என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையநல்லூர்"

    • தென்காசி பேருந்து விபத்தில் புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா உயிரிழந்தார்.
    • உயிரிழந்த மல்லிகா பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனிடையே, இந்த பேருந்து விபத்தில் தாயை பறிகொடுத்த பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

    இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு அரசு வேலைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

    உயிரிழந்தவர்களில் ஒருவரான புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா, கணவரை இழந்த நிலையிலும் பீடி சுற்றி, பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாயினர்.
    • காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.

    பஸ்கள் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் பேருந்து மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய கேஎஸ்ஆர் என்ற தனியார் பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.
    • இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.

    உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரனை தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

    இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கரன்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது.
    • பஸ்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி அதில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்து அலறித்துடித்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்து பற்றிய தகவல் வருமாறு:-

    தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இன்று காலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    இதேபோல சங்கரன்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்த 2 பஸ்களும் கடையநல்லூரை அடுத்த இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் பஸ்களின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. பஸ்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி அதில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்து அலறித்துடித்தனர்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவஇடத்திற்கு மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், டி.எஸ்.பி.க்கள் தமிழ் இனியன், மீனாட்சி நாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

    மேலும் கடையநல்லூர், தென்காசியில் இருந்து தீயணைப்பு துறையினரும், ஆம்புலன்ஸ் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் குழுவினரும், தன்னார்வலர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    மேலும் ஜே.சி.பி. எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து பஸ்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.

    இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாயினர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

    காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மாற்றுப்பாதையில் வாக னங்களை திருப்பிவிட்டு போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து மீட்ப பணி நடைபெற்றது.

    பஸ்கள் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகராட்சி கூட்டத்திற்கு தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
    • 2 தீர்மானங்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டதாக நகர மன்ற தலைவர் அறிவித்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.

    நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், மேலாளர் சண்முகவேல், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேர்தல் பிரிவு மாரியப்பன் 40 தீர்மானங்களையும் வாசித்தார். 2 தீர்மானங்களை உறுப்பினர்கள் எதிர்த்ததால் தற்காலிகமாக அவை நிறுத்தி வைக்கப்பட்டதாக நகர மன்ற தலைவர் அறிவித்தார். தொடர்ந்து மற்ற அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் மகாலிங்கம் பேசுகையில், கடையநல்லூர் நகர் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கிணறுகள் எத்தனை? பொறம்போக்கு இடங்கள் எவை? என்பதை கண்டறிந்து அதனை பாதுகாக்க வேண்டும். சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும், தினசரி கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றார்.

    எஸ்.டி.பி. கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் யாசர் கான் பேசுகையில், சமீபத்தில் 50 சதவீதம் மட்டுமே வீட்டு வரியை உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பல்வேறு வீடுகளில் 100 முதல் 200 சதவீதம் வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகின்றது. எனவே வீட்டு வரி உயர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்றார். பா.ஜ.க. உறுப்பினர் சங்கர நாராயணன் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை கூட்ட அரங்கில் வைக்க அனுமதிக்க வேண்டும் என பேசினார்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    • கடையநல்லூரில் 2 இடங்களில் நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க வேண்டும் என மனு வழங்கினார்.

    கடையநல்லூர்:

    தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து அவரை கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது கடையநல்லூரில் விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களின் நலன் கருதி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடையநல்லூரில் 2 இடங்களில் பெரிய அளவில் விளையாட்டு மைதானங்களும், நவீன விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    • நயினாரகரத்தில் மார்கழி பஜனை சுமார் 37 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
    • பஜனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொங்கலன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.

    செங்கோட்டை:

    கடையநல்லூர் அருகில் உள்ள நயினாரகரத்தில் மார்கழி பஜனை நடைபெற்று வருகிறது. சுமார் 37 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கும் பஜனை அதிகாலை 5 மணிக்கே கன்னி விநாயகர் கோவிலில் ஆரம்பித்து சேனை விநாயகர் கோவில் தெரு, பாக்கிய விநாயகர் கோவில் தெரு, குலசேகரநாதர் மற்றும் வெங்கடாஜலபதி கோவில் தெரு வழியாக கருப்பா நதிக்கரையில் வீற்றிருக்கும் குலசேகர அம்மன் கோவில் வரை சென்று, சேனை விநாயகர் கோவில் வந்து முடிவடைகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து நாட்களிலும் பஜனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொங்கலன்று பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த மார்கழி பஜனையை திராவிட சுப்பு மற்றும் கோமதி ராமன் வழி நடத்துகின்றனர்.

    • கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கொடியேற்றினார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் மெகராஜ் நகர் , மேலக்கடையநல்லூர் பார்க், ரஹ்மானியாபுரம் 4-வது தெரு, கிருஷ்ணாபுரம் பஸ் நிலையம் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அப்பாஸ் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ராசையா முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் பெட்டி முருகையா, கவுன்சிலர்கள் முகையதீன்கனி, முருகன், வரவேற்றனர். மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    • தென்காசி மாவட்டங்களில், உள்ளாட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சமத்துவ பொங்கல் விழாவிற்கு நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டங்களில், உள்ளாட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி பெண் ஊழியர்கள் புது பானையில் புத்தரிசி, பனைவெல்லம் போட்டு பொங்கல் இட்டனர்.

    இதில் பொறியாளர் லாதா, இளநிலை பொறியாளர் ரவிச்சந்நிரன், சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, மேலாளர் சண்முகவேலு, தேர்தல் பிரிவு மாரியப்பன் , ஸ்டீபன், நகர் மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, முருகன் ராமகிருஷ்ணன், அனைத்து பணியாளர்கள் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர்கள், பொதுமக்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை.
    • இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தென்புறம் தினசரி மார்க்கெட் மற்றும் முப்புடாதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த இடத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போலீசிடம் அனுமதி கேட்டு மனு வழங்கப்பட்டது. ஆனால் போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கவில்லை.

    இந்நிலையில் இன்று இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் அந்த இடத்தில் போலீஸ் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் போலீசார் அந்த பகுதியில் இருபுறமும் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஆஸ்பத்திரிக்கு சென்ற காமாக்காள் நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • திருட்டு தொடர்பாக காமாக்காள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி காமாக்காள்(வயது 60). இவர்களது மருமகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    6 பவுன் திருட்டு

    இதனால் அவரை ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கடந்த 7-ந்தேதி காமாக்காள் தனது வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்ட நிலையில் நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்துகிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக காமாக்காள் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சுபாசை, போலீசார் சோதனை செய்தனர்.
    • சுபாசிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே தனிப்பிரிவு காவலர்கள் மஜித், வேலாயுதம் ஆகியோர் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அந்த வாலிபர் மேலகடையநல்லூர் மலம்பேட்டை தெருவை சேர்ந்த முருகையா என்பவரது மகன் சுபாஷ்(வயது 21) என்பது தெரியவந்தது. ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராமகணேஷ் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தனர்.

    ×