என் மலர்
செய்திகள்

செங்கல்பட்டு அருகே லேசான நில அதிர்வு - சாலையில் கூடிய பொதுமக்களால் பரபரப்பு
செங்கல்பட்டு அருகே உள்ள மஹேந்திரா சிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால், அலுவலகங்களில் இருந்து பலர் வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மஹேந்திரா சிட்டி பகுதியில் இன்று மாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வை உணர்ந்ததும் அங்குள்ள அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் வெளியே வந்து சாலைகளில் குவிந்தனர்.
அங்குள்ள மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு அளித்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






