search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
    X

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
    • முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஜான் ரத்தினம் நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளியில் 1983-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த 68 முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியரும், முன்னாள் மாணவர் மன்ற இயக்கு நருமான சைமன் தலைமை யில் நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் மாண வர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.தங்களுடன் படித்த முன்னாள் மாணவருக்கு உதவித் தொகை வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டு குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் ஒருங்கிணைப்பா ளர் ஜான் ரத்தினம் நன்றி கூறினார்.

    Next Story
    ×