search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    திருவாரூரில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவாரூரில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    • சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் பா.கோமதி, மாவட்ட கன்வீனர் மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும், ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை களை கண்டித்தும், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பா.கோமதி, மாவட்ட கன்வீனர் மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.என்.அனிபா, மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், சாலை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ரகுபதி, மாதர் சங்க மாவட்ட தலைவர் பவானி, சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், திருவாரூர் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து எரிவாய்வு சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×