என் மலர்

    வேலூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலையை முடித்துவிட்டு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் சிவக்குமார் (வயது 34), டிராக்டர் டிரைவர். மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு கொல்லமங்கலத்தில் இருந்து பள்ளிகொண்டாவிற்கு பைக்கில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அகரம் சேரியை அடுத்த விநாயகபுரம் தேசிய நெடுஞ்சாலை வளைவில் சென்றபோது ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வேகமாக வந்த தனியார் ஆம் புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப் பட்டசிவக்குமார் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளி கொண்டா போலீஸ் இன்ஸ் பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த சிவக் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து உறவி னர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவரி டம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சதீஷ்குமார், கட்டிட சென்ட்ரிங் தொழிலாளி. மனைவி ஜானகி (வயது 31).

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் பேரணாம்பட்டு அருகே சொலப்பல்லி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென் றார். இரவு தாய்க்கு சொந்தமான விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றிருந்தார்.

    அப்போது ஜானகியை கண்ணாடி விரியன் விஷ பாம்பு கடித்தது. அவர், பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியில் கதறினார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஜானகி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஸ்சில் இருக்கைகள் கிடைக்காததால் அவதி
    • படிக்கட்டுகள் மற்றும் இடைப்பட்ட இடங்களில் அமர்ந்து பயணம் செய்தனர்

    வேலூர்:

    தமிழகத்தில் பள்ளிகளில் 5 நாட்கள், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதனால், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்கு செல்ல மூட்டை முடிச்சுகளுடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்தனர்.

    பின்னர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு திரும்பினர். இதனால், வேலூர் புதிய பஸ் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. குறிப்பாக, சென்னை, சேலம், பெங்களூர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு இடம்பிடித்தனர்.

    பஸ்சில் இடம் கிடைக்காததால் இரவு முழுவதும் பலர் புதிய பஸ் நிலையத்திலேயே காத்திருந்தனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வேலூர் புதிய பஸ் நிலைய பகுதி நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது. அதேபோல் இன்று காலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    சென்னை பெங்களூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலர் பஸ்சில் இருக்கைகள் கிடைக்காததால், படிக்கட்டுகள் மற்றும் இடைப்பட்ட இடங்களில் அமர்ந்து பயணம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2-ம் வகுப்பு படித்து வந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி சுகன்யா. தம்பதியின் மகள் மவுலிகா (வயது 7). கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா தனது மகள் மவுனிகாவுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    மவுனிகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சிறுமி தனது தாய் மற்றும் பாட்டியுடன் தூங்கினார். இன்று காலை நீண்ட நேரமாகியும் சிறுமி கண் விழிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தாய் சுகன்யா சென்று பார்த்தபோது மவுலிகா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 300 பாட்டில்கள் பறிமுதல்
    • 3 பேர் கைது

    வேலூர்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சைதாப்பேட்டை முருகன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்காளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த விமலா(வயது 75), கமலா ( 70), லட்சுமி (76) ஆகியோர் கள்ளத்தனமாக வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.40,000 மதிப்பிலான 300 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணம் ஆகாத ஏக்கத்தில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, மதி நகர், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் நாகரத்தினம். இவரது மகன் வினோத் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த வினோத் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மது போதையில் இருந்த வினோத் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அவதி
    • உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

    சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பழமையான ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் சுமார் 120 ரெயில்கள் சென்னை மார்க்கமாகவும், ஜோலார்பேட்டை மார்க்க மாகவும், திருப்பதி மார்க்க மாகவும், வேலூர் மார்க்க மாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.

    தினமும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள மிக முக்கிய ரெயில்வே சந்திப்புகளில் காட்பாடி ரெயில் நிலையமும் ஒன்று. இங்கு 5 பிளாட்பாரங்கள் உள்ளன.

    இதில் பயணிகள் எளிதில் சென்று வர வசதியாக எக்ஸ்லேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் 2-வது பிளாட்பாரத்திலும் எக்ஸ்லேட்டர் (நகரும் படிக்கட்டுகள்) ஏற்படுத்தப்ப ட்டுள்ளன.

    ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள எக்ஸ்லேட்டர் பழுதடைந்துள்ளது. கடந்த நாட்களாக விடுமுறை காரணமாக அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். 2-வது நடைமேடை மற்றும் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்லேட்டர்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் அதிக பைகள் எடுத்துச் செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு லிப்ட் மட்டும் உள்ளது.

    அதனை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கூட்டம் அதிகமாக சேரும்போது பயணிகள் எக்ஸ் லேட்டர்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது அதுவும் இயங்க வில்லை. அடிக்கடி பராமரிப்பு பணி காரணமாகவும் அதன்னை நிறுத்தி விடுகின்றனர்.

    உடனடியாக அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி யுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 90 சதவீதம் பணிகள் நிறைவு
    • இந்த ஆண்டு இறுதியில் விமான சேவை தொடங்க நடவடிக்கை

    வேலூர்:

    வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தை மத்திய அரசின் உதான் திட்டத்தின்கீழ் சீரமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடை பெற்று வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு 20 பயணிகள் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

    அதற்காக 850 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளப் பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவடை ந்துள்ளது.

    இங்கிருந்து விமானங்கள் பறப்பதற்கும், தரையிறங்கு வதற்கும் அந்த பகுதியில் உள்ள 25 அடி உயரத்துக்கு மேல் உள்ள கட்டிடங்கள், மரங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இடையூறாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது. அதனால் விமான நிலை யத்தை சுற்றியுள்ள 10 ஏக்கர் நிலம் கையகப்ப டுத்தும் பணிகள் மற்றும் இங்கிருந்து இந்த ஆண்டிற்குள் விமான சேவை தொடங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதையொட்டி விமான ஓடுதளப்பாதையின் அருகே விமானங்கள் இறங்குவதற்காக பிரத்யே கமாக அமைக் கப்பட்டுள்ள மின்விளக்குகள் பகல்வே ளையில் சரியாக தெரிகிறதா என்றும், விமானத்தில் இருந்து தகவல் கட் டுப்பாட்டு அறை மற்றும் சிக்னல் கோபுரத்தில் இருந்து சிக்னல் கிடைக்கிறதா எனவும் முதற்கட்ட சோதனை செய்யப்பட்டது. இதற்காக விமான போக்கு வரத்து ஆணைக்குழுவிற்கு சொந்தமான விமானம் புதுடெல்லி யில் இருந்து சென்னை வழி யாக வேலூருக்கு வரவ ழைக்கப்பட்டது. அப்துல்லா புரம் விமான நிலைய ஓடுபா தையின் அருகே 5 முறை தாழ்வாக விமானத்தை இயக்கி சோதனை செய்யப் பட்டது. இதனை புதுடெல்லியை சேர்ந்த விமானங்கள் ஆய்வு பிரிவை சேர்ந்த 3 பேர் நேரில் பார்வையிட்டு ஆய்வு. செய்தனர். இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் தீய ணைப்பு வாகனம் விமான நிலைய ஓடுதளம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், அப் துல்லாபுரம் விமானநி லையத் தில் சிக்னல், மின்வி ளக்குகள் தொடர்பாக விமானம் இயக்கி மேற்கொ ள்ளப்பட்ட முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

    அடுத்தக்கட்டமாக விமான ஓடுதள பாதையில் விமா னத்தை இறக்கி சோதனை செய்ய உள்ளோம். விமானம் இயங்குவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்துள் ளோம். விரைவில் அனுமதி கிடைத்து விடும்.

    இந்த டிசம்பர் மாதத்திற்குள் இங்கிருந்து விமான சேவை தொடங்கப் படும் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதாக புகார்
    • தேவையற்ற பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்துக் கொள்ள வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வெங்கனபாளையம் பகுதியில் மோகன் என்பவரது வீட்டில் சுமார் 7 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு புகுந்தது. அதேபோல் ஒடுகத்தூரில் தினேஷ் என்பவரது வீட்டில் சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு புகுந்தது.

     இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் வீட்டில் புகுந்த பாம்புகளை பிடித்து அருகில் உள்ள காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்:-

    தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.

    இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகளில் தேவையற்ற பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டாம் உடனடியாக அகற்றிவிட்டு தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டிரைவர் காயங்களுடன் உயிர்தப்பினார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு லோடு வேன் ஒன்று கீரைகள் ஏற்றிக்கொண்டு வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    வேன் கவிழ்ந்தது

    அப்போது பள்ளிகொண்டா அருகே உள்ள வெட்டுவானம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

    மேலும் சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் லேசான காயங்க ளுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார்.

    கீரை கட்டுகள் சேதம்

    இதில் சென்னைக்கு ஏற்றி சென்ற சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 5 ஆயிரம் கீரைக்கட்டுகள் கீழே விழுந்து நாசமானது.

    அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பள்ளி கொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசர் சம்பவ இடத்திற்கு சென்று டிரைவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் லோடு வேனை மீட்டு போலீஸ்நிலையம் எடுத்து வந்தனர்.

    விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வன பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல தடை
    • வனத்துறையினர் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கோட்டையூர் கிராமம் அருகே மோர்தனா விரிவு காப்புக்காடு உள்ளது. இந்த வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறையினர் ஆங்காங்கே பல இடங்களில் நீர்த்தேக்க பள்ளங்களை தோண்டி உள்ளனர்.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது.

    தற்போது பள்ளங்களில் தேங்கிய தண்ணீரை வனவிலங்குகள் குடித்துவிட்டு செல்கி ன்றனர். இதில் தண்ணீர் குடிப்பதற்காக காட்டு யானை ஒன்று வந்தது. தண்ணீரைக் குடித்துவிட்டு, மழைநீர் தேங்கியுள்ள பள்ளத்தில் இறங்கி ஆனந்த குளியல் போட்டது.

    யானை தண்ணீரில் குதித்து விளையாடும் வீடியோ காட்சிகள், வனத்துறையினர் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிருந்தன.

    எனவே பேரணாம்பட்டு மற்றும் அதை சுற்றி உள்ள வனப்பகுதிக்குள் பொதுமக்கள் காப்பு காட்டிற்குள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள்யாரும் காப்புக்காட்டு பகுதியில் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.