என் மலர்
கன்னியாகுமரி
- மாவட்ட செயலாளர் மகேஷ் பங்கேற்பு
- பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பூத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆரல்வாய்மொழி :
ஆரல்வாய்மொழி நகர தி.மு.க. சார்பாக பூத் நிர்வாகிகள் கூட்டம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பூத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்துகொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஒன்றிய சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜோசப், ஒன்றிய செயலாளர் செல்வன், தலைமை கழக பேச்சாளர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ரகுமான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் அகஸ்டின், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் முருகன் சதீஷ்குமார், ராஜபாபு, சந்திரன், சேதுவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பயணிகள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலையே உள்ளது.
- கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
நாகர்கோவில் :
குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
சென்னை, நெல்லை இடையே வந்தே பாரத் ரெல் சேவை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு செல்கின்ற னர். குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு வசதியாக கன்னியாகுமரி, அனந்தபுரி, குருவாயூர், அந்தியோதயா உள்ளிட்ட சில ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் கூட, பயணிகள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலையே உள்ளது.
அதிலும் குருவாயூர், அனந்தபுரி ெரயில்கள் கேரளாவில் இருந்து இயக்கப்படுவதால் அங்கேயே முன்பதிவு இருக்கைகள் அதிக அளவில் நிரம்பி விடுவதும் தொடர் கதையாகி வருகின்றது. தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் என்பதால் குமரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் சென்னையில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் சொந்த ஊர் வந்து, திரும்ப ெரயில் டிக்கெட் கிடைப்பதே பெரும் சிரமமாக உள்ளது. மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ெரயிலை தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். வந்தே பாரத் ெரயிலின் வேகத்தோடு ஒப்பிட்டால் கூடுதலாக 45 நிமிடங்கள் இயக்கினாலே போதும். அப்படி செய்வதன் மூலம் குமரி மாவட்டத்தில் இருந்து தலைநகர் சென்னைக்கு செல்ல கூடுதலாக ஒரு ெரயில் சேவை கிடைக்கும். குமரி மக்களின் சிரமமும் பெரும் அளவில் தீர்க்கப்ப டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது.
- 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது.
நாகர்கோவில், செப்.26-
குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரண மாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கும்பப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக் கப்பட்டுள்ளது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட் டம் இன்று காலை 21.50 அடியாக இருந்தது.
அணைக்கு 618 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 434 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது. அணைக்கு 306 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் 634 கன அடி தண்ணீரும் சானல் களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது. சானல்களிலும் தண்ணீர் வந்து கொண்டிருப்பதை யடுத்து விவசாயிகள் சாகு படி பணியை தீவிரப்படுத்தி யுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. பறக்கை, தெங்கம்புதூர், சுசீந்திரம் பகுதிகளில் ஏற்கனவே நாற்றுப் பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை யடுத்து அவர்களுக்கு தேவை யான விதை நெல் களை தங்குதடையின்றி வழங்க வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் ஹெக்டேரில் சாகு படி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.
- வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
- மிட்டாய் கடைகள் வைக்க இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 24-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. திருவி ழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்கார தீபாராதனை, வாகன பவனி, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், பட்டிமன்றம், சிறப்பு அன்ன தானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 24-ந்தேதி நடக்கி றது. இதையொட்டி அன்று மதியம் 1 மணிக்கு பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடைகிறது. இதை யொட்டி மகாதானபுரம் 4 வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ஏராள மான மிட்டாய் கடைகள், வளையல் கடைகள், ஐஸ் வியாபாரம், விளையாட்டு சாதன பொருட்கள் கடை கள், ராட்சத ராட்டினம், சிறுவர்கள் விளையாடும் சறுக்கு விளையாட்டு மற்றும் சுழலும் ராட்டினம் உள்பட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்க ளும் இடம்பெறுகின்றன.
இந்த பகுதி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த பகுதியில் திருவிழா காலங்களில் கடைகள் நடத்துவதற்கான உரிமையை தனியாருக்கு இந்து அறநிலையத்துறை ஏலம் விட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரி வேட்டை திருவிழா நடை பெறும் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ஒரு நாள் மட்டும் திருவிழா கடைகள் நடத்துவதற்கான உரிமையை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்வு நடைபெற்றது.
குமரி மாவட்ட கோவில் களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், ஆய்வாளர் சரஸ்வதி, கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவில் ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் அலுவலகத்தில் இந்த ஏலம் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.
திருவிழா கடைகள் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது. சுசீந்திரம் அக்கரையை சேர்ந்த குமார் என்பவர் இந்த திருவிழா கடைகளை ஏலம் எடுத்துள் ளார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரி வேட்டை திருவிழா நடை பெறும் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதி மற்றும் நாகர் கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதி மகாதானபுரம் பரிவேட்டை மண்டபம் அமைந்து உள்ள பகுதி, பஞ்சலிங்கபுரம் செல்லும் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மிட்டாய் கடைகள் வைக்க இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
- போலீசில் கணவர் புகார்
- சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
என்.ஜி.ஓ.காலனி :
சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 32), தாமரை பூ வியாபாரி.
இவரது மனைவி ஜெயஸ்ரீ (22), பட்டதாரி.
இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு ஜெயஸ்ரீ, கணவருடன் தனியாக வசித்து வந்தாக தெரிகிறது. ஆறுமுகம் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு 8 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவாராம்.
நேற்று முன்தினமும் அவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். இரவு 8 மணிக்கு அவர் வந்தபோது, வீட்டில் ஜெயஸ்ரீ இல்லை. வெளியில் எங்காவது சென்றிருப்பார் என ஆறுமுகம் கருதினார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனை தொடர்ந்து உறவினர் வீடுகளில் ஆறுமுகம் விசாரித்தார். ஆனால் ஜெயஸ்ரீ பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ஜெயஸ்ரீயின் தோழிகளை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இருப்பினும் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் கிடைக்கவில்லை.
ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ஆறுமுகம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
புதுப்பெண்ணான ஜெயஸ்ரீ கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்காவது சென்றாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில புதுப்பெண் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாவட்ட கலெக்டருக்கு ஊராட்சி மன்றம் கோரிக்கை
- உப்பளமானது ஏற்கனவே மத்திய அரசுக்கு சொந்தமானது.
ராஜாக்கமங்கலம் :
ராஜாக்கமங்கலம் உப்பளத்தில் கடந்த 30 வருடங்களாக மீன் சந்தை இயங்கி வருகிறது. இதில் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் மீன் மற்றும் காய்கறிகள் இதர பொருட் களை வாங்கி செல்வது வழக்கம். கடந்த 2 நாட்க ளுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அது தங்களுடைய சொத்து என்று ஆக்கிரமித்து அங்கு யாரும் செல்லக்கூடாது என ரோட்டோரத்தில் கால்வாய் தோண்டியுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்த மீன் சந்தையில் வியாபாரம் செய்வதற்கு வசதியாக கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் அப்போ தைய எம்.எல்.ஏ. முருகேசன் தொகுதி வளர்ச்சி திட் டத்தின் கீழ் ரூ.2.52 லட்சம் மதிப்பில் கொட்டகை அமைத்து அதில் அப்பகுதி மக்கள் வியாபாரம் செய்து வருகின்ற னர். அந்த உப்பளமானது ஏற்கனவே மத்திய அரசுக்கு சொந்தமானது.
அதனை 99 வருட குத்தகைக்கு ஒரு சிலருக்கு அரசு கொடுத்தது. குத்தகை காலமும் முடிந்து தற்போது குத்தகையையும் கொடுக்கவில்லை. இதை திடீரென இவ்வாறு ஆக்கிரமித்ததால் ஊராட்சி சார்பில் அங்கு தோண்டப்பட்ட குழிகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் மண்ணை நிரப்பி மீண்டும் அப்பகுதியில் வியாபாரம் நடக்கும் படி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார் செய்துள்ளார். மேலும் மீண்டும் அரசு நிலத்தை ஆக்கிரமிக்காமல் இருக்கும் வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுத்திட மாவட்ட கலெக்டருக்கு ஊராட்சி மன்றம் சார்பில் அவர் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
- சமுதாய நலக்கூடம் தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டு வடசேரி சக்தி நகரில் சமுதாய நலக்கூடம் தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று சமுதாய நலக்கூடம் கட்டுவதுற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சமுதாய நலக்கூடத்தை நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், வார்டு கவுன்சிலர் ஸ்ரீலிஜா, மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- இந்த ஆக்கிரமிப்பு நிலம் சுமார் 3 ஏக்கர் 17 சென்ட் உள்ளது
- நிலம் மீட்டுக்கப்பட்டு எல்லை அளவீடு செய்து கல் நடப்பட்டது.
நாகர்கோவில் :
மார்த்தாண்டம் முஞ்சி றை திருமலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உரிய மகாதேவர் கோவி லுக்கு சொந்தமான கோவில் நிலங்களை தனி யார் கல்லூரி ஒன்று ஆக்கிர மித்து வைத்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு நிலம் சுமார் 3 ஏக்கர் 17 சென்ட் கோர்ட் உத்தரவுபடி இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் (குமரி மாவட்ட கோவில்கள், சுசீந்திரம்) பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன் முன்னிலையில் மீட்டுக்கப்பட்டு எல்லை அளவீடு செய்து கல் நடப்பட்டது.
அப்போது கோவில் நிலம் எடுப்பு தாசில்தார் சஜித், தொகுதி கண்காணிப்பாளர் சிவக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜோதீஷ்குமார், ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, தி.மு.க முஞ்சிறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாஸ்டர் மோகன் உட்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.
- பணியில் இருந்த ஏட்டுக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாக புகார்
- சதீஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தன்னிடம் தகராறு செய்வதாக மனைவி தேவி தெரிவித்தார்
நாகர்கோவில் :
நாகர்கோவில் வடி வீஸ்வ ரன் தோப்பு வணிகர் தெரு வைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி தேவி (வயது 22). குடி பழக்கத்திற்கு அடி மையான சதீஷ், அடி க்கடி தகராறு செய்து மனை வியை தாக்கியதாக கூறப்ப டுகிறது.நேற்று வடசேரி மகளிர் போலீஸ் நிலையம் முன்பு சதீஷ், தனது மனைவி தேவியின் தலைமுடியை பிடித்து இழுந்து வந்ததோடு தாக்குதலிலும் ஈடுபட் டுள்ளார். இதனை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் ரோஸ்பின் ஜெபராணி, கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், மீண்டும் மனைவியை தாக்கியதோடு, போலீஸ் ஏட்டு ரோஸ்பின் ஜெப ராணியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏட்டு ரோஸ் பின் ஜெபராணி, போலீ சில் புகார் கொடுத்தார்.
அதில், தான் பணியில் இருந்த போது, சதீஷ் அங்கு தனது மனைவி தேவியின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்தார். இதனை நான் கேட்ட போது, கணவர் சதீஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தன்னிடம் தகராறு செய்வதாக மனைவி தேவி தெரிவித்தார். அப்போது சதீஷ் திடீரென மீண்டும் தேவியை தாக்கினார். இதனை நான் கண்டித்த போது, அவதூறாக பேசியதோடு, என்னை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டலும் விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெசிமேனகா, குமார் ஆகியோர் விசாரணை நடத்தி சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மகளிர் போலீஸ் நிலையம் முன்பு மனைவியை தாக்கிய கணவர், போலீஸ் ஏட்டுக்கும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாழை தோட்டம் விவகாரத்தில் புகார் கொடுத்தும் 4 மாதமாக அலைக்கழிக்கப்படுவதாக வேதனை
- இழப்பீட்டுக்கு நஷ்டஈடாக ரூ.1½ லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும்.
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எராளமானோர் வந்து மனுக்களை கொடுத்து வந்தனர். மனுக்கள் கொடுக்க வந்தவர்களை போலீசார் சோதனை செய்தே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.
இந்த நிலையில் மனுவுடன் வந்த பெண் ஒருவர், திடீரென கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை அங்கிருந்து அகற்ற முயன்றனர். அப்போது அந்தப் பெண், தனக்கு சொந்தமான வாழை தோட்டம் தொடர்பாக கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் 4 மாதம் அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார். அவரை சமரசம் செய்த போலீசார், அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண் பெயர் ராதிகாகுமாரி என்பதும், மாங்கரை அருகே உள்ள கல்லுவிளை காட்டுவிளையைச் சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி என்பதும் தெரியவந்தது.
அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்க கொண்டு வந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாலூர் தேசம் பகுதியில் எங்களுக்குச் சொந்தமான இடத்தில் 350 வாழைகள் நட்டு விவசாயம் செய்துள்ளேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு, எனது கணவரின் தம்பி வின்சென்ட் அவரது மனைவி ஜெபராணி ஆகியோர் வந்தனர். அவர்கள் 150 வாழைக்குலைகளை வெட்டி சேதப்படுத்தினர். இதுபற்றி நானும் கணவரின் சகோதரி லிசியும் சென்று கேட்டபோது, வின்சென்ட் அவதூறு பேசி கொலைமிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் கருங்கல் போலீசில் புகார் செய்தேன். தாசில்தார், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தேன். ஆனால் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு, ஆன்லைன் மூலம் வின்செண்ட் பற்றி புகார் அளித்தேன். இருப்பினும் கடந்த 4 மாதங்களாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வின்சென்ட் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பீட்டுக்கு நஷ்டஈடாக ரூ.1½ லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.