என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oman Sultan"

    • பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
    • பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

    மஸ்கட்:

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஓமன் நாட்டுக்குச் சென்றார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் ஓமன்' என்ற விருது வழங்கப்பட்டது.

    இருதரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இவ்விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

    ஓமன் அளித்த இந்த விருதுடன் சேர்த்து 29 வெளிநாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

    ஏற்கனவே ராணி இரண்டாம் எலிசபெத், நெதர்லாந்து ராணி மேக்சிமா, ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ, நெல்சன் மண்டேலா மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் பிரதமர் மோடியும் இடம் பெற்றுள்ளார்.

    சமீபத்தில், அவருக்கு எத்தியோப்பியா, குவைத் ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.
    • ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும்.

    புதுடெல்லி:

    ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.

    வரலாறு, கலாசாரம், பொருளாதாரம் ரீதியாக ஓமன்- இந்தியா ஆகிய இருநாடுகளிடையே நீண்டகால நட்புறவு உண்டு. இரு நாட்டு மக்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நேரடி தொடர்பு இருந்து வருகிறது.

    இந்நிலையில், ராஜ்பவன் வந்தடைந்த ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி முறைப்படியான வரவேற்பை அளித்தனர்.

    ஓமன் சுல்தானின் இந்திய சுற்றுப்பயணமானது இரு நாடுகளுக்கு இடையேயான பிராந்திய நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு வழிகோலும்.

    ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும். அவரது சுற்றுப்பயணத்தால் இந்தியா-ஓமன் இடையிலான வெளியுறவு தொடர்பு மேம்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • சுற்றுப்பயணத்தால் இந்தியா-ஓமன் இடையிலான வெளியுறவு தொடர்பு மேம்படும்.
    • வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை.

    ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.

    ராஜ்பவன் வந்தடைந்த ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி முறைப்படியான வரவேற்பு அளித்தனர்.

    ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும். அவரது சுற்றுப்பயணத்தால் இந்தியா-ஓமன் இடையிலான வெளியுறவு தொடர்பு மேம்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    முன்னதாக, இந்திய வௌியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், " இந்தியா- ஓமன் மூலோபாய கூட்டாண்மைக்கு ஊக்கமளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் மாளிகையில் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை அன்புடன் வரவேற்றார். இருதரப்பு விவாதங்களுக்கும் அவர் களம் அமைத்தார்.

    நிகழ்ச்சி நிரலில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்புக்கான பாதைகளை பட்டியலிடுவது ஆகியவை அடங்கும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×