search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tillage"

    • உழவாரப் பணி மேற்கொள்ள 250 பேர்கள் குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர்.
    • கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    தஞ்சாவூர்:

    இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் சார்பில் தமிழகத்தில் உள்ள பழங்கால கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு உழவாரப்பணி மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி இன்று காலை புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உழவாரப்பணி நடைபெற்றது. இதற்கு மன்ற நிறுவனர் கணேசன் தலைமை தாங்கினார்.

    இதில் இந்த மன்றத்தை சேர்ந்த சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து 250 பேர் கலந்து கொண்டு வளாகத்தில் இருந்த தேவையில்லாத புல் செடிகளை அகற்றி சுத்தப்ப டுத்தினர். குப்பைகளை அகற்றினர்.

    இந்த உழவாரப் பணியில் இறைப்பணி மன்றத்துடன் சேர்ந்து அழகிய தஞ்சை-2005 இயக்கம், உழவார பணிக்குழுவினரும் ஈடுபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் அழகிய தஞ்சை -2005 திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், உழவாரப்பணி குழு நிர்வா கிகள் புண்ணியமூர்த்தி ,செழியன், சீனிவாசன், முத்தமிழ் ,ஜெய்சங்கர் ,விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் பெரிய கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.

    இதையடுத்து பெரிய கோவிலில் இருந்து உழவாரப்பணி விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது தெற்கு வீதி , திலகர் திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்றது. பின்னர் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள 250 பேர்கள் குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் அந்தந்த கோயில்களில் சுத்த பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இன்று மாலையில் பெரிய கோவிலில் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளன.

    • நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது.
    • கோவில் வளாகத்தில் பள்ளி மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது.

    ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.

    திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் செயல் அலுவலர் முருகையன் உழவார பணியை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட உதவி அலுவலர் பிரேமா தேவி அனை வரையும் வரவேற்றார்.

    நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கோவில் வளாகத்தில் உழவாரப்பணி மேற்கொண்டனர். இதில் யோகா பயிற்றுனர் ஹரி கிருஷ்ணன், சர்வாலய உழவாரப்பணி செயலாளர் ஜெயபிரகாஷ், துணை தலைவர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் ஆசிரியை சத்யா நன்றி கூறினார்.

    பணிக்கான ஏற்பாடுகளை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிர்வா கத்தினர் செய்திருந்தனர்.

    • கோவில் வளாகத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றினர்.
    • ஆன்மீக பயணமாகவும், இறை பணியாகவும் உள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் கிராமத்தில் உள்ள பெரியநாயகி ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் கோவில் மற்றும் பேட்டையில் உள்ள சவுந்தரநாயகி அம்பாள் கோவில் ஆகிய இரு கோவில்களிலும் நேற்று உழவாரப்பணி நடைபெற்றது.

    அறநிலையத்துறையின் அனுமதியுடன் கரூர் பகுதியை சேர்ந்த 90 பெண்கள், 40 ஆண்கள் என 130 தன்னார்வலர்கள் கனகராஜ் தலைமையில் பல்வேறு உபகரணங்களுடன் வந்து 2 குழுக்களாக பிரிந்து கோவிலூர் கோவில் மற்றும் பேட்டை கோவிலுக்கு சென்று அங்குள்ள கொடிமரம், ராஜகோபுரம், மண்டபம் என கோவிலின் அனைத்து பகுதிகளையும் தூய்மைப்படுத்தி, வளாகத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளையும் அகற்றினர்.

    மேலும், கோவிலில் இருந்த விளக்குகள், பாத்திரங்கள், கோவில் மணி உள்பட அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்தனர். இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்:-

    நாங்கள் சுமார் 8 ஆண்டு களுக்கு மேல் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம். மாதம் 2 பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கோவிலை தூய்மைப்படுத்தி வருகிறோம்.

    இது எங்களுக்கு முழு மன திருப்தியை தருகிறது. மேலும், ஆன்மீக பயணமாகவும், இறை பணியாகவும் உள்ளது. கூலி தொழிலாளர்கள் முதல் அரசு வேலைக்கு செல்பவர்கள் வரை எவ்வித பாரபட்சமுமின்றி ஒன்றாக இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

    ×