என் மலர்
கன்னியாகுமரி
- தொழில் வளர்ச்சியில் சென்னையுடன் போட்டி போடும் அளவிற்கு தூத்துக்குடி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்று உள்ளது.
- இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இன்று தூத்துக்குயில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ.100 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார். மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், கலைஞர் கனவு இல்லம், பட்டாக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.64.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடி குடியிருப்புகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, தொழில் வளர்ச்சியில் சென்னையுடன் போட்டி போடும் அளவிற்கு தூத்துக்குடி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்று உள்ளது. இந்த வளர்ச்சிக்கு காரணம் உங்களுடைய உழைப்பும் ஒற்றுமையும் தான். இன்று தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்றால் அதற்கு மகளிர் தான் காரணம். தமிழக முதல்வரின் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை நாம் உருவாக்கியுள்ளோம்.
தேர்தலை காரணம் காட்டி சிலர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தியாவே வியக்கும் வண்ணம் மகளிர் வங்கிக் கணக்கில் செலுத்தியவர் முதல்வர். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பட்டா வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மீனவ கிராமங்கள் கடற்கரைப் பகுதியில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி உள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகையை ஐந்தாயிரத்தில் இருந்து எட்டாயிரம் ரூபாய் ஆக உயர்த்தியுள்ளோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்குமான ஆல் ரவுண்டர் ஆட்சியாக நமது திராவிட ஆட்சி உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்,சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- ஈரான் நாட்டிற்கு மீன்பிடிப்பதற்காக சென்றிருந்தோம்.
- காலையில் உயிரோடு இருப்போமா என்ற அச்சத்தில் தான் இரவு தூங்க செல்கிறோம்.
நாகர்கோவில்:
ஈரானில் போர் பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். இதனால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். மேலும் வளைகுடா நாடுகளுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான குமரி மாவட்ட மீனவர்களும் ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர்.
மீனவர்களை மீட்க வலியுறுத்தி அவர்களது குடும்பத்தினர் மத்திய-மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ராஜாக்கமங்கலம் துறையில் மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் சமூகவலைதளங்களில் வீடியோவை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மீனவர்கள் கூறியிருப்பதாவது:-
ஈரான் நாட்டிற்கு மீன்பிடிப்பதற்காக சென்றிருந்தோம். தற்போது போர் நடந்து வருவதால் உணவு, தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகிறோம். நாங்கள் வசித்து வரும் பகுதிக்கு அருகே தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது. காலையில் உயிரோடு இருப்போமா என்ற அச்சத்தில் தான் இரவு தூங்க செல்கிறோம்.
இரவு காற்றடித்து கதவு அடித்தால் கூட குண்டு போட்டு விட்டார்களோ என்ற அச்சத்தில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. பிரதமர் மோடி உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது செல்போனில் உள்ள டவர்களும் துண்டிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் அனுப்பக்கூடிய கடைசி வீடியோவாக கூட இது இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
- குமரி மாவட்ட இளைஞர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் மாணவியை மிரட்டியுள்ளார்.
- மாணவியின் தாயிடம் செல்போனில் பேசி 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவிக்கு, சமூகவலைதளம் மூலமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அஜய் என்ற வாலிபர் அறிமுகமானார்.
அந்த மாணவியிடம், வாலிபர் அஜய் செல்போனில் அடிக்கடி பேசியபடி இருந்துள்ளார்.
மேலும் மாணவியின் செல்போனுக்கு ஆபாச படங்களை தொடர்ந்து அனுப்பி உள்ளார்.
அதுமட்டுமின்றி ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி, மாணவியிடமிருந்து அவரது அந்தரங்க வீடியோக்களை பெற்றுக் கொண்டார்.
அந்த வீடியோக்களை தனது செல்போனில் சேமித்து வைத்துக்கொண்டு, தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தனக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் குமரி மாவட்ட இளைஞர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் மாணவியை மிரட்டியுள்ளார்.
அது மட்டுமின்றி மாணவிக்கு இன்ஸ்டாகிராமில் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்தது மட்டுமின்றி, வாட்ஸ்-அப் குரூப் தொடங்கி, அதில் மாணவியின் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு மிரட்டி வந்துள்ளார்.
இதனால் பயந்த மாணவி, அது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் வாலிபர் அஜய், மாணவியின் தாயிடம் செல்போனில் பேசி 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.
பணத்தை தரவில்லை என்றால் மாணவியின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அது மட்டுமுன்றி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை அவரது உறவினருக்கு அனுப்பியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து வாலிபர் அஜய் மீது மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் செய்தார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை போலீசார் உத்தரபிரதேசத்துக்கு சென்று வாலிபர் அஜயை கைது செய்தனர். பின்பு அங்கிருந்து மார்த்தாண்டத்துக்கு அழைத்து வந்தனர்.
கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயை மிரட்டிய விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி, அதிலிருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
- வாகனங்களை நிறுத்தி கொடிக்கம்பம் நட்டதோடு தகர கொட்டகையும் அங்கு அமைத்து இருந்தனர்.
- சாலையில் வாகனங்களை நிறுத்தியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தக்கலை:
குமரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்த போலீசார் அனுமதி பெற வேண்டும். இந்த நிலையில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன்றோ கவின் தலைமையில் போலீசார் பரைக்கோடு பகுதியில் ரோந்து சென்ற போது, சாலையோரம் அனுமதி பெறாமல் கூட்டம் நடப்பது தெரியவந்தது.
பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி கொடிக்கம்பம் நட்டதோடு தகர கொட்டகையும் அங்கு அமைத்து இருந்தனர். பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இவற்றை செய்திருந்ததாக தமிழக வெற்றிக் கழக மத்திய மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார், வக்கீல் அணி ஒருங்கிணைப்பாளர் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் சாலையில் வாகனங்களை நிறுத்தியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- மக்களின் கோரிக்கையை ஏற்று உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.
- இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொகுதியில் மக்களுக்கு தனது சொந்த செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் மக்களின் தேவைகளை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்து சாலை பணிகள், அங்கன்வாடி, நியாயவிலைக் கடை, பள்ளி வகுப்பறைகள், உயர் கோபுர சோலார் மின்விளக்கு போன்ற முக்கிய பணிகள் செய்து வருகிறார், அந்த வகையில் அன்னைநகர் மக்களின் கோரிக்கையை ஏற்று உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம். பள்ளம் துறை ஊராட்சி, அன்னை நகரில் பாரளுமன்ற உறுப்பினர் தொகுதி (2025-2026) மேம்பாடு நிதியிலிருந்து ரூ. 25,00,000 இலட்சம் செலவில் உள் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு நிதி ஓதுக்கீடு செய்து இன்று அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னைநகர் பங்குதந்தை ரெமண்ட் அர்ச்சிப்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார தலைவர் அசோக்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் மணக்குடி லாரன்ஸ், நாகர்கோவில் மாநகர பொதுச்செயலாளர் கலையரசு, அன்னை நகர் ஊர் தலைவர் கென்னடி, அன்னை நகர் முன்னாள் ஊர் தலைவர் ஆன்சல், அன்னை நகர் காங்கிரஸ் தலைவர் லூயிஸ், பள்ளம் பஞ்சாயத்து கமிட்டி காங்கிரஸ் தலைவர் கெவின், புத்தளம் பேரூராட்சி தலைவர் ரங்கன், தர்மபுரம் பஞ்சாயத்து பொருளாளர் ரவிசந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வி, சார்லஸ் செல்லையா, ஒப்பந்தக்காரர் முருகன் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மகா திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
- கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடைவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த மகா திருவிழாவைக் காணத் தமிழ் நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்த கொடியேற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார், திருக்கோயில் இணை ஆணையர் ஜான்சி ராணி உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரின் தாயார் தமிழ்செல்வி வசந்தகுமார், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி உதயம், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி காங்கிரஸ் விளையாட்டு துறை கிழக்கு மாவட்ட தலைவர் அருண், மண்டைக்காடு பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் சுந்தர், வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
- அதில், வளைகுடா வாழ் இந்தியர்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி:
வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, விஜய் வசந்த் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வளைகுடா பகுதியில் மோசமடைந்து வரும் அரசியல் சூழ்நிலை குறித்து எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்திய தகவல்களின்படி, ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளை பாதித்துள்ளன. இதனால் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அதிகரிப்பு, விமானப் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் பதற்ற நிலை, அங்கு வாழ்ந்து வேலை செய்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும், அதில் பெரும்பங்கு வகிக்கும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அச்சம் மற்றும் நிலையற்ற சூழ்நிலை உருவாக்கியுள்ளது. சில பகுதிகளில் குண்டு சத்தங்கள் கேட்கப்பட்டதுடன், அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வெளியுறவு அமைச்சகம் உடனடி மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்:
பாதிக்கப்பட்ட அனைத்து இந்திய தூதரகங்களிலும் அவசர ஒத்துழைப்பு மையங்களை அமைத்தல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நேரடி அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல், இந்திய தொழிலாளர்களுக்கான தனிப்பட்ட உதவி எண்களை செயல்படுத்தி, விரைவான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.
நிலைமை மோசமடைந்தால் அவசர வெளியேற்றத்திற்கான முன்னெச்சரிக்கை திட்டங்களை தயார் செய்தல், இந்தியர்களின் பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் உறுதிசெய்ய அந்த நாடுகளுடன் தூதரக மட்டத்தில் தொடர்பை ஏற்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அவசரமான சூழ்நிலையில், இந்திய குடிமக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி தலையீட்டை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இந்திய அரசு விரைவாகவும், உறுதியுடனும் செயல்படும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
- இந்த கூட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லக்கண்ணு வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இதை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா ஸ்டேடியம் அமைந்துள்ள ஜீவா சிலை முன்பு மௌன அஞ்சலி இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த மௌன அஞ்சலி இரங்கல் கூட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம், காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, சிஜயூடி நிர்வாகி நூர்முகமது, திமுக மாநகர செயலாளர் ஆனந்த், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், நாம் தமிழர் கட்சி மரியஜெனிபர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் பகலவன், தமிழக வெற்றி கழகம் சார்பில் எஸ் ஆர் மாதவன் உட்பட அனைத்து கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
- அரசியல் நேர்மைக்கும், பொதுநலத்திற்குமான அர்ப்பணிப்புக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு.
கன்னியாகுமரி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் இயக்கங்களின் முன்னோடி, எளிமையின் உருவகமாக வாழ்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
வாழ்நாள் முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஓய்வின்றி போராடிய அவர், அதிகாரத்தில் அல்ல, மக்களின் இதயங்களில் தங்கிய தலைவர். அரசியல் என்பது அதிகாரம் மட்டுமல்ல, அது மனிதநேயப் பொறுப்பு என்பதை தனது வாழ்வால் நிரூபித்தவர்.
எளிமையான வாழ்க்கை, தெளிவான கொள்கை, உறுதியான நிலைப்பாடு, இவை அனைத்தும் நல்லகண்ணு அவர்களின் அடையாளங்கள். அரசியல் நேர்மைக்கும், பொதுநலத்திற்குமான அர்ப்பணிப்புக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு.
அவரது மறைவு குடும்பத்தினருக்கும், கட்சித் தோழர்களுக்கும் மட்டுமல்ல, சமூகநீதியை நம்பும் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பு.
அவரது சேவைகளை நினைவு கூர்ந்து, அவரது இலட்சியங்களை முன்னெடுத்து செல்லுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அவரது சேவைகளுக்கு முன் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை நிறுத்த முயற்சி மேற்கொண்டனர்.
- பா.ஜ.க. இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது, வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தால் அங்கு பா.ஜ.க. இருக்காது.
நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை நிறுத்த முயற்சி மேற்கொண்டனர்.
* பா.ஜ.க. என்கிற டப்பா எஞ்சினை நம்பி அ.தி.மு.க. உள்ளது.
* அ.தி.மு.க. என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க. இருக்கிறது.
* பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது.
* பா.ஜ.க. இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது, வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தால் அங்கு பா.ஜ.க. இருக்காது.
* குஜராத் மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு தமிழ்நாடு மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் தரவில்லை.
* மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டை குறை சொல்லி பேச பா.ஜ.க.வினருக்கு தகுதி இருக்கிறதா?
- தமிழ்நாடு சென்னையில் இருந்து ஆளப்பட வேண்டும், டெல்லியில் இருந்து அல்ல.
நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* எப்போது தான் வன்முறையை விட்டு வளர்ச்சியை பற்றி பா.ஜ.க.வினர் பேசுவார்கள்?
* நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவெடுக்க இவர்கள் யார்?
* தமிழ்நாட்டை குறை சொல்லி பேச பா.ஜ.க.வினருக்கு தகுதி இருக்கிறதா?
* தமிழ்நாட்டு மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
* தமிழ்நாடு சென்னையில் இருந்து ஆளப்பட வேண்டும், டெல்லியில் இருந்து அல்ல.
* வாய்க்கு வந்தபடி எல்லாம் வடை சுட்டுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி
* நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருவர் ரூ.15 லட்சம் தரேனு வடை சுட்டமாதிரி, இப்போ வெரைட்டி வெரைட்டியா இ.பி.எஸ். வடை சுட்டுட்டு இருக்கிறார். ஆனால் இந்த வடைகளை நம்ப மக்கள் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 50 ஆண்டுகள் தொடர் உழைப்பால் தி.மு.க.வின் தலைவர் என்ற இடத்தை அடைந்துள்ளேன்.
- தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி வருவார்.
நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி உள்ளது திராவிட மாடல் அரசு.
* 50 ஆண்டுகள் தொடர் உழைப்பால் தி.மு.க.வின் தலைவர் என்ற இடத்தை அடைந்துள்ளேன்.
* தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்.
* சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை வட்டமடிப்பார்கள்.
* தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி வருவார்.
* என்னுடைய சக்திக்கு மீறி உங்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
* தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் நாங்கள் தான் என்பதை தினந்தோறும் செயல்களால் நிரூபிக்கிறோம்.
* தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






