என் மலர்tooltip icon

    ஓமன்

    • ரைசிங்ஸ்டார் ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டம் தோகாவில் இன்று நடந்தது.
    • சூப்பர் ஓவரில் வென்ற பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

    தோகா:

    வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

    லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த வங்கதேசம், இலங்கை அணியும், பி பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் அரையிறுதியில் வங்கதேசம் சூப்பர் ஓவரில் இந்தியாவை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தியது.

    இந்நிலையில், ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 125 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணி 125 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

    சூப்பர் ஓவரில் வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. முதல் பந்தில் ஒரு ரன் கிடைத்தது. 2வது பந்தில் விக்கெட் வீழ்ந்தது. 3வது பந்தில் 5 வைடுகள் கிடைத்தன. 4வது பந்தில் விக்கெட் வீழ்ந்தது.

    இதையடுத்து, சூப்பர் ஓவரில் 7 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4 பந்தில் 7 ரன் அடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

    • ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
    • ஹெலிகாப்டர் அமெரிக்க கப்பலின் மீது நேரடியாகப் பறந்து சென்றது.

    அமெரிக்கா- ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல்- ஈரான் இடையே மோதலின்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியது.

    ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஈரானின் அரசு தொலைக்காட்சி கூறியதாவது:-

    ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது.

    இதனையடுத்து, ஈரானிய படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்று அமெரிக்க போர் கப்பலை எதிர்கொண்டது. அந்த ஹெலிகாப்டர் அமெரிக்க கப்பலின் மீது நேரடியாகப் பறந்து சென்றது.

    ஈரான் கடல்பகுதியில் இருந்து விலகி செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது ஈரான் ஹெலிகாப்டர் அந்த பகுதியை விட்டு செல்லவில்லை என்றால், அதனை இலக்காக கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க கப்பலில் இருந்து அச்சுறுத்தல் விடப்பட்டது.

    இதற்கு பதிலளித்த ஈரான் விமான பாதுகாப்பு படையினர், அந்த ஹெலிகாப்டர், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு திட்ட முழு பாதுகாப்பின் கீழ் உள்ளது என தெரிவித்தது. இறுதியாக, அமெரிக்க கப்பல் தெற்கு நோக்கி பின்வாங்கி சென்றது என தெரிவித்தது.

    இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை படை கூறும்போது, பாதுகாப்பான மற்றும் தொழில்துறையிலான உரையாடலாகவே இருந்தது என்றும் அதனால், அமெரிக்க கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தவறான தகவல்களைப் பரப்ப ஈரான் முயற்சிக்கிறது என்றும் தெரிவித்தது.

    • மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டலில் மாடியில் இருக்கும் அறையில் வசித்து வந்தனர்.
    • அதிகாலையில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் பங்கஜாக்சன்(வயது59). இவரது மனைவி சஜிதா(53). இவர்கள் பல ஆண்டுகளாக ஓமன் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்கள் மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டலில் மாடியில் இருக்கும் அறையில் வசித்து வந்தனர். 

    இந்தநிலையில் அதிகாலையில் அந்த ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இதில் பங்கஜாக்சன், சஜிதா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சென்னையில் வசித்துவரும் அவரது மகள் ஓமன் விரைந்துள்ளார்.

    • ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.
    • இதில் 2வது சுற்றில் இந்தியா ஜப்பானை வென்றது.

    மஸ்கட்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், பி பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்துள்ளன.

    நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா தாய்லாந்தை வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ஜப்பானைச் சந்தித்தது. இதில் இந்தியா 3-2 என திரில் வெற்றி பெற்றது.

    சனிக்கிழமை நடைபெறும் அடுத்த லீக் போட்டியில் இந்தியா சீன தைபே அணியை எதிர்கொள்கிறது.

    • இந்திய அணி தொடக்க லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சந்தித்தது.
    • இதில் சிறப்பாக ஆடிய இந்தியா 11-0 என அபார வெற்றி பெற்றது.

    மஸ்கட்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், பி பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அத்துடன், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.

    இந்நிலையில், இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சந்தித்தது. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர்.

    இறுதியில் இந்தியா 11-0 என அபார வெற்றி பெற்றது. தாய்லாந்து தான் ஆடிய இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.

    • முதலில் பேட் செய்த இலங்கை 133 ரன்கள் எடுத்தது.
    • ஆப்கானிஸ்தான் 18.1 ஓவரில் 134 ரன்கள் எடுத்து வென்றது.

    அல் அமேரத்:

    வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற 8 அணிகளில் இருந்து குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணியும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. வங்காளதேசம் ஏ, ஹாங்காங், யு.ஏ.இ., ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணியும், இந்தியா ஏ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஏ அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று அல் அமேரத்தில் நடந்தது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. சஹன் ஆராசிகே 64 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதுடன், எமர்ஜிங் ஆசிய கோப்பையையும் வென்று அசத்தியது.

    • ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின.
    • இப்போட்டியில் சூப்பர் மென் போல பாய்ந்து ரமன்தீப் சிங் கேட்ச் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடர் ஓமன் நாட்டில் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் இந்த தொடர் நடைபெறுகிறது.

    இந்த தொடரில் நேற்று இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை இந்திய அணி எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 44 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 36 ரன்களும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் தரப்பில் சுபியான் முகீம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 184 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அராபத் மின்ஹாஸ் 41 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணி தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும் ராசிக் சலாம் மற்றும் நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்

    இப்போட்டியில் சூப்பர் மென் போல பாய்ந்து ரமன்தீப் சிங் கேட்ச் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடி வந்த யாசிர் கான் தூக்கி அடித்த பந்தை ஓடிச்சென்று பாய்ந்து ஒற்றை கையால் ரமன்தீப் சிங் பிடித்தார்.

    ரமன்தீப் சிங்கின் அந்த கேட்ச் ஒரு இந்தியரின் மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்று என்று முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டியுள்ளார்.

    • கிராம பகுதிகளில் அதிகமாக விவசாய நிலங்கள் உள்ளது.
    • பெரும்பாலும் அணையின் நீர்பாசனத்தின் மூலம் பல்வேறு பயிர்கள் இங்கு விளைவிக்கப்படுகிறது.

    ஓமன் வாதி தேக்கா அணை பாசனத்திற்காக 15-ந்தேதி திறக்கப்படும்மஸ்கட்:

    ஓமனில் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 75 கி.மீ. தொலைவில் குரையத் பகுதியில் வாதி தேக்கா அணை உள்ளது. சுமார் 246 அடி உயரம் கொண்ட இந்த அணை அரேபிய பகுதியில் கட்டப்பட்ட அணைகளை விட பெரியதாகும்.

    இந்த அணை 10 கோடி கன மீட்டர் கொள்ளளவு உடையது. இது அமைந்துள்ள பகுதியில் தகாமர் மற்றும் ஹைல் அல் காப் ஆகிய கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராம பகுதிகளில் அதிகமாக விவசாய நிலங்கள் உள்ளது. பெரும்பாலும் அணையின் நீர்பாசனத்தின் மூலம் பல்வேறு பயிர்கள் இங்கு விளைவிக்கப்படுகிறது. எனவே, கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி பாசனத்திற்காக வாதி தேக்கா அணை வருகிற 15-ந் தேதி திறக்கப்படும் என ஓமன் வேளாண்மை, மீன்வளம் மற்றும் நீர்வள அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அணை திறப்பு அறிவிப்பை தொடர்ந்து அந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

    • கொமாரோஸ் நாட்டின் `பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற அந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்கள் பயணித்தனர்.
    • மீதமுள்ள 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மஸ்கட்:

    ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து ஏமனின் ஏடன் துறைமுகத்துக்கு ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது. கொமாரோஸ் நாட்டின் `பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற அந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்கள் பயணித்தனர். அப்போது ஓமன் கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தூரத்தில் அந்த கப்பல் விபத்துக்குள்ளானது. இதனால் கப்பலில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர். மேலும் இந்த விபத்தால் அங்கு எண்ணெய் படலமாக மிதந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த ஓமன் கடலோர போலீசார் அங்கு விரைந்தனர். மேலும் இந்த மீட்பு பணியில் ஓமனுடன் இந்திய கடற்படையும் இணைந்தது. இதன்மூலம் நேற்று 8 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார். அதேசமயம் ஒரு இந்தியர் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து மீதமுள்ள 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • கொமாரோஸ் நாட்டுக்குச் சொந்தமான ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ என்ற அந்த கப்பல் ஏமனின் ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    மஸ்கட்:

    13 இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டின் கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது. கொமாரோஸ் நாட்டுக்குச் சொந்தமான 'பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற அந்த கப்பல் ஏமனின் ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இதில் 13 இந்திய மாலுமிகள் மற்றும் இலங்கையை சேர்ந்த 3 மாலுமிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர். இந்த கப்பல் ஓமன் நாட்டின் ராஸ் மத்ரகா கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் கடலில் மூழ்கினர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஓமன் கடலோர காவல்படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் கடலில் மூழ்கி மாயமான மாலுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எண்ணெய் கப்பல் விபத்து குறித்த தகவல் உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
    • இந்திய போர்க்கப்பல் ஜூலை 15 -ந்தேதி முதல் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள இயக்கப்பட்டது.

    ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயமானார்கள்.

    எண்ணெய் கப்பல் விபத்து குறித்த தகவல் உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் கப்பலில் இருந்து மாயமான 16 பேரையும் தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் ஓமன் அருகே கொமரோஸ் கொடியுடன் கூடிய கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தேஜ் (INS Teg) ஆனது P-81 கடல்சார் கண்காணிப்பு விமானம் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்களுடன் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்திய போர்க்கப்பல் ஜூலை 15 -ந்தேதி முதல் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள இயக்கப்பட்டது. போர்க்கப்பல் ஜூலை 16-ந்தேதி கவிழ்ந்த எண்ணெய் டேங்கரை கண்டுபிடித்தது.

    • எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் நேற்று தெரிவித்தது.
    • ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் துறைமுகம் அமைந்துள்ளது.

    கொமொரோஸின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலான 'பிரெஸ்டீஜ் பால்கன்' ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 16 பேர், 13 இந்தியர்களும், இலங்கையை சேர்ந்த மூன்று பேர் மாயமாகினர்.

    இந்த எண்ணெய் கப்பல் டேங்கர் ஏடன் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது. மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் துறைமுகத்திற்கு அருகே கப்பல் கவிழ்ந்தது.

    எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் நேற்று தெரிவித்தது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஓமனின் கடல்சார் பாதுகாப்பு மையம் கூறுகையில், எண்ணெய் டேங்கர் மூழ்கி, தலைகீழாக இருந்தது. இருப்பினும், கப்பல் நிலைபெற்றதா அல்லது எண்ணெய் அல்லது எண்ணெய் பொருட்கள் கடலில் கசிகிறதா என்பதை உறுதிப்படுத்தவில்லை.

    இந்த கப்பல் 2007ல் கட்டப்பட்ட 117 மீட்டர் நீளமுள்ள எண்ணெய் தயாரிப்பு டேங்கர் ஆகும். இத்தகைய சிறிய டேங்கர்கள் பொதுவாக குறுகிய பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

    ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் துறைமுகம் அமைந்துள்ளது. இது நாட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களின் முக்கிய மையமாகும். பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் டுகும்-ன் பரந்த தொழில்துறை மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.

    ×