறரை நம்பி இருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான். அவனை எப்படி வாழ வைக்கப்போகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. எனக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது. விரைவில் அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும்.
ஒழுங்காக நான் சொல்வதை கேட்டுக் கொண்டு இந்த கண்டக்டர் வேலையில் இருந்து இருக்கலாம். அதையும் தொலைத்து விட்டான். மெட்ராசுக்கு போய் சினிமாவில் நடிக்கப் போவதாக கனவு காண்கிறான். இது எல்லாம் நடக்கிற காரியமா?
அவனால் இப்போது என் நேரமும், பணமும்தான் வீணாகி போய் விட்டது. உன் பேச்சை கேட்டு இந்த ஜோதிடரிடம் நான் வந்தது தப்பு. என்னவெல்லாமோ சொல்கிறார். அவர் சொல்வதை பார்த்தால் நம்பும்படியாகவா இருக்கிறது?
இந்த ஜோதிடர் என் மகன் ஒன்று கோடீஸ்வரனாக மாறுவான் அல்லது சாமியாராக போய் விடுவான் என்று சொல்கிறார். அவன் எங்கே சாமியாராக போவான். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. இந்த ஜோதிடர் என்னை பயம் காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறாரோ என்னவோ? என்றார்.
ஆனால் சிவாஜிராவ் பற்றி வாழ்க்கையில் அந்த ஜோதிடர் கணித்தது நூறு சதவீதம் அப்படியே பலித்தது. சென்னைக்கு புறப்பட்டு வந்த சிவாஜிராவ் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் நடக்க ஆரம்பித்தன.
அதுபற்றி 6-ந்தேதி (திங்கட்கிழமை) பார்க்கலாம்.
- இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை.
- மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையையே 'மகாளய அமாவாசை' என்று போற்றுகிறோம். பொதுவாக நாம் அமாவாசை நாட்களில் முன்னோரை வழிபடுவது வழக்கம். எல்லா மாதங்களிலும் வரும் அமாவாசையை விடவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மூன்று அமாவாசைகள் கருதப்படுகிறது. அவை ஆடி மாதத்தில் வரும் 'ஆடி அமாவாசை', புரட்டாசி மாதத்தில் வரும் 'மகாளய அமாவாசை' மற்றும் தை மாதத்தில் வரும் 'தை அமாவாசை' ஆகும்.
இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை என்றும், முன்னோர்கள் பூமிக்கு வந்துசேரும் நாளே புரட்டாசி மகாளய அமாவாசை என்றும், மீண்டும் பூமியிலிருந்து நம் முன்னோர்கள் பித்ருலோகத்திற்கு திரும்பி செல்லும் நாளே தை அமாவாசை என்றும் நம்பப்படுகிறது.
ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி, அடுத்து வரும் 15 நாட்களும் 'மகாளய பட்சம்' என்று சொல்லப்படுகிறது. மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசையாகும். இந்த மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.
நமது முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், நமது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒவ்வொரு வருடமும், நமது முன்னோர் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டே திதி கொடுக்கப்படுகிறது. அதுதவிர ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்கிறார்கள். இவ்வாறு, முன்னோர் திதி நாள், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட மகாளய பட்சத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
பொதுவாக அமாவாசை நாட்களில் நாம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வோம். ஆனால், மகாளய அமாவாசையன்று தாய்வழி, தந்தைவழி உறவினர்களுக்கு மட்டுமில்லாமல் நமது ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், பங்காளிகள் என்று அனைவருக்குமே தர்ப்பணம் கொடுக்கலாம். இதுவே இந்த மகாளய அமாவாசையின் தனிச் சிறப்பாகும்.
மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது நமது தலையாய கடமை ஆகும். எனவே அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்தல் வேண்டும். பித்ருக்கள் வழிபாட்டில் கருப்பு எள்ளும், தர்ப்பை புல்லும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாம் மிகவும் எளிய முறையில் மூதாதையர்களை நினைத்து தர்ப்பணம் செய்யலாம். முதலில் கோவில் குளங்கள் மற்றும் காவிரிக்கரை போன்ற புனித நீர் நிலைகளுக்குச் செல்ல வேண்டும். அங்கு நமது முன்னோர்களின் பெயர்களை உச்சரித்து கையில் உள்ள எள்ளின் மீது தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரை தர்ப்பைகளின் மீது ஊற்ற வேண்டும். இதுவே தர்ப்பண வழிபாடாகும். தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் வேண்டும். தர்ப்பணத்தை முடித்ததும் பித்ருக்கள் வசிப்பதாக கருதப்படும் திசையான தெற்கு திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் எள்ளும், தண்ணீரும்தான் அவர்களுக்கான உணவாக கருதப்படுகிறது.
மகாளய அமாவாசை அன்று, பித்ரு வழிபாட்டுடன் குல தெய்வ வழிபாடு செய்வது சிறந்ததாகும். இவ்வாறு வழிபடுவதால், அதுவரை குல தெய்வத்தை வழிபடாத பாவமும், தோஷமும் நீங்கும். வாழ்க்கை பிரகாசமாக அமையும். அதுபோல அன்றைய தினம் காகத்திற்கு உணவு படைத்து வழிபடலாம். நாம் காகத்திற்கு படைக்கும் உணவு, முன்னோர்களுக்கு படைக்கப்படுவதாகவே நம்பப்படுகிறது.
மகாளய அமாவாசை தினத்தன்று, நமது முன்னோர்கள் பூமிக்கு வரும்போது, அரச மரத்தில் தங்குவதாக ஐதீகம். எனவே மகாளய அமாவாசை அன்று அரச மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வணங்கலாம். இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து உங்களை வாழ்த்துவார்கள். உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.
- மலைவாழ் மக்கள் பேச்சியம்மனுக்கு பாறையில் பீடம் அமைத்துள்ளனர்.
- இங்குள்ள கிணற்று தண்ணீரை அருந்தினால் கற்கண்டு சுவை போல் இனிக்கும்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கு அருகே பிரசித்திப் பெற்ற பேச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த பேச்சியம்மனுக்கு வழிபாடு நடத்திய பின்னர்தான், பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கிறார்கள்.
தல வரலாறு
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது, வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. அப்போது பூமியை சமநிலைப் படுத்த வேண்டி சிவபெருமான் அகத்திய முனிவரை பணிக்கிறார். அதன்படி அகத்திய முனிவரும், ரிஷிகளும் சேர்ந்து தென்திசை நோக்கி வந்தனர். அப்போது அகத்திய முனிவர் பேச்சிப்பாறையில் சுயம்புவாக தோன்றிய காளிதேவியைக் கண்டதாகவும், தேவி அகத்தியரிடம் பேசி மகிழ்ந்ததால் அகத்தியரே காளிதேவியை 'பேச்சியம்மன்' என்று திருநாமம் சொல்லி வணங்கியதாகவும் கோவில் வரலாறு கூறுகிறது.
மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் வந்தபோது தென்கோடியில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அடர்காட்டில் தங்கியுள்ளனர். அந்த சமயம், பீமனுக்கும் அர்ஜூனனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணபரமாத்மா தோன்றி, உங்களில் யார் பக்கம் நியாயம் உள்ளது? என்பதை அருகிலுள்ள தேவியிடம் சென்று கேட்குமாறு கூறினார். உடனே பீமனும், அர்ஜூனனும் அருகில் இருந்த பேச்சியம்மனிடம் சென்றனர். அப்போது, தேவியானவள் வானுக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்து அருள்பாலிக்க, இருவரும் வந்த விஷயத்தை மறந்ததாக கூறப்படுகிறது.

கோவில் தோற்றம்
இப்பகுதி மலைவாழ் மக்கள் பேச்சியம்மனுக்கு பாறையில் பீடம் அமைத்துள்ளனர். ஆண்டுதோறும் தங்களின் இஷ்டதெய்வமான தேவிக்கு காட்டு விலங்குகளை பலிகொடுத்து வழிபட்டுள்ளனர். ஆனால் தற்போது சைவ பூஜையே நடைபெறுகிறது.
1897-ம் ஆண்டு திருவாங்கூர் மகாராஜா ஸ்ரீமூலம் திருநாள் ராமவர்மா மகாராஜா விவசாயத்துக்காக பேச்சிப் பாறையில் அணைகட்ட உத்தரவிடுகிறார். அதன்படி அணைகட்டும் வேலைகள் நடந்து, மறுநாள் வந்து பார்த்தால் கட்டப்பட்ட பகுதி இடிந்து போயிருக்கும். தினந் தோறும் இதே நிலைதான் ஏற்பட்டது. இதனால் மன்னரும் மக்களும் வேதனை அடைந்தனர். இந்நிலையில் மூட்டுக்காணி ஆதிவாசி கிராமத் தலைவனின் கனவில் தோன்றிய தேவி, ''தான் காலம்காலமாக இப்பாறையில் நிலைகொண்டிருக்கிறேன், தன்னுடையை பார்வையை மறைத்து அணை கட்டக்கூடாது'' என்று கூறியுள்ளார்.
இதை அவர் அணைகட்டும் தலைமைப் பொறியாளர் மின்சின் அலெக்சாண்டரிடம் கூறினார். உடனே அவர், அன்றிரவு கோவில் பீடமிருந்த பாறையில் சென்று தேவியை பிரார்த்திக்க, அவருக்கு காட்சி தந்தார் தேவி. அப்போது அவர் தேவியிடம் தனக்கு அணை கட்டிமுடிக்க உதவ வேண்டும் என்றும், அப்போதுதான் தென் திருவாங்கூர் மக்களின் தண்ணீர் பஞ்சம் அகலும் என்றும் வேண்டினார். இதனால் மனம் இரங்கிய தேவி, தன்னுடைய திவ்ய ரூபத்தைக்காட்டி, ''நான்தான் பேச்சியம்மன். தனக்கு இப்பாறையில் உள்ள இடத்துக்கு பதில், அணையின் முன்பகுதியில் (தற்போது கோவில் இருக்கும் இடம்) இருப்பிடம் அமைத்து, தன்னை பூஜித்தால் எந்தவித தடங்கலும் வராது'' என்று கூறி மறைந்தார்.
அதன்பின் பொறியாளர் மின்சின் அலெக்சாண்டர் தற்போது கோவிலிருக்கும் இடத்தில் பீடம் போன்ற கோவில் அமைத்தார். ஏழு தினங்கள் பூஜையும், ரத்த பலியும் கொடுத்த பின் அணை கட்டும் பணி எந்தவித இடையூறுமின்றி துரிதமாக நடந்தது. 1906-ம் ஆண்டு அணை கட்டும் வேலை முடிந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அன்று முதல் இன்று வரை பேச்சிப்பாறை அணை தண்ணீரை ஜூன் மாதம் விவசாயத்துக்காக திறக்கும்போது பேச்சியம்மன் கோவிலுக்கு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் வழிபாடு, பூஜைகள் நடத்துவார்கள். கோவிலில் வழிபாடு நடத்தியபின்னர், அணைக்கட்டில் தண்ணீர் திறக்கும் கதவுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்பின்னரே அணை திறக்கப்படும்.
அணைக்கட்டில் இருந்து சற்று முன்புறம் காணப்படும் கோவில், தற்கால கோவில் வடிவமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளே தேவி, பீடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறாள். கோவிலின் இடதுபுறம் விநாயகருக்கு சிறிய சன்னிதி உள்ளது. சற்றுதொலைவில் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு 1965-ம் ஆண்டு மாசி மாதம் பரணி நட்சத்திரம் நாளில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனால் ஆண்டு தோறும் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் திருவிழா நடைபெறுகிறது. இங்குள்ள கிணற்று தண்ணீரை அருந்தினால் கற்கண்டு சுவை போல் இனிக்கும்.
கோவில், காலை 5 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
நாகர்கோவிலில் இருந்து 67 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது.
- சென்ட்ரலில் இருந்து சிவாஜிராவ் அங்கு பஸ்சில் வந்தார்.
- இருவரும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடத்தின் முன்பு வந்து நின்றனர்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சிவாஜிராவ் வெளியில் வந்தார். ஏற்கனவே சில தடவை சென்னைக்கு வந்திருந்த போதிலும் இந்த தடவை அவரது மனதில் வித்தியாசமான உணர்வுகள் இருந்தன. மிகப்பெரிய நடிகனாக மாற வேண்டும் என்ற ஒரே லட்சியம்தான் அவரது மனதில் நிறைந்து இருந்தது.
இதற்கு முன்பு சென்னைக்கு வந்த போது ஆங்காங்கே சுற்றி விட்டு பெங்களூர் திரும்புவதை சிவாஜிராவ் வழக்கத்தில் வைத்திருந்தார். சென்னையில் சில இடங்கள் அவருக்கு பார்த்த இடங்களாக இருந்தாலும் திரைப்படக் கல்லூரிக்கு எப்படி செல்வது என்பது தெரியவில்லை.
தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டு இருந்த அந்த திரைப்படக் கல்லூரி 1973-ல் அண்ணா சாலை ஜெமினி பாலம் அருகே சபையர் தியேட்டர் அருகே அமைந்து இருந்தது. சென்ட்ரலில் இருந்து சிவாஜிராவ் அங்கு பஸ்சில் வந்தார். ஜெமினி பாலம் அருகே இறங்கிய அவருக்கு திரைப்படக் கல்லூரி எங்கே இருக்கிறது? என்பது தெரியவில்லை.
அந்த பகுதியில் நிறைய சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. சிவாஜிகணேசன் நடித்த "வசந்த மாளிகை" படத்தின் போஸ்டர்கள் அதிகம் காணப்பட்டன. சிவாஜிகணேசன் கையில் மது கோப்பையுடன் இருக்கும் போஸ்டரை சிவாஜி ராவ் நீண்ட நேரமாக ரசித்து பார்த்தார்.
இதே போன்று நமது படமும் போஸ்டர்களில் இடம் பெற வேண்டும் என்ற ஆசை அவருக்குள் ஏற்பட்டது. அடுத்தடுத்த படப்போஸ்டர்களையும் பார்த்த போது பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி இருந்த அரங்கேற்றம் படத்தின் போஸ்டர்களையும் பார்த்தார். அந்த போஸ்டர்களில் சிவக்குமார், பிரமிளா படங்கள் அவருக்குள் பிரமிப்பை ஏற்படுத்தின.
சுவர்களில் இருந்த போஸ்டரை பார்த்தபடியே திரைப்படக் கல்லூரிக்கு செல்ல யாரிடமாவது வழி கேட்கலாம் என்று நினைத்தார். அப்போது அவரை கடந்து ஒரு இளைஞர் வேக வேகமாக சென்று கொண்டு இருந்தார். அவரை நிறுத்தி, "திரைப்படக் கல்லூரிக்கு எப்படி செல்வது?" என்று கேட்டார்.
சிவாஜிராவ் நிறுத்திய அந்த இளைஞர் பெயர் சதீஷ். அவரும் பெங்களூரில் இருந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக வந்து இருந்தார். சிவாஜிராவை பார்த்து சிரித்துக் கொண்டே அவர், "நானும் அங்குதான் போகிறேன். என்னுடன் வாருங்கள்" என்று அழைத்துச் சென்றார்.

இருவரும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடத்தின் முன்பு வந்து நின்றனர். அதன் ஒரு பகுதியில்தான் திரைப்படக் கல்லூரி வகுப்புகள் நடத்தப்பட்டன. அந்த இடத்தை பார்த்த பிறகுதான் சிவாஜி ராவுக்கு சில தினங்களுக்கு முன்பு நேர்முக தேர்வுக்கு வந்திருந்தது நினைவுக்கு வந்தது.
அந்த நேர்முக தேர்வுக்காக வந்த போது நடந்த நிகழ்ச்சிகளை சிவாஜி ராவ் நினைத்துப் பார்த்தார்........
திரைப்படக் கல்லூரியில் நுழைவு தேர்வு நடந்த தினத்தன்று கடுமையான கூட்டம் காணப்பட்டது. அதைப் பார்த்த போது சிவாஜி ராவுக்கு பயம் வந்து விட்டது. இவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில் எப்படி போராடி இடம் பிடிப்பது என்று சிவாஜி ராவ் மனதுக்குள் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்தது.
என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாமல் அடுத்து என்ன செய்யலாம்? என்று யோசித்தார். யாரிடம் விசாரித்தால் திரைப்படக் கல்லூரி பற்றி முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று அந்த பகுதியில் நோட்டமிட்டார். அப்போது திரைப்படக் கல்லூரியில் பியூனாக இருந்த வீரைய்யா என்பவர் அங்கும் இங்கும் கையில் நிறைய தாள்களுடன் சென்று வருவது தெரிந்தது.
அவரிடம் கேட்டால் நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம் என்று சிவாஜி ராவ் முடிவு செய்தார். பியூன் வீரைய்யாவை நெருங்கி, "சார்" என்றார். அதற்கு வீரைய்யா, "என்னய்யா என்ன வேண்டும்?" என்றார். சிவாஜி ராவ் மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "என்ன சார் இங்கு இவ்வளவு பேர் இருக்காங்க?" என்றார்.
உடனே பியூன் வீரைய்யா, "திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சிக்காக இன்று ஆட்களை தேர்வு செய்யப் போகிறார்கள். இந்த பயிற்சி பெறுவதற்கு 350 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பத்தில் இருந்த போட்டோ மற்றும் தகவல்களை பார்த்து விட்டு 150 விண்ணப்பங்களை ஏற்கனவே கழித்து விட்டனர்.
இப்போது 200 பேர் மீதம் இருக்கிறார்கள். அவர்களில் 36 பேரை மட்டும் தேர்வு செய்வார்கள். அந்த தேர்வுதான் இன்று நடக்கப் போகிறது.
அதனால்தான் இவ்வளவு கூட்டமாக இருக்கிறது. ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து வேடிக்கைப் பாருங்கள்" என்று சொல்லி விட்டு அவர் ஒரு அறைக்குள் புகுந்து கொண்டார். இதை கேட்டதும் சிவாஜி ராவுக்கு மனம் திக்... திக்... என்று அடித்துக் கொண்டது. கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை... இடம் கிடைக்குமா? என்று கதிகலங்கி போனார். அப்போது ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு தேர்வு நடந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் நடிப்பு பயிற்சி கல்லூரி மாணவர்கள் தனித்தனியாக தேர்வு செய்யப்பட்டனர். கன்னட மாணவர்களை கேள்வி கேட்டு தேர்வு செய்யும் பொறுப்பு புட்டண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவரிடம் அழைத்துச் சென்று சிவாஜி ராவை விட்டனர்.
அவர் சிவாஜி ராவை தலை முதல் உச்சி வரை ஒரு பார்வை பார்த்தார். கறுப்பு நிறம். சற்று தொப்பை வயிறு. குச்சி போன்ற கால்கள். ஆனாலும் முகத்திலும், கண்களிலும் நடித்தே தீரவேண்டும் என்ற பிரகாசமான உணர்வு இருப்பதை புட்டண்ணா உணர்ந்தார்.
அவர் சிவாஜி ராவை பார்த்து, "ஏதாவது நடித்து காட்டுங்கள்" என்றார். உடனே சிவாஜி ராவுக்கு கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முனியப்பா நடத்திய புராண நாடகத்தில் நடித்து இருந்த பாத்திரம் நினைவுக்கு வந்தது. அந்த பாத்திரத்தின் வசனங்களை அவர் புட்டண்ணா முன்பு தைரியமாக நடித்துக் காட்டினார்.
அதை பார்த்து புட்டண்ணா கைத்தட்டி பாராட்டுகளை தெரிவித்தார். இதை கண்டதும் சிவாஜி ராவுக்கு உற்சாகமாக இருந்தது. அதன் பிறகு அவரை போட்டோ எடுத்தனர். ஆனால் நேர்முக தேர்வு முடிவை உடனே சொல்லவில்லை.
வெளியில் இருங்கள் என்றனர். அதனால் சிவாஜி ராவ் படபடப்புடன் வெளியில் இருந்தார். சிறிது நேரம் கழித்தே அவருக்கு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்து இருப்பது தெரிந்தது. அந்த மகிழ்ச்சியோடு போனவர் இன்று திரும்பி வந்து இருப்பதை மலரும் நினைவுகளாக நினைத்துப் பார்த்தார்.
மனதுக்குள் தாயாரையும், ராகவேந்திர சுவாமிகளையும் வணங்கி ஆசி பெற்றபடி திரைப்படக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தார். அங்கு இருந்த கரும்பலகை முன்பு நிறைய பேர் கூடி நின்று பரபரப்புடன் பெயர்களை வாசிப்பது தெரிந்தது. சிவாஜிராவ் அது என்ன? என்று விசாரித்தார்.
1973-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரியில் சேருவதற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் அதில் எழுதப்பட்டு இருப்பதாக சொன்னார்கள். சிவாஜி ராவுக்கு மகிழ்ச்சியும், ஆர்வமும் ஏற்பட்டது. அவரும் ஓடிச் சென்று கரும்பலகையில் இருந்த பெயர்களை வாசித்தார்.
தமிழ் வகுப்பில் படிக்க நடராஜ், சத்திய மூர்த்தி, ராஜகோபால், ஷேக் முகமது, சதீஷ், எழிலரசி ஆகியோர் தேர்வாகி இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. மலையாளம் வகுப்பில் படிக்க ஜேம்ஸ், ரவீந்திரன், ஆதம்அயூப், இந்திராபாலன் ஆகியோர் தேர்வாகி இருந்தனர்.
தெலுங்கு வகுப்பில் படிக்க விட்டல் பிரசாத், ராமகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ண ரெட்டி, பிரதீப் சக்தி, உசைனி, நாராயணராவ், ரிஸ்வான், அனந்த ராம், முனீஷ், ரவீந்திரநாத் ரெட்டி, நந்தா கிஷோர், கோபாலகிருஷ்ணா, விஜயலட்சுமி, ஹேமா சவுத்ரி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. மற்ற மொழி வகுப்புகளை விட தெலுங்கு வகுப்பில் சேர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது.
கன்னட மொழி வகுப்பில் படிக்க அமர் முல்லா, சந்திரஹால், ரகுநந்தன், ரவீந்திரநாத், சிவாஜி ராவ், வேணுகோபால் ஆகிய 6 பேர் பெயர்கள் எழுதப்பட்டு இருந்தன. அதை சிவாஜி ராவ் பார்த்து கண்ணீர் மல்க மகிழ்ச்சி அடைந்தார். மீண்டும்... மீண்டும்... அந்த கரும்பலகையில் எழுதி இருப்பதை வாசித்து பார்த்தார். நடிப்பதற்கு விண்ணப்பித்து இருந்த 300 பேரில் தாமும் ஒருவராக தேர்வாகி இருப்பதை நினைத்த போது சிவாஜி ராவுக்கு இன்னும் தன்னம்பிக்கை அதிகரித்தது. திரையுலகில் சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறி உண்டானது.
தேர்வான 36 மாணவர்களையும் திரைப்படக் கல்லூரி முதல்வர் ராஜாராம் அழைத்துப் பேசினார். கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்கும்? எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்று அறிவுரை வழங்கினார். பிறகு இங்கு நாங்கள் உங்களுக்கு நடிப்பு மட்டுமே சொல்லிக் கொடுக்க மாட்டோம். உங்களிடம் இருக்கும் திறமைகளையும் வெளியே கொண்டு வரப்போகிறோம்" என்றார்.
முதல்வர் ராஜாராம் பேசியதை கேட்டதும் சிவாஜி ராவுக்கு மேலும் மகிழ்ச்சி ஏற்பட்டது. நமது திறமைகள் பட்டை தீட்டப்பட்டு விடும் என்று அவரது உள் மனது சொல்லியது. அப்போது முதல்வர் ராஜாராம் பியூன் வீரைய்யாவை அழைத்தார்.
அட்டவணைகளை அனைவருக்கும் கொடு என்றார். உடனே பியூன் வீரைய்யா தனது கையில் இருந்த அட்டவணை பேப்பர்களை 36 மாணவர்களிடமும் வழங்கினார். அதில் திரைப்படக் கல்லூரியில் காலையில் இருந்து மாலை வரை என்னென்ன வகுப்புகள் நடத்தப்படும், எத்தகைய பயிற்சிகள் கொடுக்கப்படும் என்ற விவரம் இருந்தது. காலை 10 மணி முதல் 11 மணி வரை நடிப்பு பற்றிய பாடம் எடுக்கப்படும். 11 மணி முதல் 12 மணி வரை நடனப்பயிற்சி வழங்கப்படும். 12 மணி முதல் 1 மணி வரை நடிப்பு பயிற்சி. 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை.
பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை அந்தந்த மொழிக்கான நடிப்பு வகுப்புகள். மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை தேநீர் இடைவேளை. மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி வகுப்புகள்.
இவ்வாறு அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மாணவர்கள் அதை படித்து முடித்ததும் ஒவ்வொரு பயிற்சி வகுப்பையும் மற்றும் ஒவ்வொரு மொழிக்கும் யார்-யார் பாடம் எடுப்பார்கள்? என்ற விவரத்தை கல்லூரி முதல்வர் ராஜாராம் வெளியிட்டார்.
அதன்படி நடிப்பு பற்றி பாடத்தை கல்லூரி முதல்வர் ராஜாராம் எடுப்பார் என்றும், நடிப்பு பயிற்சியை சிவனந்தன் வழங்குவார் என்றும், உடற்பயிற்சி மற்றும் யோகா வகுப்புகளை பிரபாகர் மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதுபோல ஒவ்வொரு மொழிக்கும் ஒரு ஆசிரியர் அறிவிக்கப்பட்டார். கன்னட மொழியில் நடிப்பு பயிற்சிக்கு உஷா அறிவிக்கப்பட்டார். இதை கேட்டதும் சிவாஜிராவ் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். மாணவர்கள் அனைவரிடமும் நாளை முதல் வகுப்புகள் தொடங்கும் சென்று வாருங்கள் என்று முதல்வர் ராஜாராம் கூறினார். சிவாஜி ராவுக்கு எங்கே போவது? என்று தெரியவில்லை.
அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பார்க்கலாம்.
- சிறு வயது சம்பவங்களை அடுத்தடுத்து நினைத்துக் கொண்டே இருந்தார்.
- ஒரு நிமிடம் இதையெல்லாம் சிவாஜி ராவ் நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் சிவாஜி ராவுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. கையில் கிடைத்த அரசு கண்டக்டர் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வருகிறோமே என்ற ஒருவித பயம் அவரது மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது.
ஆனால் மனதில் மற்றொரு புறத்தில் அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் இருந்தது. நிச்சயமாக சினிமாவில் சாதிக்க முடியும் என்ற வெறி அவருக்குள் உருவாகி இருந்தது. அந்த அடக்க முடியாத வெறியால் அவருக்கு தூக்கம் வரவில்லை. எனவே சிறு வயது சம்பவங்களை அடுத்தடுத்து நினைத்துக் கொண்டே இருந்தார்.
குறிப்பாக பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களில் தனக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நினைத்துப் பார்த்தார். ஆன்மீகத்தில் மனதை பக்குவமாக மாற்றும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். அதே சமயத்தில் பள்ளியில் தனக்கு நண்பர்கள் மூலம் ஏற்பட்ட சில கெட்ட பழக்கங்களையும் நினைத்துப் பார்த்தார்.
ராமகிருஷ்ணா மடம் நடத்திய பள்ளியில் படித்த காலத்தில் அவருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. அதாவது பள்ளியில் வாரம் தோறும் மற்ற மாணவர்களுக்கு கதை சொல்ல வேண்டும் என்ற பொறுப்பு ஆகும். இதற்காகவே சிவாஜி ராவ் அந்த இளம் வயதில் நிறைய கதை புத்தகங்களை தேடி தேடி படித்தார்.
கன்னட முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை உன்னிப்பாக படித்து சேர்த்து வைத்துக் கொண்டார். அந்த கதைகளை அவர் பள்ளி வகுப்பு மாணவர்களுக்கு சொல்லி வந்தார். அந்த கதையுடன் அவரது சில கருத்துக்களையும் சேர்த்து மசாலா போட்டு ரசனையாக கதை சொல்வார்.
இதனால் பள்ளி மாணவர்களிடம் கதை சொல்வதில் சிவாஜி ராவ் கில்லாடி என்று பெயர் பெற்று இருந்தார். ஆசிரியர்கள் அவரை பாராட்டினார்கள். அதே சமயத்தில் சில மாணவர்களுடன் ஏற்பட்ட சேர்க்கையால் சிவாஜி ராவ் தவறான பழக்கங்களிலும் அடிமையாக நேரிட்டது.
எந்தெந்த பழக்கங்கள் எல்லாம் தன்னை திசை மாற்றின என்று சிவாஜி ராவ் ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு ேயாசித்து பார்த்தார். மது குடிப்பது, புகை பிடிப்பது ஆகிய இரண்டு பழக்கங்களும் பள்ளியில் படிக்கும் போதே தனக்கு வந்து விட்டதை உணர்ந்து வருந்தினார்.
ஒரு சமயம் அவரது நண்பர்கள் காட்டுப் பகுதியில் மறைந்து இருந்து திருட்டுத்தனமாக புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற சிவாஜி ராவை மூத்த மாணவர்கள் இங்கெல்லாம் வரக்கூடாது போ என்று விரட்டினார்கள். ஆனால் சிவாஜி ராவ் அதை ஏற்கவில்லை.
அவர்களுக்கு போட்டியாக வித்தியாசமாக புகைப்பிடித்து காட்டுவதாக சவால் விட்டார். உடனே நண்பர்கள் அவருக்கு ஒரு பீடியை எடுத்துக் கொடுத்தனர். பீடியை பற்ற வைத்த சிவாஜி ராவ் அதை ஸ்டைலாக மேலே தூக்கி போட்டார். அது கீழே வந்ததும் வாயில் கவ்விப் பிடித்து ஸ்டைலாக புகையை வெளியிட்டார்.

சிவாஜி ராவ் நண்பர்களும், மூத்த மாணவர்களும் இதை கண்டு ஒரு நிமிடம் பிரமித்துப் போனார்கள். ஆனால் சிவாஜி ராவுக்கு அதுதான் புகை பிடிக்கும் போது கிடைத்த முதல் ஸ்டைல் ஆகும். நண்பர்களிடம் சவால் விட்டதால் அவரையும் அறியாமல் இந்த ஸ்டைல் அவருக்குள் உருவாகி இருந்தது.
ஒரு நிமிடம் இதையெல்லாம் சிவாஜி ராவ் நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டார். பிற்காலத்தில் இந்த ஸ்டைல்தான் அவரை தமிழக மக்கள் மனதில் வித்தியாசப்படுத்தி காட்டி புகழ் பெற வைக்கப் போகிறது என்பது அப்போது சிவாஜி ராவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
அதுபோலதான் சிவாஜி ராவுக்கு இருந்த மது குடிக்கும் பழக்கமும். அதையும் சிவாஜி ராவ் அந்த ரெயில் பயணத்தில் நினைத்துப் பார்த்தார். பெங்களூரில் கங்கேரி என்ற ஒரு பகுதி உண்டு. அந்த காலத்தில் அந்த இடத்தில் நிறைய சாராயக் கடைகள் இருந்தன.
சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் அடிக்கடி கங்கேரிக்கு சென்று சாராயம் குடிப்பதை வழக்கத்தில் வைத்து இருந்தனர். சாராய வாடை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக வெங்காயம் உள்பட பல பொருட்களை பயன்படுத்தியதை சிவாஜி ராவ் நினைத்து... நினைத்து... சிரித்தார்.
மது போதையில் பலரிடம் சண்டை போட்ட நாட்களும் சிவாஜி ராவுக்கு நினைவுக்கு வந்தது. கங்கேரியில் ஒரு தடவை மது குடித்துக் கொண்டிருந்த போது எதிரே இருந்த ஒரு நபரை சிவாஜி ராவ் அடித்து துவைத்தார். பதிலுக்கு அந்த நபரும் சிவாஜி ராவை கடுமையாக தாக்கினார்.
இந்த சண்டையில் சிவாஜி ராவ் சட்டைக் கிழிந்தது. அவர் உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அந்த கிழிந்த சட்டையோடு வீட்டுக்கு போனால் தெரிந்து விடுமே என்ற பயத்தில் நண்பர்கள் வீட்டுக்கு சென்று சட்டையை மாற்றிக் கொண்டு சென்ற நாட்களை எல்லாம் சிவாஜி ராவ் நினைத்துப் பார்த்தார்.
நாம் இப்படியெல்லாம் வாழ்ந்து இருக்கிறோமே என்று அவருக்குள் அடக்க முடியாத ஆச்சரியம் ஏற்பட்டது. அதே சமயத்தில் அவரோடு பழகிய சில நல்ல நண்பர்களும் அவரது நினைவுக்கு வந்தார்கள். நண்பர் ராமண்ணாவை நினைத்துப் பார்த்தார். அவரோடுதான் சிவாஜிராவ் தட்டச்சுப் பயிற்சிப் பெற டைப்ரைட்டிங் வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அப்போது செய்த பல குறும்புகள் அவரது நினைவுக்கு வந்தன.
குறிப்பாக டைப்ரைட்டிங் வகுப்பு முடிந்து ஒருநாள் வெளியில் வந்தபோது இளம்பெண் ஒருவரிடம் தகராறு செய்து சிக்கி போலீஸ் நிலையத்துக்கு சென்றதை நினைத்துப் பார்த்தார். போலீசார் விசாரணை நடத்திய போது நான் போலீஸ்காரர் மகன் என்று ஆணவமாக சொன்னதையும் நினைத்துப் பார்த்தார்.
அப்படி சொன்னால் தன்னை போலீஸ்காரர்கள் விட்டுவிடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக சப்-இன்ஸ்பெக்டர் பளார் அறை கொடுத்து இரவு முழுக்க சிவாஜிராவையும் அவர் நண்பர்களையும் ஸ்டேசனில் வைத்து விட்டார். மறுநாள் காலை புத்திமதி சொல்லி வீட்டுக்கு அனுப்பினார்.
இதை நினைத்துப் பார்த்தபோது எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறோம் என்று சிவாஜி ராவுக்கு உறைத்தது. அதுபோல சந்திரசேகரன் என்ற நண்பருடன் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்த நாட்களையும் நினைத்துப் பார்த்தார்.
ஜிம்மில் செய்த உடற்பயிற்சிகள் காரணமாக தனக்கு கட்டு மஸ்தான உடல் வந்து விட்டதாக நெஞ்சை நிமிர்த்து நடந்த நாட்களும் அவரது நினைவுக்கு வந்து சென்றன. அந்த நாட்களில் அவரது கண்களை யாராவது கூர்மையாக பார்த்தாலே அவருக்கு கோபம் வந்து விடும். அடிதடியாகி கைகலப்பு வரை சென்று விடும் என்று சிவாஜி ராவே பல தடவை சொல்லி இருக்கிறார்.
அந்த அடிதடி நாட்களின் நினைவுகளும் சிவாஜி ராவின் ரெயில் பயணத்தில் அவருடன் வந்து கொண்டே இருந்தது. இப்படி தாய்-தந்தை பாசத்தில் தொடங்கி நண்பர்களுடன் சேர்ந்து செய்த முரட்டு தனங்கள் வரை அனைத்தையும் அசைப்போட்ட சிவாஜி ராவுக்கு தனது வாழ்க்கை பயணம் அடுத்து எப்படி இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு மனதுக்குள் தோன்றியது.
அவரால் எந்த இறுதியான முடிவுக்கும் வர இயலவில்லை. மனம் முழுக்க குழப்பம், வேதனை, எதிர்பார்ப்பு நிறைந்து இருந்தது. நள்ளிரவுக்கு பிறகு சிவாஜி ராவ் கண் அயர்ந்தார். அப்படியே தூங்கிப் போனார்.
அதிகாலை நேரத்தில் புரண்டு படுத்த சிவாஜி ராவுக்கு கனவு ஒன்று வந்தது....
இருட்டான காட்டுப்பகுதி. அங்கு ஒரு சுரங்கப் பாதை. அதற்குள் சிவாஜி ராவ் மெல்ல மெல்ல நடந்து செல்கிறார். கரடு–முரடான சுரங்கப் பாதைக்குள் கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும் திடீரென மெல்லிய வெளிச்சம் தோன்றியது.
வெளிச்சம் வந்த திசையை நோக்கி சிவாஜி ராவ் திரும்பிப் பார்த்தார். அங்கு அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அங்கு ஒரு சன்னியாசி கண்களை மூடி தவம் செய்து கொண்டிருந்தார். அவரது முகம் ஒருவித அமைதியுடன் காணப்பட்டது. அவரை பார்க்க... பார்க்க சிவாஜி ராவ் மனதுக்குள் ஆனந்தம் ஏற்பட்டது.
சிவாஜி ராவ் அந்த பகுதியை சுற்றிப் பார்த்தார். அழகான நதி ஒன்று காணப்பட்டது. அதில் தெளிந்த நீரோடையாக கண்ணாடி போன்று தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சற்று தலையை உயர்த்திப் பார்த்த போது பெரிய மலை காணப்பட்டது. இமயமலை போன்று காட்சி அளித்த அந்த மலைக்குள் சுரங்கப் பாதையில் நாம் இருக்கிறோம் என்று சிவாஜி ராவ் நினைத்தார்.
இந்த காட்சியுடன் அவரது கனவு கலைந்துப் போனது. திடுக்கிட்டு எழுந்தார். என்ன கனவு இது? ஒன்றும் புரியவில்லையே? என்று சிவாஜி ராவுக்கு குழப்பமாக இருந்தது. ஆனால் அடுத்த வினாடியே ரெயில் சென்னை வந்து விட்டதா? என்று ஆர்வமுடன் வெளியே எட்டிப் பார்த்தார்.
அடுத்த சில நிமிட நேரங்களில் பிருந்தா–வனம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்குள் வந்தது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அடைந்ததும் பயணிகள் மளமளவென இறங்கி நடக்க தொடங்கினார்கள். சிவாஜிராவும் அந்த அழகான ஆன்மிக கனவை அப்படியே சுத்தமாக மறந்து விட்டு தனது ஒரே ஒரு பையை எடுத்துக் கொண்டு ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கினார்.
கூட்டத்தோடு கூட்டமாக நடந்து வெளியில் வந்தார். தமிழ்நாட்டின் அரசியல், சினிமா, ஆன்மீக கலாச்சாரத்தை மாற்றப் போகும் ஒரு நிகரற்ற சக்தி கூட்டத்தோடு கூட்டமாக தங்களுடன் வருகிறது என்பதை அந்த சமயத்தில் யாரும் நினைத்துக் கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.
சிவாஜி ராவ் தன்னம்பிக்கையின் உச்சத்துடன் சென்னை மண்ணில் தனது காலை பதித்தார். சென்னை அவரை வரவேற்றது. திரைப்படக் கல்லூரியை நோக்கி நடக்க தொடங்கினார். அவரது அந்த முதல் நாள் அனுபவம் எப்படி இருந்தது என்பதை நாளை பார்க்கலாம்.
- கண்டனூர் மீனாட்சி அம்மன் உற்சவம்.
- சிதம்பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிட்சாடனராகக் காட்சி.
இந்த வார விசேஷங்கள்
25-ந் தேதி (புதன்)
* அமாவாசை.
* திருவள்ளூர் வீரராகவர் தெப்ப உற்சவம்.
* ஆவுடையார்கோவில், சிதம்பரம் தலங்களில் சிவபெருமான் திருவீதி உலா.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
26-ந் தேதி (வியாழன்)
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் விழா தொடக்கம்.
* கண்டனூர் மீனாட்சி அம்மன் உற்சவம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
27-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.
* ராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி விழா தொடக்கம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* சமநோக்கு நாள்.
28-ந் தேதி (சனி)
* ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
* கண்டனூர் மீனாட்சி அம்மன் பவனி.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
29-ந் தேதி (ஞாயிறு)
* சதுர்த்தி விரதம்.
* மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.
* திருக்கோளக்குடி ககோளபுரீசுவரர், கண்டதேவி சிவபெருமான் தலங்களில் விழா தொடக்கம்.
* சிதம்பரம், ஆவுடையார் கோவில் தலங்களில் சிவ பெருமான் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
30-ந் தேதி (திங்கள்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆனி உற்சவம்.
* சிதம்பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிட்சாடனராகக் காட்சி.
* திருவில்லிபுத்தூர் பட்டர் அம்ச வாகனத்தில் பவனி.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தலங்களில் ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம்.
* கீழ்நோக்கு நாள்.
- சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 3 ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்-அக்னீஸ்வரசாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் வாஸ்துக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு பூஜை செய்து வீடு கட்டுதல் மற்றும் கட்டிடங்கள் கட்டும்போது விரைவில் பணிகள் நிவிர்த்தி பெறும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் பழமையான இந்த கோவிலில் பக்தர்கள் வாஸ்துக்கான பூஜைகள் செய்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி சிவ வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து கடம்புறப்பாடு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 3 ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.
மேலும் 250 கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்துக்கள், ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, அப்படி எங்களை சொல்பவர்கள் இதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் சர்வ மதத்தினரையும் மதிக்கக்கூடியவர்கள் என்றார்.
- நயினாரகரத்தில் மார்கழி பஜனை சுமார் 37 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
- பஜனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொங்கலன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.
செங்கோட்டை:
கடையநல்லூர் அருகில் உள்ள நயினாரகரத்தில் மார்கழி பஜனை நடைபெற்று வருகிறது. சுமார் 37 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கும் பஜனை அதிகாலை 5 மணிக்கே கன்னி விநாயகர் கோவிலில் ஆரம்பித்து சேனை விநாயகர் கோவில் தெரு, பாக்கிய விநாயகர் கோவில் தெரு, குலசேகரநாதர் மற்றும் வெங்கடாஜலபதி கோவில் தெரு வழியாக கருப்பா நதிக்கரையில் வீற்றிருக்கும் குலசேகர அம்மன் கோவில் வரை சென்று, சேனை விநாயகர் கோவில் வந்து முடிவடைகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து நாட்களிலும் பஜனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொங்கலன்று பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த மார்கழி பஜனையை திராவிட சுப்பு மற்றும் கோமதி ராமன் வழி நடத்துகின்றனர்.
- உலக பொதுமறைகளை கற்றுக்கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்கள் விதைக்கப்படுகின்றன.
- ஆன்மீக கல்விகளை போதிப்பதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கிளை தொடக்க விழாவும் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் ஆனந்த குருகுலம் என்கின்ற ஆன்மீக கல்வி நிலையம் தொடங்கும் விழா பிறவிமருந்தீசர் கோவில் மங்களநாயகி மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் விமலா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ராஜா, வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார், தொழிலதிபர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் வரவேற்று பேசினார். ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவர் கனகராஜன் அறிமுக உரையாற்றினார். குழந்தைகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் ஆனந்த குருகுலம் என்ற அமைப்பினை இந்து சமய அறநிலையத்துறை மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் தேச மங்கையர்க்கரசி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது,
குழந்தைகளுக்கு இளம் பிராயத்திலேயே தேவாரம், திருவாசகம் போன்ற பன்னிரு திருமுறைகளையும் திருக்குறள் போன்ற உலகப் பொதுமறைகளையும் கற்றுக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்கள் விதைக்கப்படுகின்றன. வருங்காலத்தில் நல்ல விளைவுகளை இந்த சமுதாயத்தில் ஏற்படுத்துவார்கள் என்பது நிச்சயமான ஒன்று. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேவாரம் பயிற்றுவிக்கும் ஓதுவார்களோடு இணைந்து ஒரு நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்கினால் நமது நாடு உலக அரங்கில் இன்னும் மிகச்சிறந்த நாடாக திகழும். வந்திருக்கின்ற அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை இது போன்ற ஆன்மீக கல்விகளை போதிப்பதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும் அப்பொழுதுதான் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். பெற்றோர்கள்தான் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து முன்னாள் நகர் மன்ற தலைவர் பாண்டியன், ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் சிவக்குமார், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவத் தலைவர் ஸ்ரீதரன் ,நகரமன்ற உறுப்பினர் எழிலரசன், மாடன் நர்சரி பள்ளி நிர்வாகி முருகானந்தம், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் தணிகாசலம், பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக திருவாரூர் ஆனந்த குருகுல மாணவர்களின் தேவார இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் ஆன்மீக ஆனந்தம் அமைப்பின் கிளைச் செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.
- கோவில் வளாகத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றினர்.
- ஆன்மீக பயணமாகவும், இறை பணியாகவும் உள்ளது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் கிராமத்தில் உள்ள பெரியநாயகி ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் கோவில் மற்றும் பேட்டையில் உள்ள சவுந்தரநாயகி அம்பாள் கோவில் ஆகிய இரு கோவில்களிலும் நேற்று உழவாரப்பணி நடைபெற்றது.
அறநிலையத்துறையின் அனுமதியுடன் கரூர் பகுதியை சேர்ந்த 90 பெண்கள், 40 ஆண்கள் என 130 தன்னார்வலர்கள் கனகராஜ் தலைமையில் பல்வேறு உபகரணங்களுடன் வந்து 2 குழுக்களாக பிரிந்து கோவிலூர் கோவில் மற்றும் பேட்டை கோவிலுக்கு சென்று அங்குள்ள கொடிமரம், ராஜகோபுரம், மண்டபம் என கோவிலின் அனைத்து பகுதிகளையும் தூய்மைப்படுத்தி, வளாகத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளையும் அகற்றினர்.
மேலும், கோவிலில் இருந்த விளக்குகள், பாத்திரங்கள், கோவில் மணி உள்பட அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்தனர். இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்:-
நாங்கள் சுமார் 8 ஆண்டு களுக்கு மேல் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம். மாதம் 2 பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கோவிலை தூய்மைப்படுத்தி வருகிறோம்.
இது எங்களுக்கு முழு மன திருப்தியை தருகிறது. மேலும், ஆன்மீக பயணமாகவும், இறை பணியாகவும் உள்ளது. கூலி தொழிலாளர்கள் முதல் அரசு வேலைக்கு செல்பவர்கள் வரை எவ்வித பாரபட்சமுமின்றி ஒன்றாக இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.
- சோழவந்தானில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
- முன்னாள் சேர்மன் முருகேசன் தலைமை தாங்கினார்.
சோழவந்தான்
சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழாவின் 7-ம் நாள் அர்ஜுன் தபசு விழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா நடந்தது. விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராமகிருஷ்ணன் மகாபாரத சொற்பொழிவாற்றினார். பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் சார்பில் கீதா ஆன்மீக சொற்பொழிவாற்றினார். ஆன்மீக கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு முன்னாள் சேர்மன் முருகேசன் தலைமை தாங்கினார். பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி முன்னிலை வகித்தனர். ஆதிபெருமாள் வரவேற்றார். முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணு பிரசாத், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது
- 60 ஆண்டுகளுக்கு மேலாக வேடம் போடும் திரு.கந்தசாமி
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அருளைப் பெற வித, விதமாக வேடம் போட்டு தர்மம் எடுத்து வழிபாடு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. ஆனால் அந்த பழக்கம் கடந்த நூற்றாண்டில் மற்ற ஊர்களுக்கும் பரவி தசரா திருவிழாவாக உருவெடுத்தது.
அதன் பிறகு கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன. என்றாலும், "முத்தாரம்மன் அருள் பெறுவது ஒன்றே இலக்கு" என்ற தசரா குழுவினரின் பாரம்பரிய மரபு மட்டும் மாறவே இல்லை.
அதற்கு இன்று நம்மிடையே உதாரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கந்தசாமி.
குலசேகரன்பட்டினம் காவடி பிறைத் தெருவில் வசித்து வரும் இவர் நாடார் மைனர் தசரா குழுவின் மூத்த உறுப்பினர் ஆவார். குலசை ஆலயத்துக்கு வேடமிடும் பக்தர்களில் இவர் அளவுக்கு, இத்தனை ஆண்டுகள் வேடமிட்டவர் வேறு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சிறப்புக்குரிய கந்தசாமியிடம் இருந்துதான் வேடம் போடுவது, வேடம் போடுவதற்கான பொருட்கள் தயாரிப்பது உள்பட பல விஷயங்கள் மற்ற ஊர் தசரா குழுவினரிடம் பரவியதாக சொல்கிறார்கள்.
நல்ல ஆஜானுபாகுவான, கட்டான உடலமைப்புடன் கம்பீரமாக காணப்படும் கந்தசாமி தன் உயிர் இறுதி மூச்சு உள்ள வரை குலசை முத்தாரம்மனுக்காக வேடமிட சபதம் எடுத்துள்ளதாக கூறினார். எப்படி உங்களால் 60 ஆண்டுகளுக்கு மேலாக வேடமிட முடிந்தது? என்றதும், கந்தசாமி மலரும் நினைவுகளில் மூழ்கியபடி சரளமாக மடை திறந்த வெள்ளமென சொல்லத் தொடங்கினார்.,
எனக்கு அப்போது 10 வயது இருக்கும். குலசேகரன்பட்டினம் முழுவதும் காலரா பரவி இருந்தது. நிறைய பேர் சிகிச்சை எடுக்க வழியில்லாமல் செத்துப் போனார்கள். எங்கள் குடும்பத்தில் எனக்கு உள்பட என் அக்கா & தம்பி 7 பேருக்கு காலரா பாதித்தது. 7 பேரும் பிழைப்பார்களா? என்று எல்லாருக்கும் சந்தேகம் வந்து விட்டது. அப்போது எனது தாயார், குலசை முத்தாரம்மனை நோக்கி கும்பிட்டப்படி, "தாயே 7 பேருக்கும் குணமாகி விட வேண்டும். அதற்கு காணிக்கையாக என் மகன் கந்தசாமி அவன் ஆயுள் முழுவதும் வேடம் அணிந்த தர்மம் எடுத்து உடன் சன்னதிக்கு வருவான்" என்று வேண்டி கொண்டார்.
மறுநாளே மருந்து, மாத்திரை இல்லாமல் நாங்கள் 7 பேரும் பிழைத்து கொண்டோம். இதனால் மறு ஆண்டு முதல் நான் வேடம் போட தொடங்கினேன். என் 19வது வயதில் சீதாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 1 மகன், 2 மகள்கள் பிறந்தனர். யாரும் நான் வேடம் போடுவதை தடுக்கவில்லை. மாறாக ஆண்டு தோறும் உற்சாகப்படுத்தினார்கள். 1986ம் ஆண்டு மகன் மரணம் அடைந்ததால் அந்த ஆண்டு மட்டும் என்னால் வேடம் போட இயலவில்லை. இத்தனை ஆண்டுகளில் 6 ஆண்டுகள் ராஜா வேடம், 7 ஆண்டுகள் பெண் வேடம், 6 ஆண்டுகள் குறத்தி வேடம் போட்டேன்.
கிருஷ்ணர் வேடத்தை அதிகபட்சமாக 14 ஆண்டுகள் போட்டேன். 10 ஆண்டுகள் கர்ணன் வேடம், 4 ஆண்டுகள் எமதர்மர் வேடம் போட்டேன். 3 ஆண்டுகள் இசக்கியம்மன் வேமணிந்தேன். 2 ஆண்டுகளாக இந்திரன் வேடம் போட்டேன். நான் போடும் வேடங்களுக்குரிய பொருட்களை மிகவும் அழகாக நானே தயாரித்து கொள்வேன்.
வேடப்பொருட்களை தசரா குழுவினரே தயாரித்துக் கொள்ளும் பழக்கத்தை நான்தான் ஏற்படுத்தினேன். என்னிடம் கற்றவர்கள் மற்ற ஊர்களில் அதை பரப்பினார்கள். என் பேரனுக்கு இப்போது 17 வயதாகிறது. முத்தாரம்மன் அருள் பெற வேடம் போடு என்று சொன்னேன். கல்லூரியில் படிப்பதாலோ., என்னவோ, அவன் வெட்கப்படுகிறான். என் காலத்துக்கும், இப்போதைய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
நான் சிறுவனாக இருந்த போது 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். இப்போது 21 நாட்கள், 11 நாட்கள் என்று சுருக்கி விட்டார்கள். அந்த காலத்தில் முத்தாரம்மனை நினைத்து பயந்து, பயந்து விரதம் இருந்தனர். விரதம் தொடங்கியதும் கட்டிலில் படுக்க மாட்டார்கள். நாற்காலியில் உட்கார மாட்டார்கள். வெளியில் சாப்பிட மாட்டார்கள். வீட்டுக்கு கூட போகாமல் தனி குடிலில் இருப்பார்கள். ஆனால் இன்று வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக புகை பிடிக்கிறார்கள். விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது. தர்மம் எடுத்து அதை ஆலயத்தில் சேர்ப்பதிலும் ஒழுங்கு இல்லை. 7 வீடுகளில் தர்மம் எடுத்தாலே போதும் என்று முத்தாரம்மன் கூறி இருக்கிறாள்.
அது போல காப்பு கட்டிய பிறகுதான் வேடம் போட வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக காப்பு கட்டும் முன்பே பலரும் கம்மல் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் பெண் வேடம் போடப் போகிறார்கள் என்று ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்து விடுகிறது. இதெல்லாம் ரொம்ப தப்பு. காளி வேடும் போடும் சிலரும் விதியை மீறுவது மனதுக்கு வேதனை தருகிறது. சூரசம்ஹாரம் முடிந்து விட்டால் அம்மன் சாந்தம் ஆகி விடுவாள். ஆனால் அதன் பிறகும் காளி வேடம் போட்டு இருப்பவர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை ஏற்க இயலாது. நான் வாலிப வயதில் இருந்த போது வேடம் போடுவதற்கு நிறைய செலவு செய்ய மாட்டோம். மாட்டு வண்டி சக்கரத்தில் உள்ள கருப்பு கிரீஸ் மையை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தகர டப்பாவை கழுத்தில் தொங்கப் போட்டு கொண்டு வீடு, வீடாக சென்று தர்மம் எடுப்போம்.
"அம்மா..... தாயே.... உன் அருளைப் பெற பிச்சை எடுக்கும் இழி நிலைக்கும் கீழாக என்னை நான் தாழ்த்திக் கொள்கிறேன்" என்று மனதுக்குள் பயப்பக்தியுடன் வேண்டியபடி ஒவ்வொருவரும் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்போது வேடம் போடுபவர்கள் தங்களை அலங்கரிக்கும் ஆடைகளுக்கு மட்டுமே பல ஆயிரம் செலவு செய்வது பிரமிப்பாக உள்ளது.
அந்த காலத்தில் எங்களுக்கு இப்படியெல்லாம் அலங்காரப் பொருட்கள் கிடைக்கவில்லை. உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை கயிறில் கட்டி, கழுத்தில் தொங்க விட்டிருப்போம். காதில் கம்மலுக்கு பதில் வததலை கட்டி அணிந்திருப்போம். எங்களது இந்த வேடங்களை மக்கள் ஆர்வமாக வந்து பார்ப்பார்கள். குலசை கோவிலுக்கு வேடம் போட்டிருப்பவர் ஊர் எல்லையில் வந்து இருக்கிறார் என்றால் ஊரே திரண்டு வரும். வீடு தவறாமல் தர்மம் தருவார்கள். அந்த நிலை இப்போது இல்லை.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காளிவேடம் அணிந்து இருப்பவர் ஒரு ஊருக்குள் சென்றால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனே நம் வீட்டுக்கு வந்து விட்டதாக நினைப்பார்கள். பணிவோடு அருள்வாக்கு கேட்பார்கள். காளி என்ன காணிக்கை கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பார்கள். இப்போது காணிக்கை கேட்டால் "பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்கிறார்கள். தசரா குழுக்களிடம் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள்தான் மக்கள் மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. மற்றபடி முத்தாரம்மனுக்குரிய பணிகள் ஆண்டுக்கு ஆண்டு சிறப்பாகவே நடக்கிறது. அவள் நிகழ்த்தும் அற்புதங்கள் அன்று போல இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு தடவை நான் இலங்கை செல்ல ராமேசுவரம் சென்றிருந்தேன். கள்ளத்தோனி ஏற முயன்ற சமயத்தில் ரோந்து பணியில் உள்ள போலீஸ்காரர்கள் வந்து விட்டனர். அப்போது நான் சட்டை பைக்குள் வைத்திருந்த குலசை முத்தாரம்மன் படத்தை தொட்டப்படி அம்மா நீதான் என்னை காப்பாத்தணும் என்று வேண்டினேன். அம்மன் அருளால்தான் அன்று நூலிழையில் தப்பினேன்.
குலசை முத்தாரம்மனை நம்பியவர்கள் வாழ்வில் நல்லதே நடந்துள்ளது. குலசை சுற்றுப் பகுதியில் ஒரு வாய் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் இருந்தவர்கள் இன்று குபேரனாக இருக்கிறார்கள் என்றால் அது முத்தாரம்மன் அருளால் நடந்த மகிமைதான் என்றார்.






