search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold theft"

    • நேற்று இரவு மொட்டை மாடியில் மகனும், கீழ்தளத்தில் செல்வ பெருமாள், செல்வி ஆகியோரும் தூங்கி உள்ளனர்.
    • அந்த பகுதியில் மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

    நெல்லை:

    பாளை ஐகிரவுண்டு சரண்யா நகரை சேர்ந்தவர் செல்வ பெருமாள். இவர் பி.எஸ்.என்.எல். ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

    இவரது மனைவி செல்வி (வயது 55). இவர் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு மொட்டை மாடியில் மகனும், கீழ்தளத்தில் செல்வ பெருமாள், செல்வி ஆகியோரும் தூங்கி உள்ளனர். நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும்.

    இன்று காலை வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் பாளை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதே போல அந்த பகுதியில் மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த 3 சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
    • வங்கி தரப்பினர் 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது இந்த கிளையில் கேத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகள் தொடங்கி வரவு செலவு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலர் குடும்ப சூழல் காரணமாக கேத்தனூர் வங்கி கிளையை அணுகி நகை கடன் பெற முயலும் பொழுது அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர்(57) வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பா–ளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நகை மோசடியில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இதுவரை 3 முறை பேச்சுவா–ர்த்தை நடைபெற்றது கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஜூன் 20-ம் தேதிக்குள் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் கூறியதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை இந்த நிலையில் நேற்று 4 ம் முறையாக கேத்தனூர் எஸ்.பி.ஐ. வங்கியில் பேச்சுவார்த்தை நடைபெ–ற்றது பல்லடம் தாசில்தார் நந்தகோபால்,கிளை மேலாளர் சுதாதேவி, வங்கி வழக்கறிஞர்கள், வாவிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலாமணி மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொ–ண்டனர். இதில் வங்கியில் நகை இழந்தவர்கள் கொடுத்த மனுவின் மீது விசாரணை செய்யப்பட்டு இழப்பீடு நிர்ணயிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மொத்தம் பெறப்பட்ட 574 மனுக்களில் 400 மனுக்கள் நகை மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீடு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது போக நகைகளை இன்னும் மதிப்பீடு மதிப்பீடு செய்யாமல் உள்ள 174 வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக அழைத்து அவர்கள் நகையையும் மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த மனுக்களில் இழப்பீடு தொகை திருப்தியில்லாத 32 வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பி அவர்கள் ஒப்புக் கொள்கின்ற நகை மதிப்பீட்டை நிர்ணயம் செய்யவேண்டும்.நகை மோசடி நடந்த நாளிலிருந்து மார்ச்சிலிருந்நு இன்று வரை வங்கியில் உள்ள நகைகளுக்கு வட்டி வசூலிக்க கூடாது 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கவேண்டும். காலதாமதம் செய்தால் போராட்டம் நடத்தப்படும் வாடிக்கையாளர்கள் தரப்பில் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வங்கி தரப்பினர் 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். முன்னதாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக வங்கி நிர்வாகத்திடம் உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    திருக்கோவிலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.5½ லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கோத்தம்சந்த். இவர் திருக்கோவிலூர் கடைவீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பெரியானூரை சேர்ந்த காசிமணி மகன் கார்த்திக்(வயது 31) என்பவர் தங்கம் விற்பனை பிரிவிலும், துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வீரன் மகன் கார்த்திக்(26), என்பவர் வெள்ளி விற்பனை பிரிவிலும் பணிபுரிந்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இவர்களது நடத்தையில் கோத்தம்சந்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கோத்தம்சந்த் நகைக்கடையில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தபோது, 150 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் குறைந்திருப்பது தெரியவந்தது. உடனே அவர், தங்கம், வெள்ளி விற்பனை பிரிவுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஊழியர்கள் இருவரும் தினந்தோறும் சிறுக, சிறுக தங்கம், வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் அந்த பொருட்களை அவர்கள் வெளியில் விற்பனை செய்துள்ளனர்.

    இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் கோத்தம்சந்த் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, நகைக்கடையில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய ஊழியர்களான பெரியானூர் கார்த்திக், துறிஞ்சிப்பட்டு கார்த்திக் ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×