search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "virudhunagar"

    • மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
    • திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மதுரை திருமங்கலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது," தமிழகத்தின் கதையை எழுதுவதைப் போல நாட்டின் கதையையும் திமுக எழுத நினைப்பதாக" விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    நான் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். மக்கள் என்னை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வெற்றி பெறுவோம்.

    மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    இந்தியாவை காப்பாற்றுவதாக் கூறும் முதல்வர் முதலில் தமிழகத்தைக் காப்பாற்றட்டும். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என்று சொல்கிறார்கள். அது காமெடியா இல்லை நிஜத்தில் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகரில் 2-வது புத்தக திருவிழா வருகிற 16-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 16-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

    தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கின்றனர். மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த புத்தக திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி கள், சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவு கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.மேலும் புத்தக திருவிழா நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர் களுக்கான கலை நிகழ்ச்சிகளும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மாலையில் தலைசிறந்த ஆளுமைகள் கலந்து கொள்ளும் சிறப்புரைகள், பட்டிமன்றம், இலக்கிய அரங்கு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

    • விருதுநகரில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பாகுபாடு, ஜாதி வேற்றுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    விருதுநகர்

    விருதுநகரில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஜெயசீலன் ெதாடங்கி வைத்தார்.

    பேரணியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்தல், குழந்தைகளுக்கான உரிமைகளை உறுதி செய்தல், அனைத்து தளங்களிலும் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அள விலான வன்முறை, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், பெண் சிசு கொலை, பாலின பாகுபாடு, ஜாதி வேற்றுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப் பட்டது.

    இந்த பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா, குழந்தைகள் நலக்குழு தலைவர் கெங்கா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் சதீஸ்குமார், துணை தொழிலாளர் ஆய்வாளர் சதாசிவம், மனித வர்த்தகம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் நடந்த விழாவில் தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க.மற்றும் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர் ஆர்.ஆர்.ரோட்டில் உள்ள விடுதியில் தங்கினார். இன்று காலை விருதுநகர் ராமமூர்த்தி ரோடு நகராட்சி மைதானத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடை பெற்றது. இதில் மாநில இளைஞரணி செயலா ளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து 11.30 மணிக்கு கல்லூரி சாலையில் அமைக்கப் பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழிகளை வழங்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்க பாண்டியன், சீனிவாசன், முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் உதய நிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திரளான தொண்டர்கள் பொதுக் கூட்ட மேடை முன்பு குவிந்த னர். மதியம் விருதுநகரில் போட்டி தேர்வுக்கான பயிற்சி பூங்காவை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து மருத் துவ கல்லூரி கலைய ரங்கத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் ரூ.88 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள் ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்துகிறார்.

    • விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகள் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்ப தாவது:-

    பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2023-24) முதல் இப்கோ டோக்யோ ஜெனரல் இன்சூ ரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    ரபி பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ காப்பீடு செய்து கொள்ளலாம்.

    வேளாண் பயிர்களை பொருத்த வரை ஏக்கருக்கு சம்பா-நெல் பயிருக்கு ரூ.394, மக்காச்சோளம் பயிருக்கு ரூ.317, சோளம் பயிருக்கு ரூ.135, கம்பு பயிருக்கு ரூ.160, பாசிப் பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.210, பருத்தி ரூ.508, நிலக் கடலை ரூ.312, எள் ரூ.120, எனவும் மற்றும் சூரியகாந்தி ரூ.187 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தோட்ட பயிர்களை பொருத்த வரை ஏக்கருக்கு கொத்தமல்லி ரூ.575, மிளகாய் ரூ.1018, வெங்காயம் ரூ.1765, வாழை ரூ.3445 எனவும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

    ரபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் உளுந்து மற்றும் பாசிப்பயறு வகை களுக்கு நவ. 15-ந்தேதி, மக்காச்சோளம், கம்பு, துவரை, பருத்தி பயிர்க ளுக்கு நவ. 30-ந் தேதி, சம்பா-நெல், சோள பயிர்களுக்கு டிச. 15-ந் தேதி, நிலக்கடலை, சூரியகாந்தி பயிர்களுக்கு டிச.30, எள் பயிருக்கு ஜன.31 வரையிலும் ஆகும்.

    கொத்தமல்லி ஜன.18, மிளகாய், வெங்காயத்திற்கு ஜன.31, வாழை பயிர்களுக்கு பிப்.29 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 குழந்தைகளின் தாய் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மனைவி பூமாதேவி. இவர்களுக்கு இன்பராஜ் (4), யோகேஸ் பாண்டி (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பூமாதேவி வீட்டு வேலையை சரிவர செய்யாமல் எப்போ தும் செல்போனிலேயே மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை காளீஸ்வரன் கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காளீஸ்வரன் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லை.

    அக்கம் பக்கத்தில் விசாரித்தும், பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கு சென்றவர் என தெரியவில்லை. இதைத்தொ டர்ந்து மனைவி-குழந்தை களை கண்டுபிடி த்து தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் காளீஸ்வ ரன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இளம்பெண்கள்

    விருதுநகர் சாத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் பவித்ரா (23). முதுகலை பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். பொதுத் தேர்வு பயிற்சிக்கு செல்லும்படி பெற்றோர் அவரை வற்புறுத்தினர். ஆனால் பயிற்சிக்கு செல்ல தனக்கு விருப்பம் இல்லை என பவித்ரா கூறியுள்ளார்.

    ஆனாலும் பெற்றோர் பயிற்சிக்கு செல்லும்படி தொடர்ந்து கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென மாய மானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதைத் தொடர்ந்து பஜார் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள முப்பத்திபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பொன்க விதா (22). வீட்டிலிருந்த பொன்கவிதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதைதொடர்ந்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் கருப்பசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் பாலாஜி நகரை சேர்ந்த பிரதீப் (43) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா. கடன் பிரச்சினை காரணமாக மனைவியின் 6 பவுன் நகைகளை அடகு வைத்தார். தவணை கட்ட முடியாததால் ஆட்டோவை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பறிமுதல் செய்தனர். இதனால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட னர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குன்னூர் கிராமத்தில் ஆர்பர் தினம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் மற்றும் ஸ்ரீவில்லி புத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து மரக் கன்றுகளை நட்டனர்.

    தமிழகத்தில் 21 சதவிகிதம் பசுமை பரப்பு உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்திடும் நோக்கில் தமிழக அரசு பசுமை தமிழகம் இயக்கம், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை யாக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் தற்போது சுமார் 6.5 சத விகிதம் பசுமை பரப்பளவு உள்ளது. அதனை அதி கரிக்கும் வகையில் வனத் துறையின் மூலம் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் பாது காப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் சுமார் 7 லட்சம் மரக்கன்றுகள் நடு வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இத்திட் டத்தின் மூலம் விவசாயி களுக்கு பருவ மழை காலத்தில் நடவு செய்ய தேக்கு மகாகனி வேம்பு நெல்லி வேங்கை புங்கை பூவரசு மலை வேம்பு உள்ளிட்ட கன்றுகள் நாற்றங் கால்களில் தயார் நிலையில் உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக குன்னூர் கிராமத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி கல்லூரி மாணவர் கள், தன்னார்வ அமைப்பு கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட னர்.

    • ஷேக்ஸ்பியர் நாடக அரங்கேற்றம் நடந்தது.
    • வைரமுத்து மற்றும் கொண்டம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஆங்கிலத்துறை ஏற்பாடு செய்த நாடகக் காட்சியை காணச் சென்றனர். ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தல்லோ என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிறந்த கலைநயத்துடனும், பாவனைகளுட னும் தங்களது கதாபாத்திரத்திற்கான உடை மற்றும் அணி கலன் உதவியுடன் நாடகத்தினை மிகவும் துல்லியமாகவும் சிறப்பாகவும் விளக்கினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண் டனர். சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி சார்பாக 61 ஆங்கிலத் துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முனைவர் பவுமினா, துறைத்தலைவர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் அர்ச்சனா தேவி, வைரமுத்து மற்றும் கொண்டம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.

    • ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து தி.மு.க. வெவ்வேறான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது என முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
    • சட்டமன்றத்தில் நிறைவேற்ற தாமதம் ஆகும்.

    விருதுநகர்

    விருதுநகர் பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டிய ராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஏற்கனவே கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பேசப்பட்டது. அப்போது கருணாநிதி அதனை ஆதரித்தார். நாங்கள் (அ.தி.மு.க.) ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ஆளுங்கட்சி யாக இருந்து ஆதரித்தோம்.

    தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயல்படும்போதும் நாங்கள் அதனை ஆதரிக்கிறோம். ஆனால் தி.மு. க.வை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப் பாட்டையும் கையாளுகிறது.

    இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் உடனடியாக வரப்போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனை கொண்டு வருவதற்கு மத்திய அரசு 8 பேர் கொண்ட பிரநிதித்துவ குழுவை நியமித்துள்ளது. அந்த குழு தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை அளித்து, அது நாடாளு மன்றத்திற்கு கொண்டு வர குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகும்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சரியான பாதையாகும். இதில் தி.மு.க. நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி பேசி வருகிறது. தொழிலாளர் நலச்சட்டம் இயற்றி பாராளுமன்றம், அதன் பிறகு சட்டமன்றத்தில் நிறைவேற்ற தாமதம் ஆகும். அதேபோல் தான் இந்த ஒரே நாடு, ஒரே தேர்தலும் உடனடியாக கொண்டு வரப்படாது. அதற்கும் கால அவகாசம் தேவைப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் துறையின் கீழ் விவசாயத்தில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களது திறனை மேம்படுத்தி உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 28 ஊரக இளைஞர்களுக்கு காளான் வளர்ப்பு என்ற தலைப்பில் தொழில்நுட்ப பயிற்சி 28.8.23 முதல் 2.9.23 வரை 6 நாட்கள் அருப்புக்கோட்டையில் உள்ள கோவிலாங்குளம் நிலையத்தில் வேளாண் அறிவியல் பயிற்சி நடைபெற உள்ளது.

    இந்த பயிற்சியில் கலந்து கொள்ள தகுதியான விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் கல்வி தகுதி குறைந்தது 5ம் வகுப்பு மேல் படித்தவராகவும், கற்றுக்கொண்ட தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதில் ஆர்வமுடையவராகவும் இருக்க வேண்டும்.

    இப்பயிற்சியானது வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் காளான் தொழில் முனைவோர் ஆகியோர் மூலம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் உழவர் பயிற்சி நிலையம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் அவர்களை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொண்டு புதிய தொழில் முனைவோராக மாறிட, வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கொள்ளலாம்.

    விருதுநகர்

    முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை யொட்டி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 100-க் கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடைய வர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர் காணலில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை அனைத்து கல்விச் சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்று டன் காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கலந்து கொள்ளலாம்.

    இம்முகா மில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் https://forms.gle/TH4R1Djmv8Z7SkpU என்ற Google Form-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கொள்ள லாம்.

    இந்த தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    ராஜபாளையம்

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் அம் மையப்ப நாடார் ஆரம்பப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற் றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டி யன் குத்து விளக்கேற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காக் கும் திட்டம், கலைஞர் மருத்துவ காப்பீடு திட் டத்தின் மூலம் பொதுமக்கள் உயிரை காக்கும் ஒரே முதல் வர் நமது முதல்வர் தான். இந்தியாவில் மருத்துவத் துறையில் பல்வேறு சாத னைகளை செய்துவரும் தமிழ்நாடு முதல்வருக்கு நாம் எப்போதும் உறுதுணை யாக இருக்க வேண்டும்.

    ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை யை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த அனைத்து பணிகளும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் மருத்து வமனை திறக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் தலை மை மருத்துவர்கள் கருணாகரபிரபு சுரேஷ், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், பொது மக்கள், கிளை செயலாளர் தங்க மணி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

    ×