search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பாக்கத்தில் பள்ளியில் படித்தவர்கள் 20 ஆண்டுக்கு பின் சந்திப்பு
    X

    கல்பாக்கத்தில் பள்ளியில் படித்தவர்கள் 20 ஆண்டுக்கு பின் சந்திப்பு

    • முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் அனைவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடி மகிழ்ந்தனர்.
    • பங்கேற்க அவர்கள் தமிழ் நாட்டின் பிற மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து இருந்தனர்.

    செங்கல்பட்டு:

    கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் உள்ள அணுசக்தி மத்திய பள்ளியில் 2003-ம் ஆண்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் அனைவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் படித்த வகுப்பறை, ஆய்வுக்கூடம், விளையாட்டு திடல், கேண்டீன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பழைய நினைவுகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்தனர். பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்தனர். இதில் பங்கேற்க அவர்கள் தமிழ் நாட்டின் பிற மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து இருந்தனர்.

    Next Story
    ×