search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reunion meeting"

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
    • முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஜான் ரத்தினம் நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளியில் 1983-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த 68 முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியரும், முன்னாள் மாணவர் மன்ற இயக்கு நருமான சைமன் தலைமை யில் நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் மாண வர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.தங்களுடன் படித்த முன்னாள் மாணவருக்கு உதவித் தொகை வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டு குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் ஒருங்கிணைப்பா ளர் ஜான் ரத்தினம் நன்றி கூறினார்.

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
    • முடிவில் செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார். பேராசிரியர் சுகந்தி தொகுத்து வழங்கினார்.

    மதுரை

    சவுராஷ்ட்ரா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சந்திப்பு கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் குமரேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேராசிரியர் நாதன் வரவேற்றார்.

    இளநிலை கணினி அறிவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    தலைவராக சிவக்குமார், துணைத் தலைவராக அமர்சிங், செயலாளராக அமர்நாத், துணை செயலாளராக ஸ்ரீதரன், பொருளாளராக விஷ்ணுகுமார், செயற்குழு உறுப்பினர்களாக ரவிகுமார், ஹரிஹரசுதன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகளிடம் நிர்வாகிகள் ஹரிஹரன், அருண்பிரசாத், நாதன் ஆகியோர் ஒப்படைத்தனர். கல்லூரி தலைவர் மோதிலால், செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர், செயற்குழு உறுப்பினர்கள் பன்சிதார், வெங்க டேஸ்வரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் பேராசி ரியர்கள் விஜயகுமார், சிவகுமார், துரைசாமி, ஜீவப்பிரியா, மகாலட்சுமி, கணேசன், ராம்பிரசாத், கார்த்திக், கிருஷ்ணன், புவனேஸ்வரி, தேவி, பாண்டியராஜன், கணேசன், சிவகுமார், பவித்ரா, 300-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார். பேராசிரியர் சுகந்தி தொகுத்து வழங்கினார்.

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
    • ஏற்பாடுகளை துணை முதல்வர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 1985-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பிச்சையாபிள்ளை வரவேற்றார். கல்லூரி இயக்குநர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.

    என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க அமைப்பின் தலைவராக ஜெயசுதா, செயலாளராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுலத் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா, அறக்கட்டளை உறுப்பினர் என்.கே.ராம்விஷ்ணுராஜா, என்.கே.ராம்வெங்கட்ராஜா மற்றும் ராஜஸ்ரீ, ராகஜோதி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சங்கத் தொடர்பு அலுவலர் பூங்கொடி நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர் செய்திருந்தனர்.

    ×