என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mild earthquake"

    • விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான நில அதிர்வு உணரப்பட்டது.
    • இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானது.

    விருதுநகர்:

    விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று இரவு 9 மணிக்கு மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது

    சில நொடிகள் நீடித்த இந்த நில அதிர்வினால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    திடீரென ஏற்பட்ட நில அதிர்வினால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது.

    செங்கல்பட்டு அருகே உள்ள மஹேந்திரா சிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால், அலுவலகங்களில் இருந்து பலர் வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மஹேந்திரா சிட்டி பகுதியில் இன்று மாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வை உணர்ந்ததும் அங்குள்ள அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் வெளியே வந்து சாலைகளில் குவிந்தனர்.

    அங்குள்ள மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு அளித்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
    ×