search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் அருகே வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு
    X

    கடையநல்லூர் அருகே வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு

    • ஆஸ்பத்திரிக்கு சென்ற காமாக்காள் நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • திருட்டு தொடர்பாக காமாக்காள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி காமாக்காள்(வயது 60). இவர்களது மருமகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    6 பவுன் திருட்டு

    இதனால் அவரை ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கடந்த 7-ந்தேதி காமாக்காள் தனது வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்ட நிலையில் நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்துகிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக காமாக்காள் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×