என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 6-வது நாளாக நீடிப்பு
- சுத்திகரிப்பு நிலையங்களில் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
- 75 ஆயிரம் டன் சமையல் கியாஸ் சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கம் அடைந்து உள்ளது.
2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்கக் கோரி தென் மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக 75 ஆயிரம் டன் சமையல் கியாஸ் சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கம் அடைந்து உள்ளது.
Next Story






