என் மலர்
நீங்கள் தேடியது "gold theft"
- தந்திரிக்கு உதவியாக உன்னி கிருஷ்ணன் போற்றியை நியமித்தது தந்திரி கண்டரரு ராஜீவரு தான்.
- தங்கம் கடத்தலுக்கு தந்திரியும் உதவியாக இருந்ததும் அம்பலமானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது. அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உட்பட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் அதிரடியாக சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.
சபரிமலையில் தந்திரிக்கு உதவியாக உன்னி கிருஷ்ணன் போற்றியை நியமித்தது தந்திரி கண்டரரு ராஜீவரு தான் என்பதும், தந்திரியின் சிபாரிசு என்பதால் சபரிமலையில் உன்னி கிருஷ்ணன் போற்றி, தந்திரி குடும்பத்தின் ஒரு முக்கிய அதிகாரமிக்க பிரமுகராக வலம் வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. தங்கம் கடத்தலுக்கு தந்திரியும் உதவியாக இருந்ததும் அம்பலமானது.
தந்திரிக்கு எதிரான ஆதாரங்களைச் சேகரித்த அதிகாரிகள் நேற்று காலை அவரை விசாரணைக்கு அழைத்தனர். ரகசிய இடத்தில் வைத்து ஆதாரத்தைக் காண்பித்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தியதை தொடர்ந்து கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டார்.
தங்கம் மோசடி வழக்கில் சபரிமலை தந்திரி கைது செய்யப்பட்டது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- கிருஷ்ணனை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேரள போலீசார் கூறி விட்டு சென்றனர்.
- சிறப்பு விசாரணை குழுவினர் சோதனைக்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை.
ராஜபாளையம்:
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக் கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது.
அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்ம குமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னி கிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உட்பட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அதன்பின் கிருஷ்ணனிடம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கிருஷ்ணனை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேரள போலீசார் கூறி விட்டு சென்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாறு பகுதியில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பூர்வீக ஊரான ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது இரிடியம் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கிருஷ்ணன் கூறுகையில், சிறப்பு விசாரணை குழுவினர் சோதனைக்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை. வீட்டில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. அதன்பின் போலீசார் அழைப்பின் பேரில் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். என்னிடம் 2 பேரின் பெயர்களை கூறி தெரியுமா? என கேட்டார்கள். நான் தெரியாது எனக்கூறினேன். அவர்கள் சபரிமலை குறித்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. எனக்கும் சபரிமலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. டிசம்பர் 30-ம் தேதி திருவனந்தபுரம் அலுவலகத்தில் ஆஜராகி விசாரணை குறித்து கையெழுத்திட்டு செல்லுமாறு கூறியுள்ளனர், என்றார்.
- சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கை கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயகுமாரை 12-ந் தேதி வரை காவலில் வைக்க திருவனந்தபுரம் சிறப்பு விஜிலென்சு கோர்ட்டு உத்தரவிட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கை கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்தக்குழு வழக்கு தொடர்பாக பலரை கைது செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கைது செய்தது. முன்னாள் தலைவர் பத்மகுமாருடன் சேர்ந்து சதி செய்து ஆவணங்களை திருடியதாக அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயகுமாரை 12-ந் தேதி வரை காவலில் வைக்க திருவனந்தபுரம் சிறப்பு விஜிலென்சு கோர்ட்டு உத்தரவிட்டது. அவரது ஜாமின் மனு நாளை (31-ந் தேதி) விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இன்று திண்டுக்கல் ராம்நகருக்கு வந்தனர்.
- பாலசுப்பிரமணி நிதிநிறுவனம் மற்றும் தங்கநகை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
திண்டுக்கல்:
கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் புதிதாக தங்கத்தகடுகள் பதிக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது கிலோ கணக்கில் தங்கநகை மாயமானது. இந்த வழக்கில் உன்னிகிருஷ்ண போற்றி என்பவர் முதல் குற்றவாளியாக கண்டறியப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையிலும் சிலைகள் மாயமாகின. இதுதொடர்பாக கேரள மாநிலம் எஸ்.ஐ.டி. என்ற அமைப்பின் டி.ஒய்.எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் அப்போது பதவியில் இருந்த சபரிமலை தேவஸ்தான அதிகாரிகள் உட்பட பலர் சிக்கியுள்ளனர்.
இந்த நகை திருட்டு வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியருக்கு தொடர்பு இருப்பது தெரியவரவே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் சபரிமலை நம்பூதிரி, திண்டுக்கல் ராம்நகரை சேர்ந்த மணி (எ) பாலசுப்பிரமணி உட்பட 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதன் பேரில் எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இன்று திண்டுக்கல் ராம்நகருக்கு வந்தனர். அவர்களுடன் திண்டுக்கல் போலீசாரும் விசாரணைக்கு சென்றனர். பாலசுப்பிரமணி நிதிநிறுவனம் மற்றும் தங்கநகை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். பாலசுப்பிரமணிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் வைத்து கேரள போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நகை திருட்டு வழக்கில் திண்டுக்கல் வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் பத்மகுமார் 2 முறை ஆஜரானார்.
- சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த சில மணி நேரங்களுக்கு பிறகு பத்மகுமார் கைது செய்யப்பட்டார்
திருவனந்தபுரம்:
சபரிமலை கோவிலில் உள்ள காவல் தெய்வத்தின் சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்கான தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் விசாரணையை கேரள மாநில உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து,எஸ்ஐடிஎனப்படும் சிறப்பு புலனாய்வு குழு, பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே கைது செய்தது.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட முராரி பாபு, வாசு ஆகியோர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பத்மகுமாருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இரண்டு முறை திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பத்மகுமார் கைது செய்யப்பட்டார்
- நேற்று இரவு மொட்டை மாடியில் மகனும், கீழ்தளத்தில் செல்வ பெருமாள், செல்வி ஆகியோரும் தூங்கி உள்ளனர்.
- அந்த பகுதியில் மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
நெல்லை:
பாளை ஐகிரவுண்டு சரண்யா நகரை சேர்ந்தவர் செல்வ பெருமாள். இவர் பி.எஸ்.என்.எல். ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவரது மனைவி செல்வி (வயது 55). இவர் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று இரவு மொட்டை மாடியில் மகனும், கீழ்தளத்தில் செல்வ பெருமாள், செல்வி ஆகியோரும் தூங்கி உள்ளனர். நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும்.
இன்று காலை வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் பாளை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதே போல அந்த பகுதியில் மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த 3 சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
- வங்கி தரப்பினர் 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது இந்த கிளையில் கேத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகள் தொடங்கி வரவு செலவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலர் குடும்ப சூழல் காரணமாக கேத்தனூர் வங்கி கிளையை அணுகி நகை கடன் பெற முயலும் பொழுது அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர்(57) வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பா–ளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நகை மோசடியில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இதுவரை 3 முறை பேச்சுவா–ர்த்தை நடைபெற்றது கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஜூன் 20-ம் தேதிக்குள் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் கூறியதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை இந்த நிலையில் நேற்று 4 ம் முறையாக கேத்தனூர் எஸ்.பி.ஐ. வங்கியில் பேச்சுவார்த்தை நடைபெ–ற்றது பல்லடம் தாசில்தார் நந்தகோபால்,கிளை மேலாளர் சுதாதேவி, வங்கி வழக்கறிஞர்கள், வாவிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலாமணி மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொ–ண்டனர். இதில் வங்கியில் நகை இழந்தவர்கள் கொடுத்த மனுவின் மீது விசாரணை செய்யப்பட்டு இழப்பீடு நிர்ணயிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மொத்தம் பெறப்பட்ட 574 மனுக்களில் 400 மனுக்கள் நகை மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீடு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது போக நகைகளை இன்னும் மதிப்பீடு மதிப்பீடு செய்யாமல் உள்ள 174 வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக அழைத்து அவர்கள் நகையையும் மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.
இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த மனுக்களில் இழப்பீடு தொகை திருப்தியில்லாத 32 வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பி அவர்கள் ஒப்புக் கொள்கின்ற நகை மதிப்பீட்டை நிர்ணயம் செய்யவேண்டும்.நகை மோசடி நடந்த நாளிலிருந்து மார்ச்சிலிருந்நு இன்று வரை வங்கியில் உள்ள நகைகளுக்கு வட்டி வசூலிக்க கூடாது 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கவேண்டும். காலதாமதம் செய்தால் போராட்டம் நடத்தப்படும் வாடிக்கையாளர்கள் தரப்பில் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வங்கி தரப்பினர் 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். முன்னதாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக வங்கி நிர்வாகத்திடம் உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
திருக்கோவிலூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கோத்தம்சந்த். இவர் திருக்கோவிலூர் கடைவீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பெரியானூரை சேர்ந்த காசிமணி மகன் கார்த்திக்(வயது 31) என்பவர் தங்கம் விற்பனை பிரிவிலும், துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வீரன் மகன் கார்த்திக்(26), என்பவர் வெள்ளி விற்பனை பிரிவிலும் பணிபுரிந்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இவர்களது நடத்தையில் கோத்தம்சந்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கோத்தம்சந்த் நகைக்கடையில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தபோது, 150 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் குறைந்திருப்பது தெரியவந்தது. உடனே அவர், தங்கம், வெள்ளி விற்பனை பிரிவுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஊழியர்கள் இருவரும் தினந்தோறும் சிறுக, சிறுக தங்கம், வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் அந்த பொருட்களை அவர்கள் வெளியில் விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் கோத்தம்சந்த் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, நகைக்கடையில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய ஊழியர்களான பெரியானூர் கார்த்திக், துறிஞ்சிப்பட்டு கார்த்திக் ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






