search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former students"

    • கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
    • கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 1987 -ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரியில், கல்லூரி சங்கமும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 33 வருடங்களுக்கு முனனால் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் சந்தித்து தங்களது கல்லூரி நாட்களில் கடந்த கால நினைவுகளை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். முக்கிய நிகழ்வாக 33 வருடங்களுக்கு முன் பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, முன்னாள் மாணவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நிகழ்வு பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தற்பொழுது பல்வேறு காவல்துறை, தீயணைப்பு துறை, ஆசிரியர்கள், கப்பல் மற்றும் விமானத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரியில் மாணவர்கள் போல மாறி, கல்லூரி நாட்களில் செய்ததைப் போல விசில் அடித்தும், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியும் தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளி படுத்திய சம்பவம் அனைவரையும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இதில் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பல்லடம், பழனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் உட்பட பல்வேறு நண்பர்கள் மூலம் செய்யப்பட்டு இருந்தது.

    • பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1994-96 வரை படித்த மாணவிகள் சந்தித்தனர்.
    • அவர்கள் படித்த போது மேற்பார்வையாளராக பணிபுரிந்த வேலமுத்துவை சந்தித்து ஆசி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் 1994-96 வரை படித்த மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இந்நிகழ்வில் புருணை நாட்டில் இருந்து வந்த சுஜாதா, செகந்திரபாத்தில் இருந்து வந்த செந்தில் வடிவு மற்றும் கடலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் ஒன்று கூடி, அவர்கள் படித்த வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்து கலந்துரையாடினர்.

    மேலும், அவர்கள் படித்த போது மேற்பார்வையாளராக பணிபுரிந்த வேலமுத்துவை சந்தித்து ஆசி பெற்றனர்.

    பின்னர், குருகுலம் அறங்காவலர் வேதரத்தினத்துடன் குழுப்படம் எடுத்து கொண்டனர்.

    மேலும், அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    முன்னாள் மாணவிகளுக்கு குருகுலம் அறங்காவலர் வேதரத்தினம் புத்தகம் வழங்கினார்.

    • இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும், தொழில்முனைவோராகவும் உள்ளனர்.
    • தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் வானதி சுரேஷ் பாடல் நிகழ்ச்சி, டி.ஜே. நிகழ்ச்சி நடக்கிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் சிட்கோ முதலிபாளையத்தில் அமைந்துள்ள நிப்ட்-டீ காலேஜ் ஆப் நிட்வேர் பேஷன் கல்லூரி 25-வது ஆண்டு நிறைவு செய்வதை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நாளை 1-ந் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இந்த கல்லூரியில் 1997-ம் ஆண்டு முதல் படித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும், தொழில்முனைவோராகவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரேநாளில் சந்திக்கும் வாய்ப்பு இந்தநிகழ்ச்சி மூலம் சாத்தியமாகிறது. மேலும் தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் வானதி சுரேஷ் பாடல் நிகழ்ச்சி, டி.ஜே. நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • நாச்சிகுளம் அரசு பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • பள்ளிக்குத் தேவையானதை முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் செய்து தரப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் டாக்டர் கந்தசாமி தலைமையிலும், தலைமை ஆசிரியர்தமிழ்செல்வன், பிடிஏ தலைவர் தாஹிர், மேலாண்மை குழு தலைவர்செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

    முன்னாள் மாணவர் சங்க செயலாளர்தாஜுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தலைவர் டாக்டர் கந்தசாமி, துணைத்தலைவர்கள் தனுஷ். பாண்டியன், ஜாகிர் உசேன், செயலாளர்தாஜுதீன், துணை செயலாளர்க ள்குருநாதன், சத்யா, பொருளாளர்ஜான் முகமது, ஆலோசகர்களாக ஜெயசீலன், சோமசுந்தரம், தங்கராஜன், சேக்அலாவுதீன், சாகுல் ஹமீது, இர்பான்அலி, செயற்குழு உறுப்பினர்களாக தமிழ்ச்செல்வன், கணேசன், சுந்தரபாண்டியன், முருகானந்தம், செந்தில்குமாரி, அமீன், அபிராமி,காவியா ,அப்துல் ரகுமான், பாசிலன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இக்கூட்டத்தில், அலாவுதீன் ,ஆனந்த், ராஜலட்சுமி உட்பட முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளிக்குத் மிக அவசியமான தேவைகளை முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் செய்து கொடுப்பது என்றும் வரும் ஆகஸ்ட் மாதம் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து முன்னாள் மாணவர்கள் குடும்ப விழா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    • அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு அடைந்து சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
    • அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு அடைந்து சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    பொங்கலூர் வெங்கிடுபதி கஸ்தூரி ரங்கப்ப நாயுடு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் வணக்கம் பொங்கலூர் விழா வருகிற 24 மற்றும் 25-ந் தேதியில் நடைபெற உள்ளது. 100-வது ஆண்டை நிறைவு செய்கிற பள்ளியாக உள்ள இந்த பள்ளி 1890 -ம் ஆண்டு திண்ணை பள்ளிக்கூடமாக தொடங்கப்பட்டது. 1923-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக மலர்ந்தது. பின்னர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு அடைந்து சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

    ஆரம்ப பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு படித்த பல மாணவர்கள் டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும், தொழில் அதிபர்களாகவும், அரசு வேலையில் உள்ளவர்களாகவும் உள்ளனர். தற்போது 100 வயதை நெருங்கி உள்ள இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இதை ஒரு விழாவாக கொண்டாட முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் 80 ஆண்டு கால மாணவர்கள் ஒன்று சேர்ந்து வணக்கம் பொங்கலூர் என்ற தலைப்பில் இதை விழாவாக முன்னெடுத்துள்ளனர்.

    முதல் நாள் 24-ந் தேதி முன்னாள் மாணவர்கள் வகுப்பறையில் ஒன்று கூடி நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியும், பின்னர் விளையாட்டு போட்டிகளும், மாலையில் பட்டிமன்றம் மற்றும் கும்மியாட்டமும் நடைபெறுகிறது. 25-ந் தேதி காலை மாரத்தான் போட்டியும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டியும், ஆசிரியர்களை கவுரவித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலையில் சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குழு ஏற்பாடு செய்துள்ளனர்.

    • 1972 முதல் 2022 வரை பயின்றவர்களில் பலர் இதில் பங்கேற்றனர்.
    • விழாவில் பள்ளியின் பொன்விழா மலர் வெளியிடப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியின் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகளின் ஒன்றுகூடல் விழா நடைபெற்றது.1972 முதல் 2022 வரை பயின்றவர்களில் பலர் இதில் பங்கேற்றனர்.

    விழாவிற்கு பள்ளியின் அறங்காவலரும் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவருமான ஜி.சீனிவாசன் தலைமை தாங்கினார். மற்றொரு அறங்காவலரான மூத்த பொது மேலாளர் ராமச்சந்திரன், மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ், தலைமை ஆசிரியர்கள் சுப்புரத்தினா, ஸ்டீபன் பாலாசிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் அனுராதா சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    புதுச்சேரி தொழிலாளர் துறை மற்றும் தீயணைப்புத் துறை அரசு செயலாளர் சுந்தரேசன், பட்டிமன்ற பேச்சாளர் குருஞானாம்பிகை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் பள்ளியின் பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. இதனை ஜி. சீனிவாசன் வெளியிட சுந்தரேசன் பெற்றுக் கொண்டார்.

    விழாவில் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும் கலந்துரையாடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    முன்னாள் மாணவர்கள் சங்க துணை தலைவர் தர்மபெருமாள், செயலாளர் சதானந்தம், இணைச் செயலாளர் இளங்கோபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொருளாளரும் பள்ளி நிர்வாகியுமான வி.மதன் நன்றி கூறினார்.

    முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு உதவி செய்யுங்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Governmentschool #Sengottaiyan

    சென்னை:

    அமைச்சர் செங்கோட்டையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த கல்வியைத் தந்து, அதன் மூலமாக அவர்களின் எதிர்காலத்தை, பிரகாசமான எதிர்காலமாக மாற்றுவதற்காக, ஜெயலலிதா 14 வகையான பொருட்களை விலையில்லாமல் மாணவச்செல்வங்களுக்கு வழங்கி, பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு சீர்த் திருத்தங்களை மேற் கொண்டதால், மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் நம் மாநிலத்திற்கு நற்சான்று வழங்கிவருகிறது.

    இவ்வேளையில், மேலும் முத்தாய்ப்பாக, தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முன்னாள் மாணவர்களும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் பள்ளிகளை தத்தெடுத்தும், இவர்களோடு பொதுமக்களும் கரம் கோர்த்தும் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு, சேவை செய்திடவாருங்கள் என்று இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.


    முதல்-அமைச்சரின் தலைமையில் செயல்படும் அரசு, பள்ளிக் கல்வித் துறைக்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.27,205 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து சாதனைப் படைத்து வருகிறது.

    கல்வி ஒன்றால்தான் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும். எனவே, அன்பு உள்ளமும் தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Governmentschool #Sengottaiyan

    மனித வாழ்க்கையில் மாணவ பருவம் மறக்க முடியாதது. பணி நிமித்தமாக பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த முன்னாள் மாணவர்கள் 26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சந்தித்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் அரசர் மேல்நிலைப்பள்ளி என்ற அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1986-ம் ஆண்டு 1992-ம் ஆண்டுவரை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை செயல்பட்டது. அந்த கால கட்டத்தில் படித்த மாணவர்கள் இன்று பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் காமராஜ் என்பவர் அரசர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த விரும்பினார்.

    இதைத்தொடர்ந்து அவர் தன்னுடன் படித்த மாணவர்களின் உறவினர்களை சந்தித்து முன்னாள் மாணவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண்ணை சேகரித்தார். மேலும் பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் முன்னாள் மாணவர்களை ஒன்று திரட்டி இன்று அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்தார்.

    அதன்படி தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் 26 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அன்பு மிகுதியால் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் சிந்தினர். தங்கள் பள்ளி நாட்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்த அவர்கள் தங்கள் நண்பர்களுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

    விழாவையொட்டி முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டி தங்களது சந்திப்பு நிகழ்ச்சியை கொண்டாடினர். முன்னாள் ஆசிரியர்களையும் சந்தித்து ஆசி பெற்றனர்.

    முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் அரசர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் நலி வடைந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு முடிவுகளை எடுத்தனர்.

    தற்போது முன்னாள் மாணவர்கள் சிலர் அரசு அலுவலர்களாகவும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாகவும், ராணுவ வீரர்களாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

    26 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள அன்பை பரிமாறி கொண்ட இவர்களின் சந்திப்பு மிகவும் நெகழ்ச்சியானது, மகிழ்ச்சிக்குரியது என்பதில் ஐயமில்லை. #tamilnews
    ×