என் மலர்
நீங்கள் தேடியது "வெளியுறவு அமைச்சகம்"
- இந்த தீர்ப்பை ஷேக் ஹசீனா, பாரபட்சமானது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவித்திருந்தார்.
- இந்தியா- வங்கதேச இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆட்சியும் கவிழ்ந்தது. உடனே ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
வங்காள தேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றது. புதிய அரசு அமைந்ததும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தனது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அவர் கொல்ல உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.
மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக அவருக்கு எதிரான வழக்கில் இன்று அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்து, மரண தண்டனை அளித்து உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை ஷேக் ஹசீனா ஏற்கவில்லை. பாரபட்சமானது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இந்தியா- வங்கதேச இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசை வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.
நெருங்கிய அண்டை நாடாக, வங்கதேச மக்களின் நலன்களுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதில் அமைதி, ஜனநாயகம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அடங்கும். அந்த நோக்கத்திற்காக அனைத்து கூட்டாளிகளுனும் நாங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக பணியாற்றுவோம்" என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
- மார்க் ரூட்டே CNN தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
- ரூட்டேவின் கூற்று உண்மைக்கு மாறான முற்றிலும் ஆதாரமற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்திற்கு வந்திருந்த நேட்டோ (NATO) அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே CNN தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவின் மீதான 50% வரிகளை டிரம்ப் விதித்தது, ரஷியா மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதினை போனில் அழைத்து உக்ரைன் போர் உக்ரைன் போரில் ரஷியாவின் வியூகம் என்ன என்று கேட்க வைத்தது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இதுபோன்ற எந்த உரையாடலும் நடக்கவில்லை என்றும் ரூட்டேவின் கூற்று உண்மைக்கு மாறான முற்றிலும் ஆதாரமற்ற ஒன்று என மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
- அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.
- அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுகிறது.
ஈரானில் வேலைவாய்ப்பு தருவதாக நடக்கும் மோசடிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சில ஏஜென்ட்கள் இந்தியர்களுக்கு ஈரானில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வழங்குவதாக அல்லது அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.
இவர்களின் பேச்சுகளை நம்பி ஈரானுக்குச் செல்லும் இந்தியர்கள், அங்குள்ள குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டு, பணயக்கைதிகளாக வைக்கப்படுகின்றனர்.
பின்னர், அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுவதாக அரசுக்குத் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக இத்தகைய வழக்குகள் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற போலியான உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
- ரஷிய தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து இந்தியாவுக்கு கவலை இல்லை.
- இந்தியாவின் வழக்கமான எண்ணெய் சப்ளையர்கள் தங்கள் விநியோகங்களை ஐரோப்பாவிற்கு திருப்பிவிட்டனர்.
"இந்தியா ரஷியாவிடம் இருந்து ரஷியா பணத்திற்கு அதிக அளவில் கச்சாய் எண்ணெய் மட்டும் வாங்கவில்லை. அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.
ரஷிய தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி இந்தியாவுக்கு கவலை இல்லை. இதன் காரணமாக நான் இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பை கணிசமான அளவில் உயர்த்த இருக்கிறேன் .
ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு வரிகளை மேலும் அதிகரிக்க போகிறேன்" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசுகையில், இந்தியாவின் எரிசக்தி கொள்கை அதன் தேசிய நலன் மற்றும் உலக சந்தையின் நிர்ப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது அவசியமான நடவடிக்கை.
உக்ரைன் போர் தொடங்கியபோது, இந்தியாவின் வழக்கமான எண்ணெய் சப்ளையர்கள் தங்கள் விநியோகங்களை ஐரோப்பாவிற்கு திருப்பிவிட்டனர்.
அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவுக்கு குறைந்த வாய்ப்புகள் இருந்தன. எனவே ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது லாபம் ஈட்டும் உத்தி அல்ல, மாறாக பொதுவான இந்திய நுகர்வோருக்கு மலிவான மற்றும் தடையற்ற விநியோகத்தை வழங்குவதற்கான முன்னுரிமையாகும்.
இந்தியாவை விமர்சிக்கும் நாடுகள் தாங்களே ரஷியாவிடம் வணிகம் செய்கின்றன. அவர்களுக்கு அப்படி செய்வது கட்டாயம் அல்ல. ஆனால் அவர்கள் லாபத்திற்காக அவ்வாறு செய்கிறார்கள் என்பதுதான் ஒரே வித்தியாசம். மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன், அவர்கள் தங்கள் சொந்த நடத்தையைப் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
- பிரியங்க் கார்கேவின் அமெரிக்க பயணத்திற்கு முதலில் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
- வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, தனது அமெரிக்க பயணத்திற்கான அனுமதியை வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ளார். முன்னதாக அனுமதி மறுத்த நிலையில், தற்போது வெளியுறவு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக பிரியங்க் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜூன் 14 முதல் 27 வரை கர்நாடக அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், சிறந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான பரிந்துரைகளுக்காக 25 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ சந்திப்புகளில் பங்கேற்க அமெரிக்கா செல்வதற்காக நான் மே 15 அன்று அனுமதி கோரியிருந்தேன்.
ஆனால் எனது விண்ணப்பம் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இப்போது வெளியுறவு அமைச்சகம் தனது முடிவை மாற்றிக்கொண்டு அமெரிக்கா செல்வதற்கு எனக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது" என்றுதெரிவித்தார்.
2 நாட்களுக்கு முன்பு தனது அமெரிக்க பயணத்திற்காக ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தக் கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலை குறித்து 24/7 கட்டுப்பாட்டு அறை ஒன்று வெளியுறவு அமைச்சகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் அர்மேனியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக தெஹ்ரானில் இருந்த 110 இந்திய மாணவர்கள் அர்மேனியாவுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 90 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள்.
மேலும் தெஹ்ரானில் இருந்து சொந்த ஏற்பாடுகளில் வெளியேறக்கூடிய மற்ற இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலை குறித்து 24/7 கட்டுப்பாட்டு அறை ஒன்று வெளியுறவு அமைச்சகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் 24/7 அவசர உதவி எண்ணை (98 9128109115, 98 9128109109) அமைத்துள்ளது. வாட்ஸ்அப் எண்களும் (98 901044557, 98 9015993320, 91 8086871709) வழங்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் அணு, ஏவுகணை மற்றும் இராணுவத் தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்தியா இரு நாடுகளையும் பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இஸ்ரேல் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்களுடன் நிலைமை குறித்து விவாதித்தார்.
- அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்கள் உட்பட, மாறிவரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
- இந்தியா இரு நாடுகளுடனும் நெருங்கிய மற்றும் நட்பு உறவுகளைக் கொண்டுள்ளது.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், இன்று அதிகாலை 3:30 மணிக்கு ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த மோதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்திய நிகழ்வுகள் குறித்து நாங்கள் மிகுந்த கவலையுடன் இருக்கிறோம்.
அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்கள் உட்பட, மாறிவரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இரு தரப்பினரும் எந்தவிதமான பதட்டத்தையும் அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு இந்தியா வலியுறுத்துகிறது.
சூழ்நிலையைத் தணிக்கவும், அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தற்போதைய பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தியா இரு நாடுகளுடனும் நெருங்கிய மற்றும் நட்பு உறவுகளைக் கொண்டுள்ளதுடன், அனைத்து விதமான ஆதரவையும் வழங்க தயாராக உள்ளது" என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் அந்த அறிக்கையில், "இரு நாடுகளிலும் உள்ள எங்கள் தூதரகங்கள் இந்திய சமூகத்துடன் தொடர்பில் உள்ளன. பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும், உள்ளூர் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது.
- குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.
- இதுதொடர்பான சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இங்கிலாந்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார்.
இதற்கிடையே லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது. அதில், குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. 2-வது பகுதி 23-ம் தேதி ஒலிபரப்பாகிறது.
இந்நிலையில், இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:
பி.பி.சி. ஆவணப்படம் அடிப்படையற்ற ஒன்றை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரசார படம். அதில் பாரபட்சமும், தொடரும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் அப்பட்டமாகத் தெரிகிறது.
இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளற விரும்புபவர்களின் வெளிப்பாடாக அப்படம் தோன்றுகிறது. அதன் நோக்கமும், அதற்கு பின்னால் உள்ள செயல்திட்டமும் நமக்கு வியப்பளிக்கிறது என தெரிவித்தார்.
இந்த சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளார்.
- மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட இணைய தளங்கள் செயலிழந்து பல மணி நேரம் முடங்கின.
- தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் இந்தச் சிக்கலை தீர்க்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மாலி:
மாலத்தீவின் அதிபர், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் செயலிழந்து, பல மணி நேரம் முடங்கின.
அரசாங்கத்தின் உயர்மட்ட இணைய தளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் கண்டறியப்படாமல் இருந்து வந்தது. தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் இந்தச் சிக்கலை தீர்க்க தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாலத்தீவு அரசாங்கத்தின் முடங்கிய இணைய தளங்கள் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின.
- காஷ்மீர் மக்களின் விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
- இன்றும் நமது காஷ்மீர் சகோதரர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கின்றது
துருக்கி நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் கடந்த வாரம் பாகிஸ்தான் பயணத்தின் போது காஷ்மீர் பிரச்சினை குறித்து கருத்து ஒன்றை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட எர்டோகன், "காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. தீர்மானத்தின்படி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும், காஷ்மீர் மக்களின் விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
மேலும் 'நமது தேசமும் (துருக்கி), முன்பு போலவே, இன்றும் நமது காஷ்மீர் சகோதரர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கின்றது' என்று தெரிவித்தார்.
எர்டோகனின் கருத்துக்கள் குறித்த கேள்விக்கு நேற்று செய்தியாளர்களிடம் பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், " ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இது குறித்து வேறு எந்த நாட்டிற்கும் கருத்து தெரிவிக்க உரிமை இல்லை.

வேறொரு நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக, இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பயன்படுத்தும் பாகிஸ்தானின் கொள்கையைத் கண்டிப்பது பொருத்தமாக இருந்திருக்கும்.
பாகிஸ்தானின் இந்தக் கொள்கை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்த இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம்.
டெல்லியில் உள்ள துருக்கிய தூதரிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை குறித்த இத்தகைய பொருத்தமற்ற அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்தார்.
- போராட்டக்காரர்களில் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஜெய்சங்கரின் காரை நிறுத்த முயன்றார்
- பிரிட்டனின் அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.
பிரிட்டனில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேட்டியளித்துள்ளார்.
லண்டனில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கார் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஜெய்சங்கரின் காரை நிறுத்த முயன்றார். அதைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஜெய்ஸ்வால், இது காலிஸ்தானியர்களின் அச்சுறுத்தல்கள், மிரட்டல் சம்பவங்கள். இது நமது சட்டப்பூர்வமான இராஜதந்திர நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் நடப்பவை மீதான பிரிட்டனின் அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்த குழுக்கள் பிரிட்டனில் அச்சுறுத்தல் விடுக்கவும் பிற செயல்களைச் செய்யவும் உரிமம் பெற்றிருப்பது போல் தெரிகிறது. அவர்கள் எங்கள் இராஜதந்திரப் பணிகளைத் தடுக்க முயல்கிறார்கள்.
இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் மீது இங்கிலாந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இங்கிலாந்து வருகையின் போது சாத்தம் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.
அமைதியான போராட்டத்திற்கான உரிமையை இங்கிலாந்து ஆதரிக்கிறது. ஆனால் பொது நிகழ்வுகளை மிரட்டும், அச்சுறுத்தும் அல்லது சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே மொரிஷியஸின் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி, மார்ச் 11-12 தேதிகளில் மொரிஷியஸுக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.






