என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priyank Kharge"

    • கர்நாடக மாநிலங்களுக்கு வரும் முதலீடுகளை குஜராத், அசாமுக்கு திருப்புவதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு.
    • செமிகண்டக்டர் போன்ற பெரிய நிறுவனங்களை அமைப்பதற்கான திறன் இல்லை என பிரியங்க் கார்கே கூறியதாக குற்றச்சாட்டு.

    கர்நாடக மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனுமான பிரியங்க் கார்கே செய்தி சேனலில், கர்நாடகாவில் முதலீடு செய்ய இருந்த நிறுவனங்கள் குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்.

    அப்போது, செமிகண்டக்கர் உற்பத்தி போன்ற பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான திறன் வடகிழக்கு மாநிலங்களில் இல்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பிரியங்க் கார்கே மீது வழக்கு தொடர இருப்பதாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "பிரியங்க் கார்கே முதல் தர முட்டாள். அசாம் இளைஞர்களை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி இதுவரை அவருக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

    அசாம் மக்களுக்கு கல்வி அறிவு இல்லை. போட்டியான இளைஞர்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது அசாம் இளைஞர்களை இழிவுப்படுத்துவதாகும். இதனால் அவர் மீது வழக்கு தொடர்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • பதிவு செய்யப்படாத அமைப்பிற்கு பணம் எங்கிருந்து வருகிறது?.
    • நீங்கள் பதிவு செய்திருந்தால், வரி செலுத்த வேண்டும். சட்டத்திற்கு இணங்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான கார்கேயின் மகனும், கர்நாடக மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பாக பதிவு செய்யாதது குறித்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக பிரியங் கார்கே கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்று என் முகத்தின் மீது ஆதாரங்களை தூக்கி வீசினால், பிரச்சினை முடிந்தது. பதிவு செய்யப்படாத அமைப்பிற்கு பணம் எங்கிருந்து வருகிறது?, அவர்களுக்கு ஆடைகள் தைப்பதற்கு, பேரணிகள் நடத்துவதற்கு, டிரம்ஸ் போன்றவற்றை வாங்குவதற்கு, கட்டிடம் கட்டுவதற்கு பணம் எங்கிருந்து வருகிறது?. பதிவு செய்யப்படாத அமைப்பாக இருந்தால், எப்படி பணம் பெற முடியும்?.

    நீங்கள் பதிவு செய்திருந்தால், வரி செலுத்த வேண்டும். சட்டத்திற்கு இணங்க வேண்டும். வெளிநாட்டு மற்றும் தனியார் நன்கொடை குறித்த தகவல்ளை பகிர வேண்டும். ஆகவே, அவர்கள் பதிவு பெறவில்லை.

    இவ்வாறு பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

    பொது இடங்களில், ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பிரியங்க் கார்கே முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர்களுக்கு உதவி செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திருந்தார்.

    • முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
    • இதுகுறித்து சித்தராமையா விளக்கம் அளித்தார்.

    தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கர்நாடகாவில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.

    இதனையடுத்து தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார்.

    அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இதுகுறித்து விளக்கம் அளித்த சித்தராமையா, ஆர்எஸ்எஸ்க்கு மட்டுமின்றி, அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் முன் அனுமதி இல்லாமல் யாரும் எந்த ஒரு நிகழ்வையும் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்த தடை குறித்து ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.என். ராஜன்னா இதை விமர்சித்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், மைதானங்களிலும் சாலைகளிலும் தொழுகை நடத்துவதற்கு முஸ்லிம்கள் அரசிடம் அனுமதி பெறுவார்களா ? அல்லது முதலில் அனுமதி பெறச் சொன்னால் அவர்கள் கேட்பார்களா?, அமல்படுத்தக்கூடிய விதிகளை மட்டுமே அமல்படுத்த வேண்டும்.

    இந்த விதி எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று பார்போம்" என்று தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அமைச்சர் பதவியில் இருந்து ராஜன்னா நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்
    • இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கர்நாடகாவில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.

    இதனையடுத்து தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார்.

    அவ்வ்கையில் கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில், கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் அந்த அமைப்பின் சீருடை அணிந்து கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    • தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எப்படி குச்சிகளுடன் அணிவகுப்பு நடத்த முடியும்?

    தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கர்நாடகாவில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.

    இதனையடுத்து தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அமைச்சர் பிரியங்க் கார்கே, "தமிழ்நாட்டில் என்ன விதி இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, நாங்கள் சொல்வதெல்லாம், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளை தனியார் இடங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான். அவர்கள் அதை தங்கள் வீடுகளிலும், தனியார் நிலங்களிலும் ஒரு ஹோட்டலை வாடகைக்கு எடுத்து கொண்டு அவர்கள் விரும்பியதைச் செய்யட்டும். ஆனால், வகுப்புவாத விதைகளை விதைத்து மக்களை அச்சுறுத்தும் இந்த நிகழ்ச்சி நல்லதல்ல.

    ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தியாவின் சிறப்பு குடிமக்களா? அவர்கள் எப்படி குச்சிகளுடன் அணிவகுப்பு நடத்த முடியும்? வேறு எந்த சமூகத்தினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், ஓ.பி.சி.க்கள், தங்கள் சமூக வண்ணச் சட்டைகளை அணிந்துகொண்டு குச்சிகளைப் பிடித்து அணிவகுப்பு நடத்தினால், யாராவது அதை அனுமதிப்பார்களா? அவர்கள் பல ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறார்கள், அதற்காக அவர்கள் இதை தொடர வேண்டும் என்று அர்த்தமல்ல, இல்லையா? சட்டப்படி அவர்கள் அனுமதி பெறட்டும். அவர்கள் இந்திய அரசியலமைப்பை விட பெரியவர்கள் இல்லை" என்று தெரிவித்தார்

    இந்நிலையில், தனக்கு நிறைய மிரட்டல்கள் வருவதாக அமைச்சர் பிரியங்க் கார்கே தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கடந்த இரண்டு நாட்களாக, எனது தொலைபேசி நிறுத்தாமல் ஒலிக்கிறது. அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளை நான் கேள்வி கேட்கவும் தடுக்கவும் துணிந்ததால், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராக மிரட்டல்கள் மற்றும் மோசமான துஷ்பிரயோகங்கள் நிறைந்த அழைப்புகள் வருகிறது.

    ஆனால் இதற்காக நான் அதிர்ச்சியடையவில்லை மற்றும் ஆச்சரியப்படவும் இல்லை. மகாத்மா காந்தி அல்லது பாபாசாகேப் அம்பேத்கரையே ஆர்.எஸ்.எஸ். விட்டுவைக்காதபோது, அவர்கள் ஏன் என்னை விட்டுவைக்க வேண்டும்?

    அச்சுறுத்தல்கள் மற்றும் தனிப்பட்ட அவதூறுகள் என்னை அமைதிப்படுத்தும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் தவறாக நினைக்கிறார்கள்.

    புத்தர், பசவண்ணா மற்றும் பாபாசாகேப் அம்பேத்கார் ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. சமத்துவம், பகுத்தறிவு மற்றும் இரக்கத்தில் வேரூன்றிய சமூகம் மற்றும் இந்த நாட்டை மிகவும் ஆபத்தான (RSS) வைரஸ்களிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டிய நேரம் இது" என்று பதிவிட்டுள்ளார்.

    • பிரியங்க் கார்கேவின் அமெரிக்க பயணத்திற்கு முதலில் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
    • வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, தனது அமெரிக்க பயணத்திற்கான அனுமதியை வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ளார். முன்னதாக அனுமதி மறுத்த நிலையில், தற்போது வெளியுறவு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக பிரியங்க் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜூன் 14 முதல் 27 வரை கர்நாடக அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், சிறந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான பரிந்துரைகளுக்காக 25 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ சந்திப்புகளில் பங்கேற்க அமெரிக்கா செல்வதற்காக நான் மே 15 அன்று அனுமதி கோரியிருந்தேன்.

    ஆனால் எனது விண்ணப்பம் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இப்போது வெளியுறவு அமைச்சகம் தனது முடிவை மாற்றிக்கொண்டு அமெரிக்கா செல்வதற்கு எனக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது" என்றுதெரிவித்தார்.

    2 நாட்களுக்கு முன்பு தனது அமெரிக்க பயணத்திற்காக ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தக் கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துணை ஜனாதிபதி நீதித்துறையை தாக்கி பேசினார்.
    • கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவரான முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முன்பு முரளி மனோகர் ஜோஷி, நாங்கள் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என கூறினார். அதன்பிறகு மத்திய மந்திரியாக இருந்த அனந்தகுமார் அதே கருத்தை தெரிவித்தார். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம், பிரிட்டீஷ் நாட்டை தழுவி எழுதப்பட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள்.

    ஆங்கிலேயரின் அரசியல் சாசனத்தில் இட ஒதுக்கீடு என்ற அம்சம் உள்ளதா?. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு வந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பிற நாடுகளின் சில அம்சங்கள் மட்டுமே அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் நீதித்துறை மீது பா.ஜனதா தாக்குதல் நடத்துகிறது. துணை ஜனாதிபதி நீதித்துறையை தாக்கி பேசினார். அதைத்தொடர்ந்து மத்திய சட்டத்துறை மந்திரி நீதித்துறையை தாக்கி கருத்துகளை தெரிவிக்கிறார்.

    நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது. இருட்டில் ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். பி.எம். கேர்ஸ் நிதி விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை எங்கு பின்பற்றப்படுகிறது?. நீதிபதிகள் நியமனம் குறித்து முடிவு எடுக்கும் குழுவில் அரசின் பிரதிநிதி இருக்க வேண்டும் மத்திய அரசு சொல்கிறது.

    இதை காங்கிரஸ் கட்சி தீவிரமாக கண்டிக்கிறது. நீதித்துறை மீதான தாக்குதலுக்கு எதிரான மாநாடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் அரசின் கொள்கையாக மாற்றப்பட்டு வருகிறது. பா.ஜனதா ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் அந்த மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

    பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், எப்போதாவது தங்கள் ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூறி இருக்கிறாரா?. இத்தகையவர்கள் காங்கிரசை குறை கூறினால் அதை நாங்கள் கண்டு கொள்ள வேண்டுமா?.

    இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.
    • பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    பேச்சுவார்த்தை முடிவில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.

    இந்நிலையில், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியுடன் சேர்த்து 8 மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, புதிதாக பதவியேற்க உள்ள 8 மந்திரிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் இன்று பதவியேற்க உள்ளர். முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ்ஜர்க்கிஹோலி உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்.

    ராமலிங்க ரெட்டி, ஜாமீர் அகமத்கான் ஆகியோரும் கர்நாடகா அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    • கர்நாடகத்திற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத்தொகை வரவில்லை.
    • நாங்கள் நிதிநிலையை சீராக்குவோம்.

    பெங்களூரு :

    கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    அரசில் ஒவ்வொரு திட்டமும் விதிமுறைகள், வழிமுறைகள் அடிப்படையில் தான் அமல்படுத்தப்படுகிறது. இது பொது மக்களின் பணம். வரி செலுத்துவோரின் பணம் என்பதால் இதை கவனமாக கையாள வேண்டியது அவசியம். அதனால் அதற்கு நிபந்தனைகள் இருக்க வேண்டியது அவசியம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் எந்த திட்டத்திற்கும் விதிமுறைகள் இல்லை என்பதை சொல்லுங்கள்.

    அரசின் திட்ட பயன்கள் தகுதியான அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது தவறா?. ஏழை மக்களுக்காக தான் அரசே உள்ளது. 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிபந்தனைகள் இன்றோ (நேற்று) அல்லது நாளையோ (இன்று) இறுதி செய்யப்படும். அதனால் யாரும் கவலைப்பட தேவை இல்லை.

    இரட்டை என்ஜின் அரசின் தவறான செயல்பாடுகளால் தான் மாநில அரசின் நிதிநிலை மோசமான நிலையில் உள்ளது. கர்நாடகத்திற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத்தொகை வரவில்லை. கொரோனா நெருக்கடி காலத்தில் நிதி நிர்வாகம் தவறான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தான் இன்று கர்நாடகம் கடன் சுமையில் சிக்கியுள்ளது.

    கடந்த காலங்களில் இதுகுறித்து சட்டசபை கூட்டத்தில் நான் பிரச்சினை கிளப்பி பேசினேன். தற்போது எங்கள் அரசு அமைந்துள்ளது. நாங்கள் நிதிநிலையை சீராக்குவோம்.

    இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

    • சில ஊழல்களை நீதித்துறை விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது.
    • மக்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடக கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து எந்த அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து முடிவு செய்வோம். வெவ்வேறு வகையான ஊழல் புகார்கள் உள்ளதால், வெவ்வேறு ரீதியில் குழுக்கள் மூலம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. பிட்காயின் முறைகேடு குறித்து விசாரிக்க சைபர் குற்றத்தை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேண்டும்.

    சில ஊழல்களை நீதித்துறை விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது. தேர்தலுக்கு முன்பு நாங்கள், முந்தைய பா.ஜனதா ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். அந்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம். முந்தைய ஆட்சியில் நடைபெற்ற பிட்காயின், சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடு, கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனம், மின்துறை என்ஜினீயர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நாங்கள் விசாரணை நடத்த இருக்கிறோம்.

    மக்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் நாங்கள் பணியாற்றுவோம். கங்கா கல்யாண் திட்ட முறைகேடு குறித்து விதான சவுதா போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவாகியுள்ளன. கல்யாண கர்நாடக வாரிய நிதியிலும் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும்.

    விசாரணைக்கு பிறகு ஊழல் செய்தவா்கள் யார் என்பது தெரியவரும். ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

    • பா.ஜனதாவினர் வித்தியாசமான முறையில் ஊழல்களை செய்துள்ளனர்.
    • பிட்காயின் விஷயத்திலும் முறைகேடுகள் செய்துள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த முறை நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இதுகுறித்து நாங்கள் விவாதித்தோம். விசாரணை நடத்த எந்த ரீதியில் குழுக்களை அமைப்பது என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பா.ஜனதா அரசின் அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். எந்த வகையான விசாரணை என்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா இறுதி முடிவு எடுப்பார்.

    பா.ஜனதாவினர் வித்தியாசமான முறையில் ஊழல்களை செய்துள்ளனர். தொழில்நுட்ப முறைகேடுகள் நடந்துள்ளன. பிட்காயின் விஷயத்திலும் முறைகேடுகள் செய்துள்ளனர். இத்தகைய முறைகேடுகளை விசாரிக்க சைபர் குற்றங்களில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள். தொழில்நுட்பங்கள் நன்றாக தெரிந்த அதிகாரிகள் இருக்க வேண்டும்.

    சில ஊழல்கள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) அமைக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில ஊழல்கள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் மட்டத்திலான அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது.

    அதனால் ஊழல்களின் தன்மையை பொறுத்து விசாரணை நடைபெற உள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். எந்த விதமான பாகுபாடும் இன்றி விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு மந்திரி பிரியங்க் கார்கே கூறினார்.

    • யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை.
    • மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

    பெங்களூர்:

    கர்நாடக காங்கிரஸ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியதாவது:-

    காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணைகட்ட திட்டமிட்டுள்ளோம். யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை. மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பிரியங்க் கார்கேவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை தமிழக அமைச்சர் துரைமுருகன் சந்தித்த நிலையில் கர்நாடக மந்திரி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    ×