முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. முடிவில் செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார். பேராசிரியர் சுகந்தி தொகுத்து வழங்கினார்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
Published on

மதுரை

சவுராஷ்ட்ரா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சந்திப்பு கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் குமரேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேராசிரியர் நாதன் வரவேற்றார்.

இளநிலை கணினி அறிவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தலைவராக சிவக்குமார், துணைத் தலைவராக அமர்சிங், செயலாளராக அமர்நாத், துணை செயலாளராக ஸ்ரீதரன், பொருளாளராக விஷ்ணுகுமார், செயற்குழு உறுப்பினர்களாக ரவிகுமார், ஹரிஹரசுதன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகளிடம் நிர்வாகிகள் ஹரிஹரன், அருண்பிரசாத், நாதன் ஆகியோர் ஒப்படைத்தனர். கல்லூரி தலைவர் மோதிலால், செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர், செயற்குழு உறுப்பினர்கள் பன்சிதார், வெங்க டேஸ்வரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் பேராசி ரியர்கள் விஜயகுமார், சிவகுமார், துரைசாமி, ஜீவப்பிரியா, மகாலட்சுமி, கணேசன், ராம்பிரசாத், கார்த்திக், கிருஷ்ணன், புவனேஸ்வரி, தேவி, பாண்டியராஜன், கணேசன், சிவகுமார், பவித்ரா, 300-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார். பேராசிரியர் சுகந்தி தொகுத்து வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com