search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா
    X

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

    • இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.
    • மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது கடந்த கால பள்ளி வாழ்க்கை நினைவு படுத்தி உரையாடினார்கள்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கம்பை நல்லூர் ஸ்ரீராம் கல்வி குழுமங்களின் நிறுவனர் எம்.வேடியப்பன், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    முன்னாள் மாணவர் கம்பை ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சக்திவேல், மதி, குமார், கெலவள்ளி மனோகரன், கம்பை நல்லூர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் 45 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் பெரியண்ணன், வெங்கடேசன், ஹரிதாஸ், ஸ்ரீ ராமுலு, பன்னீர்செல்வம், ஜெயராமன், ராஜகோபால், ஆசிரியை பானுமதி மற்றும் தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் பழனி ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது கடந்த கால பள்ளி வாழ்க்கை நினைவு படுத்தி உரையாடினார்கள்.

    அப்போது பணியாற்றிய ஆசிரியர்களும் அப்போதைய ஆசிரிய பணியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×