search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் நகராட்சியில்  சமத்துவ பொங்கல்
    X

    சமத்துவ பொங்கல் விழாவில் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் கலந்து கொண்டார்.  

    கடையநல்லூர் நகராட்சியில் சமத்துவ பொங்கல்

    • தென்காசி மாவட்டங்களில், உள்ளாட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சமத்துவ பொங்கல் விழாவிற்கு நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டங்களில், உள்ளாட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி பெண் ஊழியர்கள் புது பானையில் புத்தரிசி, பனைவெல்லம் போட்டு பொங்கல் இட்டனர்.

    இதில் பொறியாளர் லாதா, இளநிலை பொறியாளர் ரவிச்சந்நிரன், சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, மேலாளர் சண்முகவேலு, தேர்தல் பிரிவு மாரியப்பன் , ஸ்டீபன், நகர் மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, முருகன் ராமகிருஷ்ணன், அனைத்து பணியாளர்கள் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர்கள், பொதுமக்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×