search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hockey india"

    • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
    • அப்போது ஹாக்கி இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் மன்பிரித் சிங் ஆவார்.

    புதுடெல்லி:

    ஹாக்கி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரித் சிங். இவரது தலைமையின் கீழ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்றது நினைவு கூரத்தக்கது.

    இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரித் சிங் கூறியதாவது:

    நான்கு ஒலிம்பிக்கில் விளையாட முடியும் என நான் நினைக்கவே இல்லை. ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கம் வெல்லவேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். இது எனது நான்காவது ஒலிம்பிக் என்பதால் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.

    இது எனது கடைசி ஒலிம்பிக் என நினைத்து பாரிஸ் செல்கிறேன். என்னால் முடிந்ததை கொடுக்கவேண்டும். நான் இன்னும் விளையாட்டை விட்டு வெளியேறுவது பற்றி யோசிக்கவில்லை. எனது முழு கவனமும் பாரிஸ் ஒலிம்பிக்சில் உள்ளது.

    மோசமான காலங்களில் குடும்பம் மற்றும் குழுவின் ஆதரவு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அந்த நேரத்தில் வீரர் தன்னை மிகவும் தனிமையாக உணர்கிறார். அணி ஒன்றாக நிற்கும்போது அது மிகுந்த ஊக்கத்தை அளிப்பதோடு, மீண்டு வருவதற்கு உதவுகிறது. சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவின் ஒரு சிறந்த மறுபிரவேசத்தைப் பார்த்தோம்.

    இப்போது நான் கேப்டனாக இல்லாவிட்டாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஹாக்கியில் ஒவ்வொரு வீரருக்கும் அவரவர் பங்கு உண்டு. அனைவரையும் அழைத்துச் செல்வதே முயற்சி. மூத்தவராக இருப்பதால் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    டோக்கியோவில் இருந்த 11 வீரர்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் நாங்கள் அதையே தொடர்வோம். 5 அறிமுக வீரர்களுடன் எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் குழு கடினமானது. எந்த அணியையும் எங்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

    நல்ல அணிகளுக்கு எதிராக எங்களுக்கு குறைவான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் 50-50 வாய்ப்புகளை மாற்றுவது ஒரு சாம்பியனின் அடையாளமாகும். பாரிசில் இதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

    • பாரிசில் அடுத்த மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
    • இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜூலை 27-ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகரான பாரிசில் ஜூலை 26 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகவும், ஹர்திக் சிங் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    இந்திய அணி ஜூலை 27-ம் தேதி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

    ஜப்பானின் டோக்கியோவில் கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஒடிசா ஹாக்கி விளையாட்டின் மையமாக திகழ்கிறது.
    • தங்களது ஸ்பான்சர்ஷிப்பை ஒடிசா மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்தது.

    புவனேஸ்வர்:

    இந்திய ஹாக்கி அணிக்கு 2018-ம் ஆண்டில் இருந்து ஒடிசா மாநில அரசு ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது. சமீபத்தில் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை ஹாக்கி, புரோ ஹாக்கி லீக் போன்ற பெரிய போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

    இதற்கிடையே, ஹாக்கி விளையாட்டின் மையமாக திகழும் ஒடிசா தங்களது ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 10 ஆண்டுக்கு நீட்டித்தது. அதாவது 2023-ல் இருந்து 2033-ம் ஆண்டு வரை இந்திய ஆண்கள்-பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) வழங்கும் ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிப்பது என ஒடிசாவின் அப்போதைய முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் கடந்த ஏப்ரலில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஒடிசா மாநில அரசு இந்திய ஹாக்கி அணியின் ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்துள்ளது. முதல் மந்திரி மோகன் சரண் மாஜி மற்றும் ஹாக்கி இந்தியா குழுவினர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    • இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    • உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னேறியுள்ளது.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜெய்ப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று தோல்வி பக்கமே செல்லாமல் வீறுநடை போட்ட இந்திய அணி கோப்பையை 2-வது முறையாக வென்று அசத்தியது. ஏற்கனவே 2016-ம் ஆண்டில் வென்றிருந்தது.

    சாதனை படைத்த இந்திய வீராங்கனைகளைப் பாராட்டிய ஹாக்கி இந்தியா அமைப்பு, அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் நெதர்லாந்து அணி உலகின் சிறந்த மகளிர் ஹாக்கி அணியாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், அர்ஜெண்டினா அணி 3-வது இடத்திலும், பெல்ஜியம் அணி 4-ம் இடத்திலும், ஜெர்மனி மகளிர் ஹாக்கி அணி 5-ம் இடத்திலும் உள்ளன.

    இந்நிலையில், உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னேறியுள்ளது. இதில் உலகத் தரவரிசையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 6-ம் இடம் பிடித்துள்ளது.

    இந்திய அணி இப்போது 83 தரவரிசைப் புள்ளிகளுடன், இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்தில் உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு இந்திய மகளிர் அணி 8-வது இடத்தில் இருந்தது.

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றது மட்டுமின்றி இறுதிவரை எந்த ஆட்டத்திலும் தோற்காமல் இருந்தது ஆகியவற்றின் மூலம் தரவரிசைப் பட்டியலில் முன்னேறியுள்ளது.

    • இந்த பட்டியலில் 3095.90 புள்ளிகளுடன் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
    • இந்திய அணி 2771.35 தரநிலைப் புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

    சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் கோப்பை தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி 4-வது முறையாக பட்டம் வென்றுள்ளது.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், உலக ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி 2771.35 தரநிலைப் புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

    இந்த பட்டியலில் 3095.90 புள்ளிகளுடன் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் (2917.87) இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து, இங்கிலாந்து நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா ஆறாவது இடத்தில் உள்ளது. 7 முதல் 10வது இடங்களை ஸ்பெயின், அர்ஜென்டினா, மலேசியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பிடித்துள்ளன.

    • லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன.
    • காலிறுதியை உறுதி செய்வதற்கான இந்த கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்திய அணி தனது (டி பிரிவு) கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஷாம்சர் சிங் 21வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 32வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதற்கு பதிலடி கொடுத்த வேல்ஸ் அணி 42 மற்றும் 44வது நிமிடங்களில்கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்கியது.

    அதன்பின்னர் ஆகாஷ்தீப் சிங் 45வது நிமிடத்தில் அசத்தலான பீல்டு கோல் அடிக்க, இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது. 59வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்தார். இதனால் இந்தியா 4-2 என வெற்றி பெற்றது. இருப்பினும் இந்திய அணியால் டி பிரிவில் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை.

    லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன. ஆனால் கோல்கள் அடிப்படையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி 2வது இடத்தை பெற்று அடுத்த சுற்றில் (கிராஸ்ஓவர் போட்டி) விளையாட உள்ளது. காலிறுதியை உறுதி செய்வதற்கான இந்த கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. 

    • கோல்கள் அடிப்படையில் இங்கிலாந்து அணி டி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.
    • இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

    ரூர்கேலா:

    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தியா தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இதனால் இரு தரப்பிலும் கோல் அடிக்கும் முயற்சியை மாறி மாறி முறியடித்தனர். ஆட்டநேர இறுதி வரை கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் போட்டி கோல் இன்றி டிரா ஆனது.

    இந்த போட்டி டிரா ஆனபோதிலும், கோல்கள் அடிப்படையில் இந்தியாவை விட இங்கிலாந்து முன்னிலையில் இருப்பதால் அந்த அணி டி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    இந்தியாவும், இங்கிலாந்தும் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. இங்கிலாந்து அணிவேல்ஸ் அணியை 5-0 என வென்றது. இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

    இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்த போட்டி 19ம் தேதி புவனேஸ்வரில் நடக்க உள்ளது. இங்கிலாந்து அணி, கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் மோத உள்ளது. 

    • தினமும் 20,000 இருக்கைகள் கொண்ட மைதானங்களை ரசிகர்களால் நிரப்பக்கூடிய ஒரே நாடு இந்தியாதான்.
    • இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை-2023 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. கடந்த நான்கு சீசன்களில் மூன்றாவது முறையாக இந்தியா உலகக் கோப்பை போட்டியை நடத்துகிறது. 2010ல் டெல்லியிலும், 2018ல் ஒடிசாவின் புவனேஸ்வரிலும் போட்டியை நடத்தியது.

    இந்தியாவுக்கு இவ்வாறு தொடர்ந்து உலக கோப்பையை நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கியிருப்பது குறித்து பெல்ஜியம் ஹாக்கி வீரர் எலியட் வான் ஸ்ட்ரைடாங்க் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த அவர் கூறியதாவது:-

    கடந்த நான்கு உலக கோப்பை தொடர்களில் மூன்று தொடர்களை ஒரே நாட்டில் விளையாட விளையாட்டு அமைப்பு ஒப்புக்கொள்வது எப்படி சாத்தியம்? இந்தியா இந்த முறையும் போட்டியை நடத்துவது வருத்தமளிக்கிறது.

    ஆனால், தினமும் 20,000 இருக்கைகள் கொண்ட மைதானங்களை ரசிகர்களால் நிரப்பக்கூடிய ஒரே நாடு இந்தியாதான். பருவநிலை போட்டியை நடத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், ஹீரோ அல்லது ஒடிசா போன்ற உலகளாவிய ஸ்பான்சர்கள் உள்ளனர். போட்டியை நடத்தும் நாடு குறித்த தேர்வானது, நிதி ரீதியாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம், ஆனால் விளையாட்டைப் பொருத்தவரை நியாயமற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடுகின்றன. டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 2-0 என வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெய்ஹிந்த் இந்தியா...’ இசை ஆல்பத்தில் நயன்தாரா, ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. #HeartBeatsForHockey #HWC2018 #Nayanthara
    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. கநாநாயகனுக்கு ஜோடியாக மட்டுமே நடிக்காமல் கதாநாயகியை மட்டுமே கொண்டு உருவாகும் படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    அவரது பிறந்தநாளான நேற்று, ஷாருக்கானுடன் அவர் நடித்த ஆல்பம் பாடலின் புரோமோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இந்திய ஹாக்கி அணியை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிற விதமாகவும் ‘ஜெய்ஹிந்த் இந்தியா...’ எனும் வீடியோ ஒன்று தற்போது உருவாகி உள்ளது.



    ஷாருக்கான், நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இந்தப் பாடலில் ரகுமானுடன் இணைந்து ஸ்வேதா மோகன், டிரம்ஸ் சிவமணி, நீதி மோகன், சாஷா திருபாதி உள்ளிட்டோரும் பணியாற்றியுள்ளனர்.

    குல்சார் பாடலின் வரிகளை எழுத ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த புரோமோ வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் தனது யூடியூப் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது. #HeartBeatsForHockey #AbBasHockey #HWC2018 #BToSProductions #Nayanthara

    ஜெய்ஹிந்த் இந்தியா புரோமோ பாடலை பார்க்க:

    பெண்கள் ஹாக்கி அணியினருக்கான தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்கும் 33 வீராங்கனைகள் இன்று தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். #HockeyIndia #WomensHockeyTeam #NationalCamp
    புதுடெல்லி:

    ஹாக்கி இந்தியா சார்பில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பயிற்சி மையத்தில் வரும் 12ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெண்களுக்கான தேசிய பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் வீராங்கனைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதுபற்றி தலைமை பயிற்சியாளர் கூறுகையில், ‘தேசிய முகாமிற்கான குழு தொடர்ந்து நீடிக்கிறது. அதேசமயம், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சில இளம் வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். மூன்று வாரம் நடைபெற உள்ள இந்த தேசிய முகாமில், வீராங்கனைகளின் உடற்திறனை மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்’ என்றார். #HockeyIndia #WomensHockeyTeam #NationalCamp

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் ஜப்பானை 3-2 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இந்தியா. பைனலில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதி ஒன்றில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜந்த் சிங் முதல் கோலை பதிவு செய்தார். 22-வது நிமிடத்தில் ஜப்பான் பதில் கோல் போட்டது. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது.

    44-வது நிமிடத்தில் சின்லென்சானா கோல் அடிக்க இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றது. 55-வது நிமிடத்தில் இந்தியாவின் தில்ப்ரீத் சிங் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது. 56-வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 3-2 என ஆனது.

    கடைசி நான்கு நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இந்தியா 3-2 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் ஓமனை வீழ்த்திய ஜப்பான் அணி, அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை எதிர்கொள்கிறது. #AsianChampionsTrophy2018
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான் அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஓமனை எதிர்கொண்டது. இதில் ஜப்பான் 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இந்த சுற்று முடிவடைவதற்கு முன்னதாகவே புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதன்பின்னர் லீக் சுற்று முடிந்ததும் அரையிறுதியில் விளையாடும் அணிகள் முடிவு செய்யப்பட்டன.



    அதன்படி நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்பான் அணி, நடப்பு சாம்பியனான இந்தியாவை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதியில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. #AsianChampionsTrophy2018 #HockeyIndia #IndianHockey
    ×