என் மலர்
நீங்கள் தேடியது "Dinesh Karthik"
- ‘பைசன்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
- உங்களின் படங்கள் அழுத்தமானதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.
இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வந்தனர். இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட்டி வீரர் தினேஷ் கார்த்திக் 'பைசன்' படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

'பைசன்' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன ஒரு அருமையான திரைப்படம் மாரிசெல்வராஜ். உங்களின் படங்கள் அழுத்தமானதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. இந்த எதார்த்தமான நடிப்பிற்காக துருவ் கடுமையாக உழைத்துள்ளார். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். படக்குவுக்கு என் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
- இந்தியாவில் விளையாடிய கடைசி 3 டெஸ்ட் தொடர்களில் இந்தியா 2ல் ஒயிட் வாஷ் ஆகி உள்ளது
- இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் கூடுதலாக விளையாடி வருகிறார்கள்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. அதேசமயம் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக இந்திய அணி ஹோமில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில், சொந்த மண்ணில் தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இந்தியா இழந்தது குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் காட்டமாக பேசி வீடியோவெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இந்தியாவிற்கு வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் எதிரணிகள் பயப்படுவார்கள். ஆனால் இப்போது இந்திய அணியுடன் விளையாட வேண்டுமென்றால் ஜாலியாக இருப்பார்கள். கடந்த 12 மாதங்களில் இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ் ஆகி உள்ளது. இந்தியாவில் விளையாடிய கடைசி 3 டெஸ்ட் தொடர்களில் இந்தியா 2ல் ஒயிட் வாஷ் ஆகி உள்ளது
இது இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான காலகட்டத்தில் உள்ளோம். உடனடியாக கஷ்டமான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன பிரச்சனை உள்ளது. இந்திய வீரர்களின் தரம் குறைவாக உள்ளதா? ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்களா? வேகம், ஸ்பின் இரண்டிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழக்கிறார்கள்.
இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் கூடுதலாக விளையாடி வருகிறார்கள். நிதிஷ் குமார் ரெட்டி இந்தாண்டு உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் மொத்தமாகவே 14 ஓவர்களை மட்டும்தான் வீசி உள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்கள். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் 7 பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். இந்திய அணியால் இன்னமும் சிறப்பாக விளையாட முடியும். திடீரென எப்படி இந்த அளவிற்கு சரிவு ஏற்படும்" என்று பேசியுள்ளார்.
WTC டெஸ்ட் தொடரில் 65 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் இந்தியாவின் 3 ஆம் வரிசை பேட்ஸ்மேனின் முதல் இன்னிங்சின் சராசரி 26 ஆகும். இது 2 ஆவது மோசமான உலக சாதனையாகும்.
ஆகவே இந்திய அணியின் 3 ஆம் வரிசை வீரர் யார் என்பதை நாம் முடிவு செய்யவேண்டும். வாஷிங்டன் சுந்தர் கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 3 ஆம் வரிசையில் இறங்கினார். கவுகாத்தி டெஸ்டில் சாய் சுதர்சன் 3 ஆம் வரிசையில் இறங்கினார். இது இந்தியாவிற்கு உதவியதா?
WTC டெஸ்ட் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. இலங்கை, நியூஸிலாந்துடன் அவே கேமில் 2 போட்டிகளும் ஆஸ்திரேலியாவுடன் ஹோமில் 5 போட்டிகளும் இந்தியா விளையாடுகிறது.
இந்தியா அடுத்த டெஸ்ட் போட்டியை விளையாட இன்னும் 7 மாதங்கள் உள்ளது. ஆனால் இப்போது இந்திய டெஸ்ட் அணியில் என்ன நடக்கிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும். நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாட என்ன செய்யவேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.
தினேஷ் கார்த்திக்கின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் 3 ஆம் இடத்தில் களமிறங்கினார்.
- வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்சில் 29 ரன்களும் 2 ஆவது இன்னிங்சில் 31 ரன்களும் அடித்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 15 வருடத்திற்குப் பிறகு இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தியது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக 3 ஆம் இடத்தில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்சில் 29 ரன்களும் 2 ஆவது இன்னிங்சில் 31 ரன்களும் அடித்து நம்பிக்கை தந்தார்.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தினேஷ் கார்த்திக்கிடம் வாஷிங்டன் சுந்தர் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "3 ஆம் இடத்தில் இறங்கி பேட்டிங் செய்வது மிகவும் சவாலானது. அந்த இடத்தில் பியூர் பேட்ஸ்மேன் மட்டுமே விளையாடுவார்கள். வாஷிங்டன் சுந்தர் ஒரு ஆல்ரவுண்டர், அவரிடம் பேட்டிங் டெக்னிக் இருந்தாலும், 3 ஆம் இடத்தில் இறங்கி விளையாடுவது சவாலானாதாக இருக்கும். ஒரு பேட்ஸ்மேன் 3 ஆம் இடத்தில் விளையாடவேண்டும் என்றால் அதற்கு அதிகமாக தயாராகவேண்டும். அவரால் பவுலிங், பேட்டிங் இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியாது.. அவருடைய பந்துவீச்சு பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
- ரோகித் உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருப்பதால் அதற்காக உடற்தகுதியை பராமரித்து வருகிறார்.
- அவர் சாதனைகளுக்காக விளையாடவில்லை.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலில் தொடங்கும் ஒருநாள் தொடர் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா சாதாரண வீரராகவே களமிறங்குகிறார்.
இவர் ஒருநாள் உலக கோப்பை 2027-ல் இடம் பெறுவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் ஆஸ்திரேலியா தொடருடன் ரோகித் ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 2027-ம் ஆண்டு உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் ரோகித் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் அந்த உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார். அதற்காக உடற்தகுதியை பராமரித்து வருகிறார். 2023 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததிலிருந்து, உலக கோப்பையை வெல்லும் அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. அதை 2024 டி20 உலக கோப்பையில் அடைந்தார். ஆனால் அந்த நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அவர் 50 ஓவர்கள் உலக கோப்பையை வெல்ல விரும்புகிறார்.
அவர் சாதனைகளுக்காக விளையாடவில்லை. உலகக் கோப்பை இறுதியில் கூட, அவர் தொடக்கத்தில் விளையாடிய விதம், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் கொண்டு வருவதை காட்டியது.
என்று கார்த்திக் கூறினார்.
- விராட் கோலி, 2027 உலகக் கோப்பையில் விளையாட ஆர்வமாக உள்ளார்.
- தேர்வாளர்கள் எந்த அடிப்படையில் அவரது (2027 உலக கோப்பை) உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 19-ந்தேதி பெர்த்தில் நடக்கிறது.
இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று 2 பிரிவுகளாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது. ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களான விராட், ரோகித் இடம் பெற்றுள்ளனர். ரோகித் கேப்டனாக இல்லாமல் வீரராக மட்டுமே விளையாட உள்ளார்.
மேலும் இருவரும் 2027-ம் ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளனர். ஆனால் இந்த தொடரே இவர்கள் இருவருக்கும் கடைசி ஒருநாள் தொடராக இருக்கலாம் என பல்வேறு கருத்துக்கள் வருகின்றனர். அதற்கு ஏற்றவாறு அணியின் பயிற்சியாளரும் தேர்வு குழு தலைவரும் மறைமுகமாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் விராட் கோலி விளையாட ஆர்வமாக இருக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி, 2027 உலகக் கோப்பையில் விளையாட ஆர்வமாக உள்ளார். லண்டனில் தனது சமீபத்திய இடைவெளியின் போது, கோலி தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டார். நான் அங்கு இருந்ததால் அவர் ஒவ்வொரு வாரமும் 2 முதல் 3 அமர்வு வரை பயிற்சி செய்து கொண்டிருந்தார் என்பதும் எனக்குத் தெரியும். அதாவது, அவர் உலகக் கோப்பையை விளையாடுவதில் தீவிரமாக இருக்கிறார்.
தேர்வாளர்கள் எந்த அடிப்படையில் அவரது (2027 உலக கோப்பை) உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இந்த சுற்றுப்பயணத்தில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கம்பீர் எப்படி கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த சுற்றுப்பயணம் ஏன் முக்கியமானது? தொடர்ச்சியாக 2 சிறந்த ஒருநாள் போட்டிகளை வழங்கிய பிறகு அவர் நிரூபிக்க ஏதாவது விட்டுவிட்டாரா?
அவர் அருகில் இருந்தால், எனக்கு எந்த பதற்றமும் இருக்காது. ஏனென்றால் அழுத்தத்தின் கீழ் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் அதை மீண்டும் மீண்டும் செய்துள்ளார். அவர் அதை மீண்டும் செய்வார் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
என தினேஷ் கார்த்திக் கூறினார்.
- சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.
தமிழக கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான தினேஷ் கார்த்திக். ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் டி20 உலக கோப்பைக்கான ஆல் டைம் லெவன் அணியை தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.
அதில் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீருக்கு இடம் அளிக்கவில்லை.
இந்த அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் எம் எஸ் தோனியை அவர் தேர்வு செய்துள்ளார்.
தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து சூர்யகுமார் உள்ளார். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் யுவராஜ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோருக்கு இடம் வழங்கியுள்ளார்.
மேலும் சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.
தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த ஆல் டைம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:-
ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா.
- ஒரு வீரரால் செய்யக்கூடிய அனைத்தையும் ஷ்ரேயாஸ் செய்துள்ளார்.
- டி20 உலகக் கோப்பையை முன்னோக்கிய பயணத்தில் அவரும் அங்கமாக இருந்திருக்க வேண்டும்.
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்குகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை 2026 டி20 உலகக் கோப்பையிலிருந்து கழற்றி விடுவதற்காகவே இப்போதே கவுதம் கம்பீர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட சேர்க்கவில்லை என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு வீரரால் செய்யக்கூடிய அனைத்தையும் ஷ்ரேயாஸ் செய்துள்ளார் என்பதை ஒருபுறம் வையுங்கள். கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததிலிருந்து இந்தியா 20 டி20 போட்டிகளில் விளையாடி 17 வெற்றிகள் பெற்றுள்ளது. எனவே ஒரு பயிற்சியாளராக தமக்கு வெற்றிகளைக் கொடுத்த வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதற்காக அவர் சில வீரர்களை கழற்றி விட்டு கடினமான முடிவுகளை எடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆசியக் கோப்பை அறிவித்த பின் அவர்கள் ரிசர்வ் வீரர்கள் பட்டியலையும் வெளியிட்டார்கள். ஆனால் அந்தப் பட்டியலில் கூட ஷ்ரேயாஸ் இல்லாதது எனக்கு சரியாகப்படவில்லை.
அது உலகக் கோப்பை உட்பட வருங்கால தொடர்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டீர்கள் என்பதற்கான சமிக்கையாகும். அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன் ஆசியக் கோப்பைக்கு பின் இந்தியா சில இருதரப்பு தொடர்களில் விளையாட உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் டாப் 5 ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட ஷ்ரேயாஸ் இல்லாதது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை.
டி20 உலகக் கோப்பையை முன்னோக்கிய பயணத்தில் அவரும் அங்கமாக இருந்திருக்க வேண்டும். அந்த உலகக் கோப்பையில் அவர் இருப்பார் என்று நான் உண்மையாக நம்புகிறேன். ஏனெனில் அவர் அதற்குத் தகுதியானவர்.
என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
- போட்டி 4ஆவது நாள் முடிந்திருந்தால், சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டிருப்பார்.
- மைக் ஆதர்டன் சுப்மன் கில்லுக்கான அனைத்து கேள்விகளையும் தயார் செய்து வைத்திருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று 35 ரன்கள் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து கையில் 4 விக்கெட்டுகள் இருந்தன.
முகமது சிராஜ் அபாரமாக பந்து வீச இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 2-2 என சமன் செய்தது.
இந்த தொடரில் இங்கிலாந்து பயிற்சியாளர் இந்திய வீரரில் ஒருவரை தொடர் நாயகனாக தேர்வு செய்ய வேண்டும். அதன்படி மெக்கல்லம் 754 ரன்கள் குவித்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லை தேர்வு செய்தார்.
இந்த நிலையில் மெக்கல்லம் சுப்மன் கில்லிற்குப் பதிலாக முகமது சிராஜை தொடர் நாயகனாக தேர்வு செய்ய விரும்பினார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
"போட்டி 4ஆவது நாள் முடிந்திருந்தால், சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டிருப்பார். வர்ணனையாளரான மைக் ஆதர்டன் பரிசளிப்பு விழாவை தொகுத்து வழங்க இருந்தார். ஆகவே, அவர் அனைத்து கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தார். எல்லாமே கில்லுக்காக தயாராக இருந்தது.
ஆனால் கடைசி நாளில் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசினார். அரைமணி நேரத்திற்குள் மெக்கல்லம் தொடர் நாயகன் விருது முடிவை மாற்றி முகமது சிராஜிக்கு மாற்ற விரும்பினார். போட்டிக்குப் பிறகு கூட ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும்போது, முகமது சிராஜ் குறித்து பேசினார். சிராஜ் பந்து வீச்சு பார்த்து எப்படி மகிழ்ந்தார், அவரை பற்றிய அனைத்து அருமையான விசயங்கள் குறித்து பேசினார்" என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
- தவறான செய்தியை வெளியில் இருந்து அனுப்பினால் இப்படித்தான் நடக்கும்.
- இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
லீட்ஸ்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஆலி போப் 100 ரன்களுடனும் (131 பந்து, 13 பவுண்டரி), ஹாரி புரூக் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா மட்டுமே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்க வெளியில் இருந்த வந்த மெசேஜ்தான் காரணம் என்று கவுதம் கம்பீரை மறைமுகமாக முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரிஷப் பண்டிற்கு வெளியிலிருந்து ஒரு செய்தி அனுப்பப்பட்டபோது, அது அவரது ஆட்டத்தைக் கட்டுப்படுத்தியது. ஒரு பயிற்சியாளராக, நீங்கள் பேட்டருக்கு ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புவது முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் காலப்போக்கில், சில வீரர்களுக்கு, நீங்கள் அந்த செய்தியை எவ்வாறு அனுப்புகிறீர்கள் என்பது மிக முக்கியமானதாக மாறும். சில வீரர்களுக்கு தவறான செய்தியை வெளியில் இருந்து அனுப்பினால் இப்படித்தான் நடக்கும்" என்று கூறினார்.
சும்பன் கில் மற்றும் கருண் நாயர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் நிதானமாக விளையாடுமாறு கம்பீர் ஓய்வறையில் இருந்து பண்டிற்கு மெசேஜ் ஒன்றினை மாற்றுவீரர் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அடுத்த சில ஓவர்கள் ரிஷப் பண்ட் பந்தினை தடுத்து ஆட முயன்றார். இருப்பினும் அது அவருக்கு சரியாக வராததால் விக்கெட்டை பறிகொடுத்தார்.
- தோனி அனைத்து ஐசிசி கோப்பைகளையும், 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளார்.
- தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த கௌரவத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ஐசிசி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஏபி டி வில்லியர்ஸ், ரிக்கி பாண்டிங், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல வீரர்கள் தொனியை புகழ்ந்து பேசியுள்ளனர்.
அதில் பேசிய தினேஷ் கார்த்திக், "ஒட்டுமொத்த உலகம் இதுவரை கண்டதிலேயே தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராஃபி, டெஸ்டுக்கான GOLDEN MAZE என அனைத்து ஐசிசி கோப்பைகளையும், 5 ஐபிஎல் கோப்பைகளையும் அவர் வென்றுள்ளார். அனைத்தையும் அணியின் தலைவனாக முன்னின்று வென்றுள்ளார்" என்று தெரிவித்தார்.
- விராட் கோலி ஆட்டமிழந்ததும், கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று தோன்றியது.
- ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆட்டநாயகன் விருதை வென்ற பின்பு பேசிய ஜித்தேஷ் சர்மா, "விராட் கோலி ஆட்டமிழந்ததும், கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்பதுதான் மனதில் தோன்றியது. எனது குரு, வழிகாட்டி தினேஷ் கார்த்திக் அண்ணா அதைதான் என்னிடம் தொடர்ந்து கூறுவார். 'உன்னால் முடியும். எந்த ஒரு சூழலாக இருந்தாலும் ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் சக்தி உன்னிடம் உள்ளது' என தினேஷ் கார்த்திக் என்னை ஊக்கப்படுத்தி வந்தார். அவரால் தான் இது சாத்தியமானது" என்று உருக்கமாக தெரிவித்தார்.
- ரிஷப் பந்த் ஒவ்வொரு போட்டியிலும் இந்த உலகக் கோப்பையில் ஆடியிருக்க வேண்டும்.
- சில வேளைகளில் அணித் தேர்வாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட் பார்மை வைத்து வீரர்களை தேர்வு செய்கின்றனர்.
சிட்னி:
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்னும் 4 லீக் ஆட்டங்களே உள்ளன. இந்நிலையில் இதுவரை நியூசிலாந்து அணி மட்டுமே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்திய அணி தனது கடசி லீக் ஆட்டத்டில் ஜிம்பாப்வே அணியை எதிர் கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தனது பிரிவில் முதல் இடம் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி ( பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம் ) , 1 தோல்வி ( தென் ஆப்பிரிக்கா) எடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்ய வேண்டும் என இயன் சேப்பல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டிம் டேவிட் சர்வதேச அளவில் என்ன செய்து விட்டார்? சில வேளைகளில் அணித் தேர்வாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட் பார்மை வைத்து வீரர்களை தேர்வு செய்கின்றனர்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்தியா, அவர்கள் ரிஷப் பந்த்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை பிளேயிங் லெவனில் தேர்வு செய்கின்றனர். இது பெரிய முட்டாள்தனம், நான் என்ன சொல்கிறேன் என்றால் ரிஷப் பந்த் ஒவ்வொரு போட்டியிலும் இந்த உலகக் கோப்பையில் ஆடியிருக்க வேண்டும்.
மேலும், அந்தப் பேட்டியில் டிம் டேவிட்டை பற்றி கூறும்போது, உள்நாட்டு கிரிக்கெட்டில் தனியார் லீக்குகளில் மணிக்கு 120 கிமீ வேகம் வீசும் பவுலர்களை விளாசுவதை வைத்து சர்வதேச போட்டிகளுக்கு தேர்வு செய்தால் அங்கு மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்களை எப்படி அடிக்க முடியும்.
அதனால் தான் சில சர்வதேசப் போட்டிகளையாவது ஆடவிட்டு பிறகு உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஒரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும். மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்களை இஷ்டத்துக்கு விளாசுவதெல்லாம் சுலபமானதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.






