search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "classroom"

    • தற்காலிக நீச்சல் குளத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்காக பள்ளிக் குழந்தைகள் அதில் இறங்கி விளையாடி வருகின்றனர்.
    • இப்பகுதியில் கடந்த சில நாட்களாக 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் பெரும்பாலான பள்ளிகள் தேர்வுகளை முடித்து விடுமுறையை அறிவித்துவிட்டன. இதனிடையே இறுதித் தேர்வுகளை முடிக்காத சில பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் வெப்பத்தைத் தணிக்க கன்னோஜ் மாவட்டம் மக்சவுனாபூர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் இருந்த வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றி உள்ளது பள்ளி நிர்வாகம். இந்த தற்காலிக நீச்சல் குளத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்காக பள்ளிக் குழந்தைகள் அதில் இறங்கி விளையாடி வருகின்றனர்.

    இதனால் வெப்பம் தணிவதோடு, குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நீச்சல் குளத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக துள்ளி விளையாடும் வீடியோவையும் பள்ளி நிர்வாகிகள் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    வகுப்பறை தரையைச் சுற்றி 2 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டு ஒரு அடி உயரத்துக்கு நீர் நிரப்பப்படுகிறது. இதில்தான் அந்த குழந்தைகள் நீந்தி விளையாடி வருகின்றனர்.

    இதுகுறித்து பள்ளி முதல்வர் வைபவ் ராஜ்புத் கூறியதாவது:-

    "இப்பகுதியில் கடந்த சில நாட்களாக 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது. தாங்க முடியாத அளவுக்கு வெப்ப அலையும் வீசுகிறது. எனவே, குழந்தைகளை வெப்ப அலையில் இருந்து காக்க இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினோம். முன்பு வெயில் அதிகமாக இருந்ததால் குழந்தைகள் பள்ளிக்கு வர மறுத்து வீட்டிலேயே இருந்தனர். தற்போது நீச்சல் குளம் கட்டிய பின்னர் அதிக அளவில் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்".

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
    • பணியில் இருக்கும் ஒரு ஆசிரியரால் முடிவு செய்யமுடியவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலப்பாக்கத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். அதிலும் ஒரு ஆசிரியை பயிற்சிக்காக அனுப்பட்டுவிட்டார். மீதமுள்ள ஒரு ஆசிரியர் மட்டுமே 120 மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் பள்ளியின் கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து நீர் கசிந்து சுவர் வழியாக வகுப்பறையில் தேங்கி நிற்கிறது. இதனால் லேசான கசிவு உள்ள வகுப்பறையில் மாணவர்களை அமரவைத்துள்ளனர்.

    பள்ளி நேரத்தில் மழை பெய்யும் போது அந்த வகுப்பறையிலும் நீர் தேங்கி நிற்கிறது. இதனை அங்குள்ள துப்புரவு பெண் ஊழியர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அகற்றி வருகிறார். இதனால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை நேரங்களில் மாணவர்களுக்கு விடுமுறை தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதும், இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் இல்லாததால், பணியில் இருக்கும் ஒரு ஆசிரியரால் முடிவு செய்யமுடியவில்லை. எனவே, விழுப்புரம் மாவட்ட கலெக்டரும், தொடக்க கல்வி அலுவலரும் இப்பள்ளி மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்த தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பள்ளி இயங்கும் வகையில் பழைய கட்டிடத்தினை சீரமைத்து தரவேண்டுமென மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில்ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம்

    ஆலங்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1 8 வகுப்பறையுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    விழாவை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளிடம் அவர் பேசுகையில்:-

    மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டப்பட உள்ளது. சுமார் 50 ஆண்டு காலத்திற்கு கட்டிடம் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் கட்டப்படும். மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வகுப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொண்டு நல்ல முறையில் படித்து உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ரவி, ஊராட்சி தலைவர் ஜானகி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷா ராணி, சுப்பையா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருண் ஜார்ஜ், வெங்கடேஷ், ரெங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • கட்டுமான பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல், கட்டு மாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கட்டுமான பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து மேலப்போலகம், வவ்வாலடி பகுதிகளிலும் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் 2 வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பால முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஆதிதிராவிடர் விடுதி தேர்வு நிலை குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • அப்போதே புதிய கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
    • பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்திலேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

    கடலூர்:

    விருத்தாசலம் தாலுக்கா மங்கலம்பேட்டை அருகே கோ.பவழங்குடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தொடக்கப் பள்ளியாக செயல்பட்ட இப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதே புதிய கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் கோ.பூவனூர், மாத்தூர், வயலூர் மற்றும் கோ.பவழங்குடியை சேர்ந்த 240 மாணவ, மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொடக்கப்பள்ளிக்கென கட்டப்பட்ட 10 வகுப்பறையில் அமர்ந்து பயில்கின்றனர். அதாவது 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒரு வகுப்பறையிலும், 4. 5-ம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு வகுப்பறையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தனித்தனி வகுப்பறையிலும் பயின்று வருகின்றனர். இந்த கட்டிடமும் மிகவும் பழைமையானது என்பதால், கட்டிடத்தின் காரைகள் மாணவர்கள் மீது விழுகின்றன. அப்போதெல்லாம் மாணவர்கள் வெளியில் அமரவைக்கப்பட்டும், கலை அரங்கத்திலும் அமர வைக்கப்படு கின்றனர்.

    எனவே, உயர்நிலை பள்ளிக்கென புதிய கட்டிடம் கட்ட வேண்டு மென மாணவர்களின் பெற்றோர் கல்வி அமைச்சர், கல்வி செயலாளர், மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் என அனைவரிடமும் மனு கொடுத்தனர். 3 ஆண்டு களாக மனு கொடுத்தும் பள்ளியின் நிலை மாறாமல் பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்தி லேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் ஆத்திர மடைந்த மாணவர்கள் இன்று காலை வகுப்ப றைக்குள் செல்லாமல் புறக்கணித்து பள்ளியின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பேச்சு நடத்திய போதும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவர்களின் போராட்டத்தை அறிந்த அவரது பெற்றோர்களும் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்த தகவல் அறிந்து மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீ சார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தி வந்த மாணவர்க ளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவர்களின் நியாயமான கோரிக்கை குறித்து அரசு அதிகாரி களிடம் தெரிவித்து, விரைவில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் தேவி மாணவர்களிடம் உறுதியளித்தார். இதனை யேற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பிற்கு சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.
    • சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள்.

    கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.

    தற்போது அந்த பள்ளியில் 9-ம் வகுப்பில் 5 இரட்டையர்கள் உள்ளனர். அந்த 5 இரட்டையர்களும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்ப்பதற்கு அச்சு அசல் ஒரே மாதிரி காட்சி அளிக்கும் அந்த இரட்டையர்கள் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடும் சவாலாக உள்ளனர். அவர்களது பெயர்களை ஆசிரியர்கள் நினைவு வைத்திருந்தாலும், சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள். இது பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் இன்று வைரலாக பரவியது.

    • ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது.
    • 8 ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளில் நூற்று க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு போதிய கட்டட வசதி இல்லாத நிலையில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலி ன் காணொளி காட்சி மூலமாக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அதனையடுத்து பள்ளியில் நடந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம்க மாலூதீன்,திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பா ளர் முருகன், ஒன்றிய பொறியாளர் கலையரசன் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்களுக்கு இனிப்பு கள் வழங்கினர்.

    இதேபோல் செம்மங்குடி ஊராட்சியில் ரூ.27லட்சத்தி ல் புதிதாக 2வகுப்பறை களுடன் கூடிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு அவை தமிழகமுதல்வரால் காணொளிகாட்சி மூலம் திறந்துவைக்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன்,துணை தலைவர் ரமணிசந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினர்.

    கொள்ளிடம் அருகே தொடுவாய் மீனவர் கிராமத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 27 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகள் அடங்கிய இரண்டு வகுப்பறைகள்வுடனான புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து கொள்ளிடம் ஒன்றிய பெரு ந்தலைவர் ஜெயபிரகாஷ் கலந்துகொண்டு புதிய வகுப்பறைகளை குத்துவி ளக்கேற்றி துவக்கி வைத்தார். ஒன்றிய ஆணையர் தியாகரா ஜன்,வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தமிழ்ச்செல்வன், வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் ஞான புகழேந்தி , தலைமை ஆசிரியர் தங்கசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கொள்ளிடம் அருகே மகேந்திர பள்ளி, உமையாள்பதி, பழைய பாளையம், பண்ணங்குடி, பச்சபெருமா ள்நல்லூர், அரசூர், ஓலையாம்புத்தூர் உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் ரூ 2 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டிருந்த பள்ளி கட்டடங்கள் துவக்கி வைக்கப்பட்டன.

    • ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில். 2 மாடியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் நவீன வசதியுடன் கட்டப்பட்டது.
    • மாணவர்கள் அமர்ந்து படிக்க நவீன மேஜை நாற்காலிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

    திருவொற்றியூர்:

    மணலி, பாடசாலை தெருவில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில். 2 மாடியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் நவீன வசதியுடன் கட்டப்பட்டது. மாணவர்களை பெரிதும் கவரும் வகையில் பல வண்ணங்களில் விமானம், வந்தே பாரத் ரெயில், இஸ்ரோ ராக்கெட் என வகுப்பறைமுகப்புகளில் வரையப்பட்டு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாணவர்கள் அமர்ந்து படிக்க நவீன மேஜை நாற்காலிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் பயன்பாட்டிற்காக டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், தலைமை ஆசிரியர் கோமளீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நவீன பெஞ்ச் டெஸ்க் வசதியுடன் வகுப்பறை கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
    • மேலப் போலகம் தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஒன்றியம் அந்தணப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிடப் பணியை நாகை எம் எல் ஏ முகமது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பணிகளை விரைந்து முடித்து கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளை அப்போது வலியுறுத்தினார்.

    மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரம் தொடக்க ப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், எரவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடி நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், போலகம் ஊராட்சி மேலப் போலகம் தொட க்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடப் பணிகள் நடந்து வருவதாகவும் விரைந்து அங்கும் பணிகள் முடிக்கப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் நவீன பெஞ்ச் டெஸ்க் வசதியுடன் வகுப்பறை கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    • கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது.
    • ரூ.22 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பழவாத்தான்கட்டளை ஊராட்சியில், 2021-22-ம் ஆண்டிற்கான கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் முத்துபிள்ளை மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், ஒன்றிய தலைவர் அபிராமி சுந்தரம், துணை செயலாளர்கள் யேசுதாஸ், நேரு, மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் ராஜேந்திரன், உதயம் கோவிந்தராஜன், இஸ்ரேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முரளி, மார்க்கெட் சங்கர், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நீலமேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, ஆனந்தராஜ், உதவி பொறியாளர் அய்யப்பன், ஊராட்சி துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
    • பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகாவில் ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 125 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே மாணவ-மாணவிகள் பாடம் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒசநகரில் உள்ள இந்த அரசு பள்ளியின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் மழைநீர் வகுப்பறையில் கசிகிறது.

    இதனால் மாணவ-மாணவிகள் குடைகளை பிடித்தப்படியே வகுப்பறையில் அமர்ந்து கல்வி பயின்று வருகிறார்கள். பாடம் நடத்தும் ஆசிரியரும் குடையை பிடித்தப்படியே பாடம் நடத்தி வருகிறார். இதனை கடந்த 2 தினங்களுக்கு முன்பு யாரோ படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பாவின் சொந்த மாவட்டத்திலேயே அரசு பள்ளிக்கு இந்த அவல நிலையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் அந்தப்பகுதி மக்கள் பள்ளி கட்டிடம் பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கிறது. ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்துடனேயே வகுப்பறையில் இருக்கின்றனர் என குற்றம்சாட்டினர்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி கலெக்டர் பார்வையிட்டார்.
    • சத்துணவு கூட்டத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவுகளின் தரத்தை ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பதனிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் மாணவ, மாணவிகளின் ஆங்கிலத் திறன் பரிசோதிக்கும் வகையில் ஒவ்வொரு மாணவனாக ஆங்கில பாட நூலில் உள்ள வாக்கியங்களை படிக்க சொல்லி கேட்டறிந்து மாணவர்களை பாராட்டினார்.

    மேலும் ஊராட்சி தொடக்கப்பள்ளி சென்ற கலெக்டர் மகாபாரதி 1-ம் வகுப்பு மாணவர்களிடம் அவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்கும் வகையில் பள்ளி பாடல்கள் பாட சொல்லிகேட்டறிந்தார்.

    அப்போது மாணவ மாணவிகள் உற்சாகமாக பாடத்திட்டத்தில் உள்ள பாடல்களை கலெக்டர் முன்பு ஆடிப்பாடினர். தொடர்ந்து அங்குள்ள

    சத்துணவு கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாணவர்களுக்கு தயார் செய்து வைக்கப்பட்டி ருந்த உணவுகளின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் ரேஷன் கடையில் ஆய்வு செய்த ஆட்சியர் அரிசி,துவரம் பருப்பு, இருப்புகளை ஆய்வு செய்ததோடு எலக்ட்ரானிக் தராசின் பயன்படுத்தி பொருட்களை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறினார்.

    மேலும் அரிசி, சர்க்கரை ஆகியவை மூட்டைகளில் சேதம் அடைந்து சிந்தியிருப்பது குறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டபோது, எலிகள் நுழைந்து பொருட்களினை சேதம் ஏற்படுத்துவதாக கடை விற்பனையாளர் கூறினார்.

    எலிகள் நுழையா தவாறு பாதுகாப்பாக பொருட்களை வைத்திட தேவையான நடவடிக்கை களை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவு றுத்தினார்.

    ஊராட்சியில் புதிதாக ரூ. 28 .25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    அப்பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடிக்கு சென்ற ஆட்சியர் மகாபாரதி அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகளிடம் காலை என்ன உணவு தரப்பட்டது என்று கேட்டறிந்து அந்த உணவினை வரவழைத்து அதன் ருசி, தரத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    முன்னதாக கீழையூர் காத்திருப்பு இழப்பு சாலை பாரத பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் பாலப்பணிகள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை ஆட்சியர் பார்வைக்கு ஆய்வு செய்தார் பின்னர் செம்பதனிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டின் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடம் பணிகளை பார்வையிட்டு ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார் ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், ஒன்றிய உதவி பொறி யாளர்கள் தெய்வானை, சிவக்குமார், கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி முத்துக்குமரன், அன்புமணி மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×