என் மலர்

    நாமக்கல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காந்திஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
    • மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன் உத்தரவின் பேரில் 60 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    காந்திஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    ஆய்வு

    காந்திஜெயந்தியை முன்னிட்டு இவ்விதிமுறைகள் முைறயாக பின்பற்றப்படுகிறதா? என்பது தொடர்பாக நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் திருநந்தன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதன்படி ஓட்டல்கள், வாகன பழுது பார்க்கும் பட்டறைகள், கடைகள் உள்ளிட்ட மொத்தம் 82 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 60 நிறுவனத்தினர் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன் உத்தரவின் பேரில் 60 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரின் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் 15 பேருடன் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளிப்பதற்காக வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 32).

    இவர் நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரின் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    தடுப்பணையில் குளித்தார்

    இந்த நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் 15 பேருடன் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளிப்பதற்காக வந்தனர். அப்போது அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

    ஜெகநாதன் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜெகநாதன் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் பரிசல், படகு மூலமாக ஜெகநாதனை வெகு நேரமாக தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இரவு நேரமாகி விட்டதால் தேடுதல் பணியை நிறுத்தினர்.

    2-வது நாளாக...

    இதையடுத்து 2-வது நாளாக இன்று காலை முதல் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் பரிசல், மீன்பிடி படகுகள் பயன்படுத்தி ஜெகநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆற்றில் மூழ்கிய அவரது கதி என்ன? என தெரியாமல் உறவினர்கள் ேசாகத்தில் மூழ்கியுள்ளனர்.

    மேலும் இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பரமத்தி பழைய கோர்ட்டு அருகே ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ரவிக்குமார் (வயது 50) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பழைய கோர்ட்டு அருகே ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் பரமத்தி போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பரமத்தி பழைய கோர்ட்டு வீதி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 50) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 205 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஒருவர் கைது

    அதேபோல் பிலிக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மது பாட்டில்களை விற்பனை செய்த வள்ளியம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த பழனி (55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.
    • தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இந்த நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கி செல்வர்.

    விலை சரிந்தது

    தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த வாரம் ஒரு கிலோ நாட்டுக் கோழி 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் நேற்று 300 ரூபாய்க்கு விற்பனையானது.

    புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதனால் புரட்டாசி மாதத்தில் பொதுமக்கள் அதிகளவில் அசைவம் உணவு சாப்பிட மாட்டார்கள். அதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் நாட்டுக் கோழிகள் விலை சரிவடைந்தது.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை விரும்புவதில்லை .அதனால் நேற்று நடந்த வார சந்தையில் நாட்டுக்கோழிகள் ் விலை சரிந்துள்ளது. தற்போது கோழி விலை குறைவாக உள்ளதால் தற்போது கோழிகளை உயிருடன் வாங்கி வைத்துக்கொண்டு புரட்டாசி முடிந்ததும் பயன்படுத்த அசைவ பிரியர்கள் வாங்கி செல்கின்றனர், என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரே காரில் காரிப்பட்டியில் இருந்து சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழழகனின் உறவினர் சந்தோஷ் வீட்டிற்கு திருவிழாவிறகாக சென்றனர்.
    • கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி மோதி விபத்துக்குள்ளாகி கார் கவிழ்ந்தது.

    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டி குழந்தைசாமி நாடார் நகரை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 35). கார் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவர்களது மகள்கள் யோசிகா (6), தர்ஷா(3).

    இவர்களும், அதே ஊரை சேர்ந்த உறவினர்கள் பிரபாகரன், சம்ருத், சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், கிருத்திகா மற்றொரு பெண் குழந்தை உட்பட மொத்தம் 9 பேர் ஒரே காரில் காரிப்பட்டியில் இருந்து சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழழகனின் உறவினர் சந்தோஷ் வீட்டிற்கு திருவிழாவிறகாக சென்றனர். அவர்கள் சேலத்தில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

    தந்தை- மகள் பலி

    அப்போது நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே மரவாபாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி மோதி விபத்துக்குள்ளாகி கார் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தமிழழகன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அவரது 3 வயது குழந்தை தர்ஷா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தது.

    சிகிச்சை

    படுகாயம் அடைந்த சதீஷ்குமார், விஜயலட்சுமி, கிருத்திகா, பிரபாகரன் , சம்ருத், யோசிகா மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகிய 7 பேருக்கும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து சம்பவம் குறித்து பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவிரி ஆற்றில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வேலூர் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இறந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்து கிடந்த நபர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட், மஞ்சள் நிறத்திலான சட்டை அணிந்திருந்தார். அவரது கையில் மஞ்சள் நிற கயிறும், வலது கையில் பச்சை, வெள்ளை கலந்த நிறத்திலான மோதிரம் அணிந்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் கட்சியினர் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.
    • சம்பவம் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவின்ராஜ். இவர் பா.ஜனதா மாநில ஊடகப்பிரிவு பெறுப்பாளராக உள்ளார்.

    இவர் சமூக இணையதளங்களில் தி.மு.க., காங்கிரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்து பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் குறித்து சர்சைக்குரிய வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலையில் நாமக்கல்லுக்கு வந்து பிரவின்ராஜை கைது செய்து கரூருக்கு அழைத்துச் சென்றனர்.

    பா.ஜனதாக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொட்டியம் தோட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கம்பி தயாரிக்கும் இரும்பு மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • சமத்துவபுரம் செல்லும் சாலையில் செல்வதற்காக திருச்செங்கோடு- பரமத்தி செல்லும் சாலையை கடந்த போது மோட்டார்சைக்கிள் மீது திருச்செங்கோட்டில் இருந்து அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் ஓட கிணத்து புதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 58).இவர் இரும்பு பாலம் அருகே உள்ள தொட்டியம் தோட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கம்பி தயாரிக்கும் இரும்பு மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சண்முகம் வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். நல்லூர் அருகே தொட்டியம் தோட்டம் 4 ரோடு பகுதியில் இருந்து சமத்துவபுரம் செல்லும் சாலையில் செல்வதற்காக திருச்செங்கோடு- பரமத்தி செல்லும் சாலையை கடந்த போது மோட்டார்சைக்கிள் மீது திருச்செங்கோட்டில் இருந்து அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் சண்முகம் தூக்கி வீசப்பட்டு மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தார். இதில் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சண்முகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் சக்திவேல் (39) என்பவர் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மோகன் பிரசாந்த் (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வடிவேல் (50). இவரது தேங்காய் குடோன் கபிலர்மலை-ஜேடர்பா ளையம் செல்லும் சாலையில் உள்ள செம்மடைபாளையம் அருகே உள்ளது.
    • தேங்காய்கள் குவிக்கப்பட்டருந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் சென்று கொண்டி ருந்தபோது. காற்றின் காரணமாக மின்சார கம்பி களில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவராக இருப்பவர் வடிவேல் (50). இவரது தேங்காய் குடோன் கபிலர்மலை-ஜேடர்பா ளையம் செல்லும் சாலை யில் உள்ள செம்மடை பாளையம் அருகே உள்ளது.

    இதில் சுமார் ரூ. 8 லட்சம் தேங்காய்கள் குவிக்கப்பட்டு இருந்தது. தேங்காய் விலை குறைவாக இருப்பதால் தேங்காயை உரிக்காமல் குவிக்கப்பட்டு மேல் தேங்காய் மஞ்சு களை(நார்) போட்டு தேங்காய்களை மூடி வைத்தி ருந்தனர். அதற்கு மேல் தேங்காய்கள் உலராமல் இருக்க தேங்காய் மட்டை களை போட்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் தேங்காய்கள் குவிக்கப்பட்டருந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் சென்று கொண்டி ருந்தபோது. காற்றின் காரணமாக மின்சார கம்பி களில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது. இதனால் தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் மஞ்சு களில்திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தேங்காய் குடோனில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் .இருப்பினும் காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து வடிவேல் நாமக்கல் தீயணைப்பு துறை யினருக்கும், வேலாயுதம்பா ளையம் தீயணைப்பு துறையினருக்கும் , ஜேடர்பாளையத்தில் உள்ள தீயணைப்பு வாகனத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் நாமக்கல் தீயணைப்பு துறை உதவி மாவட்டஅலுவலர் வெங்கடாசலம் தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள், வேலாயுதம்பா ளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள், ஜேடர்பாளை யத்தில் உள்ள தீயணைப்பு வாகனம் ஆகிய மூன்று வாகனங்களும் விரைந்து சென்று தேங்காய்களில் வேகமாக எரிந்து கொண்டி ருந்த தீயை சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுதனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ.75 லட்சம் மதிப்பிலான சுமார் 8 லட்சம் தேங்காய்கள் தீயில் எரிந்து நாசமாயின.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்யபிரியா பரமத்தி அருகே கரட்டுபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ள விட்டதில் சேலையால் தூக்குப்போட்டு சத்யபிரியா தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் தளவாபாளை யத்தை சேர்ந்தவர் கோகுல் (வயது 32). இவர் புகளூரில் உள்ள டி.என்.பி.எல் காகித ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யபிரியா (28). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    தற்கொலை

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்யபிரியா பரமத்தி அருகே கரட்டுபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மாலை சத்தியபிரியாவின் தாய் சாந்தி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ள விட்டதில் சேலையால் தூக்குப்போட்டு சத்யபிரியா தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினரை அழைத்து உடலை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சத்யபிரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சத்யபிரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காரணம் என்ன?

    சத்ய பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை.இது குறித்து

    பரமத்தி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்ய பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆகி 5 வருடத்திலேயே சத்யபிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo