search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooking gas"

    • மனமுடைந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார்.
    • பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு போலீஸ் நிலையத்துக்குட்பட்டது நாகொண்டன ஹள்ளி. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 37 வயதான ஒரு இளம் பெண் தனது கணவர் மற்றும் 5 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவருக்கும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மனமுடைந்த அந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நீண்ட நேரம் கதவைதட்டியும் அந்த இளம்பெண் கதவை திறக்கவில்லை.

    உடனடியாக குடும்பத்தி னர் ஒயிட் பீல்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினரும் அந்த பெண்ணை கதவை திறக்க சொன்னார்கள். ஆனால் அவர் திறக்க மறுத்தார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கட்டையால் கதவை உடைத்து அறைக்குள் சென்று தீப்பெட்டியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணையும் 5 வயது குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் கியாஸ் கசிவையும் சரி செய்தனர். இது குறித்து பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது.
    • கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    சேலம்:

    பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே சென்று கடந்த மார்ச் மாதம் 1118 ரூபாய் 50 காசாக உயர்ந்தது.

    2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை முதல் முறையாக ரூ. ஆயிரத்தை தாண்டியது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்து ரூ.1118.50 ஆனது.

    கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஏறிக் கொண்டே சென்றதால் குடும்ப தலைவிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    இந்த சிலிண்டர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்தது. தங்களது மாத வருவாயில் குறிப்பிட்ட தொகைைய கியாஸ் சிலிண்டருக்கே ஒதுக்க வேண்டியுள்ளது என்று கூறி அவர்கள் வேதனைப்பட்டு வந்தனர்.

    இப்படி சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறி இருந்ததால் கிராமப்புறங்களில் பலர் விறகு அடுப்புகளுக்கும் மாறினார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை வெகுவாக குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. சிலிண்டர் விலை குறையுமா? என இல்லத்தரசிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சேலத்தில் ரூ.1190 ஆக இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.990 ஆக குறைந்திருக்கிறது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் விலை 1000-க்கும் கீழ் குறைந்திருக்கிறது.

    இந்த விலை குறைப்பு இன்று முதல் (புதன்கிழமை)அமலுக்கு வந்துள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெண்கள் பலர் சிலிண்டர் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக பெண்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு:-

    சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி கவுசல்யா (25): மின்சாரம், காய்கறிகள் மற்றும் அத்தியா வசிய பொருட்கள் விலை உயர்ந்தி ருக்கும் நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வரவேற்கிறோம்.

    சேலத்தை சேர்ந்த வங்கி ஊழியர் கலைமதி (30): அரசு இலவசமாக எந்த பொருளையும் தர வேண்டாம். விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும். அந்த வகையில் கியாஸ் விலையில் ரூ.200 குறைத் துள்ளது வரவேற்கதக்கது. இதேபோல் காய்கறி உள்ளிட்டவற்றின் விலையை யும் கட்டுப் படுத்த வேண்டும்.

    அம்மாபேட்டையை சேர்ந்த பெரியநாயகி (40): ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளனர். குழந்தை களை படிக்க வைக்கவே சிரமப்பட்டு வருகிறோம். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் சுமையாகவே இருந்தது. தற்போது இந்த விலை குறைப்பு வரவேற்கத்தக்கது தான். மேலும் ரூ.200 குறைத்தால் நன்றாக இருக்கும்.

    மத்திய அரசு எந்த இலவசமும் கொடுக்காமல் பொதுமக்கள் வாழ்க்கை தரம் உயர நல்ல திட்டங்களை கொண்டு வந்து நாட்டு மக்கள் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும்.

    • சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும்.
    • சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் கேஸ் வீணாவதைத் தடுக்கலாம்.

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் நிலையில் இல்லத்தரசிகள் எப்படி சிக்கமான பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    சமையலைத் தொடங்குவதற்கு முன்பே வெட்டப்பட்ட காய்கள் மற்றும் தேவையான பாத்திரங்களைத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவாகும்.

    ஃப்ரிட்ஜில் வைத்த உணவு மற்றும் குழம்பு பாத்திரத்தைச் சூடுபடுத்தும் முன், அதை வெப்பநிலையில் சிறிதுநேரம் வைக்கவும். ஃபிரிட்ஜில் இருந்து நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.

    சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும். காய்கறிகள் சமைப்பதாக இருந்தாலும் சரி, அரிசியாக இருந்தாலும் மூடி வைத்து சமைத்தால் சீக்கிரமாகவே வெந்துவிடும்.

    பிரஷர் குக்கர் மூலம் சமைப்பது நல்லது. அகலமான பாத்திரத்தில் சமைப்பது எரிபொருளைச் சேமிக்க உதவும்.

    வெந்நீர் வைக்க கேஸ் ஸ்டவ்வுக்குப் பதிலாக rod water heater பயன்படுத்தலாம்

    இண்டக்ஷன் ஸ்டவ்வில் செய்ய முடிகிற சமையலை அதிலேயே செய்யலாம். கேஸ் ரெகுலேட்டர், ட்யூப், பானர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவும்.

    சமையல் முடிந்தவுடன் ரெகுலேட்டர் சுவிட்சை அணைக்க மறக்க வேண்டாம். வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. இது உணவினைச் சூடு செய்வதை தவிர்க்கும்.

    சமைப்பதற்கு முன்னதாக அரிசி, பருப்பு, பயறு வகைகளை ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்து சமைத்தால் வெகு சீக்கிரமாகவே எல்லாமே வெந்துவிடும். இதன் மூலமாக சிலிண்டர் மிச்சமாகும்.

    கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் எப்போதும் அழுக்குகள் படியாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் பிசு பிசுப்பு மற்றும் அழுக்குகள் இருந்தால் அடைப்பு ஏற்பட்டு பிரச்னை ஏற்படும். இதனால் கேஸ் லீக் ஆகும் வாய்ப்பு கூட உண்டாகும். இதனால், சிலிண்டர் சீக்கிரமாக கூட தீர்ந்துவிடும். அதனால், பர்னர் எப்போதும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி தனியாக எடுத்து சுத்தம் செய்து வைப்பது நல்லது.

    காலையில் சமையலை முடிக்க வேண்டிய அவசரத்தில் ஈரமான பாத்திரங்களைக் கொண்டு சமையல் செய்வார்கள். முதல் நாள் இரவு கழுவாமல் பேட்ட பாத்திரத்தை மறுநாள் காலையில் அவசர அவசரமாக கழுவி, அதனை அப்படியே சமையலுக்கு பயன்படுத்த கூடாது. அந்த ஈரமான பாத்திரம் காய்வதற்கு 2 முதல் 4 நிமிடங்கள் வரை ஆகலாம். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் இது போன்று இருந்தால் சிலிண்டர் சீக்கிரமே காலியாகிவிடும்.

    இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி கேஸ் வீணாவதைத் தடுத்து, மிச்சப்படுத்துவதன் மூலம் மேலும் நான்கு நாட்கள் அல்லது ஒரு வாரம் சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

    • வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.
    • வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக குறைத்து வந்தன.

    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

    இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்தில் முதல் தேதி அல்லது மாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த 3 மாதங்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த சூழலில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக குறைத்து வந்தன.

    இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி 2192.50 ஆக இருந்த வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் 2021.50 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ,171 குறைக்கப்பட்டுள்ளது.

    வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. இதன்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,118.50 ஆக தொடர்கிறது.

    • கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
    • கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வருகிறது.

    எனவே திருப்பூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க வேண்டும். சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் சிலிண்டர் எடுத்துச் செல்லக்கூடாது. 5 வருடங்களுக்கு ஒருமுறை சிலிண்டர் வால்வு, கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் பா.கோமதி, மாவட்ட கன்வீனர் மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும், ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை களை கண்டித்தும், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பா.கோமதி, மாவட்ட கன்வீனர் மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.என்.அனிபா, மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், சாலை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ரகுபதி, மாதர் சங்க மாவட்ட தலைவர் பவானி, சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், திருவாரூர் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து எரிவாய்வு சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    பொன்னேரி:

    பொன்னேரியில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றத்தால் ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை விளக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தின்போது மண் அடுப்பை பற்ற வைத்து அதில் சமைக்கும் கற்கால நிலைக்கு பெண்கள் சென்று கொண்டிருப்பதாக குற்றம்சாட்டி சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவர் டி.எல். சதாசிவலிங்கம் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார், இதில் நகரத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன் மகிளா காங்கிரஸ் எழிலரசி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • சமையல் எரிவாயு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • இதில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(27-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிலிண்டர்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட எரிவாயுவை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.
    • பிளாஸ்டிக் பையில் உள்ள எரிவாயுவை சிறிய மின்சார பம்ப் உதவியுடன் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

    பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் மக்களுக்கு உரிய நேரத்தில் எரிவாயு கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.

    இந்த நெருக்கடிக்கு மத்தியில், சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கு மக்கள் மேற்கொள்ளும் மாற்று நடவடிக்கைகளை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. சிலிண்டர்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட எரிவாயுவை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் கையிருப்பில் குறைந்து வருவதால், மக்கள் சமையல் எரிவாயுவை சேமிக்க பெரிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை வீடியோவில் காண முடிந்தது.

    நாட்டின் எரிவாயு குழாய் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட கடைகளில் இயற்கை எரிவாயுவை இந்த பிளாஸ்டிக் பைகளில் நிரப்புகின்றனர். கசிவைத் தவிர்க்க, விற்பனையாளர்கள் அந்த பையை வால்வு மூலம் இறுக்கமாக மூடுகின்றனர். பைகள் பின்னர் மக்களுக்கு விற்கப்படுகின்றன. பின்னர் அவர்கள் ஒரு சிறிய மின்சார பம்ப் உதவியுடன் எரிவாயுவைப் பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பைகளில் மூன்று முதல் நான்கு கிலோ வரை எரிவாயுவை நிரப்ப சுமார் ஒரு மணி நேரம் ஆவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    இரண்டு சிறுவர்கள் எரிவாயு நிரப்பப்பட்ட இரண்டு பெரிய வெள்ளை பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. "இந்த பிளாஸ்டிக் பைகள் வெடித்து விபத்து ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சம் ஏற்பட்டாலும், சிலிண்டர்களின் விலை உயர்வால் ஏழைகளாகிய எங்களுக்கு வேறு வழியில்லை, என்கின்றனர் மக்கள்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நடைமுறை மிகவும் ஆபத்தானது என்பதால், வீடியோவைப் பார்த்த பலரும் பாதுகாப்பு குறித்த கவலையை பதிவிட்டுள்ளனர். சிறிதளவு தவறு நேர்ந்தால்கூட வாயு கசிவு மற்றும் வெடிப்புக்கு வழிவகுக்கும் என்பதை பயனர்கள் குறிப்பிட்டனர். ''என்னால் இதை நம்ப முடியவில்லை. பாகிஸ்தானில் சரக்கு மற்றும் சேவை துறை என்ற ஒரு துறை இல்லையா? அடிப்படை பாதுகாப்பு தரநிலைகள் பின்பற்றப்பட வேண்டுமா, இல்லையா?'' என ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சிலிண்டர்களின் இருப்பு குறைந்ததால், விற்பனையாளர்கள் சப்ளையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காரக் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு 2007 ஆம் ஆண்டு முதல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாங்கு நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எரிவாயு இணைப்பு இல்லை. எரிவாயுவை எடுத்துச் செல்லும் குழாய் உடைந்ததில் இருந்து சரிசெய்யப்படாமல் உள்ளது.

    • கடந்த இரண்டு வருடங்களாக சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் ஏன் விலை குறைக்கப்படவில்லை? என எதிர்க்கட்சிகள் கேள்வி.

    புதுடெல்லி:

    ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 25 ரூபாய்  உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை ரூ.25.50 அதிகரித்து 1,917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.1768, மும்பையில் ரூ.1721, கொல்கத்தாவில் ரூ.1870 என விற்பனை ஆகிறது. இந்த விலை உயர்வால், உணவகங்கள் பாதிக்கப்படும். உணவுகளின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    'புத்தாண்டின் முதல் பரிசாக, வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இப்போது 25 ரூபாய் உயர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் தான்' என காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

    கடந்த இரண்டு வருடங்களாக சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டு முதல் வீட்டு உபயோக சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலையில் ஏற்பட்ட இந்த தொடர் உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது.

    எரிபொருள் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றன. ஆனால் கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலைகளை அரசாங்கம் சுட்டிக்காட்டியது. ஆனால், சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் தற்போது ஏன் விலை குறைக்கப்படவில்லை? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,200-க்குள் இருந்தால்தான் உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியும்.
    • அதிகளவில் ஏற்றி விட்டு சிறிதளவு குறைப்பதால் எந்த பயனும் இல்லை என்று ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கின்றன.

    அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான கியாஸ் விலை குறித்த அறிவிப்பு இன்று காலையில் வெளியானது. வர்த்தக சிலிண்டர் விலை ரூ.115.50 குறைக்கப்பட்டது. 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,859.50-ல் இருந்து ரூ.1,744 ஆக குறைந்துள்ளது.

    கடந்த மாதமும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டது. ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை குறந்த போதிலும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.

    சென்னையில் சமையல் சிலிண்டர் விலை ரூ.1,068.50-ஆக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது. வர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து விலை குறைந்து வருவதால் ஓட்டல் தொழிலில் ஈடுபடுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,200-க்குள் இருந்தால்தான் உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியும். அதிகளவில் ஏற்றி விட்டு சிறிதளவு குறைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

    கும்மிடிப்பூண்டியில் சாலை தடுப்புச்சுவரில் மோதி சமையல் கியாஸ் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து, கியாஸ் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
    கும்மிடிப்பூண்டி:

    எண்ணூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கி 18 டன் சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு ராட்சத டேங்கர் லாரி இன்று அதிகாலை புறப்பட்டது. லாரியை சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த அங்கமுத்து (35) ஓட்டினார்.

    அதிகாலை 3 மணியளவில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள பைபாஸ் சாலையில் லாரி வந்து கொண்டு இருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அங்கமுத்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    விபத்து பற்றி அறிந்ததும் கும்மிடிப்பூண்டி மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் லாரி தீப்பற்றாமல் இருக்க உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    கவிழ்ந்த லாரியை கியாஸ் நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சேதமடைந்த டேங்கரில் இருந்து சிறிய அளவில் கியாஸ் கசிவதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி பஜார் வழியாக திருப்பி விடப்பட்டது.

    எளிதில் தீப்பற்றும் அபாயம் இருப்பதால் லாரி கவிழ்ந்த இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் கும்மிடிப்பூண்டி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    டேங்கர் லாரியின் அருகே செல்போன் எடுத்து செல்லவும் தடை விதித்து உள்ளனர். இதனால் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    கியாஸ் டேங்கர் லாரியை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். கவிழ்ந்த லாரியில் உள்ள கியாசை வேறு லாரியில் ஏற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

    விபத்து ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×