என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gas cylinder"

    • கப்பல்கள் மாற்று பாதையில் சுற்றிச்செல்ல 20 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும்
    • பதற்றமான சூழலில் சரக்கை அனுப்ப வேண்டாமென, வர்த்தகர்கள் கூறிவிட்டனர்.

    ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்து தடையால் திருப்பூர் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியான ரூ. 300 கோடி மதிப்பிலான ஆடைகள் திருப்பூரிலேயே தேக்கமடைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், துபாய் வழியாக அரபு நாடுகளுக்கு செல்லும் பின்னலாடைகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழி பாதையை அடைத்து வைத்துள்ளதால் கப்பல்கள் மாற்று பாதையில் சுற்றிச்செல்ல 20 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும். இதனால் செலவுகள் அதிகரிக்கும்.

    பதற்றமான சூழலில் சரக்கை அனுப்ப வேண்டாமென, வர்த்தகர்கள் கூறிவிட்டனர். ரம்ஜான் பண்டிகை விற்பனைக்கான ஆடைகளை கடந்த மாதங்களில் அனுப்பிவிட்டோம் என்றார்.

    திருப்பூர் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், "பிரின்டிங், சாய ஆலைகள், 'ஹீட் செட்டிங்' 'பினிஷிங்', சென்டர் போன்ற பிரிவுகளில், கியாஸ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பின்னலாடை தயாரிப்பில் கியாஸ் பயன்பாடு தவிர்க்க இயலாதது.

    கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சில 'ஜாப் ஒர்க்' பிரிவுகளில் உற்பத்தி முடங்கும் அபாயம் உள்ளது. மின்சாரத்தை பயன்படுத்தினால் உற்பத்தி செலவு அதிகரிக்கும். பின்னலாடை தொழில்துறையினருக்கு தடையின்றி கியாஸ் கிடைக்க மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்" என்றார்.

    • இந்தியாவில் LPG கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • எல்பிஜி கியாஸ் தட்டுப்பாடு நீடித்தால் மொபைல் நெட்வொர்க், இணைய சேவைகள் பாதிக்கப்படலாம்.

    ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதனால் இந்தியாவில் LPG கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எல்பிஜி கியாஸ் தட்டுப்பாடு நீடித்தால் மொபைல் நெட்வொர்க், இணைய சேவைகள் பாதிக்கப்படலாம் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பொதுவாக மொபைல் நெட்வொர்க் டவர்களும், இணைய சேவைகளும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்குகின்றன. மின்சாரம் தடைப்பட்டால், அவற்றை செயல்பாட்டில் வைத்திருக்க ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    இந்த ஜெனரேட்டர்களுக்கு பொதுவாக டீசல் அல்லது LPG போன்ற எரிபொருட்கள் பயன்படுத்தப்படலாம். அதனால், எரிபொருள் விநியோகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டால், சில இடங்களில் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    உடனடி பாதிப்பு இருக்குமா?

    தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் உடனடியாக பாதிக்கப்படும் என்ற தகவல் இல்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுவாக மாற்று எரிபொருள் கையிருப்பு வைத்திருக்கும். முக்கியமான நெட்வொர்க் மையங்களில் பேட்டரி பேக்கப் மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் உள்ளன. இதனால் குறுகிய காலத்தில் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு குறைவாக உள்ளது.

    LPG பற்றாக்குறை குறித்து உலகளவில் கவலை இருந்தாலும், இந்தியாவில் உடனடி அளவில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லை. இருப்பினும், சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் நீண்டகால பிரச்சினைகள் ஏற்பட்டால் அதன் தாக்கம் பிற துறைகளுடன் சேர்ந்து தொலைத்தொடர்பு துறையையும் பாதிக்கக்கூடும்.

    • வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
    • வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் பல உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு ஆளாகியுள்ள.

    மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது. மேலும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் பல உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு ஆளாகியுள்ள.

    வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், மத்திய அரசை கண்டித்து கோவையில் காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    • மத்திய அரசு மக்களுக்கு தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்
    • தமிழ்நாடு அரசு அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்

    மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு உணவகங்கள், டீக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை கோரியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும் மாநில அரசும் இதில் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில் கூறியுள்ளதாவது,

    "ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

    அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழ்நாட்டில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது.
    • சென்னையில் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது. இதன் மூலம் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என கூறிய நிலையில், சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தியுள்ளது.

    இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தியதையை திரும்பப் பெற கோரி சென்னை, குறளகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • கியாஸ் சிலிண்டரின் விலை நள்ளிரவில் திடீரென உயர்த்தப்பட்டது.
    • இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.

    இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நள்ளிரவில் திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது.

    தலைநகர் டெல்லியில் 835 ரூபாய்க்கு விற்ற கியாஸ் சிலிண்டர் 913 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

    ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என கூறிய நிலையில், நள்ளிரவில் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

    கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது என்பது குறிக்கப்பட்டது.

    • சமையலுக்கு குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டை போட்டு விடுங்கள்.
    • கியாஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருந்தால் தான் தீ நீல நிறத்தில் எரியும்.

    நாம் அன்றாடம் சமையலறையில் சமையலின்போது சில விஷயங்களைப் பின்பற்றினால், குறிப்பிடத்தக்க அளவு எரிவாயுவை (கியாஸ்) மிச்சப்படுத்த முடியும்.

    அது பற்றி பார்க்கலாமா...

    * அரிசி மற்றும் நவதானியப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரமே வெந்து விடும். இதனால் எரிவாயு செலவும் மிச்சமாகும்.

    * முடிந்த அளவு எல்லாவித சமையல் வேலைகளுக்கும் பிரஷர் குக்கரை பயன்படுத்துங்கள். பிரஷர் குக்கரில் ஒரே சமயத்தில் பல சமையல் பொருட்களை வேக வைக்கலாம். இதனால் எரிபொருள் செலவு குறைவதோடு, சமையல் வேலையையும் சீக்கிரமாக முடிக்க முடியும்.

    * பால், குழம்பு, கூட்டு வகைகளை குளிர்பதன பெட்டியில் இருந்து அப்படியே எடுத்து கியாஸ் அடுப்பில் வைத்து சூடு பண்ணாதீர்கள். இதனால் சூடாக அதிக நேரம் ஆவதுடன், அதிக எரிபொருளும் செலவாகும். எனவே, பிரிட்ஜில் இருந்து எடுக்கும் சமையல் பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து, அதன் குளிர் குறைந்து இயல்பான தட்ப வெப்ப நிலைக்கு வந்த பிறகுதான் சூடாக்க வேண்டும்.

    * சமையலுக்குத் தேவையான காய்கறிகளை கியாஸ் அடுப்பு பற்ற வைப்பதற்கு முன்னரே நறுக்கி வைப்பது மிகவும் முக்கியம். அதுபோல் மசாலாக்களை அரைத்து கியாஸ் அடுப்பின் பக்கத்தில் வைத்துக்கொண்டால், ஒவ்வொன்றையும் தேடி எடுப்பதால் ஆகும் எரிவாயு விரயத்தைக் குறைக்கலாம்.

    * உங்கள் வீட்டு சமையலறையில் காற்று அதிகம் வீசுகிறது என்றால் ஜன்னலை அடைத்து விடுங்கள். காற்று அதிகம் அடித்தால் கியாஸ் அடுப்பின் ஜுவாலை படபடக்கும். இதனால் சமைக்க அதிக நேரம் பிடிப்பதோடு, எரிபொருளும் அதிகம் செலவாகும்.

    * சமையலுக்கு குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டை போட்டு விடுங்கள். ஆவி வரும் வரை காத்திருக்க வேண்டாம். இதனால் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே சாதம் வெந்து விசில் வந்து விடும். ஐந்து நிமிட கியாஸ் செலவும் மிச்சமாகும்.

    * கியாஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருந்தால் தான் தீ நீல நிறத்தில் எரியும். ஆரஞ்சு நிறத்திலோ, மஞ்சள் நிறத்திலோ எரிந்தால் பர்னர் சுத்தமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இதனால் எரிவாயு தேவையில்லாமல் பாழாவதை தவிர்க்கலாம்.

    * குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது, சமையல் பொருட்களை அடிக்கடி சூடு செய்து சாப்பிடுவதால் ஆகும் கியாஸ் செலவை குறைக்கும்.

    • ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி.கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக கியாஸ் டேங்கர் லாரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலைகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி முற்றுலுமாக முடங்கியுள்ளது. எனவே தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026 மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தது.

    புதிய டெண்டர் பணிகள் நிறைவடையாததால் தற்போதைய ஒப்பந்தத்தை அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்தன.

    ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    2026 மார்ச் மாதம் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என டேங்கர் லாரிகள் சங்கத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.

    இதையடுத்து 6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

    • கியாஸ் டேங்கர் லாரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி.கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கியாஸ் டேங்கர் லாரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலைகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி முற்றுலுமாக முடங்கியுள்ளது. எனவே தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    • மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து கொண்டிருந்தபோது சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.
    • உணவை தயாரித்து கொண்டிருந்த பெண் சமையலர் துரிதமாக செயல்பட்டு வெளியேறியதால் அவர் உயிர் தப்பினார்.

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த அயன்ராசாபட்டி தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து கொண்டிருந்தபோது சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.

    உணவை தயாரித்து கொண்டிருந்த பெண் சமையலர் துரிதமாக செயல்பட்டு வெளியேறியதால் அவர் உயிர் தப்பினார்.

    தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டதையடுத்து அவர்கள் தீயை அணைத்தனர். இதனால் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

    • ஆன்லைனிலும் பதிவு செய்து பயோமெட்ரிக் அங்கீகாரத்தை மேற்கொள்ளலாம்.
    • கே.ஒய்.சி. தராதவர்களுக்கு சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்படாது.

    சென்னை:

    சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர் வாங்குவதில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்கவும், மோசடியை தடுக்கும் நோக்கிலும் இந்த திட்டம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய ஆதார் பயோமெட்ரிக்கை தங்களுக்கான கியாஸ் ஏஜென்சியில் பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் இதற்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாததால் கியாஸ் சிலிண்டர் ஊழியர்களே வீடு, வீடாக இதுகுறித்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பயோமெட்ரிக்கை வழங்காவிட்டால் அவர்களுக்கு சிலிண்டர் நிறுத்தப்படும் என்ற உறுதி செய்யப்படாத தகவல் வெளியானதால் ஏராளமானவர்கள், கியாஸ் ஏஜென்சிகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

    தற்போது, ஏராளமானவர்கள் பயோமெட்ரிக் பதிவு செய்து வருகிறார்கள். இதற்காக கியாஸ் ஏஜென்சிகளில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை பயோமெட்ரிக் பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள தங்களது கியாஸ் ஏஜென்சிக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக முந்தைய கியாஸ் பில், ஆதார் கார்டு கொண்டு செல்ல வேண்டும். அங்கு அவர்களது ஆதார் கார்டு பதிவு செய்யப்பட்ட பிறகு, ஆதார் கேமரா மூலம் கருவிழி போட்டோ எடுக்கப்படுகிறது.

    ஆன்லைனிலும் பதிவு செய்து பயோமெட்ரிக் அங்கீகாரத்தை மேற்கொள்ளலாம். இதற்காக அவர்கள் எல்.பி.ஜி. செயலியை டவுன்லோடு செய்து, அந்த செயலிக்குள்ளேயே பயோமெட்ரிக் பதிவு செய்து கொள்ளலாம்.

    பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம், சமையல் எரிவாயு மானியங்கள் தகுதியற்ற நபர்களுக்கு செல்லாமல் தடுக்க முடியும் என்பதற்காக மத்திய அரசு இந்த முடிவு மேற்கொண்டுள்ளது.

    அதேநேரத்தில் பயோமெட்ரிக் செய்யாதவர்களுக்கு சிலிண்டர்கள் வழங்குவது நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி வருவது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    மோசடிகளை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கியாஸ் சிலிண்டர் வினியோக முறையில் பயோமெட்ரிக்கு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சிலிண்டர் வைத்திருக்கும் நுகர்வோர்கள் விரைவாக தங்களது பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    அதே நேரத்தில் கே.ஒய்.சி. தராதவர்களுக்கு சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்படாது. மோசடிகளை கண்டறியவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பயோமெட்ரிக் முறை செய்வது ஒவ்வொருவரின் கடமை. மோசடி இல்லாத சிலிண்டர் வினியோகத்திற்கு இது கட்டாயம்.

    இதை இண்டேன், எச்.பி., பாரத் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்வதில்லை. மத்திய அரசு முடிவுதான் இது. எனவே பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்ள வேண்டும். இந்த பதிவுக்கு கால நிர்ணயம் இல்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டலில் மாடியில் இருக்கும் அறையில் வசித்து வந்தனர்.
    • அதிகாலையில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் பங்கஜாக்சன்(வயது59). இவரது மனைவி சஜிதா(53). இவர்கள் பல ஆண்டுகளாக ஓமன் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்கள் மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டலில் மாடியில் இருக்கும் அறையில் வசித்து வந்தனர். 

    இந்தநிலையில் அதிகாலையில் அந்த ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இதில் பங்கஜாக்சன், சஜிதா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சென்னையில் வசித்துவரும் அவரது மகள் ஓமன் விரைந்துள்ளார்.

    ×