search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priyank Kharge"

    • கர்நாடக சட்டசபையில் இருந்து சாவர்க்கர் உருவப்படத்தை அகற்றுவேன் என பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
    • காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக மும்பை, நாக்பூரில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக சட்டசபையில் இருந்து சாவர்க்கரின் உருவப்படத்தை அகற்றுவது சரியானது. அனுமதித்தால் அதை அகற்றுவேன் என தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், சாவர்க்கரின் சித்தாந்தம் வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதால் கர்நாடக சட்டசபையில் அவரது புகைப்படம் இருக்கக் கூடாது என தான் கருதுகிறேன். சாவர்க்கருக்கு வீர் பட்டம் கொடுத்தது யார்? அதில் தெளிவு இல்லை. பா.ஜ.க.வுக்கு தெரிந்தால் சொல்லட்டும். சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் ஓய்வூதியம் வாங்கினாரா இல்லையா? மன்னிப்பு கடிதம் எழுதினாரா, இல்லையா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக மும்பை மற்றும் நாக்பூரில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், வீர சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் கூறுகையில், காங்கிரஸ் நீண்ட காலமாக வீர் சாவர்க்கரையும் புரட்சியாளர்களையும் துஷ்பிரயோகம் செய்து வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை.
    • மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

    பெங்களூர்:

    கர்நாடக காங்கிரஸ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியதாவது:-

    காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணைகட்ட திட்டமிட்டுள்ளோம். யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை. மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பிரியங்க் கார்கேவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை தமிழக அமைச்சர் துரைமுருகன் சந்தித்த நிலையில் கர்நாடக மந்திரி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதாவினர் வித்தியாசமான முறையில் ஊழல்களை செய்துள்ளனர்.
    • பிட்காயின் விஷயத்திலும் முறைகேடுகள் செய்துள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த முறை நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இதுகுறித்து நாங்கள் விவாதித்தோம். விசாரணை நடத்த எந்த ரீதியில் குழுக்களை அமைப்பது என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பா.ஜனதா அரசின் அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். எந்த வகையான விசாரணை என்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா இறுதி முடிவு எடுப்பார்.

    பா.ஜனதாவினர் வித்தியாசமான முறையில் ஊழல்களை செய்துள்ளனர். தொழில்நுட்ப முறைகேடுகள் நடந்துள்ளன. பிட்காயின் விஷயத்திலும் முறைகேடுகள் செய்துள்ளனர். இத்தகைய முறைகேடுகளை விசாரிக்க சைபர் குற்றங்களில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள். தொழில்நுட்பங்கள் நன்றாக தெரிந்த அதிகாரிகள் இருக்க வேண்டும்.

    சில ஊழல்கள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) அமைக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில ஊழல்கள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் மட்டத்திலான அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது.

    அதனால் ஊழல்களின் தன்மையை பொறுத்து விசாரணை நடைபெற உள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். எந்த விதமான பாகுபாடும் இன்றி விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு மந்திரி பிரியங்க் கார்கே கூறினார்.

    • சில ஊழல்களை நீதித்துறை விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது.
    • மக்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடக கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து எந்த அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து முடிவு செய்வோம். வெவ்வேறு வகையான ஊழல் புகார்கள் உள்ளதால், வெவ்வேறு ரீதியில் குழுக்கள் மூலம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. பிட்காயின் முறைகேடு குறித்து விசாரிக்க சைபர் குற்றத்தை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேண்டும்.

    சில ஊழல்களை நீதித்துறை விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது. தேர்தலுக்கு முன்பு நாங்கள், முந்தைய பா.ஜனதா ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். அந்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம். முந்தைய ஆட்சியில் நடைபெற்ற பிட்காயின், சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடு, கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனம், மின்துறை என்ஜினீயர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நாங்கள் விசாரணை நடத்த இருக்கிறோம்.

    மக்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் நாங்கள் பணியாற்றுவோம். கங்கா கல்யாண் திட்ட முறைகேடு குறித்து விதான சவுதா போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவாகியுள்ளன. கல்யாண கர்நாடக வாரிய நிதியிலும் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும்.

    விசாரணைக்கு பிறகு ஊழல் செய்தவா்கள் யார் என்பது தெரியவரும். ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

    • கர்நாடகத்திற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத்தொகை வரவில்லை.
    • நாங்கள் நிதிநிலையை சீராக்குவோம்.

    பெங்களூரு :

    கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    அரசில் ஒவ்வொரு திட்டமும் விதிமுறைகள், வழிமுறைகள் அடிப்படையில் தான் அமல்படுத்தப்படுகிறது. இது பொது மக்களின் பணம். வரி செலுத்துவோரின் பணம் என்பதால் இதை கவனமாக கையாள வேண்டியது அவசியம். அதனால் அதற்கு நிபந்தனைகள் இருக்க வேண்டியது அவசியம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் எந்த திட்டத்திற்கும் விதிமுறைகள் இல்லை என்பதை சொல்லுங்கள்.

    அரசின் திட்ட பயன்கள் தகுதியான அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது தவறா?. ஏழை மக்களுக்காக தான் அரசே உள்ளது. 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிபந்தனைகள் இன்றோ (நேற்று) அல்லது நாளையோ (இன்று) இறுதி செய்யப்படும். அதனால் யாரும் கவலைப்பட தேவை இல்லை.

    இரட்டை என்ஜின் அரசின் தவறான செயல்பாடுகளால் தான் மாநில அரசின் நிதிநிலை மோசமான நிலையில் உள்ளது. கர்நாடகத்திற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத்தொகை வரவில்லை. கொரோனா நெருக்கடி காலத்தில் நிதி நிர்வாகம் தவறான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தான் இன்று கர்நாடகம் கடன் சுமையில் சிக்கியுள்ளது.

    கடந்த காலங்களில் இதுகுறித்து சட்டசபை கூட்டத்தில் நான் பிரச்சினை கிளப்பி பேசினேன். தற்போது எங்கள் அரசு அமைந்துள்ளது. நாங்கள் நிதிநிலையை சீராக்குவோம்.

    இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.
    • பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    பேச்சுவார்த்தை முடிவில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.

    இந்நிலையில், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியுடன் சேர்த்து 8 மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, புதிதாக பதவியேற்க உள்ள 8 மந்திரிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் இன்று பதவியேற்க உள்ளர். முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ்ஜர்க்கிஹோலி உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்.

    ராமலிங்க ரெட்டி, ஜாமீர் அகமத்கான் ஆகியோரும் கர்நாடகா அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    • துணை ஜனாதிபதி நீதித்துறையை தாக்கி பேசினார்.
    • கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவரான முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முன்பு முரளி மனோகர் ஜோஷி, நாங்கள் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என கூறினார். அதன்பிறகு மத்திய மந்திரியாக இருந்த அனந்தகுமார் அதே கருத்தை தெரிவித்தார். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம், பிரிட்டீஷ் நாட்டை தழுவி எழுதப்பட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள்.

    ஆங்கிலேயரின் அரசியல் சாசனத்தில் இட ஒதுக்கீடு என்ற அம்சம் உள்ளதா?. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு வந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பிற நாடுகளின் சில அம்சங்கள் மட்டுமே அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் நீதித்துறை மீது பா.ஜனதா தாக்குதல் நடத்துகிறது. துணை ஜனாதிபதி நீதித்துறையை தாக்கி பேசினார். அதைத்தொடர்ந்து மத்திய சட்டத்துறை மந்திரி நீதித்துறையை தாக்கி கருத்துகளை தெரிவிக்கிறார்.

    நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது. இருட்டில் ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். பி.எம். கேர்ஸ் நிதி விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை எங்கு பின்பற்றப்படுகிறது?. நீதிபதிகள் நியமனம் குறித்து முடிவு எடுக்கும் குழுவில் அரசின் பிரதிநிதி இருக்க வேண்டும் மத்திய அரசு சொல்கிறது.

    இதை காங்கிரஸ் கட்சி தீவிரமாக கண்டிக்கிறது. நீதித்துறை மீதான தாக்குதலுக்கு எதிரான மாநாடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் அரசின் கொள்கையாக மாற்றப்பட்டு வருகிறது. பா.ஜனதா ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் அந்த மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

    பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், எப்போதாவது தங்கள் ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூறி இருக்கிறாரா?. இத்தகையவர்கள் காங்கிரசை குறை கூறினால் அதை நாங்கள் கண்டு கொள்ள வேண்டுமா?.

    இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

    • காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் காா்கே செய்தியாளர்களை சந்தித்தார்.
    • கர்நாடகாவில் தற்போதைய ஆட்சியில் அரசுப்பணி வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றார்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே கல்புர்கியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கர்நாடகத்தில் தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் அரசு பணி வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும். அத்துடன் பெண்கள் என்றால் அவர்கள் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கிறது.

    மந்திரியாக இருந்த ஈசுவரப்பா 40 சதவீத கமிஷனை கேட்டதால் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டார். இந்த அரசு லஞ்ச-படுக்கை அரசாக மாறிவிட்டது.

    ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.

    பிரியங்க் கார்கேவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற விடுமுறை அளிக்கக்கூடாது என்றும், அவர்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி முதல்-மந்திரி குமாரசாமிக்கு, மந்திரி பிரியங்க் கார்கே கடிதம் எழுதியுள்ளார். #Karnataka #Kumaraswamy
    பெங்களூரு :

    கூட்டணி ஆட்சியில் சமூக நலத்துறை மந்திரியாக இருந்து வருபவர் பிரியங்க் கார்கே. இவர், முதல்-மந்திரி குமாரசாமிக்கு எழுதி இருந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாநிலத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக அரசு ஊழியர்களின் வேலை பளு அதிகமாக உள்ளது. அரசு அலுவலகங்களில் ஏராளமான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

    இதற்கு முன்பு ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரியாக இருந்தபோது மாநிலத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றினால் போதும் என்ற முடிவுக்கு வந்தார். அதன்படி, அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றினால் போதும் என்பதை அமல்படுத்தி செயல்படுத்தினார்.



    அப்போது அரசு ஊழியர்கள் சிறப்பாகவும், ஊக்கமாகவும் பணியாற்றினார்கள். கோப்புகள் தேங்காமல் பார்த்து கொண்டனர். நாளடைவில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றும் நடைமுறைகள் மாற்றப்பட்டு, 6 நாட்கள் பணியாற்றியே தீர வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போதும் அது தொடருகிறது.

    இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் அரசு ஊழியர்கள் பணியாற்றினால் போதும் என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற விடுமுறைகள் வழங்கக்கூடாது. வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு ஊழியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இதனை முதல்-மந்திரி குமாரசாமி தனது ஆட்சியில் அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    வாரத்தில் 6 நாட்களுக்கு பதிலாக 5 நாட்கள் அரசு ஊழியர்கள் பணியாற்றும் நடைமுறையை அமல்படுத்த கர்நாடக அரசு ஆலோசித்து வருவது குறிப்பிடத் தக்கதாகும். #Karnataka #Kumaraswamy
    ×