என் மலர்
நீங்கள் தேடியது "முன்னாள் மாணவர்கள்"
- அரசு பள்ளியில் மேல்நிலை வகுப்புகளான 11,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லை.
- போதிய வகுப்பறை இல்லை என்பதை அறிந்த முன்னாள் மாணவர்கள் குழு 2 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. 1300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புகளான 11,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லை. இதையறிந்த முன்னாள் மாணவர்கள் குழு 2 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்தனர்.
இதையடுத்து பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் நிதி உதவி அளித்தனர். இதன் மூலம் ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இது குறித்து முன்னாள் மாணவரும் பள்ளி வளர்ச்சி குழு தலைவருமான ரத்தினசாமி கூறியதாவது:-
1950ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியின் வளர்ச்சியை எங்களின் வளர்ச்சியாகவே கருதுகிறோம். ஆரம்பத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலை அதைத்தொடர்ந்து உயர் நிலை என்று இன்றைக்கு மேல்நிலையாக வளர்ந்துள்ளது. இந்த பள்ளியோடு சுற்று வட்டாரத்தில் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்னும் அதே நிலையில் உள்ளதுடன், சில பள்ளிகள் மூடவும் செய்யப்பட்டு விட்டன.
ஆனால் பொல்லிக்காளிபாளையம் பள்ளி ஆலமரத்தின் விழுதுகளாக வளர்ந்து நிற்கிறது.
நாங்கள் படித்த காலத்தில் சராசரியாக 300 பேர் படித்தார்கள். தற்போது தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி, பிளஸ்-2வகுப்பில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் சூழல் தொடர்கிறது என்றார்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியை அனிதா கூறுகையில், பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் குழு பக்கபலமாக உள்ளனர் என்றார்.
- பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
திருப்பூர் :
திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 1-ம்வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை உள்ளது. 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
வகுப்பறை கட்டிடம் : இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புகளான 11,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லை.இதையறிந்த முன்னாள் மாணவர்கள் குழு 2 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளியில் படித்தமுன்னாள் மாணவர்கள் பலரும் நிதி உதவி அளித்தனர். இதன் மூலம் ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இது குறித்து முன்னாள் மாணவரும் பள்ளி வளர்ச்சி குழு தலைவருமான ரத்தினசாமி கூறியதாவது:- 1950ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியின் வளர்ச்சியை எங்களின் வளர்ச்சியாகவே கருதுகிறோம். ஆரம்பத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலை ,அதைத்தொடர்ந்து உயர் நிலை என்று இன்றைக்கு மேல்நிலையாக வளர்ந்து ள்ளது. இந்த பள்ளியோடு சுற்று வட்டாரத்தில் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்னும் அதே நிலையில் உள்ளதுடன், சில பள்ளிகள் மூட வும் செய்யப்பட்டு விட்டன.
பொதுத்தேர்வில் தேர்ச்சி : ஆனால் பொல்லிக்காளிபாளையம் பள்ளி ஆலமரத்தின் விழுது களாக வளர்ந்து நிற்கிறது. நாங்கள் படித்த காலத்தில் சராசரியாக 300 பேர் படித்தார்கள். தற்போது தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி, பிளஸ்-2வகுப்பில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் சூழல் தொடர்கிறது என்றார்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியை அனிதா கூறுகையில், பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் குழு பக்க பலமாக உள்ளனர் என்றார்.
- மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பள்ளி தாளாளர் பிச்சை தலைமை தாங்கினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. பள்ளி தாளாளர் பிச்சை தலைமை தாங்கினார். விரிவுரையாளர் மரியதாஸ் வரவேற்றார். 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் படித்தவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். தலைமையாசிரியர் செல்வின் ஆசிர்வாதம், சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையார் விடுதி காப்பாளர் ராஜா, கூட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் காவேரி உள்ளிட்ட பலர் பேசினர். சி.எஸ்.ஐ. ஆலய சபைகுரு ஞான ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். இம்மானுவேல் நன்றி கூறினார்.
- அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு அடைந்து சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
- அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு அடைந்து சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
பல்லடம்:
பொங்கலூர் வெங்கிடுபதி கஸ்தூரி ரங்கப்ப நாயுடு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் வணக்கம் பொங்கலூர் விழா வருகிற 24 மற்றும் 25-ந் தேதியில் நடைபெற உள்ளது. 100-வது ஆண்டை நிறைவு செய்கிற பள்ளியாக உள்ள இந்த பள்ளி 1890 -ம் ஆண்டு திண்ணை பள்ளிக்கூடமாக தொடங்கப்பட்டது. 1923-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக மலர்ந்தது. பின்னர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு அடைந்து சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
ஆரம்ப பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு படித்த பல மாணவர்கள் டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும், தொழில் அதிபர்களாகவும், அரசு வேலையில் உள்ளவர்களாகவும் உள்ளனர். தற்போது 100 வயதை நெருங்கி உள்ள இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இதை ஒரு விழாவாக கொண்டாட முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் 80 ஆண்டு கால மாணவர்கள் ஒன்று சேர்ந்து வணக்கம் பொங்கலூர் என்ற தலைப்பில் இதை விழாவாக முன்னெடுத்துள்ளனர்.
முதல் நாள் 24-ந் தேதி முன்னாள் மாணவர்கள் வகுப்பறையில் ஒன்று கூடி நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியும், பின்னர் விளையாட்டு போட்டிகளும், மாலையில் பட்டிமன்றம் மற்றும் கும்மியாட்டமும் நடைபெறுகிறது. 25-ந் தேதி காலை மாரத்தான் போட்டியும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டியும், ஆசிரியர்களை கவுரவித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலையில் சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குழு ஏற்பாடு செய்துள்ளனர்.
- கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
- பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "ஏ.கே.சி.இ.-கே.எல்.யூ. முன்னாள் மாணவர் சங்கம்'' சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா, பல்கலைக்கழக துணைத்தலைவர் எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் தலைமையில் நடந்தது. பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். சங்கதலைவர், பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர், குடும்பத்தினரோடு கலந்து கொண்டு பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப்பார்த்து பேராசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அவர்களை இன்னாள் மாணவர்கள் இன்னிசை மழையில் வரவேற்றனர். பேராசிரியர்கள் முத்துக்கண்ணன், கைலாசம், பாலமுருகன், கார்த்திகாதேவி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.
- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
- ஏற்பாடுகளை துணை முதல்வர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 1985-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பிச்சையாபிள்ளை வரவேற்றார். கல்லூரி இயக்குநர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.
என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க அமைப்பின் தலைவராக ஜெயசுதா, செயலாளராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுலத் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா, அறக்கட்டளை உறுப்பினர் என்.கே.ராம்விஷ்ணுராஜா, என்.கே.ராம்வெங்கட்ராஜா மற்றும் ராஜஸ்ரீ, ராகஜோதி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சங்கத் தொடர்பு அலுவலர் பூங்கொடி நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர் செய்திருந்தனர்.
- இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும், தொழில்முனைவோராகவும் உள்ளனர்.
- தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் வானதி சுரேஷ் பாடல் நிகழ்ச்சி, டி.ஜே. நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் சிட்கோ முதலிபாளையத்தில் அமைந்துள்ள நிப்ட்-டீ காலேஜ் ஆப் நிட்வேர் பேஷன் கல்லூரி 25-வது ஆண்டு நிறைவு செய்வதை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நாளை 1-ந் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இந்த கல்லூரியில் 1997-ம் ஆண்டு முதல் படித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும், தொழில்முனைவோராகவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரேநாளில் சந்திக்கும் வாய்ப்பு இந்தநிகழ்ச்சி மூலம் சாத்தியமாகிறது. மேலும் தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் வானதி சுரேஷ் பாடல் நிகழ்ச்சி, டி.ஜே. நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
விருதுநகர்
விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள ஹாஜி பி.செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1978-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் உமர் பாரூக் தலைமை தாங்கினார்.ஆசிரியர்கள் சுப்பையா, ஜப்பார், துரைப்பாண்டி, சார்லஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
விழாவில் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படித்த நாங்கள் அரசுத்துறை அதிகாரிகளாகவும், தனியார் துறை அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளோம். இந்த நிலைக்கு நாங்கள் உயர்ந்ததற்கு காரணம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த விதமும் காரணம் என்றனர்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வெங்கடேஷ், சவுந்தரராஜன், ராஜேஸ்வரன், முகம்மது நெய்னார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராகிம் வாழ்த்துரை வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்.
- நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் பழைய மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
- கல்வியை போதித்த ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டினர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில் மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் 1981-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை பயின்ற பள்ளி மாணவர்கள் சுமார் 75 பேர் 40 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
பூலாங்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் 75 பழைய மாணவர்களும் தங்களின் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டு கலந்துரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தது.
இதில் தங்களுக்கு பள்ளியில் கல்வியை போதித்த குருவாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டி கவுரவித்து அவர்களுடன் சேர்ந்து குழுபுகைப் படத்தை ஆர்வமுடன் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பொழுது தங்களின் பள்ளி படிப்பு காலத்தில் நண்பர்கள் உணவருந்தியதை நினைவு கூறும் வகையில் உணவினை ஒருவருக்கொருவர் பரிமாறிய நிகழ்ச்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியப் படுத்தியது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர்கள் குழு செய்திருந்தனர்.
- முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் அனைவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடி மகிழ்ந்தனர்.
- பங்கேற்க அவர்கள் தமிழ் நாட்டின் பிற மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து இருந்தனர்.
செங்கல்பட்டு:
கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் உள்ள அணுசக்தி மத்திய பள்ளியில் 2003-ம் ஆண்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் அனைவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் படித்த வகுப்பறை, ஆய்வுக்கூடம், விளையாட்டு திடல், கேண்டீன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பழைய நினைவுகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்தனர். பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்தனர். இதில் பங்கேற்க அவர்கள் தமிழ் நாட்டின் பிற மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து இருந்தனர்.
- இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.
- மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது கடந்த கால பள்ளி வாழ்க்கை நினைவு படுத்தி உரையாடினார்கள்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கம்பை நல்லூர் ஸ்ரீராம் கல்வி குழுமங்களின் நிறுவனர் எம்.வேடியப்பன், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
முன்னாள் மாணவர் கம்பை ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சக்திவேல், மதி, குமார், கெலவள்ளி மனோகரன், கம்பை நல்லூர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 45 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் பெரியண்ணன், வெங்கடேசன், ஹரிதாஸ், ஸ்ரீ ராமுலு, பன்னீர்செல்வம், ஜெயராமன், ராஜகோபால், ஆசிரியை பானுமதி மற்றும் தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் பழனி ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது கடந்த கால பள்ளி வாழ்க்கை நினைவு படுத்தி உரையாடினார்கள்.
அப்போது பணியாற்றிய ஆசிரியர்களும் அப்போதைய ஆசிரிய பணியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
- நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர்.
- இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் உருவாக்கி வருகின்றனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 1923-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சென்ற முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் அடிப்படை வசதிகளை கட்டமைத்தும், பள்ளிக்கும், அங்கு பயலும் மாணவர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முடிவு செய்து.
இதற்காக இதுவரை பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தாங்கள் படித்த பள்ளியை தத்தெடுத்து லட்சக்கணக்கில் நிதியை அளித்து தற்போது இந்த இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்திருந்த கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு பள்ளி கட்டிடங்கள் முழுவதற்கும் பெயிண்ட் செய்து வண்ண மயமாக மாற்றி உள்ளனர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.
அதுமட்டுமின்றி இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் உருவாக்கி வருகின்றனர். மேலும், நூற்றாண்டு விழா கொண்டாட திட்டமிட்டு வந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள்ளாக வே நிதியைத் திரட்டி ரூ. 50 லட்சம் மதிப்பில் பள்ளியை சீரமைத்து உள்ளனர்.
அதேபோன்று வருகிற அக்டோபர் 15-ந்தேதி நடைபெற உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பல்லாயிரக்கணக்கான முன்னாள் மாணவர்களை வருகை தர வைத்து சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.