என் மலர்
நீங்கள் தேடியது "Alumni meet"
- புதுவை பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுக்கு முன் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.
- இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் சிவராஜ் சீருடை தயார் செய்து வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுக்கு முன் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. இதில் 2-வது பேச் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நோணாங்குப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட உடற்கல்வி பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் வைத்தியநாதன், புதுவை பல்கலைக் கழக உடற்கல்வி துறை பேராசிரியர்கள் சக்திஞானவேல், சுல்தானா, வசந்தி, சந்திரசேகரன் ஆகியோரை சீனியர் ஹாக்கி பயிற்சியாளர் மூர்த்தி வரவேற்றார்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியை டாக்டர் பழனி தொகுத்து வழங்கினார். துணை இயக்குனர் (விளையாட்டுதுறை) சிவகுமார் சிறப்பு ரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் சிவராஜ் சீருடை தயார் செய்து வழங்கினார்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நகைச்சுவை பேச்சுகளாலும் கலை நிகழ்ச்சிகளாலும் ஒவ்வொருவரும் தனது கருத்துகளை பரிமாற்றம் செய்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி விரிவுரையாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களான அமல்ராஜ் ஜார்ஜ், பெருமாள் சீனுவாசன், ஜவஹர் பத்மநாபன், திமோத், பிரகாஷ், ரஷித் அகமது, மணி, நாராயணசாமி மற்றும் வக்கீல் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
முடிவில் சிவகுமார் (பிரான்ஸ்) நன்றி கூறினார்.
- கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
- பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "ஏ.கே.சி.இ.-கே.எல்.யூ. முன்னாள் மாணவர் சங்கம்'' சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா, பல்கலைக்கழக துணைத்தலைவர் எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் தலைமையில் நடந்தது. பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். சங்கதலைவர், பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர், குடும்பத்தினரோடு கலந்து கொண்டு பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப்பார்த்து பேராசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அவர்களை இன்னாள் மாணவர்கள் இன்னிசை மழையில் வரவேற்றனர். பேராசிரியர்கள் முத்துக்கண்ணன், கைலாசம், பாலமுருகன், கார்த்திகாதேவி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.
- மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில்
- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் 1991-94ம் ஆண்டு இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ம.செல்வராசு தலைமை வகித்தார். பேராசிரியர் வே.அ.பழனியப்பன் வரவேற்றார். ஒய்வு பெற்ற பேராசிரியர்கள் திருமா.பூங்குன்றன், ராமாயி, அரங்கநாதன், ரோஸ்லெட், விஜயரகுநாதன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். விழாவில் 1991-1994ல் பயின்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழாசிரியர்களாக பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரிக்கால அனுபவங்களை, நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவினை முன்னாள் மாணவர் தமிழாசிரியர் சி.எஸ்.முருகேசன் ஒருங்கிணைத்தார். தமிழாசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார். முன்னதாக முன்னாள் மாணவ, மாணவியர்கள் தங்களது வாழ்வில் கல்வி ஒளியேற்றிய ஒய்வு பெற்ற பேராசிரியர்களை பூரண கும்ப மரியாதையுடன் மாலை அணிவித்து வரவேற்றனர்.
- உள்ளாட்சித்துறையில் உழவர்கரை நகராட்சியின் கண்காணிப்புப் பொறி யாளர் பக்கிரிசாமியின் பணிநிறைவு பாராட்டு விழா தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
- பொறியாளர்கள் கண்ணன் , சின்ன கண்ணன், அருளரசன் , மகேஷ் , பாலாஜி,வைத்தியநாதன், ரவிச்சந்திரன், துள சிங்கம்,உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி:
உள்ளாட்சித்துறையில் உழவர்கரை நகராட்சியின் கண்காணிப்புப் பொறி யாளர் பக்கிரிசாமியின் பணிநிறைவு பாராட்டு விழா தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
மோதிலால்நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1985-ம் ஆண்டுக் கட்டிடவியல் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் செயற்பொறியாளர் சுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். உதவிப்பொறியாளர்கள் கெஜலட்சுமி , விக்டோரியா, சரசு, பிரமகுமாரி, சித்ரா முன்னிலை வகித்தனர்.
பொறியாளர்கள் கண்ணன் , சின்ன கண்ணன், அருளரசன் , மகேஷ் , பாலாஜி,வைத்தியநாதன், ரவிச்சந்திரன், துள சிங்கம்,உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். என்ஜினீயர் சிதம்பரநாதன் சிறப்புரை வழங்கினார். என்ஜினீயர் தேவதாசு நினைவு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் 1985-ம் ஆண்டு கட்டிடவியல் மாணவர்கள் ராம்மூர்த்தி, கஜேந்திரன், விஜயகுமார், சிவகுரு, குமாரராஜா, ரமேஷ், துரை, கலைவாணி கீதா, சுசிலா, மாலா, வள்ளியம்மை, அமுதா, இளநிலைக்கணக்கு அதிகாரி சாய்நாதன், சமூக செயற்பாட்டாளர் சக்திவேல், வக்கீல் லோக கணேஷ், என்ஜினீயர் ஞான சேகரன் உட்பட கலந்துகொண்டனர்.
முடிவில் பணிநிறைவுபெறும் பக்கிரிசாமி ஏற்புரை வழங்கினார். என்ஜினீயர் மாலைமணி நன்றி கூறினார்.
- ஆசிரியர்களுக்கு மலர்கொத்து வழங்கி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
- பிரபலமான,கடலை மிட்டாய்,பொறி உருண்டை போன்ற திண்பண்டங்கள் விற்பனை கடை அமைக்கப்பட்டு இருந்தது.
பல்லடம் :
பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997 - 98ம் ஆண்டில் 12ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்துடன் 25ம் ஆண்டு வெள்ளிவிழா நிறைவில் சந்தித்து கொண்டனர். நிகழ்ச்சியில் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் பாண்டியன், சண்முகம், ஸ்டோன்கார்டு,கந்தசாமி,பழனிசாமி, ராஜரத்தினம், ஹரிகரன், லோகநாயகி, தமயந்தி, கிருஷ்ணவேணி, விஜயலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு மலர்கொத்து வழங்கி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் தங்களது முன்னாள் மாணவர்களை குடும்பத்துடன் அழைத்து நலம் விசாரித்து ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர். விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பையொட்டி 1980,1990ம் ஆண்டில் பிரபலமான,கடலை மிட்டாய்,பொறி உருண்டை போன்ற திண்பண்டங்கள் விற்பனை கடை அமைக்கப்பட்டு இருந்தது.
- பாகூர், பேராசிரியர் அன்னுசாமி மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
- 40-திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை பள்ளிக்கு அமைத்துக் கொடுத்து, நன்றியை பள்ளிக்கு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
பாகூர், பேராசிரியர் அன்னுசாமி மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 1997-ம் ஆண்டு 10 வகுப்பு படித்த மாணவர்கள், 25 வருடங்கள் நிறைவடைந்ததை தனித்து வத்துடன் கொண்டாடினர்.
40-திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை பள்ளிக்கு அமைத்துக் கொடுத்து, நன்றியை பள்ளிக்கு தெரிவித்தனர்.
இதில் முன்னாள் மாணவர்கள் கந்தநாதன் , ரங்கநாதன், நித்தியானந்தம், சிவமுருகன், கிரிதரன் , சீனுவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளிக் குழும தலைவர் இருதயமேரி ஆசியுரையாற்றினார். தாளாளர் ராஜராஜன் தலைமை தாங்கி பேசினார். முதல்வர் நீலம் அருள்செல்வி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
- முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா பேச்சு
- வி.ஐ.டி.யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
வேலூர்:
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் குடியரசு தினத்தையொட்டி விஐடி வேந்தர் டாக்டர் கோவிசுவநாதன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடையே பேசினார்.
அதைத்தொடர்ந்து விஐடியில் குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இப்ராஹிம் கலிபுல்லா பேசுகையில், ஊழலற்ற நேர்மையான நன்னடத்தை கொண்ட சமுதாயமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.
கல்வி ஒன்று மட்டுமே மனித இனத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் கருவியாக செயல்படுகிறது. கல்வியால் மட்டுமே மனிதனை அறியாமையில் இருந்து விடுவிக்க முடியும் என்றார்.
விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் பேசுகையில்:- உலகில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கிடைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
தேசிய புதிய கல்விக் கொள்கையில் அனைவருக்கும் உயர்கல்வியில் சேரும் சதவிகிதம் தற்போது 27 ஆக உள்ளது, இதை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.
இதில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் ஏற்கனவே 27 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது என்றார்.
விழாவில் கவுரவ விருந்தினராக எம்பசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (மனித வளம்) சதீஷ் ராஜரத்தினம், வி ஐ டி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச. விசுவநாதன், துணைவேந்தர் டாக்டர். ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் டாக்டர். பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டாக்டர். ஜெயபாரதி, விஐடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 மற்றும் 2000 -ம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நினைவு கூர்ந்து, அப்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 மற்றும் 2000 -ம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் கணேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று தங்களின் பள்ளி பருவ நாட்களையும், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நினைவு கூர்ந்து, அப்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து, பள்ளிக்கு தேவையான உதவிகள் என்னென்ன என்பது குறித்தும், அதனை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
- காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரியில் 36 ஆண்டுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு விழா நடந்தது.
- தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றியும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர்.
பெரும்பாறை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பழவிளையில் செயல்பட்டு வரும் மதுரை நாடார் மகாஜன சங்கத்திற்குட்பட்ட காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரியில் 36 ஆண்டுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு விழா நடந்தது.
விழாவில் 1984-87-ம் ஆண்டுகளில் படித்த 13 பேர் 36 ஆண்டுகளுக்கு பின்பு கொடைக்கானலில் சந்தித்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் சந்தித்து பேசினர். இவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றியும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர்.
பின்னர் தங்களுடைய அன்பு, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
- பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
- கேக் வெட்டி ஒன்றாக மதிய உணவு அருந்தினர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின் இன்று ஒன்று கூடி கட்டித்தழுவி ஆரவாரம் செய்து பிரிந்தனர்.
அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 1992-94-ம் கல்வியாண்டில் படித்த 52 மாணவர்கள் ஒன்று கூட முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை முதல் ஒவ்வொரு நண்பர்களும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் படித்த அரக்கோணம் அரசு ஆண்கள் வந்தனர்.
52 பேரில் சுமார் 45 பேர் பள்ளியில் ஒன்று கூடி தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மதியம் பள்ளி நண்பர்கள் சேர்ந்து கேக் வெட்டி ஒன்றாக மதிய உணவு அருந்தினர்.
தங்கள் படித்த பள்ளிக்கு நினைவாக மைக்செட்களை தற்போதைய பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கி குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.
- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
விருதுநகர்
விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள ஹாஜி பி.செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1978-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் உமர் பாரூக் தலைமை தாங்கினார்.ஆசிரியர்கள் சுப்பையா, ஜப்பார், துரைப்பாண்டி, சார்லஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
விழாவில் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படித்த நாங்கள் அரசுத்துறை அதிகாரிகளாகவும், தனியார் துறை அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளோம். இந்த நிலைக்கு நாங்கள் உயர்ந்ததற்கு காரணம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த விதமும் காரணம் என்றனர்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வெங்கடேஷ், சவுந்தரராஜன், ராஜேஸ்வரன், முகம்மது நெய்னார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராகிம் வாழ்த்துரை வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்.
- திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் நாராயண ராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி கல்லூரி அறிக்கையை வாசித்தார். முன்னாள் மாணவரும், கல்லூரி மின்னணு தகவல் தொடர்பு துறை பேராசிரியரும், பயின்றோர் கழக செயலாளருமான ஜோஸ்வா பாபு வரவேற்று பேசினார். வேலைவாய்ப்பு அலுவலர் பொன்னுகிருஷ்ணன் வேலைவாய்ப்பு அறிக்கையை வாசித்தார்.
முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கல்லூரியில் படித்த அனுபவங்களையும், தற்போது பணியாற்றும் பணிகள் குறித்தும் உரையாற்றினர். முன்னாள் மாணவர்களான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மூத்த துணை போக்குவரத்து மேலாளர் ரமேஷ், மூத்த தொழில்நுட்ப கட்டிட கலைஞர் ஸ்ரீராம் பாலாஜி, சென்னை இன்போசிஸ் நிறுவன அதிகாரி முகமது முனாவர் உசேன், சோகோ நிறுவன அதிகாரி முகமது இப்ராஹிம் அன்சாரி, அமேசான் நிறுவன அதிகாரி பிரபாகரன், டேட்டா என்ஜினீயர் ராஜாராம், ஆராய்ச்சி மாணவி நூர்பஸ்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியரும், பயின்றோர் கழக பொருளாளருமான சித்ராதேவி கணக்கு அறிக்கையை வாசித்தார். கணினி துறை பேராசிரியரும், பயின்றோர் கழக துணை செயலாளருமான ஜென்சி நன்றி கூறினார்.