என் மலர்
நீங்கள் தேடியது "Gas cylinder"
- குடும்பத்தினரை பார்க்க தனது சொந்த ஊரான சீரிம்பட்டி கிராமத்திக்கு மாதேசன் வந்துள்ளார்.
- வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாதேசன் பலத்த காயம் அடைந்து இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்டு இருந்தார்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேசன் (52). இவருக்கு திருமணம் ஆகி மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மாதேசன் வடமாநிலத்தில் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் குடும்பத்தினரை பார்க்க தனது சொந்த ஊரான சீரிம்பட்டி கிராமத்திக்கு மாதேசன் வந்துள்ளார். இன்று காலை சமையல் செய்வதற்காக சிலிண்டரின் அருகில் சென்றபோது திடீரென வெடித்து சிதறி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மாதேசன் தீக்காயங்களுடன் தூக்கி எறியப்பட்டுள்ளார். வீட்டின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது. மேலும் அருகில் இருந்த ஓட்டு வீட்டின் சில பகுதிகளும் சேதம் அடைந்தன.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வெளியே ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது மாதேசன் வீடு இடிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாதேசன் பலத்த காயம் அடைந்து இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்டு இருந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாதேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம், துணிமணிகள், மளிகை பொருட்கள், கட்டில், பீரோ என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின.
இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தடயவியல் துறை நிபுணர்களும் சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அதிகாலை வீட்டில் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்தது.
- பலியானவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நந்தியால் அடுத்த சார்பு ரேவூவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை வீட்டில் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் வீடு முழுவதும் தீ பரவியது. இதில் சுப்பம்மா (வயது 60), தினேஷ் (10) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நந்தியால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
- பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
டெல்லி தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது.
அவ்வகையில், ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் யுவ உதான் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வருடத்திற்கு 8,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
✨ Congress Ki Guarantee ✨ pic.twitter.com/62SxJrPTm7
— Congress (@INCIndia) January 16, 2025
- 2017 ஆம் ஆண்டு பாரத் கேஸ் ஏஜென்சியிடம் இருந்து சக்ரேஷ் ஜெய்ன் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார்.
- அப்போது அவருக்கு 753.50 ரூபாய்க்கு பில் தரப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் தான் வாங்கிய சிலிண்டரின் விலையை விட ரூ.1.50 அதிகமாக பெற்ற கேஸ் ஏஜென்சி மீது வழக்கு தொடர்ந்த சக்ரேஷ் ஜெய்ன் என்பவர் இழப்பீடாக ரூ.4,000 பெற்றுள்ளார்.
2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று பாரத் கேஸ் ஏஜென்சியிடம் இருந்து சக்ரேஷ் ஜெய்ன் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார். அப்போது அவருக்கு 753.50 ரூபாய்க்கு பில் தரப்பட்டுள்ளது. ஆனால் சிலிண்டரை டெலிவரி செய்தவர் அவரிடமிருந்து 755 ரூபாய் வசூலித்துள்ளார். மீதம் 1.50 ரூபாயை சக்ரேஷ் கேட்டபோது அந்த பணத்தை கேஸ் ஏஜென்சியிடம் வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்திடம் இது தொடர்பாக அவர் வழக்கு தொடர்ந்தார்.
7 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், மனுதாரருக்கு 4000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் இது மட்டுமன்றி சக்ரேஷிடம் பெற்ற ரூ1.50யை ஆண்டுக்கு 6% வட்டியுடன் சேர்த்து வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'இது வெறும் 1.50 ரூபாய்க்காக தொடரப்பட்ட வழக்கு அல்ல. எங்களது உரிமை மற்றும் சுயமரியாதைக்கான போராட்டம் இது' என்று வழக்கில் வெற்றி பெற்ற சக்ரேஷ் தெரிவித்தார்.
- வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 61.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் விலை 61.50 ரூபாய் அதிகரித்து 1964.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் இந்திய பணத்தின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் கியாஸ் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். சர்வதேச சந்தைக்கு ஏற்பட்ட தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகிறது. கியாஸ் சிலிண்டர்கள் விலை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் கடந்த பல மாதங்களாக மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் அடிக்கடி உயர்த்தப்படுகிறது.
சிலிண்டர் விலையில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு ஏற்ப ஏற்றம் இறக்கம் இருக்கும்.
14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
- வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் படுகாயம்.
- விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#JUSTIN : காதை கிழித்த சத்தம்... வெடித்து சிதறிய வீடு... 7 பேரின் நிலை..? அதிர்ந்த சென்னை#Chennai #Mangadu #CylinderBlast #TNPoliceவீட்டில் சிலிண்டர் வெடித்து 7 பேர் காயம்2 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி pic.twitter.com/3QQ3IcUtSM
— Thanthi TV (@ThanthiTV) October 12, 2024
- இசக்கியம்மாள் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
- சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள கீழச்செழியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (70). விவசாயி. இவரது மனைவி விஜயா (60). இவர்களுக்கு இசக்கியம்மாள் (28), சுடலை மணி (20) உள்ளிட்ட 9 மகன், மகள் உள்ளனர்.
இசக்கியம்மாள் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் அவர்களை விட்டு சென்று விட்டார்.
இதனால் இசக்கியம்மாள் தனது குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இசக்கியம்மாள் வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பில் சமையல் செய்துள்ளார்.
அவரது குழந்தைகள் பக்கத்தில் உள்ள தாத்தா கணபதி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனிடையே இசக்கியம்மாள் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
அப்போது சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதே போல் மற்ற சுவர்களும் விரிசல் ஏற்பட்டு மேற்கூரையும் பலத்த சேதம் அடைந்தது.
இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கியாஸ் அடுப்பில் கசிவு ஏற்பட்டு அதனால் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது இசக்கியம்மாள் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி லூப் லைன் வழியாக சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
VIDEO | UP: An LPG cylinder was placed on railway track in Kanpur. A goods train applied emergency brake and an accident was averted.#TRAIN pic.twitter.com/SKtUaiiFZf
— Press Trust of India (@PTI_News) September 22, 2024
உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.
செப்டம்பர் 9ம் தேதி கான்பூர்-காஸ்கஞ்ச் வழித்தடத்தில் பயணித்த காளிந்தி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இருந்து கேஸ் சிலிண்டருடன் மோதியது. இதைத் தொடர்ந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதால், ரெயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்டவாளம் அருகே எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
BREAKING : An attempt was made to derail the Kalindi Express, heading to Bhiwani from Prayagraj, as a cylinder, patrol filled bottled & other explosives found on the rail track near the crossing of Muderi village between Barrajpur and Bilhaur stations on Kanpur-Kasganj route. pic.twitter.com/aqprtYTtKS
— Baba Banaras™ (@RealBababanaras) September 9, 2024
- கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் கொத்தப்பேட்டையில் மூதாட்டி ஒருவர் இன்று அதிகாலை குழந்தைகளுக்கு பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார்.
நேற்று இரவு கியாஸ் சிலிண்டரை சரியாக மூடாததால் இரவு முழுவதும் கியாஸ் கசிந்து அறையில் பரவி இருந்தது.
மூதாட்டி கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் சிக்கிய மூதாட்டி மற்றும் அவரது 2 பேத்திகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்தது.
கியாஸ் சிலிண்டர் வெடிக்கும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மூதாட்டியும் அவரது 2 பேத்திகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கியாஸ் விலையை மாதந்தோறும் 1 ஆம் தேதி மாற்றியமைக்கப்படும்.
- இன்று கியாஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது.
எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மாதந்தோறும் 1 ஆம் தேதி மாற்றியமைக்கப்படும். அந்த வகையில், ஜூலை 1 ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது.
அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 31 குறைந்துள்ளது. இதன் காரணமாக இதன் விலை ரூ. 1809.50 ஆக மாறியுள்ளது. இந்த மாதமும் விலை குறைக்கப்பட்டதை அடுத்து கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக 4 ஆவது மாதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
- சம்பவத்தின் வீடியோ வெளியாகி காண்போரை திடுக்கிடச் செய்து வருகிறது.
- விபத்தில் சமையலறை முழுவதுமாக வெடித்துச் சிதறியது.
சமையலுக்கு பயன்படும் LPG சிலிண்டர் மூலம் அவ்வப்போது ஏற்பட்டு வரும் விபத்துகள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் LPG சிலிண்டர் இருப்பதால் அதை கவனமாக கையாளும் விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படுவது அவசியம்.
இந்த கூற்று 100 சதவீதம் உண்மை என நிரூபிக்கும் வகையில் மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ வெளியாகி காண்போரை திடுக்கிடச் செய்து வருகிறது. அந்த, சிசிடிவி வீடியோவில் பெண் ஒருவர் வீட்டின் சமயலறையில் நின்றுகொண்டு பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென அவரது அருகில் இருந்த சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடிக்கிறது.
அந்த அதிர்வில் தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்த அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். ஆனாலும் அந்த சமையலறை முழுவதுமாக வெடித்துச் சிதறியது. சிலிண்டரில் கொஞ்சமான அளவே கேஸ் இருததால்தான் பெரிய அளவில் விபத்து ஏற்படாமல் அந்த பெண் உயிர்தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
- பின்னால் தொங்கியநிலையில் ஆட்டோ வேகமாக செல்லும் காட்சி பதிவு.
- வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கேஸ் சிலிண்டர் திருட முயன்றதாக கூறி ஒருவரை ஓடும் ஆட்டோவில் தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் நடந்த இடம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த வீடியோவில், ஓடும் ஆட்டோவின் பின்னால் ஒரு நபர் தொங்கியநிலையில் ஆட்டோ வேகமாக செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
இதில், அந்த நபரின் கால்கள் சாலையில் தேய்ந்தபடி பல கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்டோ ஓட்டுனரை சரமாரியாக கமென்டில் திட்டி தீர்த்து வருகின்றனர்.
ஆட்டோ பின்னால் ஒரு நபர் அலறியபடி இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.