என் மலர்
விருதுநகர்
- நலிவடைந்த அரசு சிமெண்டு ஆலையை உலர் பதன முறைக்கு மாற்றி நவீனப்படுத்த வேண்டும்.
- பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்
மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த விருதுநகர் மாவட்டத்தில் 1970-ம் ஆண்டு முதல்வர் கருணா நிதி ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் சார்பில் ஆலங்குளத்தில் சிமெண்டு ஆலை தொடங்கப்பட்டது.
ராஜபாளையம்-சிவகாசி நடுவே தொடங்கப்பட்ட இந்த ஆலையை சுற்றிலும் சுமார் 150 ஆண்டுகளுக்கு உரிய சுண்ணாம்புக்கல் கனிம வளங்கள் மிகுந்து காணப் பட்டன. விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த இந்த பகுதியில் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி அந்த பகுதியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காக ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசின் சிமெண்டு ஆலை நிறுவப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களைக் கொண்டு இந்த ஆலை நடைபெற்று வந்தது. சிவகாசியில் இருந்து ஆலங்குளம் வரை ெரயில்வே பாதை அமைக்கப்பட்டதால் ெரயில் மூலமாக பல்வேறு நகரங்க ளுக்கும் இலகுவாக சிமெண்டு மூடைகளை அனுப்ப ஏதுவாக இருந்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு சூப்பர் ஸ்டார் சிமெண்டு என்று அறிமுகப்படுத்தி ரூ.240 கோடியில் நவீனப் படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அரியலூர் அரசு சிமெண்டு ஆலைக்கு அந்தச் சமயத்தில் அந்த நிதி மாற்றப்பட்டு சிமெண்டு ஆலை நவீனப் படுத்தப்பட்டது.
ஆலங்குளம் சிமெண்டு ஆலை தற்போது வரை ஈர பதன முறையிலேயே தயாரிக்கப்பட்டு வருவதால் செலவு அதிகமாகவும், அதிகளவில் தொழிலா ளர்கள் தேவைப்படுகின்றனர். தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது .
இதை கருத்தில் கொண்டு நவீன முறைப்படி உலர் பதன முறைக்கு மாற்றினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என தொழில் நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் செலவினங்கள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறையும். தண்ணீர், மின்சாரம் மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும்.
இன்னும் 137 லட்சம் மெட்ரிக் டன் சுண்ணாம்புக் கல் இருப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போதுள்ள சுண்ணாம்பு கல்லே இன்னும் 65 ஆண்டு களுக்கு மேல் ஆலையை முறையாக இயக்குவதற்கு போதுமானதாக உள்ளது.
தற்போது சிமெண்டு ஆலையில் ரூ.340 விலையில் ''வலிமை சிமெண்டு'' தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதர சிமெண்டு விலையை விட தரமானதாகவும், வலிமையானதாகவும் உள்ளதாக கட்டிட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இதை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆலங்குளம் சிமெண்டு ஆலையில் இன்னும் 2,750 ஏக்கர் நிலப்பரப்பில் சுண்ணாம்புக்கல் எடுக்கா மல் உள்ளது.
தினமும் 1,200 டன் சிமெண்டு உற்பத்தி செய்வதற்கு உலர்பதன முறைப்படி ரூ.240 கோடி செலவு செய்தால் ஆலையை நவீனப்படுத்தியும், 250 பட்டதாரி களுக்கு வேலை கொடுத்தும், பல தொழிலா ளர்களை உருவாக்கியும், இதன் மூலம் பலருக்கு வருமானமும் ஈட்டுவதற்கு ஏதுவாக இருக்கும். கருணா நிதி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான ஆட்சியில் ஆலங்குளம் அரசு சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி இந்த பகுதியை வளம் பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு காரணிகளின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்யப்படும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ஊரக வளர்ச்சி துறை அமைச்சரால் மாநில மற்றும் மாவட்ட அளவில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்பு றங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்ட மைப்பு ஆகியவற்றிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு 2022-23-ம் நிதி ஆண்டு செயல் திட்டத்தின்படி ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்யப்ப டுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த விருதுக்கு தகுதி யான சமுதாய அமைப்பு களிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் 26.5.2023 முதல் வரவேற்கப் பப்படுகி றது. மேலும் கீழ்க்காணும் காலஅட்டவணையினை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 26.5.2023 முதல் 25.6.2023 வட்டார இயக்க மேலாண்மை அலகில் விண்ணப்பங்கள் பெறுதல், 26.6.2023 முதல் 08.7.2023 வட்டார இயக்க மேலாண்மை அலகில் 12 நாட்களுக்குள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். 9.7.2023 முதல் 20.7.2023 வரை மாவட்ட இயக்க மேலாண்மை அலகினால் கருத்துருக்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். 21.7.2023 முதல் 31.7.2023 வரை கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவில் ஒப்புதல் பெறுதல்ந நடைபெறும். 20.8.2023 கருத்துருக்கள் மாநில தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். 3.8.2023 முதல் 18.8.2023 மாநில தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
19.8.2023 முதல் 25.8.2023 வரை மாநில அளவிலான குழுவினால் 6 நாட்களில் விருது பெற்றவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும். மேற்காணும் விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடம் இருந்து 7.7.2023 தேதிக்குள் வட்டார இயக்க மேலாண்மை அலகு மற்றும் பகுதி அளவிலான கூட்ட மைப்புகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 6 காரணிகளின் அடிப்படை யில் தரமதிப்பீடு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டாஸ்மாக் கடை கொள்ளை முயற்சி நடந்தது.
- காமிரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவியது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் - மானாசாலை செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு முருகன், பாலகிருஷ் ணன் ஆகியோர் விற்பனை யாளர்களாகவும், திருச்சுழியை சேர்ந்த இரு ளாண்டி சூப்பர்வைசராக வும் பணியாற்றி வருகின்ற னர்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை அடித்து நொறுக்கிவிட்டு கடையில் இருந்த மதுபான பாட்டில்களை மூட்டை களாக கட்டி தூக்கிக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.
அப்போது இரவு ரோந்து செல்லும் வீரசோழன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் வருவதை கண்ட மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையில் திருடிய மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
இது தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே டாஸ்மாக் கடையில் புகுந்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தனர்.
- வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் முருகன் (39). இவர் 2 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார்.
இந்த நிலையில் மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக வேலை தேடி வந்தார். அப்போது பத்தி ரிக்கையில் வெளியான விளம்பரம் ஒன்றை பார்த்து திருநெல்வேலியில் செயல்படும் ஏஜென்சி ஒன்றை தொடர்பு கொண்டார்.
அவர்கள் பிரேசில் நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை தயாராக இருப்பதாகவும், அதற்கு ரூ. 1 ½ லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர். அதை நம்பிய முருகன் 3 தவணைகளில் ரூ.1 ½லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் மேலும் ரூ.50 ஆயிரம் வாங்கி கொண்டு விசா ஒன்றை கொடுத்துள்ளனர். ஆனால் அது போலியானது என தெரியவந்தது.
அதுகுறித்து அவர் ஏஜென்சியிடம் கேட்ட போது, வேலை ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து ராஜபாளையம் கோர்ட்டில் முருகன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- டிரைவர்-கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டனர்.
- சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது42). மேலகண்ட மங்கலத்தில் உள்ள மில்லில் டிரைவராக வேலை பார்த்தார். இவரது மனைவி கவிதா (37).
ராஜேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டார். இதனை கவிதா கண்டித்தார். இதில் மனமுடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த மின்விசிறி யில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவிதா கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடை உரிமையாளர்
சிவகாசி தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாந்தினி ரத்தினா (27). இவர்கள் 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லை.
இந்த நிலையில் கடைக்கு வந்த பெண்ணிடம் மணி கண்டன் பேசிக் கொண்டி ருப்பதை பார்த்து மனைவி கண்டித்தார். இதையடுத்து இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சுழி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி வாங்கப்பட்டது.
- அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கட்டிட பணிக்கு சென்ற புளியங்குளம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஹரிஷ்குமார், 12 வகுப்பு மாணவர் ரவிச்செல்வம் ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மாணவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர்கள் முனியாண்டி, நாலூர் பூமிநாதன், தோப்பூர் முருகன்,யோக வாசுதேவன், சண்முகக்கனி மற்றும் பனைக்குடி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
- விருதுநகர் மாவட்ட தி.மு.க. நெசவாளரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், கோவிந்தராஜ், ராஜபாளையம் ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட தி.மு.க. நெசவாளரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாவட்டத்திற்கு தலைவராக வீரசோழனை சேர்்ந்த சவரிமுத்து, துணைத்தலைவராக கீழஉப்பிலிக்குண்டு ராமர், அமைப்பாளராக கல்குறிச்சி கடம்பவனம் துணை அமைப்பாளர்களாக பூலாங்கால் மைதின் அப்துல்காதர், குலசேகரநல்லூர் முத்துராமலிங்கம், சிவகாசி அன்பு முருகன், பொட்டகாசியேந்தல் பிச்சைமணி, மல்லாங்கிணறு ரங்கசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு மாவட்டத்திற்கு தலைவராக சுந்தரபாண்டியம் பகுதிைய சேர்ந்த சடையாண்டி, துணைத்தலைவராக சமுத்திராபுரம் ஆனந்தா முருகன், அமைப்பாளராக அருப்புக்கோட்டை திருநகரம் அண்ணாதுரை, துணை அமைப்பாளர்களாக சங்கரபாண்டியாபுரம் பாலசுப்பிர மணியன், குருநமசிவாயம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், கோவிந்தராஜ், ராஜபாளையம் ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்றார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பஸ்நிலையம் அருகே தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட அவைத்தலைவர் ஜெய பெருமாள், முனியாண்டி, முத்துராமலிங்கம், சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் கலாவதி சந்திரன், பனைக்குடி கூட்டுறவு சங்கதலைவர் ராஜா, பட்டமங்களம் கூட்டுறவு சங்கத்தலைவர் மனோகரன், வரிசையூர் வீர மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் பேசுகை யில், நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கட்டிடப்பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவா ரணம் வழங்க வேண்டும்.
நரிக்குடி அருகே உள்ள உண்டுறுமி கிடாக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக்கழிவுகள் எரியூட்டும் நிலையத்தை நிரந்தரமாக தடை செய்து மூட வேண்டும் என்றார்.
- சில வாரங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார்.
- கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ராஜேஸ்வரிக்கும், சங்கர நத்தத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பரமசிவம் (50) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பரமசிவத்துடன் பேசுவதை ராஜேஸ்வரி தவிர்த்துள்ளார். மேலும் தன்னுடன் பழகுவதை கைவிடுமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார். நேற்று இரவு ராஜேஸ்வரி வீட்டின் திண்ணையில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த பரமசிவம் தூங்கியிருந்த ராஜேஸ்வரியின் கழுத்தை அரிவாளால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினார்.
இன்று அதிகாலை ஊர் திரும்பிய முத்துப்பாண்டி வீட்டின் திண்ணையில் மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.
- சிவகாசி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.
- தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ராம்கோ குரூப் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் ராம்கோ கிளப் சார்பில் தென்னிந்திய அளவிலான ராம்கோ டிராபி 2023- 24-ம் ஆண்டு டி-20 கிரிக்கெட் போட்டிகள் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் மைதா னத்தில் ராம்கோ கிரிக்கெட் கிளப் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. ராம்கோ கிரிக்கெட் கிளப் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து 32 அணிகளும், 480-க்கும் மேற்ப்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.
முதல் மற்றும் 2-ம் பரிசுக்கான போட்டி நேற்று மாலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சிவகாசியைச் சேர்ந்த சிவகாசி ஸ்டார்ஸ் அணியும், விருதுநகரைச் சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சிவகாசி ஸ்டார்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி விருதுநகரை சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணி களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சிவகாசி ஸ்டார் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று முதல் பரிசையும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் பெற்றது.
போட்டியில் சிவகாசி ஸ்டார் அணி முதல் பரிசையும், விருதுநகர் அக்குவா கிங்ஸ் அணி 2-ம் பரிசையும், ராஜபாளையம் ராம்கோ குரூப் அணி 3-ம் பரிசையும் தட்டிச் சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ராம்கோ நூற்பாலை பிரிவுகளின் தலைவர் மோகனரங்கன், முன்னாள் கூட்டுறவு வங்கியின் மேலாளரும், ராஜபாளையம் தி.மு.க. தெற்கு நகர செயலாளருமான பேங்க்ரா மமூர்த்தி, சரஸ்வதி அகாடமி நிறுவனர் மணிகண்டன், 36-வது வார்டு கவுன்சிலர் குணாகோபிநாத், 37-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் மற்றும் தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.
- கபடி அணிகளுக்கு பரிசுகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- ரூ. 1 லட்சத்தை முதல் பரிசாக கொண்டு மாபெரும் கபடி போட்டி நடத்தப்படும் என்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் ஊராட்சி செவன் லயன்ஸ் கபடிக்குழு மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய கபடி போட்டியையும், ராஜ பாளையம் ஆவாரம்பட்டி யாழினி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய கபடி போட்டியை யும் எம்.எல்.ஏ. தங்கப் பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அவர் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், விளையாட்டுத் துறைக்கு புத்துயிர் கொடுத்து அதனை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதில் நமது முதலமைச்சரும், விளை யாட்டுத்துறை அமைச்சரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராஜபாளையம் தொகுதியில் ரூ. 1 லட்சத்தை முதல் பரிசாக கொண்டு மாபெரும் கபடி போட்டி நடத்தப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பொன்னுத்தாய், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.