search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india communist party"

    • வள்ளியூர் பஸ் நிலையத்தில் கிளை அஞ்சல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது.
    • தொடர்ந்து பஸ் நிலையத்தின் அருகில் கிளை அஞ்சல் நிலையம் செயல்படவேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் பஸ் நிலையத்தில் கிளை அஞ்சல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த அஞ்சலகத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட பதிவு தபால், மணிஆர்டர் சேவைகள் செய்யப்பட்டு வந்தது. இது தவிர இந்த கிளை அஞ்சல் அலுவலகத்தில் 500-க்கும் அதிகமான சிறுசேமிப்பு கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தினமும் அஞ்சல் தலை விற்பனை உள்ளிட்ட அஞ்சலக பணிகள் நடைபெற்று வந்தது. பஸ் நிலையத்திற்குள் அஞ்சலகம் செயல்பட்டு வந்ததால் வெளியூர் பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு அதிக பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் வள்ளியூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனை அடுத்து பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த கடைகள், புறக்காவல் நிலையம், நூலகம், அஞ்சலகம் அனைத்தும் காலி செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டுள்ளது.

    இதில் கடை வியாபாரிகளுக்கு பஸ் நிலையத்தின் வெளிப் பகுதியில் சாலையை யொட்டி தற்காலிகமாக கடைகள் அமைத்து கொடுக்கப் பட்டு அதில் வியாபாரங்கள் நடந்து வருகிறது. கிளை அஞ்சல கத்திற்கும் தற்காலிக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அஞ்சல் பணியாளர்கள் இந்த தற்காலிக இடத்தில் செயல்படமுடியாது என கூறி கிளை அஞ்சலகத்தை வள்ளியூர் தலைமை அஞ்சல கத்துடன் இணைத்துவிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கு வள்ளியூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பஸ் நிலையத்தின் அருகில் கிளை அஞ்சல் நிலையம் செயல்படவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராதாபுரம் வட்டார செயலாளர் சேது ராமலிங்கம் பாளையங்கோட்டை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    வள்ளியூர் பஸ் நிலையத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கிளை அஞ்சல் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது பஸ் நிலையம் விரி வாக்கம் பணியை யொட்டி கிளை அஞ்சல் நிலையம் மூடப்பட்டு செயல்பட வில்லை. இதனால் இப்பகுதி யைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட பொது மக்கள், வியாபாரிகள், வெளியூர் பயணிகள் பாதிக்க ப்பட்டுள்ளனர். எனவே வள்ளியூர் பஸ் நிலையம் அருகிலேயே மாற்று இடத்தில் கிளை அஞ்சல் நிலையம் அமைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    ஆலங்குடி:

    ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார் அறிக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் அண்மையில் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்காமல் இருக்கும் ஏழை, எளிய, பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். மா, பலா எலு மிச்சை,வாழை,போன்ற விவசாய பயிர்களுக்கு இன்னும் நிவாரண உதவித்தொகை கிடைக்க  விவசாயிகளுக்கு  உடனடியாக மாவட்ட நிர்வாகம்  இழப்பீடு வழங்க வேண்டும், ஆலங்குடி, கீரமங்கலம்  பேரூராட்சிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    வருகிற 11, 12-ந்தேதிகளில் சேலத்தில் நடைபெறும் விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க வேண்டும், 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில மாநாட்டில் இளைஞர்கள் திரளாக பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. 

    கூட்டத்தில் ஒன்றிய துணைச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர் செல்வகுமார், நல்லதம்பி, தமிழ்மாறன், முத்துக்கருப்பன், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
    உடன்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    உடன்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றிய குழு சார்பில் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில்  உடன்குடி பகுதியில் பழுதடைந்த ரோடுகளை புதுப்பிக்க கோரியும், நிறுத்தப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க கோரியும், மணப்பாடு மீனவர்களுக்கு தூண்டில் வளைவு அமைக்க உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆண்டி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமசாமி,  ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், உதவி செயலாளர்கள் கணபதி, முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சங்கர், ராஜேஷ், பாலன், பூங்காவனம் உட்பட பலர் பேசினர். 
    முடிவில் உடன்குடி ஒன்றிய பொருளாளர் நாராயணன் நன்றி கூறினார்.
    கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கடலூர்:

    புயல், மழையால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வட்ட செயலாளர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #indiacommunistparty #hydrocarbonproject

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் கல்யாண சுந்தரம், காசிநாதன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டம் ஆகும். 4 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் நிலபரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து விரட்டிய நிலையில் வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசின் அனுமதியை பெற்றுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஆதரவளித்து அமைதியாக உள்ளனர். உயிரே போனாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம். அதன் ஒரு கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #indiacommunistparty #hydrocarbonproject

    ஆண்டிமடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து முனை பிரச்சார இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17ஆம்தேதி முதல் 23-ம்தேதி வரை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வருகை வந்த பிரச்சார இயக்கத்தினருக்கு அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்தை உடனே துவங்க வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலையேற்றத்தை குறைக்க வேண்டும். 

    சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி கருக்கை கிராமத்தில் 33 விவசாயிகளுக்கு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலத்தை பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும், ஆண்டிமடம் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், அப்பகுதி விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கத்தின் நிர்வாகிகள் பேசினர். 

    பிரசார இயக்கத்திற்கு அசோக்ராஜ் தலைமை வகித்தார். வழக்கறிஞர் லாரன்ஸ், பிரபு கிளைச் செயலாளர்கள் ஞான சேகரன், கவர்னர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில செயற்குழு உறுப் பினர் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, திருத் துறைப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. உலக நாதன், மாநில செய லாளர் சந்திரகுமார், மாவட்ட துணைச் செயலாளர் ராமநாதன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா பெரியசாமி, ஒன்றிய பொருளாளர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். ஆனந்தன், சின்னதுரை, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    பிரச்சாரமானது ஆண்டிமடத்தில் துவங்கி ஜெயங்கொண்டத்தில் நிறைவடைந்தது. முன்னதாக மாதர் சங்க நிர்வாகி தமயந்தி வரவேற்றார். முடிவில்  ஒன்றிய குழு உறுப்பினர் வடிவேல் நன்றி கூறினார்.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யூ.சி.யும் இணைந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் நடத்தினர்.
    கிருஷ்ணகிரி:

    அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யூ.சி.யும் இணைந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி பிரச்சார இயக்கத்தை வேலூரில் தொடங்கியது. நேற்று காலை பர்கூரிலும், பிற்பகல் கிருஷ்ணகிரி பழையபேட்டையிலும் இந்த பிரச்சாரம் நடந்தது. 

    கிருஷ்ணகிரியில் நடந்த பிரச்சாரத்திற்கு முன்னாள் எம்எல்ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மாதையன் கோரிக்கை குறித்து பேசினார். 

    இந்த பிரச்சாரத்தின் போது, நூறு ஆண்டுகளாக போராடி தொழிலாளர்கள் பெற்ற உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறது. ஒவ்வொரு சட்டமாய் பறித்து, எந்த சட்டமும் தொழிலாளிக்கு பொருந்தாது என அண்மையில்ல் அரசு அறிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலவேலை முறை என்ற பெயரில் இனி தொழிலாளியை வேலைக்கு நியமிக்கும் போதே ஒரு ஆண்டுக்கு, இரண்டு ஆண்டுக்கு என காலத்தை நிர்ணயித்து நியமிக்கலாம். 

    அந்த காலம் முடிந்ததும் தானாகவே வேலை முடிந்துவிடும் என்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். மேலும் பாரதீய ஜனதாவின் தவறான கொள்கையால் தினமும் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாத மோடி பதவி விலக வேண்டும். 

    சாராயம் காய்ச்சிய விஜய்மல்லாய்யாவிற்கு ரூ. 9 ஆயிரம் கோடி வங்கி கடன், வைரம் விற்ற நீரவ் மோடிக்கு ரூ. 11 அயிரத்து 400 கோடி வங்கி கடன், பத்து ரூபாய்க்கு பேனா விற்றவனுக்கு கூட ரூ. 4 ஆயிரம் கோடி வங்கி கடன். இந்த கடனை செலுத்தாமல் மத்திய அரசின் துணையுடன் அந்நிய நாடுகளில் ராஜ வாழ்க்கை. 10 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 

    நாடாளுமன்ற வாசலில் உண்ணாவிரம் இருந்தும் நேரில் பார்க்க ஒரு நிமிட நேரம் கூட ஒதுக்க முடியாத மோடி என்று கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநில துணை செயலாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன், விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம், மாநில துணைத் தலைவர் தேவதாஸ், தேசிய குழு உறுப்பினர் சேதுராமன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, சிவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    கிள்ளுக்கோட்டையில் பள்ளிக்கூடம், கோவிலுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்யகோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள கிள்ளுக்கோட்டையில் பள்ளிக்கூடம், கோவிலுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்யகோரி கீரனூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    பின்னர் குளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் மதுபானகடையை இடம் மாற்றுவதாக உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அக்கட்சியின்மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நடராசன் தலைமையில் குன்றாண்டார் கோவில் ஒன்றிய செயலா ளர் சண்முகம், துணை செயலாளர் ஏழுமலை உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திட்டக்குடி தாலுகா அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெண்ணாடம்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் வேலை செய்த பயனாளிகளுக்கு அரசு அறிவித்த 223 ரூபாய் வழங்க வேண்டும், குடிநீர், தெரு மின்விளக்கு, தொகுப்பு வீடுகளின் பராமரிப்பு பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும், ஒன்றியம் முழுவதும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திட்டக்குடி தாலுகா அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட குழு உறுப்பினர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காசிநாதன், ரஜினி, கோவிந்தன், அம்பிகா, பழனிவேல், கருப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ×